Friday, 8 September 2017
Thursday, 11 May 2017
மணவாட்டி
துறவற ஆண்டில் இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்த சகோதரி ஒருவரின் வெள்ளி விழாத்
திருப்பலியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. விழா நாயகி திருமணப்பெண் போல் தலையை வெண்ணிற முக்காடிட்டு அமர்ந்திருந்தார். பார்த்தவுடனே மனதில் மகிழ்ச்சி, உள்ளத்தில் பரவசம். திருப்பலி முழுவதும் முக்காடிதான் மகிழ்ச்சி தான் என்னைத் திக்குமுக்காடச் செய்தது. திருமணத்தன்று வெண்முக்காடிட்டு தன்னை அலங்கரிக்கும் மணமகள் தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விப்பாள். வெள்ளை உடை அணிந்து தலை முக்காடிடும் பெண் துறவிகள் அனைவரும்
தாங்களும் மனுமகனின் மணமகள்கள் என்பதை தங்கள் உடை மூலம் வெளிப்படுத்துகின்றனர். ஒரு பெண்
தன்னுடைய வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டும் தான் தன்னை மணமகளாக அலங்கரித்துக் கொள்ள முடியும் . ஆனால் பெண் துறவிகள் தலை முக்காட்டினால் அனுதினமும் தாங்கள் ஆண்டவனின் மணமகள்கள் என அறிக்கையிடுகின்றனர்.
(அப்படியானால் சேலை அணிபவர்கள் இறைவனின் மணமகள் இல்லையா என்று கேட்டால் செய்வது )
எல்லா ஊரிலுமா மணப்பெண்கள் வெள்ளை முக்காடிடுகின்றனர். இல்லையே! சில ஊரில் சேலை கட்டிய மணப்பெண்களும் இருக்கத் தானே செய்கின்றனர்.
( அப்பாடா நல்லபடியா சமாளிச்சாச்சு )
Thursday, 30 March 2017
வளமுடன் வாழ.....
எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...
தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்*.
உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...
குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.
வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.
ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது *ஊமையாய்* இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.
சங்கடங்கள் வரும் போது *தடுமாற்றம்* அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது *தடம்* மாறாதீர்கள்.
வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி *நீங்கள்* நன்றாக அறிவாய். யார் உண்மையான நண்பர்கள் என்று...?
ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு *நீங்கள்* மட்டுமே காரணம்.
நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்; உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.
அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.
வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய பேச்சையும் கேட்பவர்.
எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.
நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை *முட்டாள்* என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு
*நம்பிக்கையையே* ஆகும்.
அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் *திறமை* படைத்தவன் என்பதே அர்த்தம்.
மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை.
அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!
Thursday, 23 March 2017
அன்னையின் தியாகப் பாதையில்
.
அன்னையின் தியாகப் பாதையில்
அன்புச் சகோதர சகோதரிகளே, நமதாண்டவர் இயேசு மாட்சிமை அடைவதற்கு முன்பு தனது சீடர்களுக்குக்கூறியது போலவே பாடுகள் பட்டு மரித்து துன்புற்று , துன்புறும் மெசியாவாக தன்னை வெளிப்படுத்தினார். உலகை படைத்த உன்னத இறைவனின் மகன் பாவச்சிலுவை சுமந்து உயிர் துறந்தார்.
அன்னை மரியாளும் அன்பர் இயேசுவின் வாழ்வில் அவரோடு உடன் பயணித்தவர். இறைவனின் மீட்பை , திருவுளத்தை எவ்வாறு துணிவுடன் ஏற்க வேண்டும் , பிறரின் துயரச் சிலுவைகளின் பாரத்தை எவ்வாறு இரக்கத்துடன் பகிர்ந்து வாழ வேண்டும், விண்ணகத்தந்தையின் திருவுளம் நிறைவேற்றி ,மகிழ்வோடும் மன நிறைவோடும் வாழ்ந்து எவ்வாறு கிறிஸ்துவின் உயிர்ப்பில் பங்கு கொள்ளவேண்டும் என்பதை அன்னை மரியாள் அவளது வாழ்வு மூலம் நமக்குக் கற்றுத்தருகிறாள்.
நாம் அனைவரும் ஒன்றாகக் குழுமி இருக்கும் இந்நேரத்தில் நம் தாய் மரியாள் தனது வாழ்வில் சந்தித்த துயரங்களையும் இரக்கம் நிறை அவளின் குண அழகையும் தியானிக்க நாம் அழைக்கப் -பட்டுள்ளோம். சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லோரும் என்னிடம் வாருங்காள் னான் உங்காளுக்கு இளைப்பாறுதல் தருவேன் . என் நுகம் அழுத்தாது என் சுமை எளிதாயுள்ளது என்ற நம் ஆண்டவர் இயேசுவின் மேல் நம்பிக்கை வைத்து அன்னையின் துயரப்பாதையில் அவருடன் பயணிப்போம்.
செபிப்போமாக ,
இரக்கமுள்ள இறைவா, உம் ஒரே மகன் இயேசு பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் எம்மைக் காக்க , சிலுவையிலே அறையுண்டு மரித்தார். அன்னையின் வியாகுலங்களைத் தியானிக்க இருக்கும் எங்களின் மனங்களை தூய ஆவி ஆட்கொள்ளச் செய்தருளும் திறந்தருளும். இந்த செபத்தால் தியானத்தால் நாங்கள் துன்பத்திலும் இன்பத்திலும் கிறிஸ்துவை பின்பற்றி எண்ணத்திலும் செயலிலும் சிறந்தவர்களாக எங்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாகத் திகழும் அன்னை மரியைப் போல வாழ அருள்தர வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம் . ஆமென்.
