தவக்காலம் இரண்டாம் ஞாயிறு
I. தொடக்கநூல் 12:1-4
II. 2 திமொத்தேயு 1:8-10
III. மத்தேயு 17:1-9
அன்பில் அன்னையாய் ,
பாசத்தில் தமக்கையாய்,
வழிநடத்துதலில் தோழியாய்
உடன் வாழ்வதில் மனைவியாய்,
அன்னை அன்பின் மறுதலிப்பாம் மகளாய்
அனுதினமும் மறுபிறவி எடுத்து
மண்ணுலகை மகிழ்விக்கும் அனைத்து
மகளிருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்
பாசத்தில் தமக்கையாய்,
வழிநடத்துதலில் தோழியாய்
உடன் வாழ்வதில் மனைவியாய்,
அன்னை அன்பின் மறுதலிப்பாம் மகளாய்
அனுதினமும் மறுபிறவி எடுத்து
மண்ணுலகை மகிழ்விக்கும் அனைத்து
மகளிருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்
தவக்காலத்தின் இரண்டாம் வாரத்தில் இருக்கக்கூடிய நம்மை இயேசு எழுந்திருங்கள் அஞ்சாதீர்கள் என்ற வார்த்தைகள் மூலம் வலுப்படுத்துகின்றார். இன்றைய நாளில் இயேசுவின் உருமாற்றம் பகுதி நமக்கு நற்செய்தி வாசகமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று பேருடைய குரல்களை நமது சிந்தனைக்கு என்று எடுத்துக்கொள்வோம்.
பேதுருவின் குரல், மேகத்தின் குரல், இயேசுவின் குரல்
பேதுருவின் குரல், மேகத்தின் குரல், இயேசுவின் குரல்
முதலாவதாக பேதுருவின் குரல்
ஆண்டவரே நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா? என்கின்றார். தான் பேசுவது என்னவென்று தெரியாமலேயே அவர் பேசுகின்றார். அதாவது இப்போது இருக்கக்கூடிய அந்த இன்பமான நிலையிலேயே அப்படியே இருக்க விரும்புகிறார். இரண்டாவதாக தன்னை மறந்து தனக்கு எதிரில் ஒளிமயமாக இருக்கக்கூடிய மோசே எலியா இயேசு ஆகியோரின் நலன்களை மட்டும் நினைக்கின்றார். அந்த காலத்தில் கூடாரம் அமைப்பது அல்லது கூடாரம் என்பது இறைவன் வாழும் ஆலயமாக கருதப்பட்டது ஆக இயேசுவை இறை நிலைக்கு உயர்த்தி மகிழ்கிறார்.
ஆண்டவரே நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா? என்கின்றார். தான் பேசுவது என்னவென்று தெரியாமலேயே அவர் பேசுகின்றார். அதாவது இப்போது இருக்கக்கூடிய அந்த இன்பமான நிலையிலேயே அப்படியே இருக்க விரும்புகிறார். இரண்டாவதாக தன்னை மறந்து தனக்கு எதிரில் ஒளிமயமாக இருக்கக்கூடிய மோசே எலியா இயேசு ஆகியோரின் நலன்களை மட்டும் நினைக்கின்றார். அந்த காலத்தில் கூடாரம் அமைப்பது அல்லது கூடாரம் என்பது இறைவன் வாழும் ஆலயமாக கருதப்பட்டது ஆக இயேசுவை இறை நிலைக்கு உயர்த்தி மகிழ்கிறார்.
இரண்டாவது மேகத்தின் குரல்
இந்த குரலில் என் அன்பார்ந்த மைந்தர் இவரே இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் இவருக்குச் செவிசாயுங்கள் என்று ஆண்டவர் எடுத்துரைக்கின்றார். இவற்றின் மூலமாக இயேசு யார் என்று தெளிவாக எடுத்துரைக்கின்றார் எனது அன்பார்ந்த மகன் இந்த மனிதரின் பொருட்டு மிகவும் பூரிப்படைந்திருக்கின்றார் என்பதை எடுத்துரைக்கின்றார். அடுத்ததாக இவருக்குச் செவிசாயுங்கள் என்று ஒரு விண்ணப்பம். அன்று யோர்தான் நதிக்கரையில் இயேசு தன் பணியைத் தொடங்கும் முன் அவர் யார் என மக்களுக்கு எடுத்துரைத்த இறைவன், இன்று அவரது உயர்பணியாம் எருசலேமை நெருங்கும் முன் மீண்டும் எடுத்துரைக்கின்றார்.
