Friday, 8 September 2017

புதுக்குழு

                 


 பிற‌ப்பின் ம‌கிழ்வில்புதுக்குழு உருவாகி ஓராண்டின் நிறைவின் ம‌கிழ்வில் மீண்டும் என் வ‌லைப்ப‌திவில் உங்க‌ளை ச‌ந்திப்ப‌தில் பெரும‌கிழ்வு அடைகிறேன். இட‌மாற்ற‌ம்,ப‌ணிமாற்ற‌ம் அதோடு சேர்ந்து உட‌ல் எடை மாற்ற‌மும் கூட‌....  நிற்க‌.... 

குடும்ப‌த்திற்கு ம்கிழ‌வைத் த‌ருவ‌து பிற‌ப்பு. ஒரு ச‌பைக்குடும்பத்திற்கு ம‌கிழ்வைத் த‌ருவ‌து ஓர் புதுகுழு உருவாவ‌து. அவ்வ‌கையில் ஓர் ஆண்டை நிறைவு செய்து இள‌ந்த‌ளிராக‌ மிளிர்கிற‌து எம் குழும‌ம். துற‌விக‌ள் ம‌கிழ்வோடும் ம‌ன‌ நிறைவோடும் வாழ‌ வேண்டும் . இல்லையெனில் அவ‌ர்க‌ள் துற‌வு அனுச‌ரிக்க‌ த‌குதி அற்ற‌வ‌ர்க‌ள் என்கின்ற‌ன‌ர் மூத்த‌ துற‌விக‌ள். ம‌கிழ்ச்சியைத் தேடி தொலைதூர‌ம் செல்லும் நாம் அருகில் இருக்கும் ம‌கிழ்ச்சியைத் தொலைத்தே விடுகிறோம் என்ப‌தே உண்மை. மகிழ்ச்சி ந‌ம்க்குள் இருக்கிற‌து. ந‌ம் அருகில் இருக்கிற‌து என்பதை உண‌ராம‌ல் வாழ்கிறோம். அன்னை ம‌ரியின் பிற‌ப்பு அவ‌ர்த‌ம் முதிர்வ‌ய‌து பெற்றோர்க்கு ம‌கிழ்வைத் த‌ந்த‌து. இனிமேல் இய‌லாது ந‌ட‌க்காது என்று எண்ணிய‌வ‌ர்க‌ளுக்கு இறைம‌க‌னின் மூத்த‌ பெற்றோர்க‌ளாகும் வாய்ப்பு கிடைத்த‌து. காத்திருப்பு க‌னிவுடையோருக்கு பெரும்பேறாய் அமைகிற‌து. நாமும் காத்திருப்போம் பிற‌ப்புக்காக‌ ம‌ட்டும‌ல்ல நாளின் ஒவ்வொரு நிக‌ழ்வின் சிறப்புக்காக‌. ந‌ன்‌மைக‌ள் ப‌ல ந‌ம் வாழ்வில் ந‌ட‌க்க‌ அதை உண‌ர்ந்து வாழ‌ குழ‌ந்தை அன்னை அருள் பொழிவாராக‌.  

Thursday, 11 May 2017

மணவாட்டி



துறவற ஆண்டில்  இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்த சகோதரி ஒருவரின் வெள்ளி விழாத்
 திருப்பலியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  விழா நாயகி திருமணப்பெண் போல் தலையை வெண்ணிற முக்காடிட்டு அமர்ந்திருந்தார். பார்த்தவுடனே மனதில் மகிழ்ச்சி,  உள்ளத்தில் பரவசம்.  திருப்பலி முழுவதும் முக்காடிதான் மகிழ்ச்சி தான் என்னைத் திக்குமுக்காடச் செய்தது. திருமணத்தன்று வெண்முக்காடிட்டு தன்னை அலங்கரிக்கும் மணமகள் தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விப்பாள். வெள்ளை உடை அணிந்து  தலை  முக்காடிடும் பெண் துறவிகள் அனைவரும்
 தாங்களும் மனுமகனின் மணமகள்கள்  என்பதை தங்கள் உடை மூலம் வெளிப்படுத்துகின்றனர். ஒரு பெண் 
தன்னுடைய வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டும் தான் தன்னை மணமகளாக அலங்கரித்துக் கொள்ள முடியும் . ஆனால் பெண் துறவிகள் தலை முக்காட்டினால் அனுதினமும் தாங்கள் ஆண்டவனின் மணமகள்கள் என அறிக்கையிடுகின்றனர்.  
  


(அப்படியானால் சேலை அணிபவர்கள் இறைவனின் மணமகள் இல்லையா என்று கேட்டால் செய்வது )





எல்லா ஊரிலுமா  மணப்பெண்கள் வெள்ளை முக்காடிடுகின்றனர். இல்லையே!  சில ஊரில் சேலை கட்டிய மணப்பெண்களும் இருக்கத் தானே செய்கின்றனர்.


( அப்பாடா நல்லபடியா சமாளிச்சாச்சு )







Thursday, 30 March 2017

வளமுடன் வாழ.....

