Friday, 23 February 2018

நீயாக மாறுவதே நிரந்தர மாற்றம்.

உருமாற்றம் . இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்ட அத்தனை படைப்புகளும் உருமாற்றம் அடைகின்றன. விதை தளிராகி, செடியாகி, மரமாகிறது. உயிரினம் கருவாக உருவாகி, உயிராக வடிவம் பெறுகிறது. ஓரறிவு உயிரினம் முதல் ஆறறிவு மனிதன் வரை அனைவருக்கும் உருமாற்றம் நிகழ்கிறது. ஆனால்   அந்த உருமாற்றங்கள் எல்லாம்  நம் உடனிருப்போருக்கு எந்தவிதமான தூண்டுதலையும் பாதிப்பையும் தருவதில்லை. ஆனால் இயேசுவின் உருமாற்றம் எவ்வாறு நமக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை வெளிபடுத்தவே இன்றைய  நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்புவிடுக்கிறது. 

அகில உலகத்தையும் படைத்த கடவுளின் மகனான இயேசு  நம்மைப் போல் ஒரு சாதாரண மனிதராகவே வாழ்ந்தார்.  தெய்வ இயல்பு முழுவதும் இருந்தும் மனித இயல்பிலேயே தனது வாழ்க்கையை வாழ்ந்தார். இன்றைய விவிலிய நிகழ்வை ஒரு காட்சியாக அதுவும் அரண்மனை , ராஜாங்க காட்சியாக கற்பனை செய்து பார்ப்போம். 
முற்காலத்தில் இளவரசர்கள் மன்னராக முடி சூடுவதற்கு முன்பு மாறுவேடத்திலோ, அல்லது சாதாரண மனிதர் வேடத்திலோ மக்களுடன் தங்கி அவர்களது இன்னல் இடையூறுகளைக் கண்டறிந்து அதனைத் தீர்க்க முற்படுவர். அப்போது தனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களையே உடன் அழைத்துச் செல்வர். சில சமயங்களில் மக்களில் சிலரையே தங்களது நண்பர்களாக தேர்ந்தெடுத்து உடன் அழைத்துச் செல்வர். இறுதியில் மக்களின் துயர் களைந்து, தங்களின் வேடம் களைவர்.பின் மணிமுடி சூடி மன்னராவர். 
இயேசுவின் உருமாற்றமும் அப்படி ஒரு காட்சியாகத் தான் தோன்றுகிறது.  
மாமன்னர்- இறைவன்.
இளவரசர்- அவர் தம் மகன் இயேசு.
ராஜ மந்திரிகள்- மோயீசன், எலியா.
நண்பர்கள் - சீடர்கள் மூவர். 
மன்னராக இயேசு தனது இறைவல்லமையினுள் நுழைகிறார். மோயீசன் எலியா என்னும் இரு பெரிய வல்லுநர்களோடு தனது பயணத்திட்டத்தைப் பற்றி உரையாடுகிறார். அவரது பேச்சிலும் உடையிலும் ராஜ வனப்பு ( இறை) மிளிர்கிறது. மக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்களான சீடர்களுக்கு இயேசுவின் இறையரசு பற்றியும் வல்லமை பற்றியும் அதிகம் தெரியாத நேரம். திடிரென்று அவரது ராஜ வனப்பையும் மந்திரிகளுடனான அவரது உரையாடலையும் கண்டு வாயடைத்துப் போய் நிற்கின்றனர். இப்படியே இருந்து விடலாமே இவர்! எதற்கு இப்படி காட்டிலும் மேட்டிலும் கால்நடையாக நடந்து துன்பப்பட வேண்டும் என்று எண்ணுகின்றனர். 
நாம் இங்கேயே இருப்பது எத்துணை நலம் என்றும், மூன்று கூடாரங்கள் அமைத்து விடலாம் என்பது வரை அவர்கள் சிந்தனை போகிறது.அப்போதும் கூட அந்த எளியவர்கள் தங்களைப் பற்றி சிறிதும் எண்ணவில்லை
இவரே என் அன்பார்ந்த மகன் இவருக்கு செவிசாயுங்கள் என்ற  அரசனின் குரலுக்கு அடிபணியும் சேவகர்களாய் சீடர்கள். 
வழக்கம் போல் இதை யாருக்கும் சொல்லவேண்டாம் என்று கூறும் இயேசு. (இந்த முறை ஒரு கால வரையறை வைக்கிறார். அதாவது மானிடமகன் இறந்து உயிர்த்தெழும் வரை என்று). 
உயிர்த்தெழுதலா?அப்படி என்றால் என்ன ? என்று தங்களுக்குள் விவாதிக்கத் தொடங்கும் அப்பாவி சீடர்கள் என காட்சி முழுவதும் ஒரு ராஜாங்க நிகழ்வாகத் தோன்றுகிறது. 
எங்கு? மலை ; தனிமையான இடத்தில் தன்னை இறைவன் முன்னிறுத்தி செபிக்கிறார். மலையில் பெரும்பாலும் தூய காற்றும் சுகாதாரமும் கிடைக்கும். தூய்மை இருக்கும் இடத்தில் மகிழ்வும் தெளிவும் இருக்கும். இத்தகைய் மகிழ்வையும் தெளிவையும் தேடி இயேசு செல்கிறார். அதை கண்டடைகிறார். தனது சீடர்களுக்கும் அதை வெளிப்படுத்துகிறார். 
எதற்காக ? தனது நோக்கத்தைக் கூர்மைப்படுத்தவும், தனது இறை வல்லமையைப் பிறருக்கு வெளிப்படுத்தவும், தந்தை தன் மீது வைத்திருக்கும் அன்பை பிறர் அறியச் செய்யவும் உருமாறுகிறார். 
யாருடன்? மோசே , எலியா. மோசே இஸ்ரயேல் மக்களை எகிப்து நாட்டிலிருந்து கானான் நாட்டிற்கு வழிநடத்தியவர். எலியா ஆண்டவரின் வாக்கை சிதறிக்கிடந்த இஸ்ரயேல் மக்களுக்கு சென்று அறிவித்தவர். இரண்டு பேருமே இஸ்ரயேல் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள். கடவுளின் அன்பை வல்லமையை மக்களுக்கு வெளிப்படுத்தியவர்கள். இவர்களோடு இயேசு உரையாடுகிறார். 
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் இங்கு இவருக்கு ஒரு படி மேலே போய் உடையிலேயே தெரிகிறது.ஆடை பளீரென்று வெண்ணிறமாக மாறும் அளவுக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியடைகின்றார் இயேசு.
இன்றைய இயேசுவின் உருமாற்றம் நமக்கு தரும் செய்தி இதுதான்.
 மகிழ்வும் தெளிவையும் உனக்குள் தேடு. 
இறையடியார்களின் துணை நாடு, 
கடவுளின் அன்பு மகனா/ளாக மாறு.
நீ நீயாக மாறு அதுவே நிரந்தரமாற்றம் என்பதை நமக்கு உணர்த்தவே இயேசு உருமாறுகிறார். மனிதரான இயேசு இறை மனிதராக மாறுகிறார். நாமும் மாறுவோம். உடலளவில் அல்ல உள்ளத்தளவில். 
காகிதம் கசக்கி எறியப்படும் போது குப்பையாகிறது
காசாக மாறும்போது, தான் அதன் மதிப்பு உயர்கிறது.
மூங்கில் உடைபடும்போது மரத்துண்டாகிறது,
குழலாக ஊதப்படும்பொழுது அதன் இன்னிசை இனிமை தருகிறது. 
எதுவும் அப்படியே இருந்தால் எந்த பயனுமில்லை. 
உருமாறிய இயேசுவுக்கு தந்தையின் அன்பும் ஆசீரும்கிடைத்தது. நாமும் நம் உருவை மாற்ற முயல்வோம். எதிர்காலப் பயணத்திட்டத்தை இறை உதவியுடன் திட்டமிடுவோம். இறைவாக்கினர்களின் பாதையில் இறையாசீர் பெறுவோம் .உருமாறுவோம் உருமாற்றுவோம் . எல்லாம் வல்ல இறைவனின் ஆசிர் நம்மோடும் நம் குடும்பத்தோடும்  என்றும் இருப்பதாக ஆமென்.   
               

