Wednesday, 22 February 2017

 சிலுவைப் பாதை ......

                                     

                                   சிலுவைப் பாதை

முத‌ல் நிலை
     யேசு சாவுக்குத் தீர்வையிட‌ப்ப‌டுகிறார்.
குற்ற‌ம் எதையும் செய்திராத‌ யேசு சிலுவைச் சாவுக்குத் தீர்ப்பிட‌ப்ப‌டுகிறார். சென்ற‌ இட‌மெல்லாம் ந‌ன்மையை ம‌ட்டுமே செய்து வ‌ந்த‌வ‌ர்க்கு ப‌ரிசு ம‌ர‌ண‌ த‌ண்ட‌னை. ஓசான்னா ஓசான்னா என்று புக‌ழ்ந்த‌வ‌ர்க‌ள், ஒழிக‌ , ஒழிக‌ என்று கூச்ச‌லிடுகின்ற‌ன‌ர்.அமைதிக்குப் ப‌ரிசு அவ‌மான‌ம்
.
                              (  மாண‌வ‌ர்க‌ள் ப‌ள்ளியில்  )
ம‌த்யூ     :     டேய் தாமஸ் அவ‌ன் தான் ந‌ம்ம‌ ஸ்கூல்ல‌ டிசிபிலின் ல‌                        முத‌ல் ப‌ரிசு . வ‌ருஷ‌ம் த‌வ‌றாம‌ முத‌ல் ப‌ரிசை த‌ட்டிட்டு போயிடுறான்டா. எப்ப‌டின்னே தெரியல‌டா.
தாம‌ஸ்    :     பார்த்தேன் பார்த்தேன். ப‌ய‌புள்ள‌ அதிர்ந்து ஒரு வார்த்தைப் பேச‌ மாட்டேன்கிறான் . ஒரு சேட்டை ப‌ண்ண‌மாட்டன்கிறான். இவ‌ இவ்வ‌ள‌வு ந‌ல்ல‌வ‌னா இருந்தா ந‌ம்ம‌ நில‌ம‌ என்னாகிற‌து?

ம‌த்யூ    :    அவ‌ன‌ ஏதாவ‌து ப‌ண்ண‌னும்டா இப்போ பாரு
      மிஸ் அருள் என் பேனாவ‌ திருடிட்டான் மிஸ். கேட்டா யார்க்கிட்ட‌ வேணா போய் சொல்லு. நான் தான் திருடுனேன்னு யாரும் ந‌ம்ப‌ மாட்ட‌ங்க‌, ஏன்னா நான் தான் இந்த‌ ஸ்கூலுல‌ ந‌ல்ல‌ பைய‌னு ப‌ரிசு வாங்கிருக்கேனே!  அப்ப‌டினு சொல்றான் மிஸ். இப்போகூட‌ மிஸ் என்ன‌க் கேட்டா நீதான் என்ன‌ மாட்டிவிட‌  என் பையில‌ பேனாவ‌ போட்டேனு சொ ன்னா ரொம்ப‌ ஈஸியா எல்லாரும் ந‌ம்பிடுவாங்க‌னு சொல்றான் மிஸ்    
மிஸ்    :     அருள் உன் பைய‌ எடுத்துட்டு வா
     பையில் பேனாவை பார்த்த‌ல்
உன்ன‌ப் போய் ந‌ல்ல‌ பைய‌னு நின‌ச்சேனே. அவ‌ன் பேனா எப்ப‌டிடா உன் பையில‌ வ‌ந்துச்சு?
அருள்    :    தெரிய‌ல‌ மிஸ் இவ‌னுங்க‌ தான்  என்ன‌ மாட்டிவிட‌  இப்ப‌டி ப‌ண்றானுங்க‌ .
மிஸ்    :   பொய் சொல்ல‌வேற‌ ஆர‌ம்பிச்சிட்டியா? ஊமை மாதிரி இருந்துட்டு என்ன‌ன்ன‌ வேல‌ பார்க்கிற‌ திருட்டு க‌ழுதை.......
பிற‌ர‌து வ‌ள‌ர்ச்சியைப் பொறுக்காத‌ ம‌னம்,
க‌ண்ணெதிரே ந‌ட‌க்கும் தீமையைக் க‌ண்டும் காணாத‌து போல் இருத்த‌ல்,
பொய்க் குற்ற‌ம் சும‌த்துத‌ல்,
தீர‌ விசாரிக்காது த‌ண்டித்த‌ல்,
இச்செய‌ல்க‌ளை எல்லாம் செய்யும் போது நாமும் பிலாத்துவாக‌ மாறுகிறோம் என்ப‌தை உண‌ர்வோம்.
     "  தீர்ப்ப‌ளிக்காதீர்க‌ள் தீர்ப்புக்கு உள்ளாகாதீர்க‌ள்"   என்ற‌ யேசுவின் வாக்கை நினைவில் கொள்வோம். பிற‌ர் உங்க‌ளுக்கு என்ன‌ செய்ய‌ வேண்டும் என‌ விரும்புகிறீர்க‌ளோஅதையே அவ‌ர்க‌ளுக்குச் செய்யுங்க‌ள் என்ற வாக்கிற்கிண‌ங்க‌ ந‌ன்மையே செய்வோம். பிற‌ரின் ந‌ற்செய‌ல்க‌ளை பாராட்டி நாமும் வ‌ள‌ர்வோம்.
செப‌ம்   :   சாவுக்குத் தீர்வையிட‌ப்ப‌ட்ட‌ யேசுவே, எங்க‌ளுடைய‌ ந‌ண்ப‌ர்க‌ளின் வ‌ள‌ர்ச்சியைக் க‌ண்டுபொறாமைப் ப‌ட்டு,த‌டுக்க‌ நினைக்கும் நேர‌ங்க‌ளில் எல்லாம் நாங்க‌ள் உம்மையே எதிர்க்கிறோம் என்ப‌தையே உண‌ர்கிறோம். யாரையும் எவ‌ரையும் எந்நிலையிலும் குற்ற‌ப்ப‌டுத்தாம‌ல் ,குறை கூறாம‌ல் வாழ‌ ந‌ன்மையை ம‌ட்டுமே செய்ய‌ அருள் தாரும் ஆமென்
                  2 யேசுவின் தோள் மேல் சிலுவை சும‌த்த‌ப்ப‌டுகிற‌து.
த‌ன‌து சில‌வையை தானே சும‌க்கிறார். ந‌ம‌து பாஷையில் சொல்வோமானால் த‌ன‌து ச‌வ‌ப்பெட்டியை தானே சும‌ந்து செல்கிறார். சிலுவையின் பார‌த்தை விட‌ ம‌ன‌வேத‌னையின் பார‌மே அவ‌ருக்கு அதிக‌மாய் இருந்திருக்கும் . ஏனெனில் யேசு தானாக‌ சும‌க்க‌வில்லை சும‌க்குமாறு க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ப்படுகிறார். யேசு சும‌ந்த‌து வெறும் சிலுவை அல்ல‌, ந‌ம‌து பாவ‌ம் என்று அடிக்க‌டிக் கூற‌க் கேட்டிருப்போம். கொலை செய்வ‌து, திருடுவ‌துஎன்ப‌ன‌ போன்ற‌வை ம‌ட்டுமா பாவ‌ம்? ந‌ம்மால் செய்ய‌ முடிந்த‌ வேலைக‌ளை நாம் செய்யாம‌ல் பிற‌ரிட‌ம் செய்ய‌ச் சொல்வ‌தும் பாவ‌ம் தான். பிற‌ர‌து வேலைச்சுமையோடு ந‌ம‌து சுமையையும் அல்ல‌வா ஏற்றி வைக்கிறோம்.  காலையில் எழுந்த‌து முத‌ல் இர‌வு ப‌டுக்க‌ச் செல்லும் வ‌ரை ந‌ம‌து சொந்த‌ வேலைக‌ளுக்காக‌ எத்த‌னை பேரை வேலை வாங்குகிறோம். வீட்டில் உண‌வு உடை முத‌ல் ப‌ள்ளியில் ப‌டிப்பு விளையாட்டு வ‌ரை எத்த‌னை பேர் ந‌ம‌க்கு உத‌வுகிறார்க‌ள். அம்மா அப்பா உட‌ன் பிற‌ந்தோர் ஆசிரிய‌ர் ந‌ண்ப‌ர்க‌ள் என‌ அனைவ‌ரும் ந‌ம்மீது கொண்ட‌ அன்பினால் அவ‌ர்க‌ள‌து சுமைக‌ளோடு ந‌ம‌து சுமைக‌ளையும் சேர்த்து சும‌க்கிறார்க‌ள். அவ‌ர்க‌ள் க‌ட‌மை அது என்று நினைக்கிறோமே த‌விர‌ சுமை என்று நாம் நினைப்ப‌தில்லை. கூடுமான‌வ‌ரை ந‌ம‌து வேலைக‌ளை நாமே செய்வோம்.  பிற‌ர் மீது நாம் சும‌த்தும் சுமை யேசுவின் சுமையை அதிக‌மாக்குவ‌த‌ற்கு ச‌ம‌ம் என்ப‌தை உண‌ர்வோம் .
செப‌ம்   :    சுமை சும‌ந்து சோர்ந்திருப்ப‌வ‌ர்க‌ளுக்கு இளைப்பாற்றி த‌ருவேன் என்று கூறிய‌ யேசுவே, எங்க‌ளால் செய்ய‌ முடிந்த‌ வேலைக‌ளை நாங்க‌ள் செய்யாம‌ல் எங்க‌ளைச் சார்ந்த‌வ‌ர்க‌ளிட‌ம் சும‌த்தும் போது உம‌து சிலுவையின் பார‌த்தையே அதிக‌மாக்குகிறோம் என்ப‌தை உண‌ர்கிறோம் . எங்க‌ள‌து சிறு சிறு ந‌ற்செய‌ல்க‌ளால் உம‌து சிலுவைச் சுமையைக் குறைத்து உம்மோடு உம‌து சிலுவைப் பாதையில் உட‌ன்ந‌ட‌க்க‌ அருள் தாரும் ஆமென்
               
                             3  யேசு  முத‌ல் முறை கீழே விழுகிறார்.

பார‌மான‌ சிலுவையை சும‌ந்து வ‌ந்த‌வ‌ர் சுமை தாங்காம‌ல் கீழே விழுகிறார். ப‌டைவீர‌ர்க‌ளின் கேலிச்சிரிப்பு, சுற்றியிருந்த‌ ம‌க்க‌ளின் ஏள‌ன‌ப்பார்வை என‌ எல்லாம் சேர்ந்து அவ‌ர‌து ப‌ல‌த்தை ப‌ல‌வீன‌மாக்குகிற‌து. எனினும்  என்னால் முடியும் என்று எழுந்து ந‌ட‌க்கிறார். உன்னால் முடியாது  எனும் சாத்தானின்  சோத‌னையை முறிய‌டிக்கிறார். இறைவ‌னின் திருவுள‌ம் இதுதான் என்றால் அதை க‌ட்டாய‌ம் நிறைவேற்றியே தீருவேன் என்று எண்ணி எழுந்து நிற்கின்றார் யேசு.
அன்பு    :    என்ன‌டா அருள் இப்ப‌டி ப‌ண்ணிட்ட‌ . உன்ன‌ய‌ ந‌ல்ல‌வ‌ன்னு நின‌ச்சேன்ட‌ . ஆன‌ நீ இப்ப‌டி ப‌ண்ணுவேனு நினைக்க‌ல‌டா
ஆரோக்கிய‌ம்     ;    இப்ப‌டி இன்னும் எத்த‌னை பேரோட‌ பொருள‌ டா எடுத்து வ‌ச்சிருக்க‌
ச‌காய‌ம்   :    இதுல‌ உன‌க்கு பெஸ்ட் டிசிபிலின் ப‌ட்ஜ் வேற‌
ம‌த்யூ   :     டேய் அவ்வ‌ள‌வு தான் இனிமே உன் ப‌ருப்பு இங்க‌ வேகாது பார்த்த‌ல்ல‌ . இனிமே எவ‌ன்  பொருள் காணாம‌ல் போனாலும் உன்ன‌த்தான் ச‌ந்தேக‌ப்ப‌டுவாங்க‌ .
மாற்கு    :      ஸ்கூல்ல‌ ம‌ட்டுமில்ல‌ வீட்டுல‌யும் உன‌க்கு இன்னைக்கு பூசை இருக்கு . உங‌ அப்பா பெல்டோட‌ காத்திட்டிருக்கிறாரு. எங்க‌யாச்சும் ஓடிப் போயிடு. அதான் உன‌க்கு ந‌ல்ல‌து.
அருள்   :    நான் எதுக்குடா ஓடிபோக‌ணும் நான் எந்த‌ த‌ப்பும் ப‌ண்ண‌ல‌யே . த‌ப்பு ப‌ண்ண‌வ‌னும் அதை ம‌றைக்க‌ நினைக்கிற‌வ‌னும் தான் ஓடி ஒழிவாங்க‌ . நான் எங்க‌யும் போக‌ மாட்டேன் . எங்க‌ அப்பாவுக்கு  என்ன‌ ப‌த்தி ந‌ல்லாத் தெரியும்  . என்ன‌ப் புரிஞ்சிப்பார்.
தேர்வில் தோல்வி, குற்ற‌த்திற்காக‌த் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌ல், ந‌ன்ம‌திப்பை இழ‌த்த‌ல் போன்ற‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் எல்லாம் நாமும் த‌டுமாறி விழுகிறோம் யேசு போல‌ . த‌டுமாறுத‌ல் ம‌னித‌ ப‌ல‌வீன‌ம் தான். ஆனால் இதை உண‌ராது பிற‌ரின் எதிர்ம‌றை சொற்க‌ளுக்கு செவிகொடுத்து ந‌ம‌து வாழ்க்கை  பாதையை தீமையை நோக்கித் திருப்பும்போது ப‌ல‌வீன‌ப் ப‌டுகுழியில் தான் விழுகிறோம் என்ப‌தை உண‌ர்வோம்.
செப‌ம்   :    விழுவ‌தெல்லாம் எழுவ‌த‌ற்குத்தான் என்ப‌தை செய‌ல்ப‌டுத்திக்காட்டிய‌வ‌ரே, த‌வ‌று என்று அறியாம‌ல் ப‌ல‌முறை த‌வ‌றி விழுந்த‌ த‌ருண‌ங்க‌ளுக்காக‌ ம‌ன‌ம் வ‌ருந்துகிறோம். நாங்க‌ள் எத்த‌கைய‌ நிலையில் இருந்தாலும் எங்க‌ளை ம‌ன்னித்து ஏற்க‌ நீர் காத்திருக்கின்றிர் என்ப‌தை உண‌ர்ந்து எழுந்து ந‌ட‌க்க‌ , ந‌ன்மையை நோக்கிச் செல்ல‌ அருள் தாரும் ஆமென்.
                      4  யேசு த‌ன் தாயைச் ச‌ந்திக்கிறார்
  ப‌த்து மாத‌ம் சும‌ந்து பெற்றெடுத்த‌ தாய், க‌ண‌வ‌னை இழ‌ந்து வித‌வை ஆன‌ பின்பும் க‌ண்ணும் க‌ருத்துமாய்  த‌ன் அருமை ம‌க‌னை வ‌ள‌ர்த்துவ‌ந்த‌ தாய்,  அவ‌ரால் குண‌ம‌டைந்தோரும், ம‌ன‌ம் திரும்பியோரும் , அவ‌ர‌து புதுமைக‌ளைக் க‌ண்ட‌வ‌ரும் கேள்விப்ப‌ட்ட‌வ‌ரும் புக‌ழ்ந்து பேசிய‌தைக் காதால் கேட்டு ம‌கிழ்ந்த‌ தாய், இன்று  பிற‌ரால்  ஏள‌ன‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு, சாட்டையால் அடிக்க‌ப்ப‌ட்டு, அல‌ங்கோல‌மாய் ஆடைக‌ள் கிழிக்க‌ப்ப‌ட்டு,, சிலுவை சும‌ந்து வ‌ரும் த‌ன் ம‌க‌னைக் காண்கிறாள். சாதார‌ண‌த் தாய்மார்க‌ள் போல‌ அடித்த‌வ‌ர்க‌ள் மீது அப‌ராத‌மோ , அநியாய‌ வ‌ழ‌க்கோ போட‌வில்லை. சாப‌மிட்டு தூற்ற‌வில்லை. புல‌ம்பி தீர்க்க‌வில்லை.  மாறாக‌ க‌ண்க‌ளால் த‌ன‌து ம‌க‌னுக்கு ஆறுத‌ல் கூறுகிறாள். பிற‌ந்த‌வுட‌ன் சிமியோன் இறைவாக்குரைத்தாரே  "  எதிர்க்க‌ப்ப‌டும் அடையாள‌மாக‌ இருப்பான் "  என்று அது இதுதானோ ? இன்று இவ்வாறு அது நிறைவேறுகின்ற‌தோ? என்று நினைத்து வ‌ருந்துகிறாள். யேசுவும் த‌ன் தாயிட‌ம் த‌ன்னை வ‌தைப்போர் ப‌ற்றியும் , த‌ன்னை ப‌ழி கூறும் கூட்ட‌த்தார் ப‌ற்றியும் புகார் கூற‌வில்லை. தான் புரிந்து கொண்ட‌ க‌ட‌வுளின் திருவுள‌த்தை த‌ன‌து தாயும் புரிந்து கொண்டார் என்று எண்ணி ம‌கிழ்கிறார்.  தாயுள்ள‌ம் மிக‌வும் தூய்மையான‌து. தான் பெற்ற‌ பிள்ளைக‌ளின் உண‌ர்வையும் நிலையையும் துள்ளிய‌மாக‌ புரிந்துகொள்ளும் த‌ன்மை அத‌ற்கு உண்டு.  கிட்ட‌த்த‌ட்ட‌ 275 நாட்க‌ள் த‌ன் தாயோடு உண்டு உற‌ங்கி ஆடி பாடி ம‌கிழ்ந்த‌ நாம் தான் ந‌ம‌து உள்ள‌ம் தான் வ‌ள‌ர‌ ம‌றுக்கிற‌து.
தாயை ம‌திக்காதிருத்த‌ல், எதிர்த்துப் பேசுத‌ல், உத‌வி செய்ய‌ ம‌றுத்த‌ல்,போன்ற‌ த‌ருண‌ங்க‌ளில் எல்லாம் ந‌ம‌து தாயை நாம் துன்புறுத்துகிறோம். தாயையும் த‌ந்தையையும் ம‌தித்து ந‌ட‌ என்ற‌ க‌ட்ட‌ளைக்கேற்ப‌ தாய் த‌ந்தைய‌ரை ம‌திப்போம் அவ‌ர்க‌ள‌து உண‌ர்வுக‌ளைப் புரிந்து கொள்ள‌ முய‌ற்சிப்போம்.
செப‌ம்   :     இறைவார்த்தையைக் கேட்டு அத‌ன்ப‌டி ந‌ட‌ப்ப‌வ‌ரே என் தாய் என்று கூறி தாய் ம‌ரியாளின் அர்ப்ப‌ண‌த்தை சுற்றி இருந்த்த‌ ம‌க்க‌ளுக்கு வெளிப்ப‌டுத்தின‌ யேசுவே! எங்க‌ளது தாய்மார்க‌ளின் அர்ப்ப‌ ண‌  உண‌ர்வை நாங்க‌ள் புரிந்து , அவ‌ர்க‌ள‌து சொற்க‌ளுக்கு செவி கொடுத்து,  தேவைக‌ளுக்கு எங்க‌ள்  க‌ர‌ங்க‌ள் கொடுத்து வாழ‌ அருள் தாரும் ஆமென்.
5 யேசுவிற்கு சீமோன் உத‌வுகிறார்.
  வ‌ய‌ல்வெளியிலிருந்து  திரும்பிக் கொண்டிருந்த‌ சீமோன் யேசுவின் சிலுவையைச் சும‌க்க‌க் க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகிறார். யார் எவ‌ர் என்ன‌ என்ற‌ விவ‌ர‌ம் எதுவும் தெரியாம‌ல் சிலுவை சும‌க்கிறார். யேசுவை சுற்றிலும் ம‌க்க‌ள், ப‌டைவீர‌ர்க‌ள் என‌ அத்த‌னை பேர் இருந்தும் சீமோன் சிலுவை சும‌க்க‌த் தேர்ந்தெடுக்க‌ப்ப‌டுகிறார். அலெக்ஸாந்த‌ர், ரூபு என்ற‌ இரு ம‌க்க‌ளைப் பெற்ற‌ த‌ந்தை சீமோன் யேசுவையும் த‌ன‌து ம‌க‌னாக‌ எண்ணி உத‌வுகிறார்.
மாற்கு   ;    ஏண்டா ம‌த்யூ ஒரு மாதிரியா இருக்க‌ ?
ம‌த்யூ  :    எக்ஸாம் ஃபீஸ் க‌ட்ட‌ இன்னைக்குத்தாண்டா க‌டைசி தேதி. இந்த‌ வெள்ள‌ம் வ‌ந்த‌தால‌ எங்க‌ அப்பா க‌டைக்கு ரொம்ப‌ ந‌ஷ்ட‌மாயிடுச்சுடா . அதனால‌ ப‌ண‌ம் க‌ட்ட‌ முடிய‌ல‌. மிஸ் இன்னைக்குக் க‌ட்டாய‌ம் திட்டுவாங்க‌. அதான் ப‌ய‌மா இருக்கு.
மாற்கு    :    அதுக்கு ஏண்டா ப‌ய‌ப்ப‌டுற‌ . என்கிட்ட‌ அவ்வ‌ள‌வு ப‌ண‌ம் இல்ல‌ . இருந்தாக் கொடுத்திருப்பேன். . ச‌ரி ச‌ரி வா மிஸ்ஸ எப்ப‌டியாவ‌து ச‌மாளிச்சுக்க‌லாம் வா
ம‌த்யூ    :     இல்ல‌டா ஏற்க‌ன‌வே மிஸ் என‌க்கு ஒரு வார‌ம் டைம் கொடுத்தாங்க‌ . ஆனாலும் முடிய‌ல‌ டா என்னால‌ ந‌ம்ம‌ கிளாஸ் கு தான் கெட்ட‌ பேர்.
அருள்  :    ஏண்டா ம‌த்யூ க‌வ‌லைப்ப‌டுற‌ நாங்க‌ள்லாம் இல்ல‌ ந‌ம்ம‌ வ‌குப்புல‌ உள்ள‌ எல்லாரும் இன்னைக்கு ஒரு நாள் அவ‌ங்க‌வ‌ங்க‌ திண்ப‌ண்ட‌ம் வாங்கி சாப்பிடுற‌ காசை ஒண்ணா சேர்த்து உன்  ப‌ரிட்சைக்கு பண‌ம் க‌ட்டிடுறோம்    க‌வ‌லைப் ப‌டாம‌ தைரிய‌மா இரு.
