தவக்காலம்
அருள்தரும் காலம் தவக்காலம்
அதை அறிந்து நீ வாழ்ந்தால் பொற்காலம்.
ஆன்ம தெளிவு பெறவே நாற்பது நாளாம்
அதில் விபூதி புதனே முதல் நாளாம்
மண்ணிலிருந்து தோன்றியது மனித இனமாம் அதை
அறிவுறுத்த நெற்றியிலே சாம்பல் பூசும் திருநாளாம்
மனதை உடலை ஒறுக்கும் தவநாளாம் - நம்
மன இருள் களைய அருளினைத் தரும் நாளாம்.
தகுந்த முறையில் தவக்காலத்தினை பயன்படுத்திட
வாழ்க்கையில் பண்பட்டு மேம்பட்டு சிறந்திட
வாழ்த்துக்கள்.
அன்றாடம் மகிழ்ந்து,
ஆண்டவன் இருப்பை உணர்ந்து,
இனிய செயல்கள் செய்து,
ஈகை பண்பு கொண்டு,
உள்ள நிறைவு கண்டு,
ஊக்கத்துடனே உழைத்து,
எண்ணத்திலே நல்லுயர்வை விதைத்து,
ஏங்கும் மனிதர்க்கு நல்லன கொடுத்து,
ஐக்கியத்துடனே அனுதினமும் செபித்து,
ஒப்பில்லா இறைவன் புகழ் பாடி,
ஓயாது உழைத்து மகிழ்ந்தால்
அஃதனைத்தும் ,அருள் பலவும் பெறுவாய்
இத்தவக்காலத்தில் ............
சகோ மெரினா