காணத்துடிக்கின்றேன் இயேசுவே உம்மை.......
சிலரைப் பார்க்கத் துடிக்கின்றோம்
சிலரைப் பார்த்தாலேத் துடிக்கின்றோம்.
முதல் துடிப்பு அன்பினாலும் ஆர்வத்தாலும் வருவது. இரண்டாவது துடிப்பு பயத்தினாலும் துன்பத்தினாலும் வருவது . இதில் கிரேக்கர்கள் இயேசுவைக் காண வந்தது கண்டிப்பாக முதல்வகைத் துடிப்பாகத் தான் இருக்கும். யூதர்களின் திருவிழாக் கொண்டாட்டத்தில் கிரேக்கர்கள் எப்படி? ஒருவேளை யூதர்களின் வழிபாட்டு முறை கொண்டாட்டங்கள் பற்றி நேரில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் கூட வந்து இருக்கலாம். இயேசுவின் பணியையும் செயலையும் காதால் கேட்டு மகிழ்ந்தவர்கள் நேரில் கண்ணால் பார்க்க துடிக்கிறார்கள். சாதாரண ஏழை எளிய மக்களே ஓடிச்சென்று அவரை நேரில் பார்க்கும் நிலையில் இவர்கள் முறையாக சீடர்களிடம் அனுமதிக் கேட்கிறார்கள். இயேசுவைக் காண வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை எடுத்துரைக்கின்றார்கள். வீடுகளில் குழந்தைகள் பெற்றவர்களிடம் நேரடியாக தங்களுக்குத் தேவையானதை கேட்டு வாங்குவதை விட , சில நேரங்களில் தங்களில் யாரைஅதிகம் பெற்றோர்களுக்குப் பிடிக்கிறதோ அவர்கள் மூலமாகக் கூறி தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். கடைக்குட்டி பிள்ளைகள் பெரும்பாலும் இந்த உதவியை செய்வார்கள். அதுபோலவே கிரேக்கர்களும் சீடர்கள் மூலமாக இயேசுவைக் காண விரும்புகின்றனர். விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வும் அடைகின்றனர்.
இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்ற இயேசுவின் இலட்சியம் விருதுவாக்கு செயல்படும் வகையில் யூதர் அல்லாத புற இனத்தவரான கிரேக்கர்கள் இயேசுவைக் காண வருகின்றனர். இயேசுவே இறைமகன் , அவர் வார்த்தையே நற்செய்தி , அவர் வாழ்க்கையே இறைமாட்சி என்று எண்ணி நம்பி வருகின்றனர். அவர்களது அன்பையும் ஆர்வத்தையும் கண்டு இயேசு அவர்களுக்கு மூன்று செய்திகளை சொல்கின்றார். அவர்களுக்கு மட்டுமல்ல ,இயேசுக் காண வேண்டும் என ஏங்கும் அனைவருக்கும் சொல்கிறார்.
மண்ணில் மடிந்து பலன் தா.
பிறர்க்கென வாழ்.
என் பணி செய்.
கோதுமை மணியை பற்றி அதிகம் தெரியும் அக்காலத்து மக்களுக்கு. எனவே அதையே உருவகமாக வைத்து சொல்கிறார். துன்பங்கள் மூலமாக உன் வாழ்வை மெருகேற்றி வளப்படுத்திக்கொள் . உன்னால் முடிந்த அளவு உனது நூறு சதவிகித உழைப்பையும் கொடு . அதற்கேற்ற பலனை நீ பெறுவாய் என்கிறார்.
பிறர்க்கென வாழும் போது உன்னை நீயே புதிதாக கண்டு கொள்வாய். தனக்கென வாழ்பவன் அதை இழந்து விடுவான் . அதை ஒரு பொருட்டாகக் கருதாதவன், அதாவது தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்பவன், கிறிஸ்துவுக்காக வாழ்பவன் நிலைவாழ்வு பெறுவான் . நம் மகிழ்ச்சியொடு பிறர் மகிழ்ச்சியும் இணையும் போது தான் நம் வாழ்வு நிறைவு பெற்றதாகும்.