 

எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...

தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்*.

 உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...

குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும். 

 வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.

 ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது *ஊமையாய்* இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.

சங்கடங்கள் வரும் போது *தடுமாற்றம்* அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது *தடம்* மாறாதீர்கள்.

 வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி *நீங்கள்* நன்றாக அறிவாய். யார் உண்மையான நண்பர்கள் என்று...? 

ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு *நீங்கள்* மட்டுமே காரணம். 

 நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்; உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.

வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய  பேச்சையும் கேட்பவர்.

எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.

நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை *முட்டாள்* என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு  
*நம்பிக்கையையே* ஆகும்.

அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் *திறமை* படைத்தவன் என்பதே அர்த்தம்.

மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை. 
அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!

Thursday, 23 March 2017

அன்னையின் தியாகப் பாதையில்

.
    அன்னையின் தியாகப் பாதையில்
 அன்புச் கோத‌ கோதரிகளேதாண்டர் இயேசு மாட்சிமை அடைவற்கு முன்பு து சீடர்களுக்குக்கூறியது போலவே பாடுகள் ட்டு  ரித்து துன்புற்று , துன்புறும் மெசியாவாக‌ தன்னை  வெளிப்படுத்தினார்உலகை டைத்த‌ உன்ன‌ இறைவனின் ன் பாவச்சிலுவை      சுமந்து உயிர் துறந்தார்.
அன்னை ரியாளும் அன்பர் இயேசுவின் வாழ்வில் அவரோடு உடன்  ணித்தவர்.           இறைவனின் மீட்பை , திருவுளத்தை எவ்வாறு துணிவுடன் ஏற்க‌ வேண்டும் , பிறரின் துயரச் சிலுவைகளின் பாரத்தை எவ்வாறு இரக்கத்துடன் கிர்ந்து வாழ‌ வேண்டும்விண்ணத்தந்தையின் திருவுளம் நிறைவேற்றி ,கிழ்வோடும் ‌ நிறைவோடும் வாழ்ந்து எவ்வாறு கிறிஸ்துவின் உயிர்ப்பில் ங்கு கொள்ளவேண்டும் என்பதை அன்னை ரியாள்  அவது வாழ்வு மூலம் க்குக் ற்றுத்தருகிறாள்.
நாம் அனைவரும் ஒன்றாகக் குழுமி இருக்கும் இந்நேரத்தில் ம் தாய் ரியாள் னது வாழ்வில் ந்தித்த‌ துயங்களையும் இரக்கம் நிறை அவளின் குண‌ அழகையும் தியானிக்க‌  நாம் அழைக்கப் -பட்டுள்ளோம்சுமை சுமந்து சோர்ந்திருப்பர்களே எல்லோரும் என்னிடம் வாருங்காள் னான் உங்காளுக்கு இளைப்பாறுதல் தருவேன் . என் நுகம் அழுத்தாது  என் சுமை எளிதாயுள்ளது என்ற‌ ம் ஆண்டர் இயேசுவின் மேல் ம்பிக்கை வைத்து அன்னையின் துயப்பாதையில்    அவருடன் ணிப்போம்.
செபிப்போமாக‌ , 

இரக்கமுள்ள‌ இறைவாஉம் ஒரே ன் இயேசு பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் எம்மைக் காக்க‌ , சிலுவையிலே அறையுண்டு ரித்தார்அன்னையின் வியாகுலங்களைத் தியானிக்க‌ இருக்கும் எங்களின் ங்களை  தூய‌ ஆவி ஆட்கொள்ளச் செய்தருளும்‌ திறந்தருளும்.  இந்த‌ செபத்தால் தியானத்தால் நாங்கள் துன்பத்திலும் இன்பத்திலும் கிறிஸ்துவை பின்பற்றி எண்ணத்திலும் செயலிலும் சிறந்தர்களாக‌ எங்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாகத் திகழும் அன்னை ரியைப் போல‌ வா‌ அருள்த‌ வேண்டுமென்று எங்கள் ஆண்டராகிய‌ இயேசு கிறிஸ்து ழியாக‌ உம்மை ன்றாடுகின்றோம் . ஆமென்.
                                 முதல் துயம் 

                          
சிமியோனின் இறைவாக்கு

                                   (
உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுறுவும்.) லூக் : 2,35. 

வாசம் ; 1அரர். 19,9-13. 

