Friday, 13 April 2018

வைர‌ விழா வாழ்த்து க‌விதை .

வைர‌ விழா கொண்டாடும் முத்துவிற்கு
முத்தான‌ வைர‌ வ‌ரிக‌ள் கொண்ட‌ வாழ்த்துக‌ள்.
வைர‌ விழா  வாழ்த்து க‌விதை .

முத்து ப‌ட்டின‌த்தில் பிற‌ந்த‌ முத்தே ,
மூத்தோரின் ந‌ற்குண‌ம் பெற்ற‌ சொத்தே,
நேச‌மாய் ப‌ணி செய்ய‌ இயேசு ச‌பையில்
சேர்ந்த‌ பாக்கிய‌த்தின் புத‌ல்வ‌ரே,
ஆன்மீக‌ ப‌ணி செய்து ப‌ல‌ ஆன்மாக்க‌ளை
மீட்ட‌ அன்ன‌ம்மாளின் ஆருயிர் புத்திர‌ரே,
இணைய‌த்தின் இணைப்பு இல்லாத‌ போதே
இய‌க்குந‌ராய் திருஇருத‌ய‌ செய்திக‌ளைத் த‌ந்து,
இவ்வுல‌கை இத‌ய‌த்தால் இணைத்து ம‌கிழ்ந்த‌வ‌ரே.
புல‌ன‌மும் முக‌நூலும் வ‌ந்த‌து இன்று உம் ப‌ணியால்
மன‌ந‌ல‌மும் அக‌புத்த‌க‌மும் கொண்டு சிற‌ப்பு செய்தீரே அன்று.
ப‌ங்குத்த‌ந்தையாய், ம‌றையுரை ம‌ன்ன‌ராய்,
ஆன்மீக‌ குருவாய், திரு இருத‌ய‌ செய்தி இய‌க்குன‌ராய்,
குண‌ப்ப‌டுத்தும் குண‌சீல‌ராய், ஆலோச‌க‌ராய், நீர் எடுத்த‌ அவ‌தார‌ங்க‌ள் அனைத்திலும் வெற்றி பெற்ற‌வ‌ரே,
அறுப‌தாண்டுக‌ள் அய‌ராது ப‌ணி செய்து
அன்ப‌ர் ப‌ணியை அகில‌ம் ப‌ர‌ப்பிய‌வ‌ரே,
வைர‌ விழா ம‌ட்டும‌ல்ல‌ உம் அன்பால்
ப‌வ‌ள‌ விழா, நூற்றாண்டு விழா காண‌ வாழ்த்துகிறோம்.
அன்பும் அமைதியும் உம்மில் நிலைக்க‌,
ஆண்ட‌வ‌ர் அருள் உம்மேல் ஓங்கிட‌,
அற்புத‌ங்க‌ள் ப‌ல‌ உம‌க்கும் , உம்மால்
பிற‌ருக்கும் ந‌ட‌ந்தேற‌ உம‌க்காய் வேண்டி செபிக்கிறோம் வாழ்த்தி வ‌ண‌ங்குகிறோம்.........
prayer song 
வேண்டுத‌ல் வேண்டாமை இலான‌டி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல‌ எனும் வ‌ள்ளுவ‌ரின் வாக்கிற்கிண‌ங்க‌, இறைவ‌னை இறுக‌ப்ப‌ற்றி, இரு முப்ப‌தாண்டுக‌ள்(மூவிருப‌து) இறைத்தொண்டாற்றிய‌வ‌ர் ந‌ம் அருட்த‌ந்தை. அவ‌ரின் வைர‌ விழா ம‌கிழ்வில் திளைத்திருக்கும் இந்நேர‌த்தில் இறைத்துணை நாடி பாட‌ வ‌ருகின்ற‌ன‌ர். .....
வ‌ர‌வேற்புரை.
வ‌ந்தாரை வ‌ர‌வேற்ப‌து த‌மிழ‌ர் ம‌ர‌பு, வ‌ர‌வேற்று ம‌கிழ்வோடு ம‌ன‌நிறைவையும் த‌ருவ‌து எம் சீமையின் ம‌ர‌பு. சில‌ர‌ப் பார்க்க‌த் துடிக்கிறோம். ப‌ல‌ரைப் பார்த்தாலே துடிக்கிறோம். அவ்வ‌கையில் அருட்த‌ந்தையின் அன்பாலும் ப‌ணியாலும் ஈர்க்க‌ப்ப‌ட்டு அவ‌ரைப் பாராட்ட‌ , அவ‌ர் ம‌கிழ்வில் ப‌ங்கு கொள்ள‌ வ‌ந்திருக்கும் உங்க‌ளை வ‌ர‌வேற்று ம‌கிழ்வையும் ம‌ன‌நிறைவையும் த‌ர‌ வ‌ருகிறார் எம் சிவ‌க‌ங்கை சீமையின் ...... 