ம‌த்யூ    :      ரொம்ப‌ ந‌ன்றிடா
அருள்    :     எதுக்குடா ந‌ன்றி எல்லாம் எங்க‌ளால‌ முடிஞ்ச‌ உத‌வியை நாங்க‌ செய்றோம். 
பிற‌ர‌து தேவை அறிந்து உத‌வுத‌ல், ஆப‌த்து நேர‌த்தில் அருகிருத்த‌ல், வேலைக‌ளைப் ப‌கிர்ந்து செய்த‌ல் போன்ற‌ த‌ருண‌ங்க‌ளில் எல்லாம் நாமும் சீரேன் ஊர் சீமோன்க‌ள் தான் என்ப‌தை உண‌ர்வோம்.  
செப‌ம் :     த‌ன் ந‌ண்ப‌னுக்காக‌  உயிரைக் கொடுப்ப‌தை விட‌ மேலான‌ அன்பு எவ‌ரிட‌மும் இல்லை என்று கூறிய‌ யேசுவே உம‌து சிலுவையைச் சும‌ந்து உம‌க்கு உத‌விய‌தால் சிலுவைப்பாதையின் முத‌ல் திருப்ப‌ய‌ணியாகிறார் சீமோன் . உத‌வும் ம‌ன‌ம், தேவையிலிருப்போரை க‌ண்டுகொள்ளும் பார்வை என்ற‌ குண‌ங்க‌ளைப் பெற்ற‌ சீமோன் போல‌ நாங்க‌ளும் பிற‌ர‌து தேவையை உண‌ர்ந்து உத‌வும் ந‌ல‌ உள்ள‌ம் ப‌டைத்ட‌வ‌ர்க‌ளாக‌ வாழ‌ வ‌ர‌ம் தாரும் ஆமென்.
6 வெரோணிக்காள் யேசுவின் திருமுக‌ம் துடைக்கிறாள்.

  விய‌ர்வை என‌ இர‌த்த‌ம் பொங்கி வ‌ழிய‌  க‌ண்க‌ளின் பார்வை ம‌ங்க‌, பாதை தெரியாது த‌டுமாறின‌ட‌க்கின்ற‌ யேசுவை எதிர்கொண்டு வ‌ருகிறாள் வெரோணிக்காள். வீர‌ம், துணிச்ச‌ல், தைரிய‌ம் என்ற‌ ஒட்டு மொத்த‌ சொற்க‌ளின் ஒரேவ‌டிவ‌மாய் நிற்கிறாள்.. இது தான் என‌து ப‌ய‌ண‌ம் என்று முன்னோக்கிச் செல்லும் யேசுவின் பாதைக்கு ஒளியூட்டுகிறாள்.  ஆம் முக‌ம் துடைத்துக‌ண்க‌ளின் பார்வையை க் கூர்மைப்ப‌டுத்துகிறாள். அத்த‌னைக் காவ‌ல‌ர்க‌ள் அருகிருந்தும் துணிந்து வ‌ந்து தூய‌வ‌ரின் திருமுக‌ம் துடைத்து உற்சாக‌ப்ப‌டுத்துகிறாள்.  துணிந்த‌வ‌ள் தூய‌வ‌ர் முக‌த்தினை ப‌ரிசாக‌ப் பெறுகிறாள் .. பிற‌ர் ந‌ல‌ம் விரும்பிய‌தால் பேதைப்பெண்  இன்று வீர‌ப்பெண்ணாக‌ப் போற்ற‌ப்ப‌டுகிறாள். என‌க்கேன் வ‌ம்பு என்று வெரோணிக்காள் அன்று நினைத்திருந்தால் இன்று வ‌ர‌லாற்றில‌வ‌ள் பெய‌ர் இருந்திருக்காது.
நான் துணிந்து செல்வேன். திருமுக‌ம் துடைப்பேன் என்று நினைத்தாள், செய‌ல்ப‌டுத்தினாள்.
என‌க்கு வ‌லுவூட்டுகிற‌வ‌ரின் துணை கொண்டு எதையும் செய்யும் ஆற்ற‌ல் என‌க்கு உண்டு என்று கூறி அரிய‌ ப‌ல‌ செய‌ல்க‌ளைத் துணிந்து செய்த‌ ப‌வுல‌டியார் ந‌ம‌க்கு ம‌ற்றொரு எடுத்துக்காட்டு. என்னால் முடியாது. என‌க்கு எந்த‌ ஆற்ற‌லும் திற‌மையும் இல்லை எ   என்று          ப‌ய‌ந்து ஒதுங்குவோமானால் ,நா ம்   சிலுவை சும‌ந்து செல்லும் யேசுவை வேடிக்கைப்  பார்த்து ஏளன‌ம்  செய்யும் கூட்ட‌த்தின‌ரில் ஒருவ‌ராவோம். ப‌ய‌ம் ந‌ம்மைக் க‌ட‌வுளிட‌மிருந்து பிரிக்கும் ஒரு சாத்தான் என்ப‌தை உண‌ர்வோம். தேவைய‌ற்ற‌ ப‌ய‌த்தை வில‌க்கி ம‌ன‌தைரிய‌ம் உள்ள‌வ‌ர்க‌ளாக‌ வாழ்வோம். ந‌ற்செய‌ல்க‌ள் செய்ய‌ துணிச்ச‌லை ந‌ம‌தாக்குவோம். 
செப‌ம் :     துணிவோடிருங்க‌ள் அஞ்சாதீர்க‌ள் என்று அப்போஸ்த‌ல‌ர்க‌ளுக்கு தைரிய‌மூட்டிய‌ யேசுவே! ந‌ல்ல‌ன‌ செய்ய‌ த‌ய‌ங்கும் போதும், துணிவுட‌ன் செய‌லாற்ற ம‌றுக்கும்போதும் எதையும் செய்ய‌ ஆற்ற‌ல் உண்டு என‌ ந‌ம்பாத‌ போதும் நாங்க‌ள் உம‌க்கு உத‌வ‌வே ம‌றுக்கிறோம் என்ப‌தை உண‌ர்கிறோம். எங்க‌ள‌து ப‌ய‌த்தை விடுத்து துணிந்து செய‌லாற்ற‌ ,எங்க‌ள‌து  ச‌க்தியை நாங்க‌ள் உண‌ர்ந்து செய‌ல்ப‌ட‌ வ‌ர‌ம் தாரும் ஆமென்.
7 யேசு இர‌ண்டாம் முறை  கீழே விழுகிறார்.
ந‌ட‌ந்து போக‌ பாதையில்லை என்று வ‌ருந்த்தாதே நீ எழுந்து ந‌ட‌ந்தால்  அதுவே பாதையாகு ம்       என்றெண்ணி புதிய‌ பாதையை  உருவாக்கா விழுந்த‌வ‌ர் எழுகிறார்.  சிலுவையின் பார‌ம் ஒருபுற‌ம், சுற்றியிருப்ப‌வ‌ர்க‌ளின் ஏள‌ன‌ப்பார்வை ம‌றுபுற‌ம் என‌ அனைத்தும் அவ‌ரை அழுத்த‌ அனைத்தையும் உத‌றித் த‌ள்ளி எழுகிறார். மூச்சுவிடுப‌வ‌ன் ம‌னித‌ன் அல்ல. முய‌ற்சி செய்ப‌வ‌னே முழு ம‌னித‌ன் என்ப‌தை த‌ன‌து செய‌லால் வெளிப்ப‌டுத்துகிறார்.