Friday, 16 February 2018

ஏதேன் வனமா? பாலை வனமா?

          ஏதேன் வனமா? பாலை வனமா?

தவக்காலத்தின் முதல் வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கின்றோம். முன்னர் எல்லாம் தவக்காலம் என்றாலே தெளிவாகத் தெரிந்துவிடும் . 40 நாட்களும் அசைவம் கிடையாது. சுபகாரியங்கள் அதாவது திருமணம் , ஞானஸ்நானம். புதுநன்மை போன்ற திருவருட்சாதனக் கொண்டாட்டங்கள் கிடையாது. பெண்கள், சிறுமியர் முதல் பெரியவர் வரை பூ, பொட்டு வைக்க மாட்டார்கள்.இப்படி  வெளிப்படையான  அடையாளங்கள் பல இருக்கும். ஆனால் இப்போது அப்படி எல்லாம் இல்லை. காலத்திற்கேற்றார்போல ஒழுங்குமுறைகளையும் சட்டதிட்டங்களையும் நமக்கேற்றார்போல இலகுவாக்கியிருக்கின்றோம். வருடம் தோறும் வரும் தவக்காலம் தானே என்று எளிதாக எண்ணத் தொடங்கியிருக்கிறோம். அப்படி எண்ணினால் அது முற்றிலும் தவறு. கிறிஸ்தவர்களாகிய நமது வாழ்வில் இந்த தவக்காலம் மிகவும் முக்கியமான காலம். ஓடிக்கொண்டே இருக்கும் நமது இயல்பு வாழ்க்கையில் நின்று நிதானித்து, நமது பாதையையும் பயணத்தையும் சரிசெய்ய திருச்சபையால் கொடுக்கப்பட்ட பொக்கிஷமான நாட்கள் இவை. இந்த தவக்காலத்தில் இயேசு நமக்குக் கூறுவது என்ன?
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு திருமுழுக்கு பற்றிக்கூறும்போது, " திருமுழுக்கு உடலின் அழுக்கை போக்கும் செயல் அல்ல , குற்றமற்ற மனச்சான்றுடன் கடவுளுக்கு தரும் வாக்குறுதி" என்கிறார். நமது திருமுழுக்கின் போது நாமும் கடவுளுக்கு இந்த வாக்குறுதியை அளித்திருக்கிறோம். நமக்கு பதிலாக நம் சார்பாக நமது பெற்றோரும் ