Monday, 16 June 2014
Sunday, 15 June 2014
Transfer
இட மாற்றம்
கெட் ரெடி என்ற வார்த்தையைக் கேட்டவுடன் ஒட்டமெடுத்தது என் இதயத் துடிப்பு
இருந்த இடத்தின் மேல் கொண்ட பற்றா,
இதயம் மகிழ்வித்தவர்களை
பிரிய நினையாத பித்தா,
தெரியவில்லை என்னவென்று எனக்கு தொலைத்தக் கடவுளைத் தேடினேன்.
என்னை இங்கே அனுப்புவாயோ?
என்னை அங்கே அனுப்புவாயோ?
என்ற மறைமுக உரையாடலில்
அனுதினமும் அவரையும் குழப்பினேன்
இதோ வருகிறேன் என்று
அன்று முன்வைத்தக் கால்
இன்று ஏனோ பின்வாங்குகிறது.
மொழி தெரியாத நாடு
வந்த ஓராண்டுக்குள் இடமாற்றமா?
வேண்டாம் என்று சொல்லவும் துணிவில்லை போகிறேன் என்று துணியவும் மனமில்லை இதுவா? அதுவா? என்று குறிவைத்துப் பார்த்த விரல்களில் வீக்கம் வந்ததுதான் மிச்சம்.
இதில் எப்போதும் இரண்டு சாய்ஸ் தானா குறைந்தது 5வது வேண்டாமா என்று
மனதின் பரிந்துரை வேறு.
என்ன செய்யப்போகிறாய் என்னை?
அந்த நாள்'வந்தது '' உனக்கு இடமாற்றம் இல்லை '' என்ற சொல் கேட்டதும்தான் தாமதம்
அடைபட்ட உணர்வுகள் விடுதலையாயின. வெப்பத்தால் நொந்தவர் குளிர்காற்றை அனுபவிப்பதுபோல இதமானது மனம்.
உல்லாசம் உற்சாகம்
இல்லாத ஒன்றிற்கா இவ்வளவு பெரிய போராட்டம்........................:-)
என்றும் புன்னகை செய் மனமே
:-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-)
Thursday, 5 June 2014
Vaazkkai
நான் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறேன் ஆனால் அதற்கான பலன்களை என்னால் அனுபவிக்க முடியவில்லையே ; சிலர் எ ந்த கஷ்டமும் படுவதில்லை, ஆனால் சந்தோஷமாக இருக்கிறார்களே! என்றஎண்ணம் பலருக்கும் உண்டு. அவரவர் எண்ணம் போலே அவர் தம் வாழ்வு. வாழ்க்கையை மூன்று நிலைகளில் வகைப்படுத்தலாம். இளம் வயதில் அதிக உழைப்பு- குறைந்த பலன். நடுத்தரவயதில் சமமான உழைப்பு- சமமான பலன். வயோதிகத்தில் குறைந்த உழைப்பு - அதிக பலன் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வாழ்க்கையில் அனைத்துமே சமமாகத்தான் நமக்குக் கிடைக்கின்றது. கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் போதே நமது வாழ்க்கை முடிந்துவிட்டால் ?? என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?? அப்படியானால் அதிக பலனைப் பெறுவதற்கான பொறுமை இல்லாத உங்களை உலகம் திரும்பப் பெற்றுக் கொண்டது என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.!!!!!