முதல் துயரம்
சிமியோனின் இறைவாக்கு
(உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுறுவும்.) லூக் : 2,35.
வாசகம் ; 1அரசர். 19,9-13.
வழிநடத்துபவர்:
கடவுளின் திருவுளத்திற்கு திறந்த மனது
வனத்தின் தனிமையில் வெறுமையாக, படைகளின் ஆண்டவரின் வருகைக்காக காத்திருந்த இறைவாக்கினர் எலியாவுக்கு கடவுள் தன்னை வெளிப்படுத்திய நிகழ்வுக்கு செவிமடுப்போம்.
அவர் அங்கிருந்த குகைக்கு வந்து, அதில் இரவைக் கழித்தார். அப்போது ஆண்டவரது வாக்கு அவருக்கு வந்தது. அவர் "எலியா! நீ இங்கே என்ன செய்கிறாய்?" என்று வினவினார்.
10 அதற்கு அவர், "படைகளின் கடவுளாகிய ஆண்டவர் மீது நான் பேரார்வம் கொண்டவனாய் இருந்து வருகிறேன். ஆனால் இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையை உதறிவிட்டனர். உம் பலிபீடங்களைத் தகர்த்து விட்டனர். உம் இறைவாக்கினரை வாளால் கொன்றுவிட்டனர். நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க, என் உயிரையும் பறிக்கத் தேடுகின்றனர்" என்றார்.
11 அப்போது ஆண்டவர், "வெளியே வா; மலைமேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்லவிருக்கிறேன்" என்றார். உடனே ஆண்டவர் திருமுன் பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்தது. ஆனால் ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை. காற்றுக்குப் பின் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை.
12 நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்று. தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது.
13 அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார். அப்பொழுது, "எலியா, நீ இங்கே என்ன செய்கிறாய்?" என்று ஒரு குரல் கேட்டது.
சிந்தனை: இறைவாக்கினர் சிமியோனின் வார்த்தைகளை சற்று ஆழமாக சிந்தித்தோமானால் இயேசு பலருடைய வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருப்பார்,எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருப்பார் என்கிறார். இந்த துயர வாள் அன்னையின் உள்ளத்தை ஊடுறுவும் என்கிறார்.
எவனொருவன் உலக அமைதியை விரும்புகிறானோ அவன் அந்த உண்மை கொண்டு வரும் கொடிய துன்பங்களையும் துயரங்களையும் பொறுமையோடு ஏற்கவேண்டும். உண்மைக்கு எதிரான மயான அமைதி ஒருபோதும் இறைவாக்கினர்களின் சவாலுக்கு சாதகமாய் அமைய முடியாது. அவ்வகையில் உண்மையை உரக்கச்சொல்ல பிறந்த இயேசுவின் எதிர்கால வாழ்வை கணிக்கிறார் சிமியோன்.
எவனொருவன் உலக அமைதியை விரும்புகிறானோ அவன் அந்த உண்மை கொண்டு வரும் கொடிய துன்பங்களையும் துயரங்களையும் பொறுமையோடு ஏற்கவேண்டும். உண்மைக்கு எதிரான மயான அமைதி ஒருபோதும் இறைவாக்கினர்களின் சவாலுக்கு சாதகமாய் அமைய முடியாது. அவ்வகையில் உண்மையை உரக்கச்சொல்ல பிறந்த இயேசுவின் எதிர்கால வாழ்வை கணிக்கிறார் சிமியோன்.
உண்மையாம் இயேசுவை தன் உதரத்திலும் உள்ளத்திலும் தாங்க தன்னையே கையளித்து துன்பங்களை எதிர்கொள்ள துணிகிறாள் மரியாள். இன்பமோ துன்பமோ தன்னை எது எதிர் கொண்டாலும் அதனை ஏற்க திறந்த மனதுடன் காத்திருக்கிறாள். கடவுள் தனக்கென வெளிப்படுத்தும் அத்தனையும் நன்மையெனக் காண்கிறாள் . உண்மை உள்ளத்தையும் திறந்த மனதையும் ஆரத்தழுவிக் கொண்டு இயேசுவின் சிலுவைப் பாதைக்கு தன்னை தயார் செய்கிறாள்.
செபிப்போமாக,
தூய மரியே, இயேசுவின் பிறப்பில் பங்கு கொள்ள வானதூதர்களால் அழைக்கப்பட்டீர். அதனால் சிமியோன் மூலம் இயேசுவின் துன்பத்திலும் மரணத்திலும் பங்கேற்கும் அருள் பெற்றீர். உம்முடைய இந்த தாழ்ச்சியையும் நம்பிக்கையையும் கண்டு உம்மை வணங்கி ஆராதிக்கின்றோம். இறைவாக்கினரின் வார்த்தைக்கு செவிமடுத்து அதை உம் உள்ளத்தில் இருத்தி சிந்தித்தவரே, உமது உள்ளத்தை ஊடுறுவிய அந்த துயர வாளை உமது உள்ளத்தை விட்டு எடுக்காது,ஆழ்ந்து தியானித்தவரே, உண்மை ஏற்படுத்தும் துன்பங்களையும் சிரமங்களையும் துணிவோடு சந்தித்து கிறிஸ்துவின் பாதையில் உம் வாழ்வை நடத்திச் சென்றவரே, உம்மைப் போல் நாங்களும் தூய மனம் கொண்டவர்களாக வாழ, உண்மை எது என சரியாக கண்டறிந்து துன்பத்தை எதிர்கொள்ளும் துணிச்சல் உள்ளவர்களாக வாழ அருள் தாரும் ஆமென்.