அக்கா    :     டேய் ஒழுங்கா போட்டியில‌ இருந்து வில‌கிடு. அதான் உன‌க்கு ம‌ரியாதை.
த‌ம்பி    :    உன‌க்கென்ன‌ உன் வேல‌ய‌ப் பார்த்துட்டு போ.அது யென‌க்கு தெரியும்.
அப்பா     :     டேய் என்ன‌ ஆச்சு உங்க‌ ரெண்டு பேருக்கும் ஏன் இப்ப‌டி ச‌ண்டைப் போட்டுக்கிறீங்க‌?
அக்கா    :    பாருங்க‌ப்பா,  ஒவ்வொரு த‌ட‌வையும் ஓவிய‌ப்போட்டியில‌ க‌ல‌ந்துக்கிறேனு பேர் குடுத்துடுறான் . ஆனா ஒரு த‌டை கூட‌ செயிச்ச‌தே இல்ல‌.
த‌ம்பி    :    அத‌ப்ப‌த்தி நானேக் க‌வ‌லைப் ப‌ட்ட‌தில்லை. உன‌க்கு ம‌ட்டும் என்ன‌ என் மேல‌ அவ்வ‌ள‌வு அக்க‌றை?
அக்கா     : அக்க‌றையா மான‌ம் போகுது என் ஃப்ர‌ண்ட்ஸ் எல்லாம் என்ன‌க் கிண்ட‌ல் ப‌ண்றாங்க‌  ப்பா செயிக்கமாட்டோம்னு தெரிஞ்சே ஏன் உன் த‌ம்பி போட்டியில‌ க‌ல‌ந்துக்கிறானு கேட்கிறாங்க‌.
அப்பா    :    உன்னால‌ முடிய‌ல‌ன்னாஏண்டா க‌ல‌ந்த்துக்கிற‌ நல்லா ப‌யிற்சி எடுத்துட்டு  அப்புற‌மா போட்டியில‌ க‌ல‌ந்துக்க‌லாம்ல‌?
த‌ம்பி    :    என்னால‌ முடியும்பா ஒவ்வொரு த‌ட‌வையும் தோற்கிற‌ப்ப‌  என்ன‌ த‌ப்பு ப‌ண்ண‌க் கூடாதுனு தெரிஞ்சுக்கிறேன். இன்னும்  என்ன‌ ப‌ண்ணுனா செயிக்க‌லாம்னும் தெரிஞ்சுக்க‌றேன்பா.  இந்த‌ த‌ட‌வ‌ நான் க‌ண்டிப்பா செயிப்பேன்பா யார் என்ன‌ கிண்ட‌ல் ப‌ண்ணாலும் அத‌ நான் பெரிசா எடுத்துக்க‌ மாட்டேன் தொட‌ர்ந்து முய‌ற்சி செஞ்சுக்கிட்டே இருப்பேன்பா .
தோல்வி க‌ண்டு வ‌ருந்தும்போதும் , முய‌ற்சிக்க‌த் த‌வ‌றும்  போதும்,  யேசுவை கீழே த‌ள்ளி அவ‌ர் எழுந்து ந‌ட‌க்காத‌வாறு செய்கிறோம் என்ப‌தை உண‌ர்வோம். . நாம் ந‌மது வாழ்வில் எடுக்கும் சிறு சிறு முய‌ற்சிக‌ள் மூல‌மாக‌  யேசு வுக்கு ஊன்றுகோலாக‌ செய‌ல்ப‌டுவோம்.
செப‌ம்   முட‌க்குவாத‌முற்ற‌வ‌னையும், இற‌ந்த‌ சிறுமியையும், எழுந்து ந‌ட‌க்க‌ச் செய்த‌ யேசுவே! முய‌ற்சி செய்ய‌த் த‌வ‌றும்போதெல்லாம் நாங்க‌ளும் ம‌ன‌த‌ள‌வில் உயிர‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ , முட‌க‌க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாக‌ வே இருக்கிறோம் என்ப‌தை உன‌ர்கிறோ.ம். உம‌து இறைவார்த்ட்தையில் ந‌ம்பிக்கைக் கொண்டு முய‌ற்சி செய்துவாழ்வில் முன்னேற‌ அருள்தாரும் ஆமென்
8 யேசு எருச‌லேம் பெண்க‌ளுக்கு ஆறுத‌ல் கூறுகிறார்.
யேசு த‌ன்னோடு ந‌ட‌ந்துவ‌ந்த‌ எருச‌லெம் பெண்க‌ளுக்கு ஆறுத‌ல் கூறுகிறார். உட‌லெல்லாம் புண்ணாகி, இர‌த்த‌ம் வ‌ழிந்து ந‌ட‌க்க‌வே முடியாது த‌ள்ளாடி ந‌ட‌ந்து வ‌ரும் யேசு என‌க்காக‌ அழாதீர்க‌ள் என்கிறார். ஆறுத‌ல் கூற‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் அழுகிறார்க‌ள். ஆறுத‌ல் பெற‌ வேண்டிய‌வ‌ர் ஆறுத‌ல் கூறுகிறார். த‌ன‌து நிலை எப்ப‌டி இருந்தாலும் த‌ன்னைத் தேடி வ‌ந்த‌ ம‌க்க‌ளுக்கு ஆறுட‌ல் கூறுகிறார். அழுப‌வ‌ர்க‌ளோடு சேர்ந்து அழுது துன்பத்தை இர‌ட்டிப்பாக்க‌வில்லை. மாறாக‌ தைரிய‌ப்ப‌டுத்துகிறார். எப்ப‌டி இருந்த‌ நீர் இப்ப‌டியாகிவிட்டீர் என்று அவ‌ர்க‌ள் கூறும்முன்பே, என‌க்கா அழாதீர்க‌ள் உங்க‌ளுக்காக‌வும் உங்க‌ள் பிள்ளைக‌ளுக்காக‌வும் அழுங்க‌ள் என்கிறார்.
ஆறுத‌ல் எல்லோராலும் கொடுக்க‌ முடியாது. யாருடைய‌ துன்ப‌த்தை ந‌ம‌து துன்ப‌மாக‌ நினைக்கிறோமோ அப்போதுதான் நம்மால் ஆறுத‌ல் கூற‌ முடியும். உத‌ட்ட‌ள‌வில் வார்த்தைக‌ளைல் கூறுவ‌தாலோ , க‌ண்க‌ளில் நீர் க‌சிவ‌தாலோ நாம் ஆறுத‌ல் அளிப்ப‌வ‌ர்க‌ளாக‌ மாறிவிட‌ முடியாது.யாருடைய‌ துன்ப‌த்தில் உட‌னிருந்து உண‌ர்கிறோமோ அப்போது தான் நாம் ஆறுத‌ல் அளிப்ப‌வ‌ர்க‌ளாகிறோம். சின்ன‌ஞ்சிறிய‌ என் ச‌கோதர‌ர்க‌ளுக்கு செய்த‌தெல்லாம் என‌க்கே செய்தீர்க‌ள் என்ற‌ யேசுவின் வார்த்தையை ந‌ன‌வாக்குவோம். ந‌ம்முட‌ன் வாழும் ந‌ண்ப‌ர்க‌ள் துன்ப‌ப்ப‌டும்போது அவ‌ர்க‌ளுக்கு கூறும் ஆறுத‌ல் யேசுவுக்கேக் கூறுவ‌து போலாகும் என்ப‌தை உண்ர்வோம் .
