பிறப்பின் மகிழ்வில்புதுக்குழு உருவாகி ஓராண்டின் நிறைவின் மகிழ்வில் மீண்டும் என் வலைப்பதிவில் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்வு அடைகிறேன். இடமாற்றம்,பணிமாற்றம் அதோடு சேர்ந்து உடல் எடை மாற்றமும் கூட.... நிற்க....
குடும்பத்திற்கு ம்கிழவைத் தருவது பிறப்பு. ஒரு சபைக்குடும்பத்திற்கு மகிழ்வைத் தருவது ஓர் புதுகுழு உருவாவது. அவ்வகையில் ஓர் ஆண்டை நிறைவு செய்து இளந்தளிராக மிளிர்கிறது எம் குழுமம். துறவிகள் மகிழ்வோடும் மன நிறைவோடும் வாழ வேண்டும் . இல்லையெனில் அவர்கள் துறவு அனுசரிக்க தகுதி அற்றவர்கள் என்கின்றனர் மூத்த துறவிகள். மகிழ்ச்சியைத் தேடி தொலைதூரம் செல்லும் நாம் அருகில் இருக்கும் மகிழ்ச்சியைத் தொலைத்தே விடுகிறோம் என்பதே உண்மை. மகிழ்ச்சி நம்க்குள் இருக்கிறது. நம் அருகில் இருக்கிறது என்பதை உணராமல் வாழ்கிறோம். அன்னை மரியின் பிறப்பு அவர்தம் முதிர்வயது பெற்றோர்க்கு மகிழ்வைத் தந்தது. இனிமேல் இயலாது நடக்காது என்று எண்ணியவர்களுக்கு இறைமகனின் மூத்த பெற்றோர்களாகும் வாய்ப்பு கிடைத்தது. காத்திருப்பு கனிவுடையோருக்கு பெரும்பேறாய் அமைகிறது. நாமும் காத்திருப்போம் பிறப்புக்காக மட்டுமல்ல நாளின் ஒவ்வொரு நிகழ்வின் சிறப்புக்காக. நன்மைகள் பல நம் வாழ்வில் நடக்க அதை உணர்ந்து வாழ குழந்தை அன்னை அருள் பொழிவாராக.