Posts

இன்னும் சில உங்களுக்காக

33. கடவுளின் கொடையான திருத்தூதர் புனித மத்தியா

பன்னிரண்டு திருத்தூதர்களில் இறுதியாக யூதாஸ் இஸ்காரியோத்திற்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் புனித மத்தியா. நாம் எல்லோருமே கடவுளின் கொடை. நமது குடும்பம் , உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட கொடை என்பது நாம் நன்கு அறிந்ததே. மத்தியா கடவுளின் கொடை நிறைவாக்குபவர் கடவுளால் வெளிப்படுத்தப்பட்டவர் என்ற 3 நிலைகளில் சிந்திப்போம்.  முதலாவது அவர் கடவுளின் கொடை.  இவ்வுலகம் கடவுள் நமக்குக் கொடையாகக் கொடுத்தது. பொதுவாக நாம் எதனை கொடை என்று கருதுவோம். நாம் பல ஆண்டுகளாக எதிர்பார்த்த ஒன்று நமக்கு பல இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் கிடைக்கும்போது அதனை கொடையாகக் கருதுவோம். அல்லது எதிர்பாராத ஒரு நிகழ்வு நமக்கு நிறைவேறி மகிழ்வினைக் கொடுக்கும்போது அதை நாம் கொடையாகக் கருதுவோம். அது போல் தான் மத்தியாவும். 12 சீடர்களாக முழுமையாக இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்களை அடையாளப்படுத்துபவர்களாக இருந்த சீடர்களில் ஒருவர் இப்போது இல்லை அவருக்கு பதிலாக ஒருவரை கடவுள் கொடையாக கொடுக்கின்றார். ஆக நாம் எதிர்பாராத வேளையில் நமக்கு மகிழ்வூட்டும் வண்ணம் கடவுள் செய்யும் செயலே கொடையாகக் கருதப்பட...

32. நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்.

Image
இறுதி இராவுணவின்போது இயேசு தனது சீடர்களுக்கு எடுத்துரைத்த கருத்துக்கள் குறித்து தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கும் நாம் இன்றைய நாளில் நான் போனால் துணையாளராம் தூய ஆவியை உங்களுக்கு அனுப்புவேன் என்று கூறிய இயேசுவின் வார்த்தைகளை சற்று சிந்திப்போம். சிலுவையில் தனது பாடுகளும் மரணமும் நிகழும் சூழலில் தம் சீடர்கள் தம்மைக் கைவிட்டுவிடுவார்கள் என்று நன்கு அறிந்திருந்தபோதிலும் , தேற்றரவாளரும் ஆறுதலளிப்பவருமான தூய ஆவியானவரின் வருகையை ஆண்டவர் அவர்களுக்கு வாக்களிக்கிறார். நான் போகவில்லை எனில் தூயஆவியானவர் அவர்களிடம் வரமாட்டார் என்று இயேசு உறுதியுடன் தெரிவிப்பது நம்மைச் சற்றே ஆச்சரியப்படுத்துகிறது. உண்மையில் , இயேசுவின் இந்த "புறப்படுதலை" அப்போஸ்தலர்கள் அவருடைய மரணத்தைத் தெளிவாகக் குறிப்பிடும் ஒரு முடிவான நிகழ்வாகக் கருதினார்களா , அல்லது அதைத் தொடர்ந்த விண்ணேற்றத்தை மனதில் கொண்டிருந்தார்களா என்பதை நம்மால் அறிய முடியாது ; ஆனால் , தங்கள் ஆண்டவரை என்றென்றைக்குமாக "இழந்துவிடுவோம்" என்ற எண்ணம் நிச்சயமாக அவர்களுக்கு மகிழ்ச்சியளித்திருக்காது. திருத்தூதர்களைப் போலவே , நாமும் சில சமயங்...

31. தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்.

Image
  தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்ப இருக்கும் துணையாளராம் தூய ஆவியார் என்னைப் பற்றி சான்று பகர்வார் என்று கூறுகின்றார் இயேசு இன்னும் சிறிது நாள்களில் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவினை சிறப்பிக்க இருக்கின்ற நாம் அதற்கடுத்த 10 நாள்களில் பெந்தகோஸ்து என்னும் பெருவிழாவினைக் கொண்டாடி மகிழ இருக்கின்றோம். இயேசு தந்தைக்கும் தனக்கும் உள்ள உறவைக் குறித்து சீடர்களுக்கு எடுத்துரைத்ததைத் தொடர்ந்து தூய ஆவியாரின் பணிகள் மற்றும் செயல்கள் குறித்தும் தொடர்ந்து எடுத்துரைக்கின்றார். இவ்வரிகளில் தூய ஆவியார் எனக்கு சான்று பகர்வார் என்று இயேசு கூறும் சொற்களைக் குறித்து தியானிப்போம். தூய ஆவியாரின் வருகைக்குப் பின் தான் சீடர்கள் புத்துணர்ச்சியும் புது ஆற்றலும் பெறுகின்றார்கள். தூய ஆவியாரின் சான்று மறைமுகமான சான்று. எல்லாருக்கும் வெளிப்படையாக தெரியும் அளவில் அவரது சான்று இருக்காது. மாறாக , ஒவ்வொருவரும் அவரவர் உள்ளத்தில் ஆழமாக உணரும் வண்ணம் அவரது சான்று இருக்கும். தூய ஆவியால் நிரப்பப்பட்ட சீடர்களின் வாழ்வானது வெளிப்படையான சான்றாக அமைகின்றது. இதன் வழியாக அவர்கள் தூய ஆவி வலியுறுத்திய இயேசுவின் சான்று வா...

30. நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்.

Image
  கணவனாலும் தந்தையாலும் பாதுகாக்கப்படாத விதவைகள் மற்றும் அனாதைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதும் காப்பதும் ஒரு அடிப்படைக் கடமை என்று திருச்சட்டமும் இறைவார்த்தைகளும் நமக்குப் போதிக்கின்றன. அவர்கள் பாதுகாப்பற்றவர்களாகவும் , ஆதரவற்றவர்களாகவும் , தனியாகவும் வாழ்வதால் , கடவுளே தம்மை அவர்களின் தந்தையாகவும் நியாயாதிபதியாகவும் வெளிப்படுத்துகிறார் என்று திருப்பாடல் எண்  68 இதனை எடுத்துரைக்கின்றது. இன்றைய நற்செய்திப் பகுதி , அனாதை என்பதன் மற்றொரு பொருளை முன்னிறுத்துகிறது: அனாதை என்பவன் , பெற்றோரை இழந்த ஒரு குழந்தையைப் போலவே , ஆசிரியரை இழந்த ஒரு மாணவனும் ஆவான். இந்த அர்த்தத்தில் , சீடர்கள் அனாதைகளாகத் தோன்றுகிறார்கள் . இயேசு தங்களை விட்டுப் பிரியப் போகிறார் என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள் ; அவர் பிரிந்து சென்றால் , தாங்கள் எப்படி அவருடன் தொடர்ந்து இணைந்திருக்கவும் , அவரை அன்பு செய்யவும் முடியும் என்று அவர்கள் வருத்தத்துடன் வியக்கிறார்கள். மேலும் , இயேசு அவர்களைத் தனியாக , வழிகாட்டுதல் இல்லாமல் விட்டுவிட மாட்டேன் என்று வாக்குறுதி அளிக்கிறார் ; அவர் தந்தையிடம் செபிப்பார் என்றும் , ...

29. நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன்.

Image
  உலகத்தில் எத்தனையோ மனிதர்கள் ஆண்கள் பெண்கள் இருந்தாலும் ஒரு சிலருக்கு ஒரு சிலரை மட்டும் தான் பிடிக்கும் அவர்களையே தங்களது வாழ்க்கைத் துணையாளர்களாக நண்பர்களாக தெரிவு செய்து கொள்கின்றனர். அதே போல தான் இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சீடர்களும். அவரைச் சுற்றி ஏராளமான கூட்டம் வந்தாலும் இயேசு தேர்ந்தெடுத்தது 12 பேரை மட்டும் தான். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன் . என்ற சொற்றொடர் , அன்பின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அர்த்தமுள்ள சொற்றொடர்களில் ஒன்றாகும். இது மன உறுதி , விழிப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக விளங்குகின்றது. "தேர்ந்தெடுத்தல்" என்பது , தற்செயலாகவோ , சாதாரண விதியின் செயலாகவோ நடைபெறுவது அல்ல , மாறாக உண்மைகளை முழுமையாக அறிந்து எடுக்கப்பட்ட ஒரு முடிவு. உலகம் வழங்கும் எண்ணற்ற சாத்தியக்கூறுகளுக்கு மத்தியில் , ஒருவர் தனது எதிர்காலத்தை யாருடன் உருவாக்க விரும்புகிறாரோ , அந்த நபராக அவர் அடையாளம் காணப்படுகிறார். உதாரணத்திற்கு காதல் நிமித்தம் ஒரு ஆணையோ பெண்ணையோ தேர்ந்தெடுப்பவர்கள் தனக்கு ஏற்ற நபரை தனித்துவமானவராகவும் , ஈடு செய்ய முடியாதவராகவும் உணர்கின...

28. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.