செப‌ம் :     துய‌ருறுவோர் பே்றுபெற்றோர் ஏனெனில் அவ‌ர்க‌ள் ஆறுத‌ல் பெறுவ‌ர் என்று கூறிய‌ யேசுவே! துன்புறுவோர் அனைவ‌ரிலும் உம‌து க‌ண்டு அவ‌ர்க‌ள‌து துன்ப‌த்தில் உட‌னிருந்து சொல்லால் ஆறுத‌ல் சொல்ப‌வ‌ர்க‌ளாக‌ ம‌ட்டும் இல்லாம‌ல் செய‌லாலும் ஆறுத‌ல‌ளிப்ப‌வ‌ர்க‌ளாக‌ நாங்க‌ள் வாழ‌ வ‌ர‌ம் தாரும். ஆமென்.
9 யேசு மூன்றாம் முறை விழுகிறார்.

பால‌ஸ்தீன‌ நாட்டு மேடு ப‌ள்ள‌ம் எல்லாம் ந‌ட‌ந்து போதித்த‌வ‌ர்,பாலைவ‌ன‌த்தில்40 நாட்க‌ள்த‌னித்திருந்து செபித்த‌வ‌ர்,க‌ல்வாரி ம‌லையை அடையும் முன்பே ப‌ல‌ முறை கீழே விழுகிறார். விழுகிறார் என்ப‌தை விட‌ த‌ள்ளிவிட‌ப் ப‌டுகிறார் என்ப‌தே ச‌ரியாகும். உட‌ன் வ‌ந்த‌ ப‌டைவீர‌ர்க‌ள் அவ‌ரை ஒரு விளையாட்டு பொம்மை போல‌வும், வாயில்லா ஜீவ‌ன் போல‌வும் நினைத்து துன்புறுத்திம‌கிழ்கின்ற‌ன‌ர். பிற‌ ரை பிற‌  உயிர்க‌ளை வ‌     தைத்து இன்ப‌ம் காணும் ம‌னநிலை ந‌ம்மிட‌மும் இருக்குமேயானால் நாமும்யேசுவை துன்புறுத்துப‌வ‌ர்க‌ளில் ஒருவ‌ராவோம். இறைவ‌னால் ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌ ஒவ்வொரு உயிரின‌த்திலும்யேசுவின் திருமுக‌ம் திரு உட‌ல் ம‌றைந்துள்ள‌து. ந‌ம‌து ம‌கிழ்விற்காக‌ நாய், பூனை, ஆடு மாடு போன்ற‌ உயிர்க‌ளைத் துன்புறுத்துவோமானால் நாம் துன்புற்த்துவ‌து யேசுவையே யென்ப‌தை உண‌ர்வோம். ந‌ம‌து இது போன்ற‌ பாவ‌ நிலைக‌ளிலிருந்து மாறி வாழ‌வே ந‌ம‌க்கு திருவ‌ருட்சாத‌ன‌ங்க‌ள் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. ப‌ழைய‌ பாவ‌ நிலையிலிருந்து புதிய‌ வாழ்வுக்குத் திரும்புவோம். பிற‌ உயிர்க‌ளிட‌த்தில் இறைவ‌னைக் காண்போம்.
செப‌ம்   :    விழுந்த‌ போதெல்லாம் எழுந்து நின்று, உம‌து ப‌ய‌ண‌த்தை தொட‌ர்ந்த‌ யேசுவே! பாவ‌த்தின் க‌ற்க‌ள் எங்க‌ள் கால்க‌ளைத் த‌டுக்கும்போதும், த‌டுமாறி நாங்க‌ள் கீழே விழும்போதும் உம‌து திருவ‌ருட்சாத‌ன‌ங்க‌ளென்னும் க‌ர‌ம் கொண்டு எம்மைத் தூக்கிவிட‌ நீர் த‌யாராய் இருக்கின்றீர் என்ப‌தை உண‌ர்கிறோம். எங்க‌ள் ப‌ல‌வீன‌த்தை ப‌ல‌மாக‌ மாற்றி துணிவுட‌ன் உம்மைப் பின்செல்ல‌ வ‌ர‌ம் தாரும் ஆமென்.
10 யேசு ஆடை க‌ளைய‌ப்ப‌டுகிறார்.
ம‌ண்டை ஓட்டு என்னும் இட‌த்தை அடைந்த்த‌தும் ப‌டைவீர‌ர்க‌ள்யேசுவின் ஆடைக‌ளைக் க‌ழ‌ற்றுகிறார்க‌ள். ஏள‌ன‌ப்ப‌டுத்தி , எச்சில் உமிழ்ந்து கேலி சிரிப்பு சிரிக்கின்ற‌ன‌ர். ஒரு ம‌னித‌னுக்கு ம‌திப்பையும் ம‌ரியாதையையும் த‌ருவ‌து அவ‌ர் அணியும் ஆடை தான். மான‌ம் காக்க‌ ப‌ய‌ன்ப‌டும் ஆடைக‌ள் இன்று ஆபாச‌மாக‌  அவ‌மான‌மாக‌ அணிய‌ப்ப‌டுகிற‌து. ஒட்டு போட்ட‌தும், கிழிந்து தொங்குவ‌துமான‌ ஆடைக‌ளை நாக‌ரீக‌ம் என்ற‌ பெய‌ரில் அணிந்து ந‌ம‌து மாண்பை நாமே குறைத்துக்கொள்கிறோம். ஆடை வாங்க‌ முடியாத‌ அள‌வுக்கு வ‌றுமையில் இருக்கும் ந‌ண்ப‌ர்க‌ள் முன் ஒரு ப‌ண்டிகைக்கு 34 ஆடைக‌ள் வாங்கி ம‌ணிக்கொருமுறை ஆடை மாற்றுகிறோம். . பெற்றோர்க‌ள் ம‌கிழ்ந்து த‌ரும் ஆடைக‌ளை அணிய‌ ம‌றுத்துஅநாக‌ரிக‌மாக‌  ஆடை ஆணியும் போதெல்லாம் நாம் யேசுவையே வ‌ருத்துகிறோம். இருப்ப‌தை இல்லாத‌வ‌ர்க‌ளோடு ப‌கிரும்போது ஆடைய‌ற்றிருக்கும் யேசுவை நாம் ஆடையால் உடுத்துகிறோம் என்ப‌தை உண‌ர்வோம். கிழிந்த‌ ஆடைக‌ளையும் ப‌ழைய‌ ஆடைக‌ளையும் அணியும் ந‌ம‌து ந‌ண்ப‌ர்க‌ளைக் கேலி செய்யாதுஅவ‌ர்க்க‌ளுக்கு ந‌ம்மாலான‌ உத‌விக‌ளைச் செய்வோம்.
செப‌ம்    :  ஆடைய‌ற்றிருந்தேன் என‌க்கு ஆடை அணி வித்தீர்க‌ள்   என்று கூறிய‌       அன்பு யேசுவே   தெருவோர‌ங்க‌ளிலும் சாலைக‌ளிலும் ஆடைய‌ற்றிருக்கும் அனைவ‌ர் சாய‌லிலும் நீரே இருக்கின்றீர் என்ப‌தை உணர்கிறோம். எங்க‌ளது ப‌ண்பான‌ பேச்சாலும் செய‌லாலும் பிற‌ர‌து தேவைக‌ளை நிறைவு செய்ப‌வ‌ர்க‌ளாக‌  , இல்லாத‌வ‌ரோடு இருப்ப‌தை ப‌கிர்ந்து வாழ‌ , வ‌ர‌ம் தாரும் ஆமென்.. 
11 யேசு சிலுவையில் அறைய‌ப்ப‌டுகிறார்.