ழிநத்துபர்:
  கடவுளின் திருவுளத்திற்கு திறந்த மனது
  த்தின் னிமையில் வெறுமையாக‌, டைகளின் ஆண்டரின் ருகைக்காக‌ காத்திருந்த‌ இறைவாக்கினர் எலியாவுக்கு வுள் ன்னை வெளிப்படுத்திய‌ நிகழ்வுக்கு செவிமடுப்போம்
 அவர் அங்கிருந்த குகைக்கு வந்துஅதில் இரவைக் கழித்தார்அப்போது ஆண்டவரது வாக்கு அவருக்கு வந்ததுஅவர் "எலியாநீ இங்கே என்ன செய்கிறாய்?" என்று வினவினார்.
10 அதற்கு அவர், "படைகளின் கடவுளாகிய ஆண்டவர் மீது நான் பேரார்வம் கொண்டவனாய் இருந்து வருகிறேன்ஆனால் இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையை உதறிவிட்டனர்உம் பலிபீடங்களைத் தகர்த்து விட்டனர்உம் இறைவாக்கினரை வாளால் கொன்றுவிட்டனர்நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்கஎன் உயிரையும் பறிக்கத் தேடுகின்றனர்என்றார்.
11 அப்போது ஆண்டவர், "வெளியே வாமலைமேல் என் திருமுன் வந்து நில்இதோஆண்டவராகிய நான் கடந்து செல்லவிருக்கிறேன்என்றார்உடனே ஆண்டவர் திருமுன் பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்ததுஆனால் ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லைகாற்றுக்குப் பின் நிலநடுக்கம் ஏற்பட்டதுநிலநடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை.
12 நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்றுதீயிலும் ஆண்டவர் இருக்கவில்லைதீக்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது.
13 அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார்அப்பொழுது, "எலியாநீ இங்கே என்ன செய்கிறாய்?" என்று ஒரு குரல் கேட்டது.
சிந்தனைஇறைவாக்கினர் சிமியோனின் வார்த்தைகளை ற்று ஆழமாக‌ சிந்தித்தோமானால் இயேசு ருடைய‌ வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரமாக‌ இருப்பார்,எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருப்பார் என்கிறார்இந்த‌ துய‌ வாள் அன்னையின் உள்ளத்தை ஊடுறுவும் என்கிறார்.
எவனொருவன் உல‌ அமைதியை விரும்புகிறானோ அவன் அந்த‌ உண்மை கொண்டு ரும் கொடிய‌  துன்பங்களையும் துயங்களையும் பொறுமையோடு ஏற்கவேண்டும்உண்மைக்கு எதிரான‌ யான‌ அமைதி ஒருபோதும் இறைவாக்கினர்களின் வாலுக்கு சாதமாய் அமைய‌ முடியாதுஅவ்வகையில் உண்மையை உரக்கச்சொல்ல‌ பிறந்த‌ இயேசுவின் எதிர்கால‌ வாழ்வை ணிக்கிறார் சிமியோன்.
உண்மையாம் இயேசுவை ன் உதத்திலும் உள்ளத்திலும் தாங்க‌ ன்னையே கையளித்து துன்பங்களை எதிர்கொள்ள‌ துணிகிறாள் ரியாள்இன்பமோ துன்பமோ ன்னை எது எதிர் கொண்டாலும் அதனை ஏற்க‌ திறந்த‌ துடன் காத்திருக்கிறாள்வுள் க்கென‌ வெளிப்படுத்தும் அத்தனையும் ன்மையெனக் காண்கிறாள் . உண்மை உள்ளத்தையும் திறந்த‌ தையும் ஆரத்தழுவிக் கொண்டு இயேசுவின் சிலுவைப் பாதைக்கு ன்னை யார் செய்கிறாள்.
செபிப்போமாக‌,
தூய‌ ரியேஇயேசுவின் பிறப்பில் ங்கு கொள்ள‌ வானதூதர்களால் அழைக்கப்பட்டீர்அதனால் சிமியோன் மூலம் இயேசுவின் துன்பத்திலும் த்திலும் ங்கேற்கும் அருள் பெற்றீர்உம்முடைய‌ இந்த‌ தாழ்ச்சியையும் ம்பிக்கையையும் ண்டு உம்மை ங்கி ஆராதிக்கின்றோம்இறைவாக்கினரின் வார்த்தைக்கு செவிமடுத்து அதை உம் உள்ளத்தில் இருத்தி சிந்தித்தரேஉமது உள்ளத்தை ஊடுறுவிய‌ அந்த‌ துய‌ வாளை உமது உள்ளத்தை விட்டு எடுக்காது,ஆழ்ந்து தியானித்தரேஉண்மை‌ ஏற்படுத்தும் துன்பங்களையும் சிரங்களையும் துணிவோடு ந்தித்து கிறிஸ்துவின் பாதையில் உம் வாழ்வை த்திச் சென்றரேஉம்மைப் போல் நாங்களும் தூய‌ ம் கொண்டர்களாக‌ வாழ‌, உண்மை எது என‌ ரியாக‌ ண்டறிந்து துன்பத்தை எதிர்கொள்ளும் துணிச்சல் உள்ளர்களாக‌ வாழ‌ அருள் தாரும் ஆமென்.
இரண்டாம் துயம்
எகிப்துக்கு ப்பி ஓடுதல்
எகிப்துக்கு ப்பி ஓடிச் செல்லும் ஏனெனில் ஏரோது குழந்தையைக் கொல்வதற்காகத் தேடப் போகிறான். ) த். 2, 13.
ழிநத்துபர்இயேசுவைப் பின்பற்ற‌ விரும்புபர்களை ன்னோடு துன்புறவும் அழைக்கும் இவ்வாசத்திற்கு செவிமடுப்போம்.
இயேசு
மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள்தலைமைக் குருக்கள்மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்
 என்று சொன்னார்.

