Friday, 30 May 2014

பெண்மை

தற்போது முகப்புத்தகத்தில் ஒரு நிகழ்வினை வாசிக்க நேர்ந்தது. தீராத பசியுடன் காட்டில் அலைந்து கொண்டிருந்தது ஒரு பெண் சிங்கம். பசியின் கொடூரத்தால் வன்மையானது பெண்மை. கண்ணில் பட்ட மானொன்றை வேட்டையாடியது. இறந்து கொண்டிருந்த மானின் உடலைத்துண்டு போடும்போது தான் உணர்ந்தது ,தான் கொன்றது சாதாரண மானல்ல, நிறைமாத கர்ப்பிணித்தாய் மான் என்று. சிங்கமே ஆனாலும் பெண்ணல்லவா?தாய் மானின் வயிற்றில் இருக்கும் தளிர் மானைக் காப்பாற்ற எண்ணியது. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னரும் குட்டி மானை இறந்த நிலையிலேயே வெளியேற்ற முடிந்தது. இதனால் மனமுடைந்த பெண் சிங்கம் தன்னால் கொல்லப்பட்ட தாய், சேயின் பக்கத்தில் படுத்து தானும் இறந்து தன் தவறுக்கு தண்டணையாக தன் உயிர் விட்டது. மண்ணுலகிற்கு மகிமை சேர்ப்பது பெண்மை. உயர்திணையில் மட்டுமன்று அஃறிணையிலும் பெண்மைப் போற்றுதற்குரியது என்பதற்கு இந்நிகழ்வு சான்று. பெண்மை ,தாய்மை பெண்களுக்குரியது மட்டுமல்ல. உலகத்தார் அனைவருக்கும் உரியது. கதறி அழும் குழந்தைக்காக வருந்தியபோது, நண்பர்களின் கண்ணீர் கண்டு கலங்கியபோது, சகிப்புத் தன்மையுடன் செயல்களை செய்யும்போது, இழப்பில் ஆறுதல் கூறி அரவணைக்கும்போது,...... என பெண்மையிண் குணங்கள் , தாய்மையின் தளிர்கள் நம் அனைவரிடமும் உள்ளன. எனவேப்                     பெண்மையைக் கூறுபோட எண்ணாமல்                     வீறு( நடை )போட வைப்போம் 

 ஏனெனில்பெண்மை ஓர் குணம் மட்டுமல்ல , குன்றா வளம்!!!!! 

பெண்மையை நேசிப்போம்  வளர்ப்போம்,

 பெண்மையில் நிலைப்போம், வளர்வோம் 

 என்றும் 

புன்னகை செய்யும் நம் மனம்.............

Tuesday, 20 May 2014

unakkul unnaith thedu

                  உனக்குள் உன்னைத் தேடு  


  கொலம்பஸ் ஒரு நெசவாளியின் மகன். சிறு வயது முதல் புதியனவற்றைக் கண்டறிய வேண்டும் என்ற ஆவல் கொண்டவர். தரை வழி பயணத்தை விட்டு கடல் வழி பயணம் மூலம் ஒரு புதிய கண்டத்தைக் கண்டறிய முயன்றார். தனது திட்டத்தை பல நாட்டு மன்னர்களிடமும் எடுத்துச் சென்று செயல்படுத்த உதவி கேட்டார்.   அவரது முயற்சிக்கு ஒத்துழைக்க ஒருவரும் முன் வரவில்லை. 10 வருட விடா முயற்சிக்குப் பின் ஸ்பெயின் நாட்டு இளவரசி 3 கப்பல்களும் பயணத்துக்குத் தேவையான உணவும் கொடுக்க முன் வந்தார். கப்பல்கள் மட்டும் போதுமா? கப்பல்களைச் செலுத்த கைதேர்ந்த மாலுமிகள் வேண்டுமே!!!  உயிரைப் பணயம் வைத்து பயணம் செல்ல ஒருவருக்கும் மனமில்லை.  இறுதியில் 39 மரண தண்டனைக் கைதிகளைத் தன்னுடன் அழைத்துச் செல்ல எண்ணினார்.           

 எதிர்பார்த்த மரணமா? இல்லை  

 எதிர்பாராத பயணமா? என்ற இரண்டில் 

பயணத்தைத் தேர்ந்தெடுத்தனர். இந்த முயற்சி தான் இன்று உலகையே ஆட்டிப் படைக்கும் அமெரிக்கா என்ற கண்டத்தைக் கண்டுபிடிக்க வழிவகுத்தது. 

   நெசவாளி மகனின் கனவுத் தறி     

    நினைவுப் பட்டாக பாரினை அலங்கரித்தது.    

 கொலம்பஸ் போல் நீங்களும் புதிய அமெரிக்காவைக் கண்டுபிடியுங்கள் என்று சொல்லவில்லை. மாறாக நம் ஒவ்வொருவருக்குள்ளும் புதியன படைக்க வேண்டும் என்ற ஒரு கொலம்பஸ் இருக்கிறார் அவரைக் கண்டுபிடியுங்கள் என்று தான் சொல்கிறேன்.  தனது  எதிர்கால வாழ்வு மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்று எண்ணாதவர் எவருமிலர். நமது திறமை எதில் உள்ளது என்பதைக் கண்டறிந்து அதில் உயர நமது முயற்சிகளைச் செலுத்துவோம்.       

      வெள்ளத் தனைய  மலர்நீட்டம் மாந்தர்தம்                    உள்ளத் தனைய உயர்வு   

Wednesday, 7 May 2014

சோம்பல்

 எவ்வளவு முயற்சித்தும்
 என்னை பிடித்துக் கொண்ட உன்னை
 விடமுடியவில்லை என்னால்.

  பிரியம்
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்
உனது பிரியத்தை புரிந்து கொள்ள பிரிவது தான் ஒரே வழி என்றால் விரும்பவில்லை உனது பிரியத்தை புரிந்து கொள்ள.!!!!!!!! 

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...