பூவிதழ்களின் பிரிவு மலர்
கண் இமைகளின் பிரிவு விழி
வாய் இதழ்களின் பிரிவு ஓசை
கைவிரல்களின் பிரிவு விசை
இப்படியாக பிரிவு என்பது நம் வாழ்க்கையில் தேவையான ஒன்றாகிவிட்டது. சேர்ந்து இருக்கும் போது உணராத உண்மை உணர்வுகள் பிரிவின் போது தான் புலப்படும். தம்பியுடன் மிட்டாய்க்காக சண்டை, அக்காவுடன் பூவுக்காக விவாதம், அண்ணனுடன் வெளியூர் செல்ல பிடிவாதம் , தங்கையுடன் தொலைக்காட்சி நிகழ்வுக்காய் போராட்டம் என்று நம்மை விட்டுப் பிரிந்த இளமை நிகழ்வுகளை அசை போட்டு மகிழும் காலம் இன்று. நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும். உடன் இருப்பவர்களின் அருமை அவர்களின் இல்லாமையில் தான் புரியும். தினமும் இட்லி தோசையா என்று அலுத்தவர்கள் அயல் நாட்டில் ரொட்டியை உண்ணும் போது உணர்வார்கள் அதன் அருமையை.அடிக்கடி வந்து போன உறவினர்கள், குடும்பவிழாக்கள், ஊர்த்திருவிழாக்கள், தெருவோரப்பேச்சுக்கள்,கிணற்றுக்குளியல், என எல்லாமே இன்று நம்மை விட்டுப் பிரிந்த நிகழ்வுகளாயின. என்ன தான் சொல்ல வருகிறாய் ?? என்ற உங்கள் ஆதங்கம் எனக்கு கேட்கிறது. பிரிவு எதற்காக ??? எதிலிருந்து நம்மைப்பிரித்ததோ அதனுடன் நம்மை இன்னும் ஆழமாய்ச் சேர்ப்பதற்கே. அருகிலிருக்கும்போது காட்டும் அன்பை விட அகன்றிருக்கும் போது காட்டும் அன்பே வலிமை சேர்க்கிறது. வளம் தருகிறது. பிரிவு அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.
உண்மையான அன்பு பிரிவால் இரட்டிப்பாகும்.
போலியான அன்பு பிரிவால் பிட்டுக்கொள்ளும்.
என்ன புரிகிறதா??
பிரிந்து செல்கிறார்களா கவலை வேண்டாம்
மீண்டும் சேர்வோம்
உண்மையான அன்பாயிருந்தால்...........
Wednesday, 17 September 2014
பிரிவொன்று சந்தித்தேன் .....
Subscribe to:
Posts (Atom)
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...