23பின்பு அவர் அனைவரையும் நோக்கி
என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.
24ஏனெனில்தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார்என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.
சிந்தனைதாவீதின் ழித்தோன்றலாம் இயேசு தான் மாட்சி பெறும் முன் உலக்களால் மிகவும் கொடிய‌ வேதனைக்கும் துன்பத்திற்கும் உள்ளாக வேண்டியிருக்கும் என்ற‌  இறைவார்த்தைக்கி ஏற்ப‌ குழந்தைப் ருவத்திலேயே ல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்அன்னை ரியும் சூசை ந்தையும் அவரின் இன்னல்களி ங்கேற்கின்றர்னித‌ வாழ்வின் இன்னல்களான‌ ம் , பாதுகாப்பின்றி ங்க‌ இடமின்றி , அகதிகளாக‌ வேறு நாட்டிற்கு ப்பிச் செல்கின்றர்.
அன்னைமரியின் ம்பிக்கையின் ஆழமும் தூய‌ அன்பும் அநீதி , ஊழல் , ன்முறை வெறுத்து ஒதுக்கப்படுதல் போன்ற‌ தீய‌ க்திகளுக்கு எதிராக‌ போரிடுகின்ற‌.
அன்னை எந்நிலையிலும் து ம்பிக்கையை ராது காத்துக் கொள்கிறாள்கிறிஸ்து இயேசுவை ற்றிகொண்டு வாழ்கிறாள்வுளின் திருவுளப்படி துன்புறுபர்கள் ன்மையில் நிலைத்திருப்பது போல‌ கிறிஸ்துவில் நிலைத்திருந்து டைத்தரிடம் ன்னை ஒப்படைக்கிறாள்.
செபம்
தூய‌ ,ரியேகிறிஸ்துவின் பிறப்பின் கிழ்வில் ங்கு கொள்ள‌ அழைக்கப்பட்டரேஅதன்மூலம் பிறது வெறுப்புக்கும் ல்வேறு துன்பத்திற்கும் உள்ளாகி ஏழ்மையான‌ வாழ்க்கை வாழ‌ ணிக்கப்பட்டவரேகுழந்தை மெசியாவிற்கு துன்பம்ன்த‌ துடிக்கும் கொடிய‌ ன்னன் ஏரோதிடமிருந்து காக்க‌, நாடு ஊர் உறவுஇனம் மொழி ந்துவீடின்றிஉறவின்றி உணவின்றி துன்புற்றரேஉண்மையின் நாயனைக் காக்க‌ தாவீதின் ழி பினரான‌ சூசையின் துணையுடன் எகிப்துகு ப்பிச் சென்றரேஉமத் துணிச்சலையும் பொறுமையையும் ண்டு ங்கி உம்மை ஆராதிக்கின்றோம்உம்மைப் போல் நாங்களும் குழப்பத்திலும் துன்பத்திலும் துணிவோடு செயலாற்ற‌, டுவுனிலைமையுடன் முடிவுகளை எடுத்து உண்மைக்கு சாட்சியம் கிர‌ அருள்தாரும் ஆமென்.
மூன்றாம் துயம்
எருசலேம் தேவாலத்தில் இயேசு காணாமற்போதல்

னே ஏன் இப்படிச் செய்தாய் ? உன் ந்தையும் நானும் உன்னை மிகுந்த‌ லையோடு தேடிக்கொண்டிருந்தோமே! ) லூக் 2.48.
வுளின் திட்டத்திற்கு அடிபணிந்துது ஒரே ன் ஈசாக்கை லியிடத் துணிந்த‌ விசுவாசத்தின் ந்தை ஆபிரகாமின் துணிச்சல் நிறை தியாகத்தை விவிலியத்திலிருந்து வாசிக்கக் கேட்போம்
வாசம் ; தொ.நூல். 22, 1-3.
கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார்அவர் அவரை நோக்கிஆபிரகாம்எனஅவரும் “இதோஅடியேன்” என்றார்.
2அவர், “உன் மகனைநீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா நிலப்பகுதிக்குச் செல்அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிடவேண்டும்” என்றார்.
3அவ்வாறே ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து தமது கழுதைக்குச் சேணமிட்டுதம் வேலைக்காரருள் இருவரையும் தம் மகன் ஈசாக்கையும் அழைத்துக் கொண்டு எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை வெட்டிய பின்கடவுள் தமக்குக் குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.
சிந்தனை;
  
