Thursday, 29 November 2018

birthday mass intro


அரிது அரிது பிறத்தல் அரிது
அதனினும் அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.
ஆம் பிறப்பு என்பது கடவுள் நமக்களித்த மாபெரும் கொடை . அதிலும் மனிதராய்ப் பிறந்து, மனிதத்தோடு வாழ்வது என்பது இப்பொதெல்லாம் அரிதினும் அரிதாக மாறிவிட்டது. மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் மனுமகனின் அன்பை அடையாளமாக வெளிப்படுத்தவே பிறக்கின்றது என்பர் அறிஞ்ர்கள்.  அவ்வகையில் மனிதனாய்ப் பிறந்து , அந்த மனித வாழ்வை மனுமகனின் அன்பு பணி செய்வதற்கு அர்ப்பணித்து வாழ்ந்து ,இன்று தங்களின் பிறப்பின் மகிழ்வினால் நமக்கும் மகிழ்வூட்டூம் அருட்தந்தையர்களை மகிழ்வுடன் வாழ்த்தி செபிக்க நாம் கூடியுள்ளோம்.  இந்நேரத்தில் பிறப்பு என்னும் ஒரு அரிய கொடைக்காக ,படைப்பிற்காக இறைவனுக்கு நன்றி கூறும் நம் அன்பு உள்ளங்களோடு இணைந்து நாமும் நன்றி கூறுவோம்.       உறவு என்னும் உன்னதமான வலைப் பின்னனில் நம்மையும் அவர்களோடு இணைத்த,  இறைவனின் ஈடு இணையில்லா செயலுக்காக நன்றி கூறுவோம்.  இன்று இவர்களது உடனிருப்பாலும் உறவிணைப்பாலும் மகிழும் நம்மைப் போல் உலகின் பல திசைகளிலிருக்கும் இவர்களின் உன் பிறப்புகள் உற்றார் உறவினர்கள் நண்பர்காள் அன்பர்கள் அனைவருக்காகவும் சிறப்பாக செபிப்போம்.
பிறப்பை இறைவனின் மாபெரும் படைப்பாய்….
வாழ்ந்திடுவீர்  நீவீர் என்றும் துடிப்பாய்.
படைத்தவன் பார்க்கும்  வியப்பாய்
உம் வாழ்வு மலரட்டும் செழிப்பாய்
வாழ்க்கை இனிக்கட்டும் இனிப்பாய்
வரம் நூறு பெற்றிடட்டும் நிலைப்பாய் என்று வாழ்த்தி நன்னாளாம் இப்பொன்னாளில் உமது எண்ணங்கள் ஈடேற்றமடைய, செய்யும் செயல்கள் சிறப்படைய, எடுக்கும் முயற்கிகளில் இறையருள் தொடர்ந்து நிலைக்க அருள் வேண்டி செபிக்கிறோம். அன்பர் பணிக்காக அழைப்பினை ஏற்று பணி செய்யும் நீவீர், உங்களது அன்பு பணியினாலும் சொல்லாலும் அனைவரையும் ஆண்டவர் பக்கம் அழைத்து செல்லும் அன்பின் கருவிகளாக தொடர்ந்து நிலைக்க அருள் வேண்டி  கல்வாரிப் பலியில் தன்னை தியாகமாக தந்த நம் தலைவர் இயேசு நமது மன்றாட்டுக்களுக்கு செவிமடுத்து அருள் பொழிய வரம் வேண்டி இத்தியாக திருப்பலியில் பக்தி நிறை மகிழ்வுடன் பங்கேற்போம் ….

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...