வாழ்க்கை ஒரே இன்பமாக இருந்தால் திகட்டிவிடும். எனவே தான் சில பல கடினமான அனுபவங்கள் வாழ்க்கைக் கரும்பைப் போல இனிமையானது. நுனிக்கரும்பின் சுவையை விட அடிக்கரும்பின் சுவை அபரிமிதமானது. சுவையான, தித்திப்பான, பகுதிகளுக்கிடையே கடினமான, சுவை குறைந்த ஒரு சிறு பகுதி ( கணு ) . இதனைக்கடித்து, மென்றுத் துப்பினால் தான் சுவையான மற்றொரு பகுதியை நாம் பெற முடியும். துன்பங்கள் வாழ்வின் இன்பத்தை நமக்கு உணர்த்துகின்றன. தொடர்ந்து இனிப்பையே உண்பவர் நாளடைவில் இனிப்பைத்தவிர வேறு சுவை கிட்டாதா!! என்று ஏங்குபவர் போல நமது நிலை மாறிவிடக் கூடாது. எனவே தான் நமது வாழ்க்கையில் இன்பம், துன்பம், கவலை, மகிழ்ச்சி, நஷ்டம், இலாபம், உறவு, பிரிவு, என்று பலவகையான சுவைகளைப் பெற்றிருக்கிறோம்.
ஓர் சுவையில் ஊறி மயங்கிவிடாது, எச்சுவையையும் ருசித்துப் பார்ப்போம் என்றேத் துணிவோம். நம் வாழ்க்கைக் கட்டிக் கரும்பாய், காட்டுத்தேனாய் இனிக்கட்டும். ( எனக்கு இனிப்பு பிரியம். நீங்கள் வேண்டுமானால் சற்று மாற்றி யோசித்து மிளகாய் போல காரமாய் என்று மாற்றிக்கொள்ளுங்கள்) எல்லா சுவைகளையும் பெற்று நலமோடும் வளமோடும் வாழ்வோம்
'''''
என்றும் புன்னகை செய் மனமே..............
Wednesday, 4 June 2014
ஒன்றே செய் ; நன்றே செய்; அதைஇன்றே செய்; என்பர் இதில் நன்றாக செய்ய வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால் அதை அன்றே செய்ய வேண்டும் என்று எண்ணாத பலர் இங்குண்டு. எனது நண்பர் ஒருவர் ஒரு நாள், '' வலை தளத்தில் தான் எனது பொன்னான நேரத்தை வீணடிக்கிறேன். கூடிய சீக்கிரமே அனைத்தையும் என்னுடைய அலை பேசியில் இருந்து எடுத்து விடுவேன்'' என்றார் .எப்பொழுது என்றேன். நாளை என்றார். மறு நாள் கேட்டால், ''இன்று என்றா சொன்னேன் , நாளை என்றல்லவா சொன்னேன் என்கிறார்.
நாளை ,நாளை என்று நாம் சொன்ன நாளை எவர் அறிவார் நம்மையன்றி இவ்வுலகில்? நண்பர் மட்டுமல்ல நானும் இப்படித்தான் . ஏன் சில நேரங்களில் நீங்களும் இப்படித்தான். மனதுக்குள் , இப்படி இருக்க வேண்டும் .அப்படி இருக்க வேண்டும் .அப்படிச் செய்ய வேண்டும் .இப்படிச் செய்யவேண்டும் .என்று பல நேரங்களில் எண்ணுவதுண்டு. ஆனால் எப்போது செய்வது? இன்று வேண்டாம் நாளை செய்யலாம்? நாளை செய்யலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே சென்றேன். நானாக நாளைச் செய்தால் (உருவாக்கினால்) அன்றிஅ ந்நாள் ஒருபோதும் வராது. நல்ல எண்ணங்கள், நற்தூண்டுதல்கள் எப்போதும் வாரா! மாறாக எப்போதாவது தான்வரும். தூண்டுதல்கள் கிடைத்தவுடன் செயலில் இறங்குபவரே வெற்றியாளராகிறார். நல்ல துவக்கம் பாதி வெற்றி என்பர். எதுவும் தொடங்கியவுடன் விரைவாக சென்றடைவதில்லை. நன்மை மெதுவாகவே சென்றடையும் ஆனால் நிலைத்து நிற்கும். எனவே நல்லன செய்ய தோன்றும்போதே செய்ய முற்படுவோம்
புன்னகை புரிவோம் .
எண்ணித்துணிக கருமம் ஏனெனில் வெற்றி நம் கையில்.
Subscribe to:
Posts (Atom)
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...