அன்னை ரியாளிடம் இறைமன் இயேசுவைப் பிறக்கச் செய்தது அவர் ழியாக‌ இவ்வுலகிற்கு அவரை கையளிக்கவேஅதனை ன்கறிந்த‌ ரியாள் இயேசுவை ற்பண்புகளால் க்குவப்படுத்திமேன்மைச் செயல்களினால் மெருகேற்றி ந்தையின் ணிக்கு அனுப்ப‌ எண்ணினார்ஆனால் அதற்குள் வானத்தந்தையின் அருள் உந்தித் ள்ள‌ ணி செய்ய‌ ன்னிரண்டு தினிலே கோவிலில் காணாமல் போன‌ இயேசுவை ண்டு ம் தைக்கிறார்அதற்கேற்ற‌ காலம் இன்னும் வில்லை என‌ எண்ணுகிறார்.
ன் னுக்காக‌ அத்தனையையும் இழந்தர் இன்று ‌ னையும் தொலைத்து நிற்கிறார்நாசரேத்தூரிலே மாய் வாழ‌ உறவுகள் உடைமைகள் ஏராளமாய் இருந்தும் அத்தனையையும் இயேசுவுக்காக‌ இழந்தர்துறந்தர்செல்வராயிருந்தும் ஏழையான‌ கிறிஸ்துவுக்காக‌ அவருடைய‌ ஏழ்மையில் நாம் அனைவரும் செல்வராகுமாறு தாராளமுள்ள‌ தாயாகத்திகழ்ந்தார்கிறிஸ்துவின் பொருட்டு க்குரியதை இழந்த‌ அவர் , அவர் பொருட்டு அதைக் காத்துக் கொண்டு உண்மையான‌ முதல் சீடத்தியாகத் திகழ்ந்தார்.
ன்ன‌ நோக்கோடு செயல்படும் நான் எனது என‌ செயல்படும் நேரங்களில் எல்லாம் நாமும் இயேசுவைத் தொலைக்கிறோம்கிறிஸ்துவை மையப்படுத்தி அவரோடு வாழும்போது ன்னத்தை முன்னிருத்தும் து நிலை மாறிஉண்மை இயல்புகளை திரும்பப்பெறுகிறோம்இருள் என்னும் துன்பத்தில்
ண்ணுக்குப் புலப்படாத‌ இயேசுவைப் ற்றிய‌ புரிதல் இல்லாமல் அவரை இழந்து ருந்துகிறோம்சிறிதவு இருளோ , றைவோ ம்மை ருத்தாதுஅந்த‌ இருளும் துன்பமும் ம்மை  மீட்பின் றைபொருளுக்கு இட்டுச் செல்லும் வாயில் என்றறிவோம்மாய‌ வெளிச்சத்திற்கு அடிமையாகாது அகத்தின் ஒளி கொண்டு இயேசுவைக் ண்டு கொள்வோம்.
செபம் ;
தூய‌ ரியே இறைவனின் மீட்கும் திருவுளத்திற்கு முழுமையாக‌ உம்மையேக் கையளித்தனால்னுமனுக்கு னித‌ உரு கொடுக்கும் பேறு பெற்றவரேந்தையின் திருவுளம் நிறைவேற்ற‌ உலகை மீட்கும் ணியில் ன்னையே முழுதும் அர்ப்பணிக்கஅதன் மூலம் உல‌ வால்களை எதிர்கொள்ள‌ இயேசுவை க்கியரேஉமது ழ்ச்சியுள்ள‌ கீழ்ப்படிதலையும்துணிச்சல்மிகு ம்பிக்கையையும் ண்டு உம்மை ங்குகிறோம்.   ன்னி ரியேஇறைவனுடைய‌ வார்த்தைக்கு செவிமடுத்து இறைப்பணி செய்ய‌ இயேசுவை உலகிற்கு அளித்தரேஎங்கது வாழ்வில் நாங்களும் ன்னம் துறந்துதுன்பங்களை‌ ஏற்றுஇறைவனின் திருவுளத்தை எங்கள் வாழ்வில் நிறைவேற்ற‌ அருள் தாரும்இதனால் விண்ணத்தந்தை எங்களுக்கென்று வைத்திருக்கும் ரிசினை பெற‌ எங்களுக்காக‌ வேண்டிக்கொள்ளும் தாயே ஆமென்.
நான்காம் துயம்

ல்வாரிக்குச் செல்லும் ழியில் ரியாள் ன் னைச் ந்திக்கிறாள்

பிலாத்து அவர்கள் விருப்பப்படியே இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்ல‌ விட்டுவிட்டான். ) லூக் , 23,25.
வாசகம் ; புலம்பல் 3,17_22,25-26.
அன்னையின்  உறுதியை தியானித்தர்களாய்
னதின் துயத்தையும் உள்ளத்தின் உறுதியையும் வெளிப்படுத்தும் எரேமியாவின் புலம்பலாகத்திற்கு  செவிமடுப்போம் .
17அமைதியை நான் இழக்கச் செய்தீர்நலமென்பதையே நான் மறந்துவிட்டேன்!

18“என் வலிமையும் ஆண்டவர்மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையும் மறைந்துபோயின!” என்று நான் சொல்லிக் கொண்டேன்.

19என் துயரத்தையும் அலைச்சலையும்எட்டிக் காடியையும் கசப்பையும் நினைத்தருளும்!

