தற்போது முகப்புத்தகத்தில் ஒரு நிகழ்வினை வாசிக்க நேர்ந்தது. தீராத பசியுடன் காட்டில் அலைந்து கொண்டிருந்தது ஒரு பெண் சிங்கம். பசியின் கொடூரத்தால் வன்மையானது பெண்மை. கண்ணில் பட்ட மானொன்றை வேட்டையாடியது. இறந்து கொண்டிருந்த மானின் உடலைத்துண்டு போடும்போது தான் உணர்ந்தது ,தான் கொன்றது சாதாரண மானல்ல, நிறைமாத கர்ப்பிணித்தாய் மான் என்று. சிங்கமே ஆனாலும் பெண்ணல்லவா?தாய் மானின் வயிற்றில் இருக்கும் தளிர் மானைக் காப்பாற்ற எண்ணியது. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னரும் குட்டி மானை இறந்த நிலையிலேயே வெளியேற்ற முடிந்தது. இதனால் மனமுடைந்த பெண் சிங்கம் தன்னால் கொல்லப்பட்ட தாய், சேயின் பக்கத்தில் படுத்து தானும் இறந்து தன் தவறுக்கு தண்டணையாக தன் உயிர் விட்டது.
மண்ணுலகிற்கு மகிமை சேர்ப்பது பெண்மை. உயர்திணையில் மட்டுமன்று அஃறிணையிலும் பெண்மைப் போற்றுதற்குரியது என்பதற்கு இந்நிகழ்வு சான்று. பெண்மை ,தாய்மை பெண்களுக்குரியது மட்டுமல்ல. உலகத்தார் அனைவருக்கும் உரியது.
கதறி அழும் குழந்தைக்காக வருந்தியபோது,
நண்பர்களின் கண்ணீர் கண்டு கலங்கியபோது,
சகிப்புத் தன்மையுடன் செயல்களை செய்யும்போது,
இழப்பில் ஆறுதல் கூறி அரவணைக்கும்போது,...... என பெண்மையிண் குணங்கள் , தாய்மையின் தளிர்கள் நம் அனைவரிடமும் உள்ளன. எனவேப் பெண்மையைக் கூறுபோட எண்ணாமல் வீறு( நடை )போட வைப்போம்
ஏனெனில்பெண்மை ஓர் குணம் மட்டுமல்ல , குன்றா வளம்!!!!!
பெண்மையை நேசிப்போம் வளர்ப்போம்,
பெண்மையில் நிலைப்போம், வளர்வோம்
என்றும்
புன்னகை செய்யும் நம் மனம்.............