Wednesday, 22 February 2023

2. காலஅவகாசம் தரும் மனமாற்றம்


கடந்த காலத்தை நினைத்து வரும் காலத்தையும் தொலைப்பவர்கள் பலர். காலம் என்றுமே உனக்காக நிற்காது. நீ தான் காலத்திற்கு ஏற்றாற்போல உன்னுள் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். என்று காலங்கள் பற்றியும் அது தரும் பாடங்கள் பற்றியும் நாம் பலவற்றை அறிவோம். இயேசுவின் உருமாற்றம் வழி மனமாற்றத்தை சிந்தித்துக் கொண்டிருக்கும் இத்தவக்காலத்தில்  இயேசு தன் மரணத்தை முன்னறிவித்த ஆறு நாள்களுக்குப் பின் தனது உருமாற்றத்தை நிகழ்த்துகிறார் என்பது பற்றி இன்று நாம் சிந்திப்போம். இயேசு தான் எவ்வாறு பாடுபட்டு இறந்து உயிர்க்கப் போகின்றார் என்பதை வெளிப்படையாக திருத்தூதர்களுக்கு அறிவித்த பின் ஏறக்குறைய ஒரு வார கால அவகாசம் அவர்களுக்குக் கொடுக்கின்றார். அந்த 6 நாள்களில் சீடர்கள் இயேசுவைப் பற்றியும் அவரது இறப்பு பற்றியும் சிந்திக்கின்றனர். ஒருவர் மற்றவரோடு தங்களது சந்தேகங்களை கேட்டுத் தெளிவுபடுத்துகின்றனர். ஒருவருக்கொருவர் தங்களது சிந்தனைகளைப் பகிர்ந்து ஒரு தெளிவான நிலைக்கு வர முயற்சிக்கின்றனர். குளம்பிய குட்டையை சிறிது நேரம் அப்படியே விட்டால் எவ்வாறு தெளிந்த நிலைக்கு மெல்ல மெல்ல திரும்புமோ அதுபோல, சீடர்களின் மனமும் தெளிவாக ஆரம்பிக்கின்றது. இத்தகைய நிலையில் தான் தேர்ந்தெடுத்த மூன்று சீடர்களை அழைத்துக் கொண்டு அவர்கள் முன் உருமாற்றம் அடைகின்றார் இயேசு. காலம் காயத்திற்கு மருந்திடும் எனபார்கள் எவ்வளவு பெரிய காயமானால்லும் அது உடல் காயமாக இருந்தாலும் சரி உள்ளக் காயமாக இருந்தாலும் சரி அது அத்தனைக்கும் காலம் மருந்திடும். அவ்வாறு தான் இயேசு தன் மரணத்தை முன்னறிவித்தஹ்து சீடர்கள் சிலருக்கு மனதில் வலியையும் காயத்தையும் ஏற்படுத்தி இருக்கலாம். அக்காயத்திற்கு மருந்திடுவது போல இயேசுவின் உருமாற்றம் நிகழ்ந்துள்ளது. தவக்காலத்தில் மனமாற்றத்தை எதிர்னோக்கி காத்திருக்கும் நாம் காலம் என்னும் சிறப்பான மருந்து கொண்டு நம்மைக் குணப்படுத்த இறைவன் அழைக்கின்றார். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் வலியாக இருந்தாலும் அதனை அப்படியே காலத்தின் கையில் ஒப்படைத்து வாழ் முயல்வோம். சில பிரச்சனைகளுக்கு உடனடித்தீர்வே காலத்தின் கையில் விட்டு விடுதலாகும்.

 திருஅவை சிறப்பிக்கும் இந்த ஒருங்கிணைந்த பயணத்திற்கும் மூன்றாண்டுகள் காலம் உள்ளது இந்த கால அவகாசம் நம்மைத் தெளிவுபடுத்த, சீர்தூக்கிப் பார்க்க. ஆண் பெண் சிறியோர் பெரியோர் என்று எல்லா நிலையினரையும் உள்ளடக்கிய இப்பயணம் எல்லாரோடும் இணைந்து செல்லவேண்டும் என்பதற்காகவே. வலிமையுள்ளோர் பந்தயத்தில் ம்,உன்னெறிச் செல்வர். வலிமையற்றோர் பின்தங்கி விடுவர் இத்தகைய நிலையை மாற்றி எல்லாரும் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில் இலக்கை அடையவேண்டும் என்பதற்காகவே இக்கால கட்டங்கள். திருஅவையின் அனைத்து நிலையினரும் ஒன்றிணைந்து முன்னேறிச்செல்ல அழைப்பு விடுக்கும் இப்பயணத்தில் காலம் தாழ்த்தாது பயணைப்போம். உறவுகளினால் ஏற்படும் காயங்களினால் காலாகாலமாய் வருந்துபவர்கள் பலர் எல்லார் மீதும் பாசம் வையுங்கள் தவறில்லை ஆனால் பைத்தியம் ஆகும் அளவிற்கு வைக்காதீர்கள் ஏனெனில் இங்கு முடிவே இல்லாத வாழ்வும் இல்லை.. பிரிவே இல்லாத உறவும் இல்லை.. எல்லாம் சில காலம் தான்..! கடந்து வந்த பின்பே கண்டுணர்வோம், நம்மைக் கலங்கடித்த காலமெல்லாம் கடுமையான காலம் அல்ல.. நம் வாழ்வை வடிவமைத்த காலம் என்று.. காலம் கற்றுக் கொடுக்கும் பாடம் போல எந்த ஒரு ஆசானாலும் கற்றுக் கொடுக்க முடியாது..! காலம் கடந்து செல்வோம்  யாவும் மாறும் என்ற நம்பிக்கையில்..! காலம் பொன் போன்றது. காலம் தந்த அனுபவம் பொன்னை விட மேலானது. 

 


இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...