20அதை நினைந்து நினைந்து என் உள்ளம் கூனிக் குறுகுகின்றது!
21இதை என் நினைவுக்குக் கொண்டு வருகின்றேன்எனவே நான் நம்பிக்கை கொள்கின்றேன்.

22“ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லைஅவரது இரக்கம் தீர்ந்துபோகவில்லை!

23காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றனநீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!”

24“ஆண்டவரே என் பங்கு” கின்றேன்.

25ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர்க்கும்அவரைத் தேடுவோர்க்கும் அவர் நல்லவர்!

26ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்!
சிந்தனை;
சிலுவைப்பாதையில் ரிகாசமும் ‌ அழுக்கு ம் அமதையும் நிறைந்த‌ கொடியர்கள் த்தியில் வீனமும் ரிதாபமுமாய் தோன்றிய‌ ன் னைக் ண்டு வேதனையுறுகிறாள்
மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டு , கசையடிபட்டு அநீதியாக தீர்வையிடப்பட்டு ஊருக்கு வெளியே கூட்டிச் செல்ல்ப்படும் தன் மகனைக் கண்டு கண்ணீர் வடிக்கிறாள்.
எளிமையானவர்கள்,வாழ வழி இல்லாதவர்கள் நேர்மையாக நடப்பதன்னால் தாறுமாறாக நடப்பவர்களால் பழிக்கப்படுவார்கள். அவ்வாறே பழிக்கப்படும் தன் மகனைக் கண்டுவருந்துகிறாள்.  அவரை தன் புற கரங்களால்அணைத்துக் கொள்ளவோ , கொடிய வாதையிலிருந்து பதுகாக்கவோமுடியவில்லை. மாறாக தனது அன்பென்னும் அக கரங்களால்  அணைக்கிறார்.
அவரைக் காண முடிந்ததே தவிர ஒரு உதவியும் செய்ய இயலாதவராய் இருந்தார். உள்ளத்தில் சிறிதளவு பயமோ, தயக்கமோ,எதுமின்றி அவரைப் பின்தொடர்ந்தார். கடவுளின் மகனான இயேசுவுக்கா இப்படி என்று தந்தைக் கடவுளை நிந்திக்கவுமில்லை,நம்பிக்கை குறைவுபடவுமில்லை. மாறாக கண்ணீர் சிந்தி மன்றாடி ஆறுதல் தரும் இறைவன் மேல் நம்பிக்கைக் கொண்டு வழிநடந்தார். 
செபம்
   தூய மரியே கிறிஸ்துவின் குணாப்படுத்தும் ஆற்றுப்படுத்தும் பணியில் பங்கேற்க அழைப்புப் பெற்றவரே, அதனால் இயேசுவை அநீதி தீர்ப்புக்கு ஆளாக்காப்பட்டவராகவும் வேதனை துன்பத்திற்கு உட்படுத்தப்பட்டவராகவும்,சொந்த ஊரில் புறக்கணிக்கப்பட்டவராகவும் கண்டவரே,உம்முடைய நிலைத்த உறுதியான மனதினை கண்டு உம்மை வணங்கி ஆராதிக்கிறோம். கன்னி மரியேபாவ மாசின்றி நீர் பிறந்தாலும் மனுக்குல மக்களின் பாவத்திற்காக மனித வாழ்வின் துயரங்களை எல்லாம் சுமந்து சிலுவைப்பாதையில்  உம் மகனோடு  உடன் சென்றவரே. நாங்களும் உம்மோடும் உம்மகன் இயேசுவோடும் சேர்ந்துன் எங்களைச் சார்ந்த ஒருவர் மற்றவர்களின்  சுமைகளை சுமந்து நாங்களும் உம்மைப் பின் தொடர அருள்தாரும் அம்மா ஆமென்.  
ஐந்தாம் துயரம்
சிலுவையினடியில் அன்னை மரியாள்.
இயேசுவின் சிலுவை அடியில் நின்றுஅவரது திரு விலாவிலிருந்து வழிந்தோடிய இரத்தத்திலிருந்தும் நீரிலிருந்தும் உண்டான கடவுளின் பிள்ளைகளை நேரில் கண்ட தூய யோவான் எழுதிய திருவெளிப்பாடு நூலிருந்து வாசிக்கக் கேட்போம்.
1 வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்.
2 அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடும் துயருடன் கதறினார்.
3 வானில் வேறோர் அடையாளமும் தோன்றியது; இதோ நெருப்புமயமான பெரிய அரக்கப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. அதன் தலைகளில் ஏழு மணி முடிகள் இருந்தன.
4 அது தன் வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின்மீது இழுத்துப் போட்டது. பேறுகால வேதனையிலிருந்த அப்பெண் பிள்ளை பெற்றவுடன் அதை விழுங்கிவிடுமாறு அரக்கப் பாம்பு அவர்முன் நின்று கொண்டிருந்தது.
5 எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது அரியணை இருந்த இடத்துக்குப் பறித்துச் செல்லப்பெற்றது.
6 அப்பெண் பாலைநிலத்துக்கு ஓடிப்போனார்; அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது நாள் அவரைப் பேணுமாறு கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு செய்திருந்தார்
சிந்தனை
 எல்லாம் நிறைவேறிற்று என்று கூறி தலை சாய்த்து தந்தையின் கையில் தன் ஆவியை ஒப்படைத்த இயேசுவின் சிலுவை அடியில் னிற்கின்றாள் தாய் மரியாள். மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட இயேசுவின் சிலுவையிலிருந்து தான் இவ்வுலகின் கடவுளின் குழந்தைகள் பிறக்கின்றன என்ற ஆழம்மன நம்பிக்கையோடு நிலையாக நிற்கின்றார்.
அத்தகைய நம்பிக்கையையும் மன உறுதியையும் இன்றும் எப்போது முடிவில்லா வாழ்விலும் அன்னை நமக்கு அளிக்க வேண்டும் என்பதற்காகவே கல்வாரியில் நமக்கெல்லாம் தாயாக நியமிக்கப்பட்டாள்.
தந்தைக் கடவுளைக்காகவும் மனுக்குல மீட்புக்காகவும் தன்னை முழுதும் நம்பிக்கையுடன் கையளித்த இயேசுவைப் போல் நாமும் வாழ நமது வாழ்க்கைத்தூண்டுதல் படைப்பு முழுமைக்கும் ஆற்றல் தருவதாக அமைய அருள்வேண்டுவோம்
செபம்
தூய மரியே மகிழ்வின் அடையாளமாம் திருமணம் கானாவூரில் நடைபெற்ற போது அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள் என்ற வார்த்தையின் மூலம் இயேசுவின் பணியினைப் பகிர்ந்தவரேஇன்று சிலுவையின் அடியில் நின்று கிறிஸ்துவின் மரணத்திலும் பங்கு வகித்தவரே உமது நம்பிக்கையையும் உறுதியான நிலைப்பாட்டைக் கண்டு உம்மை  வணங்குகிறோம்.
சிலுவையில் தொங்கிய இயேசுவின் திரு விலாவிலிருந்து வழிந்தோடிய திரு இரத்தத்தினாலும் நீரினாலும் உருவான திருச்சபையின் மக்களாகிய நாங்கள் கிறிஸ்துவின் உடலின் ஓர் அங்கம் என்பதை உணரச் செய்தருளும்.
உமது பிள்ளைகளாகிய நாங்கள் கிறிஸ்துவின் நாமத்தை பெயரளவில் மட்டுமல்லாதுமனதளவிலும் ஏற்று ,எங்களையே முழுதும் தந்தையின் பாதம் அவர் திருவுளத்திற்கு என அர்ப்பணிக்க தேவையான அருளினைத் தாரும் அம்மா ஆமென்.