இவ்வ‌ள‌வு நேர‌ம் சிலுவையை யேசு சும‌ந்தார். இப்போது சிலுவை யேசுவை சும‌க்கிற‌து. ம‌ர‌த்துண்டுக‌ளோடு அவ‌ர‌து உட‌ல் ஆணிக‌ள்மூல‌ம் இணைக்க‌ப்ப‌டுகிற‌து. க‌ட‌வுளையும் ம‌னித‌ரையும் இணைக்க‌ வ‌ந்த‌ யேசு சிலுவையோடு இணைக்க‌ப்ப‌டுகிறார். இறுக்க‌ப்ப‌டுகிறார். உட‌லிலுள்ள‌ ந‌ர‌ம்புக‌ள் புடைக்க‌ எலும்புக‌ள் முறுக்கேற‌, இர‌த்த‌ம் தெறிக்க, சினிமாக் கதாநாய‌க‌ன் போல‌  அனைவ‌ரையும் அடித்து நொறுக்க‌வில்லை.யேசு . சாதார‌ண ம‌னித‌னாய் அனைத்தையும் எஏற்கிறார். துன்ப‌ங்க‌ளும் தோல்விக‌ளும் சோத‌னைக‌ளும் , த‌டுமாற்றங்க‌ளும் இல்லாத‌ வாழ்க்கையில்லை. ஆனால் அவ‌ற்றை நாம் எப்ப‌டி க‌ட‌ந்து செல்கிறோம் , ஏற்றுக் கொள்கிறோம்  என்ப‌தைப் பொறுத்தே ந‌ம‌து வாழ்க்கை அமைகிற‌து. யேசு த‌ன்னுடைய‌ நிலையை உண‌ர்ந்து, இதுதான் இறைவ‌ன் என‌க்குத்ட் த‌ந்த‌து என‌ ஏற்கிறார். அத்த‌கைய‌ கொடூர‌மான‌ வேத‌னையிலும் த‌ன்னைத் துன்புறுத்திய‌வ‌ர்க‌ளுக்காக‌ செபிக்கிறார். . அந்த‌ பொறுமையான‌ நாமும் வள‌ர‌ இறைவ‌னின்  அருள் வேண்டுவோம்.  எளிதில் கோப‌ப்ப‌டுவ‌து அடிப்பது, த‌காத‌ வார்த்தைக‌ளால் பிற‌ர் ம‌ன‌ம் புண்ப‌டும்ப‌டி ந‌ட‌ந்து கொள்வ‌து, சினிமாக் க‌தைமாந்த‌ர்க‌ளாக‌ பாவ‌னை செய்வ‌து, போன்ற‌ ப‌ழ‌க்க‌ங்க‌ளிலிருந்துவிடுப‌டுவோம். யேசுவுக்குப் பிடிக்காத‌ செய‌ல்க‌ளைச் செய்யும் போது அவ‌ரை நாமும் சிலுவையில் அறைகிறோம் என்ப‌தை உண‌ர்வோம். ம‌ன‌ம் மாறுவோம்.  
செப‌ம்.:     எங்க‌ளுக்காக‌ சிலுவையில‌றைய‌ப்ப‌ட்ட‌ யேசுவே நீர் உம‌க்கு வ‌ந்த‌ துன்ப‌ங்க‌ளை எல்லாம் பொறுமையோடு ஏற்று அதை இறைவ‌னிட‌ம் செப‌மாக‌ எடுத்திரைத்தீர். உம‌து பிள்ளைக‌ளாகிய‌ நாங்க‌ள் உம்மை பிர‌திப‌லிக்காது சினிமா க‌தாபாத்திர‌ங்க‌ளை பிர‌திப‌லிக்கின்றோம். சிறு சிறு செய‌ல்க‌ளுக்கும் கோப‌ம் கொண்டு த‌வ‌றான‌ வார்த்தைக‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்துகிறோம் . அத‌ற்காக‌ ம‌ன‌ம் வ‌ருந்துகிறோம். உம‌து காய‌ப்ப‌ட்ட‌ திருக்க‌ர‌ வ‌ல்ல‌மையால் இனி எங்க‌ளுக்கு வ‌ரும் சிறு தோல்விக‌ளையும் பொறுமையோடு ஏற்றுக்கொள்ள‌ வ‌ர‌ம் தாரும் ஆமென்
12 யேசு உயிர் விடுகிறார்.
யேசு த‌ன் இன்னுயிரை விடுகிறார். சாவின் க‌டைசி ம‌ணித்துளி வ‌ரை  த‌ன்னைத்துன்புறுத்திய‌வ‌ர்க‌ளை ம‌ன்னித்து அவ‌ர்க‌ளுக்காக‌ இறைவ‌னிட‌ம் ,"  த‌ந்தையே இவ‌ர்க‌ள் அறியாம‌ல் செய்கிறார்க‌ள் இவ‌ர்க‌ளை ம‌ன்னியும் என்று செபிக்கிறார். த‌ந்தை த‌ன‌க்கு சொன்ன‌  வேலையைச் செய்து முடித்து த‌ந்தையிட‌மே திரும்புகிறார். நினைத்த‌தை செய்து முடித்த‌ திருப்தியுட‌னும், த‌ன் தாயை உற்ற‌ ந‌ண்ப‌னிம் ஒப்ப‌டைத்த‌ ம‌கிழ்வுட‌னும் அவ‌ர‌து உயிர் அவ‌ர‌து உட‌லை விட்டுப் பிரிகிற‌து.
பாட‌ல்   அமைதி...........
செப‌ம் என‌க்காக‌ உயிர் விட்ட‌ யேசுவே !!! ம‌ன்னியுங்க‌ள் ம‌ன்னிப்புப் பெறுவீர்க‌ள் என்ற‌வ‌ரே!! உம்மிட‌மிருந்து அள‌வ‌ற்ற‌ ம‌ன்னிப்பையும், இர‌க்க‌த்தையும் பெற்ற‌ நாங்க‌ள் அதை பிற‌ருக்கு வ‌ழ‌ங்க‌க் கூடிய‌வ‌ர்க‌ளாக‌ வாழ‌ அருள் புரியும். எங்க‌ள‌து வாழ்வில் எங்க‌ளுக்கென்று இருக்கும்  சிறு சிறு க‌ட‌மைக‌ளான‌ ப‌டிப்பு, அனைவ‌ர்க்காக‌வும் செபித்த‌ல், பெற்றோர்க்கும் உற்றார்க்கும் உத‌வுத‌ல் போன்ற‌வ‌ற்றை செம்மையுட‌ன் செய்து இத‌ன் மூல‌மாக‌ த‌ந்தையின் திருவுள‌ம் நிறைவேற்றிய‌ உம‌து ப‌ணியில் நாங்க‌ளும் ப‌ங்கேற்க‌ வ‌ர‌ம் தாரும் ஆமென்.
13 யேசுவின் உட‌ல் தாயின் ம‌டியில்  கிட‌த்த‌ப்ப‌டுகிற‌து. 
அன்று பெத்ல‌கேமில் பால‌க‌னாக‌ ம‌ரியின் ம‌டியில் கிட‌ந்த‌வ‌ர். இன்று பிண‌மாக‌க் கிட‌க்கிறார். ப‌த்து மாத‌ம் க‌வ‌ன‌மாக‌க் க‌ருவினில் சும‌ந்து, ந‌டைப‌யிலும் ப‌ருவ‌ம் வ‌ரை க‌ர‌ங்க‌ளிலும் தோள்க‌ளிலும் சும‌ந்து, 30 ஆண்டுக‌ள் வ‌ரை த‌ன் அர‌வ‌ணைப்பிலேயே வ‌ள‌ர்த்த‌ தாய், இன்று உயிர‌ற்ற‌ உட‌லை சும‌ந்து வ‌ருந்துகிறார்.  3 ஆண்டுக‌ள் அவ‌ரோடு ஒன்றாக‌ உண‌வ‌ருந்தி , தங்கி, உற‌வு கொண்டாடிய‌ சீட‌ர்க‌ள் அனைவ‌ரும் அவ‌ரைவிட்டு ஓடிப்போக‌ , த‌ன‌து ம‌க‌னின் க‌டைசி நொடி வ‌ரை அவ‌ரோடு உட‌னிருக்கின்றார் ம‌ரியா. 