தூய மரியே, இயேசுவின் பிறப்பில் பங்கு கொள்ள வானதூதர்களால் அழைக்கப்பட்டீர். அதனால் சிமியோன் மூலம் இயேசுவின் துன்பத்திலும் மரணத்திலும் பங்கேற்கும் அருள் பெற்றீர். உம்முடைய இந்த தாழ்ச்சியையும் நம்பிக்கையையும் கண்டு உம்மை வணங்கி ஆராதிக்கின்றோம். இறைவாக்கினரின் வார்த்தைக்கு செவிமடுத்து அதை உம் உள்ளத்தில் இருத்தி சிந்தித்தவரே, உமது உள்ளத்தை ஊடுறுவிய அந்த துயர வாளை உமது உள்ளத்தை விட்டு எடுக்காது,ஆழ்ந்து தியானித்தவரே, உண்மை ஏற்படுத்தும் துன்பங்களையும் சிரமங்களையும் துணிவோடு சந்தித்து கிறிஸ்துவின் பாதையில் உம் வாழ்வை நடத்திச் சென்றவரே, உம்மைப் போல் நாங்களும் தூய மனம் கொண்டவர்களாக வாழ, உண்மை எது என சரியாக கண்டறிந்து துன்பத்தை எதிர்கொள்ளும் துணிச்சல் உள்ளவர்களாக வாழ அருள் தாரும் ஆமென்.
இரண்டாம் துயரம்
எகிப்துக்கு தப்பி ஓடுதல்
( எகிப்துக்கு தப்பி ஓடிச் செல்லும் ஏனெனில் ஏரோது குழந்தையைக் கொல்வதற்காகத் தேடப் போகிறான். ) மத். 2, 13.
வழிநடத்துபவர்: இயேசுவைப் பின்பற்ற விரும்புபவர்களை தன்னோடு துன்புறவும் அழைக்கும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.
இயேசு,
எகிப்துக்கு தப்பி ஓடுதல்
( எகிப்துக்கு தப்பி ஓடிச் செல்லும் ஏனெனில் ஏரோது குழந்தையைக் கொல்வதற்காகத் தேடப் போகிறான். ) மத். 2, 13.
வழிநடத்துபவர்: இயேசுவைப் பின்பற்ற விரும்புபவர்களை தன்னோடு துன்புறவும் அழைக்கும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.
இயேசு,
“மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்”
என்று சொன்னார்.
23பின்பு அவர் அனைவரையும் நோக்கி,
“என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.
24ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.
சிந்தனை; தாவீதின் வழித்தோன்றலாம் இயேசு தான் மாட்சி பெறும் முன் உலகமக்களால் மிகவும் கொடிய வேதனைக்கும் துன்பத்திற்கும் உள்ளாக வேண்டியிருக்கும் என்ற இறைவார்த்தைக்கி ஏற்ப குழந்தைப் பருவத்திலேயே பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார். அன்னை மரியும் சூசை தந்தையும் அவரின் இன்னல்களி பங்கேற்கின்றனர். மனித வாழ்வின் இன்னல்களான பயம் , பாதுகாப்பின்றி தங்க இடமின்றி , அகதிகளாக வேறு நாட்டிற்கு தப்பிச் செல்கின்றனர்.
அன்னைமரியின் நம்பிக்கையின் ஆழமும் தூய அன்பும் அநீதி , ஊழல் , வன்முறை வெறுத்து ஒதுக்கப்படுதல் போன்ற தீய சக்திகளுக்கு எதிராக போரிடுகின்றன.
அன்னை எந்நிலையிலும் தனது நம்பிக்கையை தளராது காத்துக் கொள்கிறாள். கிறிஸ்து இயேசுவை பற்றிகொண்டு வாழ்கிறாள். கடவுளின் திருவுளப்படி துன்புறுபவர்கள் நன்மையில் நிலைத்திருப்பது போல கிறிஸ்துவில் நிலைத்திருந்து படைத்தவரிடம் தன்னை ஒப்படைக்கிறாள்.
அன்னைமரியின் நம்பிக்கையின் ஆழமும் தூய அன்பும் அநீதி , ஊழல் , வன்முறை வெறுத்து ஒதுக்கப்படுதல் போன்ற தீய சக்திகளுக்கு எதிராக போரிடுகின்றன.
அன்னை எந்நிலையிலும் தனது நம்பிக்கையை தளராது காத்துக் கொள்கிறாள். கிறிஸ்து இயேசுவை பற்றிகொண்டு வாழ்கிறாள். கடவுளின் திருவுளப்படி துன்புறுபவர்கள் நன்மையில் நிலைத்திருப்பது போல கிறிஸ்துவில் நிலைத்திருந்து படைத்தவரிடம் தன்னை ஒப்படைக்கிறாள்.