இயேசுவின் பணியை தொடர்ந்து செய்யும் அவர் சீடர்களாக நாம் மாறவேண்டும். இதனால் தந்தையின் மதிப்பைப் பெறும் நல்ல தொண்டர்களாய் நாம் மாறலாம்.
இவ்வாறாக தன்னைக் காண வந்த கிரேக்கர்கள், கோதுமை மணி போல் உருமாற, பிறர் பணி செய்ய, தந்தையின் நல் மதிப்பைப் பெற வழிகாட்டுகிறார். தனது சொல்லும் செயலும் தந்தையிடமிருந்தே வருகின்றது என்பதை மெய்ப்பிக்க ஒரு உரையாடலை தந்தைக் கடவுளோடு நடத்துகிறார். மாட்சிப்படுத்தினேன் மாட்சிப்படுத்துவேன் என்ற குரல் மூலம் கடவுளும் தன் மகனுக்கு ஆறுதல் தருகிறார். இதனை கிரேக்கர்கள் மட்டுமல்லாது அங்கு கூடியிருந்த அத்தனை பேரும் பார்க்கின்றனர்.
பார்ப்பது என்பது வேறு , காண்பது என்பது வேறு. பார்ப்பது , கண் பார்வையுடன் அச்செயல் முடிந்துவிடும். . வீதியில் வெளியில் நாம் அன்றாடம் பார்க்கும் காட்சிகள் எல்லாமே இதில் அடங்கும். இது நம் மனதில் எந்த விதமான பாதிப்பையும் உணர்வையும் விதைப்பதில்லை. மாறாக காண்பது என்பது புலனுறுப்புக்கள் அனைத்தினாலும் உணர்ந்து காண்பது. இது எக்காலத்திலும் நம் மனதை விட்டு நீங்காது. நமக்கு மிகவும் பிடித்த ஒருவரின் வருகை அல்லது உடனிருப்பு, விழா போன்றவை.
கிரேக்கர்கள் இயேசுவை மேலோட்டமாக பார்த்துவிட்டு போக வரவில்லை. அவரைக் கண்டு உணர வந்தனர். தந்தைக் கடவுளின் குரலையும் இயேசுவின் செயலையும் அங்குக் கூடியிருந்த அனைவரும் கேட்டனர் பார்த்தனர். ஆனால் அவர்கள் யாரும் அதை மனதில் இருத்தி காண முயலவில்லை. அதனால் தந்தைக் கடவுளின் குரல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணத்தைக் கொடுத்திருக்கிறது. கேட்கச் செவியிருந்தும் கேட்க இயலாத உள்ளத்தினராய் அவர்கள் மாறிவிட்டனர்.
தவக்காலத்தின் ஐந்தாம் வாரத்தில் அடியெடுத்து வைக்கின்றோம். இயேசுவின் பாடுகளில் அவரோடு பங்கேற்க நம்மை நாமே தயாரித்துக் கொண்டு இருக்கும் காலகட்டம் இது. இந்நிலையில் நாம் இயேசுவைக் காணத் துடிக்கிறோமா இல்லைப் பார்க்கத் துடிக்கிறோமா? நமது தந்தை அனுபவமும் இயேசு அனுபவமும் நம் கண்களைத் தாண்டி நம் மனதிற்கு செல்லாமல் வாழ்ந்திருக்கின்றோம் என்றால் நாமும் பல நேரங்களில் கண்ணிருந்தும் குருடராய் காதிருந்தும் செவிடராய் வாழ்ந்திருக்கிறோம் என்றே அர்த்தம். கிரேக்கர்கள் போல இயேசுவைக் காண முயல்வோம். கண்ணால் காண்பதை உள்ளத்தில் இருத்தி சிந்தித்து வாழ முற்படுவோம். நம்மைச்சுற்றிலும் கேட்கும் தந்தைக் கடவுளின் குரலை இனம் கண்டு , அவரின் நன்மதிப்பைப் பெற முயல்வோம் . இறை ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.