அப்பா   :    டேய் அம்மாவுக்கு உட‌ம்பு முடிய‌ல‌ க‌டைக்குப் போய் ரெண்டு மாத்திரை மாத்திரை வாங்கிட்டு வா
ம‌க‌ன்    :      போங்க‌ப்பா கிரிக்கெட் ம‌ட்ச் பார்க்கிறேன். நீங்க‌ சும்மாதான‌ இருக்கிறீங்க‌ . நீங்க‌ போக‌லாம்ல‌.???
அப்பா     :     விளையாட்டு இப்ப‌ ரொம்ப‌ முக்கிய‌மாடா . உன்ன‌ போக‌ச் சொன்னா நீ என்ன போக‌ச் சொல்றீயா  ஒழுங்காப் போய் வாங்கிட்டு வா இல்ல‌ அடிப‌டாதே.
ம‌க‌ன்    :     என்னால‌ போக‌ முடியாது என்ன‌ ப‌ண்ணுவீங்க‌  அடிங்க‌ பார்ப்போம்.
அப்பா    :    திமிர‌ப் பார்த்தியா! உன்ன சொல்ல‌ணு ம்    (அம்மாவைப் பார்த்து)
அன்னைக்கு இவ‌ன் காய்ச்ச‌ல்ல‌ கிடையாக் கிட‌ந்த‌ப்ப‌ ஒரு வார‌ம் ப‌க்க‌த்துல‌யே இருந்து பார்த்த‌ல்ல‌ உன‌க்கு இது வேணும்
ம‌க‌ன்    : என்ன‌ சொல்லிக் காமிக்கிறிங்க‌ளா? உங்க‌ ளை யாரு பார்க்க‌ச் சொன்னா உங்க‌ க‌ட‌மை பார்த்தீங்க‌ . நீங்க‌ தான‌ பெத்தீங்க‌ அப்ப‌ நீங்க‌ தான் பார்க்க‌ணும்.
அப்பா    :    என்ன‌டா ரொம்ப‌ வாய் நீளுது.
அம்மா    :    ச‌ரி விடுங்க‌ என‌க்கு உட‌ம்பு ந‌ல்லாயிருக்கு மாத்திரை எல்லாம் வேண்டாம். போங்க‌ 
எத்தனை முறை தாயின் அருமை புரியாது , அவ‌ரின் அன்பை உண‌ராது எடுத்தெறிந்து பேசியிருப்போம் . அத‌ற்காக‌ ம‌ன‌ம் வ‌ருந்துவோம். அனைவ‌ரையும் த‌ன் பிள்ளைக‌ள் போல் பார்க்கும் அவ‌ர‌து  க‌ருணை ம‌ன‌ம் ந‌ம்மில் வ‌ள‌ர‌ செபிப்போம்.
செப‌ம்   :    அன்பு யேசுவே உம‌து அன்பை நாங்க‌ள் உணர‌ எங்க‌ளுக்குத் தாயைத் த‌ந்துள்ளீர். அவ‌ர‌து க‌ருணை உள்ள‌ம் க‌ட‌ல‌ள‌வு ப‌ர‌ந்த‌து என்ப‌தை உண‌ர்கிறோம். அந்த‌ தாயின் ம‌னதினை புண்ப‌டுத்தாது ந‌ற்செய‌ல்க‌ள்  மூல‌ம் ம‌கிழ்விக்க‌ க‌ருணை வாழ‌ அருள்தாரும் ஆமென் 
14 யேசுவின் உட‌லை அட‌க்க‌ம் செய்த‌ல்
யேசுவின் உட‌லை அரிம‌த்தியா  ஓரைச் சேர்ந்த‌ யோசேப்பு என்ப‌வ‌ர் அட‌க்க‌ம் செய்கிறார். த‌ன‌க்கென‌ வைத்திருந்த‌ க‌ல்ல‌றையை யோசேப்பு யேசுவுக்கென‌ க் கொடுக்கிறார். பொன் தூப‌ம் வெள்ளைப் போள‌ம்  காணிக்கையாக‌ப் பெற்‌றார்              ம‌ழ‌லை யேசு       ச‌ந்த‌ன‌த்தூளும்  வெள்ளைபோள‌மும்  காணிக்கையாக‌ப் பெறுகிறார்  ம‌ரித்த‌ யேசு. சிலுவைப் பாடுக‌ளில் அவ‌ரோடு ப‌ங்கேற்காத‌ ப‌ல‌ர் அவ‌ர‌து அட‌க்க‌த்தில் ப‌ங்கேற்கிறார்க‌ள். இறுகிய‌ ம‌ன‌து இல‌குவாகிற‌து அவ‌ர்க‌ளுக்கு. த‌ன‌க்கென‌ வாழாது பிற‌ர்க்கென‌  வாழ்ந்த‌வ‌ர்க்காக‌ அனைத்தையும் த‌ர‌ முன் வ‌ருகின்ற‌ன‌ர். த‌ங்க‌ளது ப‌ய‌ம் இய‌லாமை அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு துணிச்ச‌லுட‌ன் செய‌ல்ப‌டுகின்ற‌ன‌ர். த‌ங்க‌ளிட‌ம் இருப்ப‌தைப் ப‌கிர்கின்ற‌னர். ம‌ண்ணுல‌கில் செல்வ‌ம் சேர்க்காதீர்க‌ள் பூச்சியும் துருவும் அழித்துவிடும் . விண்ணுல‌கில் செல்வ‌த்தை சேருங்க‌ள் என்ற‌ யேசுவின் வார்த்தைக்கு வ‌டிவ‌ம் கொடுக்கின்ற‌ன‌ர். ந‌ல்ல‌ ம‌ன‌துடைய‌ ந‌ண்ப‌ர்க‌ள் ஒன்று சேருகின்ற‌ன‌ர். இய‌லாமையை முறித்தெரிகின்ற‌ன‌ர்.
ப‌ல‌ நேர‌ங்க‌ளில் பொருட்க‌ளைச் சேர்க்க‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம் ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ளைச் சேர்க்க வேண்டும் என்ப‌தில் இருப்ப‌தில்லை. ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் ந‌ம‌து ப‌ய‌ம் , இய‌லாமையை விடுத்து ந‌ல்ல‌ பாதையை நோக்கி நாம் முன்னோக்கிச் செல்ல‌ ந‌ம‌க்கு உத‌வுகிறார்க‌ள் என்ப‌தை  உண‌ர்வோம். ப‌ர‌ந்த‌ ம‌ன‌துடைய‌வ‌ர்க‌ளாக‌ வாழ‌ செபிப்போம். 
செப‌ம்    :  மானிட‌ ம‌க‌னுக்கு தலைசாய்க்க‌வும் இட‌மில்லை என்று கூறி மாற்றான் க‌ல்ல‌றையில் அட‌ங்கி ஒடுங்கிய‌ யேசுவே!     ந‌ல்ல‌ ம‌ன‌ம் ப‌டைத்த‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ளால் நீர் அட‌க்க‌ம் செய்ய‌ப் ப‌ட்ட‌து  எங்க‌ளது ப‌ர‌ந்த‌ ம‌ன‌தினை நாங்க‌ள் வெளிக்கொணர‌வே என்ப‌தை உண‌ர்கிறோம் . ந‌ண்ப‌ர்க‌ள் தான் ம‌ண்ணுல‌கில் நாங்க‌ள் சேர்க்கும் செல்வ‌ம் என்ப‌தை உண‌ர்ந்து அத‌ன்ப‌டி வாழ‌ வ‌ர‌ம் தாரும் ஆமென் .  .  .  .. .. 

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...