செபம்
தூய ,மரியே, கிறிஸ்துவின் பிறப்பின் மகிழ்வில் பங்கு கொள்ள அழைக்கப்பட்டவரே, அதன்மூலம் பிறரது வெறுப்புக்கும் பல்வேறு துன்பத்திற்கும் உள்ளாகி ஏழ்மையான வாழ்க்கை வாழ பணிக்கப்பட்டவரே, குழந்தை மெசியாவிற்கு துன்பம்ன்தர துடிக்கும் கொடிய மன்னன் ஏரோதிடமிருந்து காக்க, நாடு ஊர் உறவு, இனம் மொழி கடந்து, வீடின்றி, உறவின்றி உணவின்றி துன்புற்றவரே, உண்மையின் நாயகனைக் காக்க தாவீதின் வழி மரபினரான சூசையின் துணையுடன் எகிப்துகு தப்பிச் சென்றவரே, உமத் துணிச்சலையும் பொறுமையையும் கண்டு வணங்கி உம்மை ஆராதிக்கின்றோம். உம்மைப் போல் நாங்களும் குழப்பத்திலும் துன்பத்திலும் துணிவோடு செயலாற்ற, நடுவுனிலைமையுடன் முடிவுகளை எடுத்து உண்மைக்கு சாட்சியம் பகிர அருள்தாரும் ஆமென்.
தூய ,மரியே, கிறிஸ்துவின் பிறப்பின் மகிழ்வில் பங்கு கொள்ள அழைக்கப்பட்டவரே, அதன்மூலம் பிறரது வெறுப்புக்கும் பல்வேறு துன்பத்திற்கும் உள்ளாகி ஏழ்மையான வாழ்க்கை வாழ பணிக்கப்பட்டவரே, குழந்தை மெசியாவிற்கு துன்பம்ன்தர துடிக்கும் கொடிய மன்னன் ஏரோதிடமிருந்து காக்க, நாடு ஊர் உறவு, இனம் மொழி கடந்து, வீடின்றி, உறவின்றி உணவின்றி துன்புற்றவரே, உண்மையின் நாயகனைக் காக்க தாவீதின் வழி மரபினரான சூசையின் துணையுடன் எகிப்துகு தப்பிச் சென்றவரே, உமத் துணிச்சலையும் பொறுமையையும் கண்டு வணங்கி உம்மை ஆராதிக்கின்றோம். உம்மைப் போல் நாங்களும் குழப்பத்திலும் துன்பத்திலும் துணிவோடு செயலாற்ற, நடுவுனிலைமையுடன் முடிவுகளை எடுத்து உண்மைக்கு சாட்சியம் பகிர அருள்தாரும் ஆமென்.
மூன்றாம் துயரம்
எருசலேம் தேவாலயத்தில் இயேசு காணாமற்போதல்
எருசலேம் தேவாலயத்தில் இயேசு காணாமற்போதல்
( மகனே ஏன் இப்படிச் செய்தாய் ? உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே! ) லூக் 2.48.
கடவுளின் திட்டத்திற்கு அடிபணிந்து, தனது ஒரே மகன் ஈசாக்கை பலியிடத் துணிந்த விசுவாசத்தின் தந்தை ஆபிரகாமின் துணிச்சல் நிறை தியாகத்தை விவிலியத்திலிருந்து வாசிக்கக் கேட்போம். வ
வாசகம் ; தொ.நூல். 22, 1-3.
கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் “இதோ! அடியேன்” என்றார்.✠
2அவர், “உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிடவேண்டும்” என்றார்.✠
3அவ்வாறே ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து தமது கழுதைக்குச் சேணமிட்டு, தம் வேலைக்காரருள் இருவரையும் தம் மகன் ஈசாக்கையும் அழைத்துக் கொண்டு எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை வெட்டிய பின், கடவுள் தமக்குக் குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.
சிந்தனை;
அன்னை மரியாளிடம் இறைமகன் இயேசுவைப் பிறக்கச் செய்தது அவர் வழியாக இவ்வுலகிற்கு அவரை கையளிக்கவே! அதனை நன்கறிந்த மரியாள் இயேசுவை நற்பண்புகளால் பக்குவப்படுத்தி, மேன்மைச் செயல்களினால் மெருகேற்றி தந்தையின் பணிக்கு அனுப்ப எண்ணினார். ஆனால் அதற்குள் வானகத்தந்தையின் அருள் உந்தித் தள்ள பணி செய்ய பன்னிரண்டு வயதினிலே கோவிலில் காணாமல் போன இயேசுவை கண்டு மனம் பதைக்கிறார். அதற்கேற்ற காலம் இன்னும் வரவில்லை என எண்ணுகிறார்.
தன் மகனுக்காக அத்தனையையும் இழந்தவர் இன்று தன மகனையும் தொலைத்து நிற்கிறார். நாசரேத்தூரிலே நலமாய் வாழ உறவுகள் உடைமைகள் ஏராளமாய் இருந்தும் அத்தனையையும் இயேசுவுக்காக இழந்தவர், துறந்தவர். செல்வராயிருந்தும் ஏழையான கிறிஸ்துவுக்காக அவருடைய ஏழ்மையில் நாம் அனைவரும் செல்வராகுமாறு தாராளமனமுள்ள தாயாகத்திகழ்ந்தார். கிறிஸ்துவின் பொருட்டு தமக்குரியதை இழந்த அவர் , அவர் பொருட்டு அதைக் காத்துக் கொண்டு உண்மையான முதல் சீடத்தியாகத் திகழ்ந்தார்.
தன்னல நோக்கோடு செயல்படும் நான் எனது என செயல்படும் நேரங்களில் எல்லாம் நாமும் இயேசுவைத் தொலைக்கிறோம். கிறிஸ்துவை மையப்படுத்தி அவரோடு வாழும்போது தன்னலத்தை முன்னிருத்தும் நமது நிலை மாறி, உண்மை இயல்புகளை திரும்பப்பெறுகிறோம். இருள் என்னும் துன்பத்தில்
கண்ணுக்குப் புலப்படாத இயேசுவைப் பற்றிய புரிதல் இல்லாமல் அவரை இழந்து வருந்துகிறோம். சிறிதளவு இருளோ , மறைவோ நம்மை வருத்தாது, அந்த இருளும் துன்பமும் நம்மை மீட்பின் மறைபொருளுக்கு இட்டுச் செல்லும் வாயில் என்றறிவோம். மாய வெளிச்சத்திற்கு அடிமையாகாது அகத்தின் ஒளி கொண்டு இயேசுவைக் கண்டு கொள்வோம்.