இயேசுவே உன்னைக் காணத்துடிக்கின்றேன் நான் என அனுதினமும் சொல்வோம் அருளாசீர் பெறுவோம்.
x
x
சிலரைப் பார்த்தாலேத் துடிக்கின்றோம்.
முதல் துடிப்பு அன்பினாலும் ஆர்வத்தாலும் வருவது. இரண்டாவது துடிப்பு பயத்தினாலும் துன்பத்தினாலும் வருவது . இதில் கிரேக்கர்கள் இயேசுவைக் காண வந்தது கண்டிப்பாக முதல்வகைத் துடிப்பாகத் தான் இருக்கும். யூதர்களின் திருவிழாக் கொண்டாட்டத்தில் கிரேக்கர்கள் எப்படி? ஒருவேளை யூதர்களின் வழிபாட்டு முறை கொண்டாட்டங்கள் பற்றி நேரில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் கூட வந்து இருக்கலாம். இயேசுவின் பணியையும் செயலையும் காதால் கேட்டு மகிழ்ந்தவர்கள் நேரில் கண்ணால் பார்க்க துடிக்கிறார்கள். சாதாரண ஏழை எளிய மக்களே ஓடிச்சென்று அவரை நேரில் பார்க்கும் நிலையில் இவர்கள் முறையாக சீடர்களிடம் அனுமதிக் கேட்கிறார்கள். இயேசுவைக் காண வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை எடுத்துரைக்கின்றார்கள். வீடுகளில் குழந்தைகள் பெற்றவர்களிடம் நேரடியாக தங்களுக்குத் தேவையானதை கேட்டு வாங்குவதை விட , சில நேரங்களில் தங்களில் யாரைஅதிகம் பெற்றோர்களுக்குப் பிடிக்கிறதோ அவர்கள் மூலமாகக் கூறி தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். கடைக்குட்டி பிள்ளைகள் பெரும்பாலும் இந்த உதவியை செய்வார்கள். அதுபோலவே கிரேக்கர்களும் சீடர்கள் மூலமாக இயேசுவைக் காண விரும்புகின்றனர். விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வும் அடைகின்றனர்.
இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்ற இயேசுவின் இலட்சியம் விருதுவாக்கு செயல்படும் வகையில் யூதர் அல்லாத புற இனத்தவரான கிரேக்கர்கள் இயேசுவைக் காண வருகின்றனர். இயேசுவே இறைமகன் , அவர் வார்த்தையே நற்செய்தி , அவர் வாழ்க்கையே இறைமாட்சி என்று எண்ணி நம்பி வருகின்றனர். அவர்களது அன்பையும் ஆர்வத்தையும் கண்டு இயேசு அவர்களுக்கு மூன்று செய்திகளை சொல்கின்றார். அவர்களுக்கு மட்டுமல்ல ,இயேசுக் காண வேண்டும் என ஏங்கும் அனைவருக்கும் சொல்கிறார்.
மண்ணில் மடிந்து பலன் தா.
பிறர்க்கென வாழ்.
என் பணி செய்.
கோதுமை மணியை பற்றி அதிகம் தெரியும் அக்காலத்து மக்களுக்கு. எனவே அதையே உருவகமாக வைத்து சொல்கிறார். துன்பங்கள் மூலமாக உன் வாழ்வை மெருகேற்றி வளப்படுத்திக்கொள் . உன்னால் முடிந்த அளவு உனது நூறு சதவிகித உழைப்பையும் கொடு . அதற்கேற்ற பலனை நீ பெறுவாய் என்கிறார்.
பிறர்க்கென வாழும் போது உன்னை நீயே புதிதாக கண்டு கொள்வாய். தனக்கென வாழ்பவன் அதை இழந்து விடுவான் . அதை ஒரு பொருட்டாகக் கருதாதவன், அதாவது தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்பவன், கிறிஸ்துவுக்காக வாழ்பவன் நிலைவாழ்வு பெறுவான் . நம் மகிழ்ச்சியொடு பிறர் மகிழ்ச்சியும் இணையும் போது தான் நம் வாழ்வு நிறைவு பெற்றதாகும்.