Image
  நண்பனில் ஏது நல்ல நண்பன் கெட்ட நண்பன். நண்பன் என்றாலே நல்லவன் தான் என்று நட்பு குறித்து   பிரபலமான வாக்கியத்தை நாம் பலமுறை கேட்டு ரசித்திருப்போம். ஏனெனில் நட்பு என்பது எல்லாருக்கும் பிடித்தமானது. சிறுவயது முதல் முதிர் வயது வரை எல்லாருக்கும் நண்பர்களிடம் பழகுவது என்பது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது. ஆக எல்லா நிலையில் இருக்கும் மனிதர்களுக்கும் நட்பு என்று மிகவும் பிடித்தமான ஒன்று.   இன்றைய நற்செய்தியிலும் இயேசு தனது கட்டளைகளைக் கடைபிடித்து வாழ்பவர்களை நண்பர்கள் என்று அழைக்கின்றார். தத்துவ இயல் அறிஞர் அரிஸ்டாட்டில் நட்பு ( Philia)   என்பது சிறந்த வாழ்க்கைக்கு அவசியம் என்று கூறுகின்றார். மேலும் அதனை மூன்று வகையாகப் பிரித்து பயன் நட்பு ( Utility Friendship), இன்ப நட்பு ( Pleasure Friendship), நல்ல நட்பு ( Virtue Friendship) என்று பிரித்து எடுத்துரைக்கின்றார். நல்ல நட்பு ( Virtue Friendship) தான் உண்மையான நட்பு. நல்ல குணம் , நம்பிக்கை , அக்கறை என இருபக்கமும் இந்த நல்ல நட்பில் இருக்கும். நண்பன் என்பவன் நம்மில் மீதி. முதல் பாகம் நாம் என்றால் , நமது இரண்டாம் பாகம் ந...

27. என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.

Image
  இயேசுவினுடைய இந்த வரிகள் நமது வாழ்க்கைக்கு வலிமை ஊட்டுகின்ற மிகவும் உன்னதமான ஒரு கூற்றாகத் தோன்றுகிறது. ஆழ்மனதில் , நம்மால் பல காரியங்களைச் செய்ய முடியும் என்று நாம் அனைவரும் நினைக்கிறோம். சில சமயங்களில் , நாம் மிகவும் திறமையானவர்கள் என்று உணர்ந்து , எல்லாவற்றையும் நாமே செய்கிறோம். " நான் செய்வதில் நீர் மகிழ்ச்சியடைவீர் என்று நம்புகிறேன்!" இறைவனே என்று சொல்வது போல நாம் செய்யும் காரியங்களுடன் ஒரு ஜெபத்தையும் இணைத்துக்கொள்கின்றோம். இயேசுவின் வார்த்தைகள் , நமது இயல்பில் ஒரு முழுமையான மாற்றத்தைக் குறிக்கின்றன. தன்னிச்சையாகச் செயல்பட வேண்டாம் என்பதற்கான ஓர் அழைப்பு! நாம் அவருக்கு உரியவர்கள் என்று உணர்கிறோமா ? , அவருடன் நெருங்கிய நல்லிணக்கத்தில் நம் வாழ்க்கையை வாழ்கிறோமா ? , அவருடைய ஆவியின் ஆற்றலிலிருந்து வருவதைப் பகுத்தறியாமல் காரியங்களைச் செய்ய நாம் அஞ்சுகிறோமா ? என்பதுதான் இயேசுவின் இந்த வார்த்தைகளுக்கு அடியில் உள்ள உண்மையான கேள்வி. சுருக்கமாகச் சொன்னால் , ஐக்கியமுள்ள வாழ்வின் இரகசியத்தை வாழ அதை நாம் தேர்வு செய்கிறோமா என்பதுதான் இதன் மையக்கருத்து. என்னில் நிலைத்திருப்பவன் ம...

26. நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.

Image
  " மிகுந்த கனி கொடுங்கள்" என்று இயேசு கூறுவதில் "கனி" என்பது பொருள் சார்ந்த வெற்றி அல்ல , மாறாக ஆன்மீக மற்றும் உறவு சார்ந்த வெற்றியாக அடையாளப்படுத்தப்படுகின்றது. இயேசு வாழ்ந்துகாட்டிய முன்மாதிரிகையின்படி வாழப்படும் , இணக்கமுள்ள அன்பே அவர் எடுத்துரைக்கும் கனியாகும். நற்செய்தியின் விழுமியங்களைப் பிரதிபலிக்கின்ற , மாற்றப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்களாக நாம் இருக்க வேண்டும் என்றும் , குணநலமும் நன்நடத்தையும் கொண்டவர்களாக வாழ வேண்டும் என்பதையும் இவ்வரிகளின் வழியாக வலியுறுத்துகின்றார். சீடர் மற்றவர்கள் மீது நேர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்துபவர்களாக , தங்களது சான்றுள்ள வாழ்வால் மற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவருபவர்களாக இருக்க வேண்டும். இயேசுவுடன் நாம் நிலைத்திருக்கும்போது மட்டுமே , நம்மால் கனி கொடுக்க முடியும். மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சியளிக்கின்றது என்று கூறும் இயேசு இறைவனுடைய் மாட்சி ஆடம்பரத்தில் வெளிப்படுவதில்லை. மாறாக. அவர்தம் பிள்ளைகளின் வாழ்க்கை வழியாகவே வெளிப்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டுகின்றார். இறைத்தந்தை அவர் தம் பிள்ளை...