Monday, 19 January 2015

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்


தம்பி எவ்வளவு அருமையான ஒரு உறவு. வீட்டில் ஐந்து பேர் கடைசியாக அவன் தான் என்றாலும் ஒரு நாளும் அப்படிக் காட்டியது கிடையாது. அண்ணன் கைய பிடித்துக்கொள் என்று யாராவது என்னிடம் தெரியாமல் சொன்னால் அவனுக்கு அப்படி பிடிக்கும். நானும் நான் தான் மூப்பு என்பதை நிருபிக்க முயன்று பலமுறை தோற்றேன் ஏன்னா என் உருவம் அப்படி. இரட்டை பிறவிகள் போல தான் ஊர் சுற்றுவோம். பகல் முழுதும் விளையாடுவோம் , பசித்தால் பக்கத்து வீட்டு பப்பாளி மரத்தில் கை வைப்போம். எங்கள் வீட்டில் டிவி இல்லாத சமயம் இரவில் பக்கத்து வீட்டில் பொதிகையில் படம் பார்க்கச் செல்வோம். படம் முடிந்ததும் தட்டி எழுப்புவார்கள் தூக்கம் கலையாமல், வீடு மாறாமல் வந்து தூக்கத்தை தொடர்வோம். 9 மணி பள்ளிக்கு அரை மணிக்கு முன்னதாக தான் படுக்கையிலிருந்தே எழுவோம். பக்கத்திலேயே பள்ளி என்பதால் பத்து நிமிட இடைவேளை தான் எங்கள் காலை உணவு நேரம். மதிய வேளையில் விளையாட்டு வெள்ளைச் சட்டை வெளிரும் வரை. மாலை பள்ளி முடிந்தது பை வீசும் போட்டி யாருடைய பை தூரமாக விழுகிறது என்று.ஒரு நாள் வெற்றி பெற்றேன் நான் பரிசு அம்மா தந்தார்கள் விளக்குமாரால்!!!  பை பானை மேல் இருந்த இட்லி மாவை பதம் பார்த்தது தான் காரணம்.அடி வாங்கினாலும் போட்டி , அழாமல் இருப்பது யார் என்று.   வீட்டில் எப்போதும் சண்டை தான் ஆனால் வெளியில் விட்டு கொடுக்க மாட்டான் பட்டம் விடுவது பச்சரிசி சோறு பொங்குவது என எல்லாம் கற்றுத் தந்தது அவன் தான் சைக்கிள் என்றாலே பயம் எனக்கு . கை விட்டு ஓட்டுவான் அவன் . பொறாமையாக இருக்கும் . அவனே ஓட்ட சொல்லித்தந்தான் . ஒன்னாம் நம்பர் சைக்கிள் முட்டி வரை தான் இருக்கும் உட்கார்ந்து காலாலே நடந்து செல்லலாம் ஓட்டினேன் கொண்டு போய் பள்ளத்தில் தள்ளினான். முட்டி தோள் பேர்ந்துருச்சு  . அம்மாவிடம் மாட்டி விட்டு அடி வாங்க வைத்தேன். பேய் என்றால் எப்போதும் பயம் தான் அதை வைத்தே அழ வைப்பான் பல நேரம் . அப்படி பல நிகழ்வுகள் அவனோடு . நான் அழுதபோது எல்லாம் சிரித்தவன் என்னோடு சேர்ந்து அழுதது நான் விடுதிக்கு போன போது தான் . தம்பியோடு விளையாடலாம் என்றுதிரும்பி வந்தேன் மாறாமல் நான் .மாறி நின்றான் அவன்  உழைக்கும் மகனாய் .அன்று பிரிந்தது இன்று வரை சேரவில்லை.

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...