வ‌ர‌வேற்பு ந‌ட‌ன‌ம்.
ச‌ங்க‌த்த‌மிழ் இய‌ல் இசை நாட‌க‌ம் எனும் முப்ப‌ரிணாம‌முடைய‌து. ( வாயாலும் வார்த்தையாலும்) நாவாலும் ந‌ற்சொல்லாலும் வாழ்த்திய‌து போதாது என்றெண்ணி ந‌ளின‌த்தாலும் இசை ந‌ட‌னத்தாலும் வ‌ர‌வேற்க‌ வ‌ருகின்ற‌ன‌ர்.......எம்.....
க‌விதை.
வாழ்க்கையில் வெற்றி பெற‌ வேண்டுமா? சுருக்கமாக‌ பேசி நிறைய‌ செய‌லாற்றுங்க‌ள் என்ற‌ வார்த்தைக்கு சொந்த‌க்கார‌ர் ந‌ம் அருட்த‌ந்தை. அவ‌ரின் வாழ்வை ப‌ணியை வார்த்தைக‌ளாக‌ சுருக்கி , க‌விந‌ய‌த்தோடு சொல்ந‌ய‌ம் சேர்த்து க‌விதையாக‌ த‌ர‌ வ‌ருகின்றார். எம்......
வாழ்த்து.
வாழ்க்கையில் நாம் ச‌ந்திக்கும் ஒவ்வொரு ம‌னித‌ரும் ஏதோ ஒரு வ‌கையில் ஒன்றை ந‌ம‌க்கு க‌ற்பித்து விட்டு தான் செல்கின்ற‌ன‌ர். அவ்வ‌கையில் த‌ங்க‌ளோடு வாழ்ந்த‌போதுஅருட்த‌ந்தை விட்டுச்சென்ற‌ நன்மைக‌ளை வார்த்தை ம‌ணிக‌ளாக‌ தொடுத்து வாழ்த்து மாலை சூட‌ வ‌ருகின்றார். எம்.......
ந‌ட‌ன‌ம்.
எதையும் சிந்தித்து செய்தால் கிடைப்ப‌து வெற்றி, செய்துவிட்டு சிந்தித்தால் கிடைப்ப‌து அனுப‌வ‌ம் . ஆக‌ வெற்றி அனுப‌வ‌ம் இர‌ண்டையும் அறுப‌தாண்டுகால‌ துற‌வ‌ற‌ வாழ்வில் நிறைவாக‌ பெற்று வ‌ள‌மாய் வாழ்ந்த‌ அருட்த‌ந்தையின் ம‌கிழ்வோடு நம்‌ ம‌ன‌ம் சேர்க்க‌ ந‌ட‌ன‌மாட‌ வ‌ருகின்ற‌ன‌ர்,,,எம் .....
ப‌ற்றுக‌ ப‌ற்ற‌ற்றான் ப‌ற்றை அப்ப‌ற்றை ப‌ற்றுக‌ ப‌ற்று விட‌ற்கு என்ப‌த‌ற்கேற்ப‌ இறைவ‌னைப் ப‌ற்றி இனிமையாக‌க‌ வாழ்ந்த‌வ‌ர் . இனிவ‌ரும் கால‌ங்க‌ளிலும் அவ‌ர் இறை அன்போடு உடல் ‌ உள்ள ந‌ல‌ம் பெற்று வாழ‌ வாழ்த்துகிறோம்....
வாழ்க்கை‌ என்ப‌து சாகும் வ‌ரை அல்ல‌ நாம் பிற‌ர் ம‌ன‌தில் வாழும்வ‌ரை... என‌ப‌த‌ற்கு எடுத்துகாட்டு ந‌ம் அருட்த‌ந்தை......
உற‌வுக‌ளோடு இருக்கும்போது, இறைவ‌னின் பார்வை ந‌ம் மேல் இருக்கும். த‌ன்ன‌ந்த‌னியாக‌ இருக்கும்போது இறைவ‌னே ந‌ம்மோடு இருக்கின்றார்.... உற‌வுக‌ளை விட்டு துற‌வு மேற்கொண்டாலும் இறை உற‌வு அத்த‌னை உற‌வுக‌ளையும் நம‌க்கு மீண்டும் த‌ருகிற‌து என்ப‌தை மெய்ப்பித்த‌வ‌ர் ந‌ம் த‌ந்தை.....

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...