செபம் ;
தூய மரியே இறைவனின் மீட்கும் திருவுளத்திற்கு முழுமையாக உம்மையேக் கையளித்ததனால், மனுமகனுக்கு மனித உரு கொடுக்கும் பேறு பெற்றவரே! தந்தையின் திருவுளம் நிறைவேற்ற உலகை மீட்கும் பணியில் தன்னையே முழுதும் அர்ப்பணிக்க, அதன் மூலம் உலக சவால்களை எதிர்கொள்ள இயேசுவை பழக்கியவரே! உமது தழ்ச்சியுள்ள கீழ்ப்படிதலையும், துணிச்சல்மிகு நம்பிக்கையையும் கண்டு உம்மை வணங்குகிறோம். ஓ கன்னி மரியே! இறைவனுடைய வார்த்தைக்கு செவிமடுத்து இறைப்பணி செய்ய இயேசுவை உலகிற்கு அளித்தவரே! எங்களது வாழ்வில் நாங்களும் தன்னலம் துறந்து, துன்பங்களை ஏற்று, இறைவனின் திருவுளத்தை எங்கள் வாழ்வில் நிறைவேற்ற அருள் தாரும். இதனால் விண்ணகத்தந்தை எங்களுக்கென்று வைத்திருக்கும் பரிசினை பெற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தாயே ஆமென்.
சிந்தனை;
அன்னை மரியாளிடம் இறைமகன் இயேசுவைப் பிறக்கச் செய்தது அவர் வழியாக இவ்வுலகிற்கு அவரை கையளிக்கவே! அதனை நன்கறிந்த மரியாள் இயேசுவை நற்பண்புகளால் பக்குவப்படுத்தி, மேன்மைச் செயல்களினால் மெருகேற்றி தந்தையின் பணிக்கு அனுப்ப எண்ணினார். ஆனால் அதற்குள் வானகத்தந்தையின் அருள் உந்தித் தள்ள பணி செய்ய பன்னிரண்டு வயதினிலே கோவிலில் காணாமல் போன இயேசுவை கண்டு மனம் பதைக்கிறார். அதற்கேற்ற காலம் இன்னும் வரவில்லை என எண்ணுகிறார்.
தன் மகனுக்காக அத்தனையையும் இழந்தவர் இன்று தன மகனையும் தொலைத்து நிற்கிறார். நாசரேத்தூரிலே நலமாய் வாழ உறவுகள் உடைமைகள் ஏராளமாய் இருந்தும் அத்தனையையும் இயேசுவுக்காக இழந்தவர், துறந்தவர். செல்வராயிருந்தும் ஏழையான கிறிஸ்துவுக்காக அவருடைய ஏழ்மையில் நாம் அனைவரும் செல்வராகுமாறு தாராளமனமுள்ள தாயாகத்திகழ்ந்தார். கிறிஸ்துவின் பொருட்டு தமக்குரியதை இழந்த அவர் , அவர் பொருட்டு அதைக் காத்துக் கொண்டு உண்மையான முதல் சீடத்தியாகத் திகழ்ந்தார்.
தன்னல நோக்கோடு செயல்படும் நான் எனது என செயல்படும் நேரங்களில் எல்லாம் நாமும் இயேசுவைத் தொலைக்கிறோம். கிறிஸ்துவை மையப்படுத்தி அவரோடு வாழும்போது தன்னலத்தை முன்னிருத்தும் நமது நிலை மாறி, உண்மை இயல்புகளை திரும்பப்பெறுகிறோம். இருள் என்னும் துன்பத்தில்
கண்ணுக்குப் புலப்படாத இயேசுவைப் பற்றிய புரிதல் இல்லாமல் அவரை இழந்து வருந்துகிறோம். சிறிதளவு இருளோ , மறைவோ நம்மை வருத்தாது, அந்த இருளும் துன்பமும் நம்மை மீட்பின் மறைபொருளுக்கு இட்டுச் செல்லும் வாயில் என்றறிவோம். மாய வெளிச்சத்திற்கு அடிமையாகாது அகத்தின் ஒளி கொண்டு இயேசுவைக் கண்டு கொள்வோம்.
செபம் ;
தூய மரியே இறைவனின் மீட்கும் திருவுளத்திற்கு முழுமையாக உம்மையேக் கையளித்ததனால், மனுமகனுக்கு மனித உரு கொடுக்கும் பேறு பெற்றவரே! தந்தையின் திருவுளம் நிறைவேற்ற உலகை மீட்கும் பணியில் தன்னையே முழுதும் அர்ப்பணிக்க, அதன் மூலம் உலக சவால்களை எதிர்கொள்ள இயேசுவை பழக்கியவரே! உமது தழ்ச்சியுள்ள கீழ்ப்படிதலையும், துணிச்சல்மிகு நம்பிக்கையையும் கண்டு உம்மை வணங்குகிறோம். ஓ கன்னி மரியே! இறைவனுடைய வார்த்தைக்கு செவிமடுத்து இறைப்பணி செய்ய இயேசுவை உலகிற்கு அளித்தவரே! எங்களது வாழ்வில் நாங்களும் தன்னலம் துறந்து, துன்பங்களை ஏற்று, இறைவனின் திருவுளத்தை எங்கள் வாழ்வில் நிறைவேற்ற அருள் தாரும். இதனால் விண்ணகத்தந்தை எங்களுக்கென்று வைத்திருக்கும் பரிசினை பெற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தாயே ஆமென்.
