Thursday, 19 February 2015

அருள்தரும் காலம்

  மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் 
மண்ணுக்கே திரும்புவாய்  என்ற 
இறை மொழி கேட்டு மனம் திரும்பும் காலம் 
நம் பாவங்களுக்காக மனம் வருந்தி 
மன்னிப்புகோரி மன்றாடும் காலம் 
தவங்கள் பல செய்யத்தூண்டும்
தவக்காலம். இக்காலத்தில் 
உடல் வருந்தாமல் உள்ளம் வருந்துவோம்.
ஒருவர் மற்றவருக்காய் சிறப்பாய் செபிப்போம்.
மன்னிப்பைக் கொடுப்போம் பெறுவோம் 
ஒரு நாளில் ஓர் உதவி ஒருவர்க்கு
என்றே நாளும்  உயர்ந்திடுவோம் .
வாழும் கிறிஸ்துக்களாக மாறிடுவோம்.
அருள் மழை பொழியும் காலமாக 
இத்தவக்காலம் அனைவருக்கும் அமையட்டும் 

 
  
    

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...