ஆறாம் துயரம்
மரித்த மகனின் உடல் மாதாவின் மடியில்
அவர்கள் வந்து இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டு போனார்கள்.யோவான் 19,38.
 பிறரின் நலனுக்காகத் துன்புறுதல் என்னும் கருத்தில்  துன்புறும் கடவுளின் ஊழியன் குறித்து இறைவாக்கினர் எசாயா கூறும் இறைவார்த்தைக்கு செவிமடுப்போம்.
வாசகம்எசாயா 53, 2-8
  
 சிந்தனை,,
தூய கன்னி மரியாள் அன்று வார்த்தையாம் இறைவனை உள்ளத்திலும் உடலிலும் ஏற்றாள்இன்று அதே மகனின் உயிரற்ற உடலை தன் மடிமீது சுமந்து வருந்துகிறாள்.
அவரை பின் சென்று அவரோடு உடன் இருந்தவர்கள் இன்று அவரை மறுதலித்து , துன்புறுத்தி சிலுவையில் அறைந்து கொன்று தனியே விட்டு விட்டுச் செல்கின்றனர்.
தன்னலம் துறந்து தனக்குள் தானே மரித்து  வாழ்பவன் எவனோ,அவனே நிலை வாழ்வுக்குள் மீண்டும் பிறப்பான் என்பதை நீ நம்புகிறாயா என்று அன்னை மரியிடம் கேள்விக்கணை தொடுப்பது போல் இருந்தது இயேசுவின் காயங்களும் அன்றைய காரிருள் மாலை வேளையும்.  

செபம்.
தூய மரியே அன்று பெத்லகேமில் உலக மக்கள் நம்பிக்கையில் வாழ இயேசுவைக் குழந்தையாகக் காணிக்கையாக்கினீர்இன்று அதே உலக மக்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கல்வாரி மலை அடியில் உயிரற்ற உடலாகத் திரும்பப் பெற்றிருக்கின்றீர்உமது விலைமதிக்கப்படாத அன்பையும் பாவமாசற்ற உள்ளத்தையும் எண்ணி உம்மை ஆராதித்து வணங்குகிறோம்உலக மக்களாகிய நாங்கள் அனைவரும் உமது இரக்கத்தினாலும் அன்பினாலும் தூண்டப்பட்டவர்களாய் உம்மிடமே திரும்பி வரச் செய்தருளும்.  எங்களது இதயத்திலே துன்புறுவோர் மீது கருணையும் மன்னிக்கும் மனதையும்தந்தருளும்உள்மன அமைதியில் நம்பிக்கையோடு இறைவனின் ஆற்றலை உணர அருளினைத் தந்தருளும் ஆமென்.