நான்காம் துயரம்.
கல்வாரிக்குச் செல்லும் வழியில் மரியாள் தன் மகனைச் சந்திக்கிறாள்.
பிலாத்து அவர்கள் விருப்பப்படியே இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்ல விட்டுவிட்டான். ) லூக் , 23,25.
வாசகம் ; புலம்பல் 3,17_22,25-26.
அன்னையின் மன உறுதியை தியானித்தவர்களாய்
மனதின் துயரத்தையும் உள்ளத்தின் உறுதியையும் வெளிப்படுத்தும் எரேமியாவின் புலம்பலாகமத்திற்கு செவிமடுப்போம் .
17அமைதியை நான் இழக்கச் செய்தீர்! நலமென்பதையே நான் மறந்துவிட்டேன்!
18“என் வலிமையும் ஆண்டவர்மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையும் மறைந்துபோயின!” என்று நான் சொல்லிக் கொண்டேன்.
19என் துயரத்தையும் அலைச்சலையும், எட்டிக் காடியையும் கசப்பையும் நினைத்தருளும்!
20அதை நினைந்து நினைந்து என் உள்ளம் கூனிக் குறுகுகின்றது!
21இதை என் நினைவுக்குக் கொண்டு வருகின்றேன்; எனவே நான் நம்பிக்கை கொள்கின்றேன்.
22“ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்துபோகவில்லை!
23காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!”
24“ஆண்டவரே என் பங்கு” கின்றேன்.
25ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர்க்கும், அவரைத் தேடுவோர்க்கும் அவர் நல்லவர்!
26ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்!
சிந்தனை;
சிலுவைப்பாதையில் பரிகாசமும் மன அழுக்கு ம் அமதையும் நிறைந்த கொடியவர்கள் மத்தியில் பலவீனமும் பரிதாபமுமாய் தோன்றிய தன் மகனைக் கண்டு வேதனையுறுகிறாள்
சிந்தனை;
சிலுவைப்பாதையில் பரிகாசமும் மன அழுக்கு ம் அமதையும் நிறைந்த கொடியவர்கள் மத்தியில் பலவீனமும் பரிதாபமுமாய் தோன்றிய தன் மகனைக் கண்டு வேதனையுறுகிறாள்
மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டு , கசையடிபட்டு அநீதியாக தீர்வையிடப்பட்டு
ஊருக்கு வெளியே கூட்டிச் செல்ல்ப்படும் தன் மகனைக் கண்டு கண்ணீர் வடிக்கிறாள்.
எளிமையானவர்கள்,வாழ வழி இல்லாதவர்கள் நேர்மையாக நடப்பதன்னால் தாறுமாறாக
நடப்பவர்களால் பழிக்கப்படுவார்கள். அவ்வாறே பழிக்கப்படும் தன் மகனைக்
கண்டுவருந்துகிறாள். அவரை தன் புற கரங்களால்அணைத்துக் கொள்ளவோ , கொடிய வாதையிலிருந்து
பதுகாக்கவோமுடியவில்லை. மாறாக தனது அன்பென்னும் அக கரங்களால் அணைக்கிறார்.
அவரைக் காண முடிந்ததே தவிர ஒரு உதவியும் செய்ய இயலாதவராய் இருந்தார்.
உள்ளத்தில் சிறிதளவு பயமோ, தயக்கமோ,எதுமின்றி அவரைப் பின்தொடர்ந்தார். கடவுளின்
மகனான இயேசுவுக்கா இப்படி என்று தந்தைக் கடவுளை நிந்திக்கவுமில்லை,நம்பிக்கை குறைவுபடவுமில்லை.
மாறாக கண்ணீர் சிந்தி மன்றாடி ஆறுதல் தரும் இறைவன் மேல் நம்பிக்கைக் கொண்டு
வழிநடந்தார்.
செபம்
தூய மரியே கிறிஸ்துவின் குணாப்படுத்தும் ஆற்றுப்படுத்தும் பணியில் பங்கேற்க
அழைப்புப் பெற்றவரே, அதனால் இயேசுவை அநீதி தீர்ப்புக்கு ஆளாக்காப்பட்டவராகவும்
வேதனை துன்பத்திற்கு உட்படுத்தப்பட்டவராகவும்,சொந்த ஊரில்
புறக்கணிக்கப்பட்டவராகவும் கண்டவரே,உம்முடைய நிலைத்த உறுதியான மனதினை கண்டு உம்மை
வணங்கி ஆராதிக்கிறோம். கன்னி மரியேபாவ மாசின்றி நீர் பிறந்தாலும் மனுக்குல
மக்களின் பாவத்திற்காக மனித வாழ்வின் துயரங்களை எல்லாம் சுமந்து சிலுவைப்பாதையில் உம் மகனோடு உடன் சென்றவரே.
நாங்களும் உம்மோடும் உம்மகன் இயேசுவோடும் சேர்ந்துன் எங்களைச் சார்ந்த ஒருவர்
மற்றவர்களின் சுமைகளை சுமந்து நாங்களும் உம்மைப் பின் தொடர அருள்தாரும் அம்மா ஆமென்.
ஐந்தாம் துயரம்
சிலுவையினடியில் அன்னை மரியாள்.
