துறவற ஆண்டில் இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்த சகோதரி ஒருவரின் வெள்ளி விழாத்
திருப்பலியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. விழா நாயகி திருமணப்பெண் போல் தலையை வெண்ணிற முக்காடிட்டு அமர்ந்திருந்தார். பார்த்தவுடனே மனதில் மகிழ்ச்சி, உள்ளத்தில் பரவசம். திருப்பலி முழுவதும் முக்காடிதான் மகிழ்ச்சி தான் என்னைத் திக்குமுக்காடச் செய்தது. திருமணத்தன்று வெண்முக்காடிட்டு தன்னை அலங்கரிக்கும் மணமகள் தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விப்பாள். வெள்ளை உடை அணிந்து தலை முக்காடிடும் பெண் துறவிகள் அனைவரும்
தாங்களும் மனுமகனின் மணமகள்கள் என்பதை தங்கள் உடை மூலம் வெளிப்படுத்துகின்றனர். ஒரு பெண்
தன்னுடைய வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டும் தான் தன்னை மணமகளாக அலங்கரித்துக் கொள்ள முடியும் . ஆனால் பெண் துறவிகள் தலை முக்காட்டினால் அனுதினமும் தாங்கள் ஆண்டவனின் மணமகள்கள் என அறிக்கையிடுகின்றனர்.
(அப்படியானால் சேலை அணிபவர்கள் இறைவனின் மணமகள் இல்லையா என்று கேட்டால் செய்வது )
எல்லா ஊரிலுமா மணப்பெண்கள் வெள்ளை முக்காடிடுகின்றனர். இல்லையே! சில ஊரில் சேலை கட்டிய மணப்பெண்களும் இருக்கத் தானே செய்கின்றனர்.
( அப்பாடா நல்லபடியா சமாளிச்சாச்சு )