இந்த குரலில் என் அன்பார்ந்த மைந்தர் இவரே இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் இவருக்குச் செவிசாயுங்கள் என்று ஆண்டவர் எடுத்துரைக்கின்றார். இவற்றின் மூலமாக இயேசு யார் என்று தெளிவாக எடுத்துரைக்கின்றார் எனது அன்பார்ந்த மகன் இந்த மனிதரின் பொருட்டு மிகவும் பூரிப்படைந்திருக்கின்றார் என்பதை எடுத்துரைக்கின்றார். அடுத்ததாக இவருக்குச் செவிசாயுங்கள் என்று ஒரு விண்ணப்பம். அன்று யோர்தான் நதிக்கரையில் இயேசு தன் பணியைத் தொடங்கும் முன் அவர் யார் என மக்களுக்கு எடுத்துரைத்த இறைவன், இன்று அவரது உயர்பணியாம் எருசலேமை நெருங்கும் முன் மீண்டும் எடுத்துரைக்கின்றார்.
இயேசுவின் குரல்
முகம் குப்புற விழுந்த சீடர்கள் மூவரையும் தொடுகின்ற தொடுதலின் மூலம் தன்னை யாரென்று வெளிப்படுத்துகின்றார் இயேசு. அஞ்சாதீர்கள் எழுந்திருங்கள் என்ற வார்த்தைகள் அவர்களை பலப்படுத்துகின்றன. மேலும் தான் விண்ணேற்றமடையும் நாள் வரை இதை யாருக்கும் எடுத்துரைக்கக் கூடாது என்று கட்டளையிடுகின்றார். எதை யாரிடம் எப்படி எப்போது சொல்ல வேண்டும் என்பதிய நன்கு அறிந்த இயேசு அதனை தன் சீடர்களுக்கும் பயிற்றுவிக்கின்றார்.
இந்நற்செய்தியில் இடம்பெற்றுள்ள மூன்று குரல்களும் மூன்று விதமானவை. பேதுருவின் குரல் மனித இயல்பின் குரல். மேகத்தின் குரல் தய்வ இயல்பு. இயேசுவின் குரல் தெய்வ மனித இயல்பு. எழுந்திருங்கள் அஞ்சாதீர்கள் என்று அன்று சீடர்களுக்கு சொன்ன இயேசு இன்று நமக்கும் சொல்கின்றார். பல்வேறு நேரங்களில் நாமும் இன்பமான இந்நிலையிலேயே தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடாதா என்று மனித இயல்பில் ஏங்குவது உண்டு. இந்நிலையிலிருந்து எழுந்திருப்போம்.
மேலும் எவ்வாறு சீடர்கள் மேகத்தின் குரலைக் கேட்டு அஞ்சி முகம் குப்புற விழுந்தார்களோ அதுபோல நாமும் பல நிறங்களில் இறை திருவுளம் இறை சித்தம் இது என தெரிந்திருந்தும் அதனை செய்ய இயலாமல் அஞ்சி முகம் குப்புற விழுகின்றோம். இந்நிலையிலிருந்து எழுந்திருப்போம்.
நமது விருப்பம் இதுதான் என இயேசுவின் முன் எடுத்து வைத்து அவரது விருப்பம் எது? அவருக்கு விருப்பமா என்று பேதுரு போல கேட்க முன்வருவோம்.
இவருக்கு செவிசாயுங்கள் என்று மேகத்தின் குரலுக்கு செவிகொடுப்போம். இயேசு சொல்வது போல எழுந்திருங்கள் அஞ்சாதீர்கள். நமது பலவீனத்தில் இருந்து எழுந்திருப்போம் நமது அறியாமையிலிருந்து எழுந்திருப்போம். நமது பகை மனதிலிருந்து எழுந்திருப்போம். நமது வீண் விவாதத்திலிருந்து எழுந்திருப்போம்.