இயேசுவின் சிலுவை அடியில் நின்றுஅவரது திரு விலாவிலிருந்து வழிந்தோடிய
இரத்தத்திலிருந்தும் நீரிலிருந்தும் உண்டான கடவுளின் பிள்ளைகளை நேரில் கண்ட தூய
யோவான் எழுதிய திருவெளிப்பாடு நூலிருந்து வாசிக்கக் கேட்போம்.
1 வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்.
2 அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடும் துயருடன் கதறினார்.
3 வானில் வேறோர் அடையாளமும் தோன்றியது; இதோ நெருப்புமயமான பெரிய அரக்கப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. அதன் தலைகளில் ஏழு மணி முடிகள் இருந்தன.
4 அது தன் வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின்மீது இழுத்துப் போட்டது. பேறுகால வேதனையிலிருந்த அப்பெண் பிள்ளை பெற்றவுடன் அதை விழுங்கிவிடுமாறு அரக்கப் பாம்பு அவர்முன் நின்று கொண்டிருந்தது.
5 எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது அரியணை இருந்த இடத்துக்குப் பறித்துச் செல்லப்பெற்றது.
6 அப்பெண் பாலைநிலத்துக்கு ஓடிப்போனார்; அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது நாள் அவரைப் பேணுமாறு கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு செய்திருந்தார்
சிந்தனை
எல்லாம் நிறைவேறிற்று என்று கூறி தலை சாய்த்து தந்தையின் கையில் தன் ஆவியை
ஒப்படைத்த இயேசுவின் சிலுவை அடியில் னிற்கின்றாள் தாய் மரியாள். மிகவும் கொடூரமான
முறையில் கொல்லப்பட்ட இயேசுவின் சிலுவையிலிருந்து தான் இவ்வுலகின் கடவுளின்
குழந்தைகள் பிறக்கின்றன என்ற ஆழம்மன நம்பிக்கையோடு நிலையாக நிற்கின்றார்.
அத்தகைய நம்பிக்கையையும் மன உறுதியையும் இன்றும் எப்போது முடிவில்லா
வாழ்விலும் அன்னை நமக்கு அளிக்க வேண்டும் என்பதற்காகவே கல்வாரியில் நமக்கெல்லாம்
தாயாக நியமிக்கப்பட்டாள்.
தந்தைக் கடவுளைக்காகவும் மனுக்குல மீட்புக்காகவும் தன்னை முழுதும்
நம்பிக்கையுடன் கையளித்த இயேசுவைப் போல் நாமும் வாழ நமது வாழ்க்கைத்தூண்டுதல்
படைப்பு முழுமைக்கும் ஆற்றல் தருவதாக அமைய அருள்வேண்டுவோம்
செபம்
தூய மரியே மகிழ்வின் அடையாளமாம் திருமணம் கானாவூரில் நடைபெற்ற போது அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள் என்ற வார்த்தையின் மூலம் இயேசுவின் பணியினைப் பகிர்ந்தவரே. இன்று சிலுவையின் அடியில் நின்று கிறிஸ்துவின் மரணத்திலும் பங்கு வகித்தவரே உமது நம்பிக்கையையும் உறுதியான நிலைப்பாட்டைக் கண்டு உம்மை வணங்குகிறோம்.
சிலுவையில் தொங்கிய இயேசுவின் திரு விலாவிலிருந்து வழிந்தோடிய திரு இரத்தத்தினாலும் நீரினாலும் உருவான திருச்சபையின் மக்களாகிய நாங்கள் கிறிஸ்துவின் உடலின் ஓர் அங்கம் என்பதை உணரச் செய்தருளும்.
உமது பிள்ளைகளாகிய நாங்கள் கிறிஸ்துவின் நாமத்தை பெயரளவில் மட்டுமல்லாது, மனதளவிலும் ஏற்று ,எங்களையே முழுதும் தந்தையின் பாதம் அவர் திருவுளத்திற்கு என அர்ப்பணிக்க தேவையான அருளினைத் தாரும் அம்மா ஆமென்.
ஆறாம் துயரம்
மரித்த மகனின் உடல் மாதாவின் மடியில்
அவர்கள் வந்து இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டு போனார்கள்.யோவான் 19,38.
பிறரின் நலனுக்காகத் துன்புறுதல் என்னும் கருத்தில் துன்புறும் கடவுளின் ஊழியன் குறித்து இறைவாக்கினர் எசாயா கூறும் இறைவார்த்தைக்கு செவிமடுப்போம்.
வாசகம். எசாயா 53, 2-8
சிந்தனை,,
தூய கன்னி மரியாள் அன்று வார்த்தையாம் இறைவனை உள்ளத்திலும் உடலிலும் ஏற்றாள். இன்று அதே மகனின் உயிரற்ற உடலை தன் மடிமீது சுமந்து வருந்துகிறாள்.
அவரை பின் சென்று அவரோடு உடன் இருந்தவர்கள் இன்று அவரை மறுதலித்து , துன்புறுத்தி சிலுவையில் அறைந்து கொன்று தனியே விட்டு விட்டுச் செல்கின்றனர்.
தன்னலம் துறந்து தனக்குள் தானே மரித்து வாழ்பவன் எவனோ,அவனே நிலை வாழ்வுக்குள் மீண்டும் பிறப்பான் என்பதை நீ நம்புகிறாயா என்று அன்னை மரியிடம் கேள்விக்கணை தொடுப்பது போல் இருந்தது இயேசுவின் காயங்களும் அன்றைய காரிருள் மாலை வேளையும்.
செபம்.
