வந்தாரை வரவேற்கும் தமிழர் மரபை
மாற்ற நினையாத மாந்தர் இல்லத்துக்கு
வர முனைந்தது ஒரு உள்ளம்.
மனம்கோணாது சமைத்து
உள்ளத்தையும் குளிர்விக்க எண்ணியது இல்லம்.
உயிர்வதை விரும்பாத உள்ளத்துக்காக
தாவர உயிர் பெறப்பட்டு விருந்து தயாரானது.
முந்தின நாள் மறுநாள் காலை ஆனது.
மறுநாள் காலை முற்பகல் ஆனது .
முற்பகலில் வருகை ரத்து ஆனது
உடைந்தது உள்ளத்தோடு சேர்ந்து இல்லமும்.
கோபம் யார் மேல் கொள்வது.
வராத வண்டியையா? வர விரும்பாத உள்ளத்தையா? சமைத்தது , பேசிமகிழ நினைத்தது, எல்லாம் காற்று போன பலூனானது
எதிர்பார்க்காத ஒருவர் இல்லம் வந்தார்.
தேநீர் கேட்டு வந்தவர்க்கு
இல்லம் விருந்தே வைத்தது.
வந்தார் இந்தியரானால் என்ன?
அயல்நாட்டவரானால் என்ன?
வரவேற்கும் மரபு தமிழருடையதல்லவா?
வந்தாரை வரவேற்று உபசரிப்பது மட்டுமல்ல தமிழ் மரபு அவர்களுடனான உறவைவாழவும் வைக்கவும் நம் மரபு.