        ஏழாம் துயரம்
இயேசு உடல் அடக்கம் செய்யப்படுகிறது.   
அரிமத்தியா ஊர் சூசை இயேசுவின் உடலை எடுத்துச் சென்று தனக்கென வைத்திருந்த கல்லறையில் அடக்கம் செய்கிறார்.
துன்பத்திற்கு பின் வெற்றி  மகிழ்வ்வு எனும் கருத்தில் எசாயா இறைவாக்கினரின் துன்புறும் ஊழியன் பெரும் பரிசு குறித்து வாசிக்கக் கேட்போம்.
எசாயா 53,9-11.

மரியின் மகனாம் இயேசு கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தாலொழிய அது பயன் தராது என்பதற்கேற்ப , மரித்து மண்ணில்  மடிகிறார்.அடக்கம் செய்யப்படுகிறார்.
தன்னை முழுதும் வெறுமையாக்கி சாவுக்குக் கீழ்ப்படியும் அளவுக்குத் தாழ்ச்சியான தன் மகனின் உடலை மண்ணில் புதைத்து நிற்கிறார் .தன் மகனின் கடைசி நிலை வரை துணை நின்ற மரியாள் தன்னுடைய அனைத்து நம்பிக்கையையும் ஒன்றாகச் சேர்த்து வல்லமையுள்ள கடவுளின் மகனின் வாழ்வை திரும்ப மீண்டும் எப்படியாவது மீட்டுவிட முடியாதா என எண்ணுகிறாள்.  
அதுமட்டுமல்லாது கிறிஸ்துவின் அன்பிலிருந்து அவளை பசியோ, பட்டினியோ , வாளோ, இடரோ, உருவாக்கப்பட்ட படைப்புக்களோ, எதுவும் பிரிக்க முடியாத படி மிக அதிகமாக கடவுளின் மேல் நம்பிக்கைக் கொண்டிருந்தாள்.கிறிஸ்துவின் துன்பத்தில் எந்த அளவுக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னை வருத்தினாளோ அதைவிட மேலான மகிழ்ச்சியை கிறிஸ்து மீண்டும் உயிர்த்து மாட்சியில் வரும்போது தனக்கு தருவார் என்று ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டிருந்தார்.
செபம்
தூய மரியே மீட்பர் இயேசுவின் இறந்த உடலை அடக்கம் செய்ய அழைக்கப்பட்ட மரியே, உம் மகன் இயேசுவின் இறந்த உடலை கொடிய சிலுவை மரணத்திற்கு பின் இந்த பூமியில் அடக்கம் செய்தீரே, உமது நேர்மையான தாயுள்ளத்தைக்கண்டு உம்மை ஆராதித்து வணங்குகிறோம். உமது திருமகனோடு கூட நீரும் பாடுகளை ஏற்று  அவரை நெருங்கி பின்பற்றி இந்த உலகத்துக்கு அவரை வழங்கியவரே, இவ்வுலகில் இருக்கின்ற  வாழும் கிறிஸ்துக்களாகிய நாங்கள் அவரது உயிர்ப்பினால் தூய உள்ளம் பெற்று விண்ணகத்தந்தையின் மகிமைக்காகவும் உலக மக்களின் அனைத்து நலன்களுக்காகவும் உழைக்கக் கூடியவர்களாக வாழ அருள் தாரும் ஆமென்.

முடிவுரை.
எங்களின் அன்பான தந்தையே, தாயுள்ளத்திற்கு மிகவும் எடுத்துக்காட்டான அன்னை மரியை எங்களுக்குத் தாயாகக் கொடுத்ததற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகின்றோம். அவர் தம் அன்பு மகன் இயேசு கிறிஸ்துவைப் போல நாங்களும் சாவிலிருந்து வாழ்விற்கும், பாவத்திலிருந்து நன்மைக்கும், தன்னலத்திலிருந்து பிறரன்பு வாழ்விற்கும், வன்முறையிலிருந்து அமைதியான வாழ்விற்கும் கடந்து செல்ல அருள்தாரும். அன்னை மரியின் துணிச்சலான வாழ்வைப் போல நாங்களும் சிறிதும் மனதில் கலக்கமின்றி சிலுவையை சுமந்து கருணையோடு பிறரின் சுமைகளை சுமக்கக் கூடியவர்களாக வாழ விழைகிறோம். அதனால் உமது தூய ஆவியின் அருளும் ஆசீரும் எங்கள் ஒவ்வொருவர் மேலும் இருந்து செயலாற்ற தேவையான அருளைத்தர வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.




இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...