தூய மரியே அன்று பெத்லகேமில் உலக மக்கள் நம்பிக்கையில் வாழ இயேசுவைக் குழந்தையாகக் காணிக்கையாக்கினீர். இன்று அதே உலக மக்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கல்வாரி மலை அடியில் உயிரற்ற உடலாகத் திரும்பப் பெற்றிருக்கின்றீர். உமது விலைமதிக்கப்படாத அன்பையும் பாவமாசற்ற உள்ளத்தையும் எண்ணி உம்மை ஆராதித்து வணங்குகிறோம். உலக மக்களாகிய நாங்கள் அனைவரும் உமது இரக்கத்தினாலும் அன்பினாலும் தூண்டப்பட்டவர்களாய் உம்மிடமே திரும்பி வரச் செய்தருளும். எங்களது இதயத்திலே துன்புறுவோர் மீது கருணையும் மன்னிக்கும் மனதையும், தந்தருளும். உள்மன அமைதியில் நம்பிக்கையோடு இறைவனின் ஆற்றலை உணர அருளினைத் தந்தருளும் ஆமென்.
ஏழாம் துயரம்
இயேசு உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
அரிமத்தியா ஊர் சூசை இயேசுவின் உடலை எடுத்துச் சென்று தனக்கென வைத்திருந்த கல்லறையில் அடக்கம் செய்கிறார்.
துன்பத்திற்கு பின் வெற்றி மகிழ்வ்வு எனும் கருத்தில் எசாயா இறைவாக்கினரின் துன்புறும் ஊழியன் பெரும் பரிசு குறித்து வாசிக்கக் கேட்போம்.
எசாயா 53,9-11.
மரியின் மகனாம் இயேசு கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தாலொழிய அது பயன் தராது என்பதற்கேற்ப , மரித்து மண்ணில் மடிகிறார்.அடக்கம் செய்யப்படுகிறார்.
தன்னை முழுதும் வெறுமையாக்கி சாவுக்குக் கீழ்ப்படியும் அளவுக்குத் தாழ்ச்சியான தன் மகனின் உடலை மண்ணில் புதைத்து நிற்கிறார் .தன் மகனின் கடைசி நிலை வரை துணை நின்ற மரியாள் தன்னுடைய அனைத்து நம்பிக்கையையும் ஒன்றாகச் சேர்த்து வல்லமையுள்ள கடவுளின் மகனின் வாழ்வை திரும்ப மீண்டும் எப்படியாவது மீட்டுவிட முடியாதா என எண்ணுகிறாள்.
அதுமட்டுமல்லாது கிறிஸ்துவின் அன்பிலிருந்து அவளை பசியோ, பட்டினியோ , வாளோ,
இடரோ, உருவாக்கப்பட்ட படைப்புக்களோ, எதுவும் பிரிக்க முடியாத படி மிக அதிகமாக
கடவுளின் மேல் நம்பிக்கைக் கொண்டிருந்தாள்.கிறிஸ்துவின் துன்பத்தில் எந்த அளவுக்கு
தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னை வருத்தினாளோ அதைவிட மேலான மகிழ்ச்சியை கிறிஸ்து
மீண்டும் உயிர்த்து மாட்சியில் வரும்போது தனக்கு தருவார் என்று ஆழ்ந்த நம்பிக்கைக்
கொண்டிருந்தார்.
செபம்
தூய மரியே மீட்பர் இயேசுவின் இறந்த உடலை அடக்கம் செய்ய அழைக்கப்பட்ட மரியே,
உம் மகன் இயேசுவின் இறந்த உடலை கொடிய சிலுவை மரணத்திற்கு பின் இந்த பூமியில்
அடக்கம் செய்தீரே, உமது நேர்மையான தாயுள்ளத்தைக்கண்டு உம்மை ஆராதித்து
வணங்குகிறோம். உமது திருமகனோடு கூட நீரும் பாடுகளை ஏற்று அவரை நெருங்கி
பின்பற்றி இந்த உலகத்துக்கு அவரை வழங்கியவரே, இவ்வுலகில் இருக்கின்ற வாழும்
கிறிஸ்துக்களாகிய நாங்கள் அவரது உயிர்ப்பினால் தூய உள்ளம் பெற்று
விண்ணகத்தந்தையின் மகிமைக்காகவும் உலக மக்களின் அனைத்து நலன்களுக்காகவும் உழைக்கக்
கூடியவர்களாக வாழ அருள் தாரும் ஆமென்.
முடிவுரை.
எங்களின் அன்பான தந்தையே, தாயுள்ளத்திற்கு மிகவும் எடுத்துக்காட்டான அன்னை
மரியை எங்களுக்குத் தாயாகக் கொடுத்ததற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகின்றோம்.
அவர் தம் அன்பு மகன் இயேசு கிறிஸ்துவைப் போல நாங்களும் சாவிலிருந்து வாழ்விற்கும்,
பாவத்திலிருந்து நன்மைக்கும், தன்னலத்திலிருந்து பிறரன்பு வாழ்விற்கும்,
வன்முறையிலிருந்து அமைதியான வாழ்விற்கும் கடந்து செல்ல அருள்தாரும். அன்னை மரியின்
துணிச்சலான வாழ்வைப் போல நாங்களும் சிறிதும் மனதில் கலக்கமின்றி சிலுவையை சுமந்து
கருணையோடு பிறரின் சுமைகளை சுமக்கக் கூடியவர்களாக வாழ விழைகிறோம். அதனால் உமது தூய
ஆவியின் அருளும் ஆசீரும் எங்கள் ஒவ்வொருவர் மேலும் இருந்து செயலாற்ற தேவையான
அருளைத்தர வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
ஆமென்.
Subscribe to:
Posts (Atom)
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...