Wednesday, 17 June 2015

அமைதியில் வாழும் ஆண்டவன்

 ஓடிக் களைத்து ஓய்வெடுக்கும் நேரம்
படைத்தவனை பார்த்து விட்டு செல்லலாம்
என்றெண்ணி ஆலயம் சென்றேன்
அமைதியில் வாழும் ஆண்டவனின்
அருகில் அமர்ந்து மகிழ்ந்தேன்
தாயுடன் குழந்தை ஒன்று வந்தது
கற்பித்ததை கடவுள்முன் 
சொல்லச்செய்தாள் தாய்
அனைத்தையும் சொல்லி விடை
பெறுமுன் சுரூபங்களை முத்தமிட்டு 
வெளியேற பணித்தாள்.
மாதா யேசு சூசை என அனைத்தையும் 
முத்தமிட்டு வெளியேறியது குழந்தை
திடீரென திரும்பிசம்மனசு என்று சொல்லி
ஒன்றினை முத்தமிட்டது .வியப்பில் ஆழ்ந்தது 
என் விழிகள் ஏனெனில் முழுமரமானது 
கிளைகள் தறிக்கப்பட்டு சுரூபமாக வடிக்கப்பட்டது 
அதை நானே பலமுறை
விகாரமானது, பயமுறுத்தக் கூடியது
என்று பழித்திருக்கிறேன். உண்மையில் 
அது சம்மனசு அல்ல சிலுவையில் 
அறையப்பட்ட யேசுவின் திருவுடல்  
ஆண்டவனைக் கூட அழகாய்த் தான்
பார்க்க நினைக்கிறது அழுக்கு உள்ளம்
 ஓடிக் களைத்து ஓய்வெடுக்கும் நேரம்
படைத்தவனை பார்த்து விட்டு செல்லலாம்
என்றெண்ணி ஆலயம் சென்றேன்
அமைதியில் வாழும் ஆண்டவனின்
அருகில் அமர்ந்து மகிழ்ந்தேன்
தாயுடன் குழந்தை ஒன்று வந்தது
கற்பித்ததை கடவுள்முன் 
சொல்லச்செய்தாள் தாய்
அனைத்தையும் சொல்லி விடை
பெறுமுன் சுரூபங்களை முத்தமிட்டு 
வெளியேற பணித்தாள்.
மாதா யேசு சூசை என அனைத்தையும் 
முத்தமிட்டு வெளியேறியது குழந்தை
திடீரென திரும்பிசம்மனசு என்று சொல்லி
ஒன்றினை முத்தமிட்டது .வியப்பில் ஆழ்ந்தது 
என் விழிகள் ஏனெனில் முழுமரமானது 
கிளைகள் தறிக்கப்பட்டு சுரூபமாக வடிக்கப்பட்டது 
அதை நானே பலமுறை
விகாரமானது, பயமுறுத்தக் கூடியது
என்று பழித்திருக்கிறேன். உண்மையில் 
அது சம்மனசு அல்ல சிலுவையில் 
அறையப்பட்ட யேசுவின் திருவுடல்  
ஆண்டவனைக் கூட அழகாய்த் தான்
பார்க்க நினைக்கிறது அழுக்கு உள்ளம்
அழுக்கைக் கூட ஆண்டவனாய்ப்
பார்க்கிறது குழந்தை உள்ளம் 

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...