இயேசுவின் பணியை தொடர்ந்து செய்யும் அவர் சீடர்களாக நாம் மாறவேண்டும். இதனால் தந்தையின் மதிப்பைப் பெறும் நல்ல தொண்டர்களாய் நாம் மாறலாம்.
இவ்வாறாக தன்னைக் காண வந்த கிரேக்கர்கள், கோதுமை மணி போல் உருமாற, பிறர் பணி செய்ய, தந்தையின் நல் மதிப்பைப் பெற வழிகாட்டுகிறார். தனது சொல்லும் செயலும் தந்தையிடமிருந்தே வருகின்றது என்பதை மெய்ப்பிக்க ஒரு உரையாடலை தந்தைக் கடவுளோடு நடத்துகிறார். மாட்சிப்படுத்தினேன் மாட்சிப்படுத்துவேன் என்ற குரல் மூலம் கடவுளும் தன் மகனுக்கு ஆறுதல் தருகிறார். இதனை கிரேக்கர்கள் மட்டுமல்லாது அங்கு கூடியிருந்த அத்தனை பேரும் பார்க்கின்றனர்.
பார்ப்பது என்பது வேறு , காண்பது என்பது வேறு. பார்ப்பது , கண் பார்வையுடன் அச்செயல் முடிந்துவிடும். . வீதியில் வெளியில் நாம் அன்றாடம் பார்க்கும் காட்சிகள் எல்லாமே இதில் அடங்கும். இது நம் மனதில் எந்த விதமான பாதிப்பையும் உணர்வையும் விதைப்பதில்லை. மாறாக காண்பது என்பது புலனுறுப்புக்கள் அனைத்தினாலும் உணர்ந்து காண்பது. இது எக்காலத்திலும் நம் மனதை விட்டு நீங்காது. நமக்கு மிகவும் பிடித்த ஒருவரின் வருகை அல்லது உடனிருப்பு, விழா போன்றவை.
கிரேக்கர்கள் இயேசுவை மேலோட்டமாக பார்த்துவிட்டு போக வரவில்லை. அவரைக் கண்டு உணர வந்தனர். தந்தைக் கடவுளின் குரலையும் இயேசுவின் செயலையும் அங்குக் கூடியிருந்த அனைவரும் கேட்டனர் பார்த்தனர். ஆனால் அவர்கள் யாரும் அதை மனதில் இருத்தி காண முயலவில்லை. அதனால் தந்தைக் கடவுளின் குரல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணத்தைக் கொடுத்திருக்கிறது. கேட்கச் செவியிருந்தும் கேட்க இயலாத உள்ளத்தினராய் அவர்கள் மாறிவிட்டனர்.
தவக்காலத்தின் ஐந்தாம் வாரத்தில் அடியெடுத்து வைக்கின்றோம். இயேசுவின் பாடுகளில் அவரோடு பங்கேற்க நம்மை நாமே தயாரித்துக் கொண்டு இருக்கும் காலகட்டம் இது. இந்நிலையில் நாம் இயேசுவைக் காணத் துடிக்கிறோமா இல்லைப் பார்க்கத் துடிக்கிறோமா? நமது தந்தை அனுபவமும் இயேசு அனுபவமும் நம் கண்களைத் தாண்டி நம் மனதிற்கு செல்லாமல் வாழ்ந்திருக்கின்றோம் என்றால் நாமும் பல நேரங்களில் கண்ணிருந்தும் குருடராய் காதிருந்தும் செவிடராய் வாழ்ந்திருக்கிறோம் என்றே அர்த்தம். கிரேக்கர்கள் போல இயேசுவைக் காண முயல்வோம். கண்ணால் காண்பதை உள்ளத்தில் இருத்தி சிந்தித்து வாழ முற்படுவோம். நம்மைச்சுற்றிலும் கேட்கும் தந்தைக் கடவுளின் குரலை இனம் கண்டு , அவரின் நன்மதிப்பைப் பெற முயல்வோம் . இறை ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.
இயேசுவே உன்னைக் காணத்துடிக்கின்றேன் நான் என அனுதினமும் சொல்வோம் அருளாசீர் பெறுவோம்.
x
x