முகம் குப்புற விழுந்த சீடர்கள் மூவரையும் தொடுகின்ற தொடுதலின் மூலம் தன்னை யாரென்று வெளிப்படுத்துகின்றார் இயேசு. அஞ்சாதீர்கள் எழுந்திருங்கள் என்ற வார்த்தைகள் அவர்களை பலப்படுத்துகின்றன. மேலும் தான் விண்ணேற்றமடையும் நாள் வரை இதை யாருக்கும் எடுத்துரைக்கக் கூடாது என்று கட்டளையிடுகின்றார். எதை யாரிடம் எப்படி எப்போது சொல்ல வேண்டும் என்பதிய நன்கு அறிந்த இயேசு அதனை தன் சீடர்களுக்கும் பயிற்றுவிக்கின்றார்.
இந்நற்செய்தியில் இடம்பெற்றுள்ள மூன்று குரல்களும் மூன்று விதமானவை. பேதுருவின் குரல் மனித இயல்பின் குரல். மேகத்தின் குரல் தய்வ இயல்பு. இயேசுவின் குரல் தெய்வ மனித இயல்பு. எழுந்திருங்கள் அஞ்சாதீர்கள் என்று அன்று சீடர்களுக்கு சொன்ன இயேசு இன்று நமக்கும் சொல்கின்றார். பல்வேறு நேரங்களில் நாமும் இன்பமான இந்நிலையிலேயே தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடாதா என்று மனித இயல்பில் ஏங்குவது உண்டு. இந்நிலையிலிருந்து எழுந்திருப்போம்.
மேலும் எவ்வாறு சீடர்கள் மேகத்தின் குரலைக் கேட்டு அஞ்சி முகம் குப்புற விழுந்தார்களோ அதுபோல நாமும் பல நிறங்களில் இறை திருவுளம் இறை சித்தம் இது என தெரிந்திருந்தும் அதனை செய்ய இயலாமல் அஞ்சி முகம் குப்புற விழுகின்றோம். இந்நிலையிலிருந்து எழுந்திருப்போம்.
நமது விருப்பம் இதுதான் என இயேசுவின் முன் எடுத்து வைத்து அவரது விருப்பம் எது? அவருக்கு விருப்பமா என்று பேதுரு போல கேட்க முன்வருவோம்.
இவருக்கு செவிசாயுங்கள் என்று மேகத்தின் குரலுக்கு செவிகொடுப்போம். இயேசு சொல்வது போல எழுந்திருங்கள் அஞ்சாதீர்கள். நமது பலவீனத்தில் இருந்து எழுந்திருப்போம் நமது அறியாமையிலிருந்து எழுந்திருப்போம். நமது பகை மனதிலிருந்து எழுந்திருப்போம். நமது வீண் விவாதத்திலிருந்து எழுந்திருப்போம்.
அன்று மோசேக்கு சீனாய் மலையில் எரியும் முட்புதரில் காட்சி அளித்த இறைவன், இறைவாக்கினர் எலியாவிற்கு ஓரேபு மலையில் பலி நெருப்பு வடிவத்தில் காட்சி அளித்த இறைவன், இன்று இயேசுவுக்கு தாபோர் மலையில் மேகத்தின் குரல் வழியாக தன்னை வெளிப்படுத்துகின்றார். இவ்வாறு நமது வாழ்விலும் பல்வேறு தருணங்களில் எரியும் புதராக பலி நெருப்பாக மேகத்தின் குரலாக இறைவன் ஒவ்வொரு நாளும் நமக்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றார். நாம் அவரது குரலைக் கேட்க, அவரது உருவத்தை அவரது தன்மையை கண்டுணர முற்படுவோம். இன்று உலகம் முழுவதும் கொரோனா எனும் தொற்று வியாதி மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கக் கூடிய நிலையில், இறைவன் நம்மை தொட்டு கூறுகிறார் இந்நிலையிலிருந்து எழுந்திருங்கள் அஞ்சாதீர்கள். அஞ்சாது இருப்போம் அவர் குரலுக்கு செவி சாய்ப்போம். அப்பொழுது நமது மனம் என்னும் அகம் நல்லெண்ண ஒளி வீசும். நமது நற்பண்புகள் எனும் குணம் ஆடை எனும் ஒளியால் நம்மை மூடும். எழுந்திருப்போம் அஞ்சாதிருப்போம். இறையாசிர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தில் உள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்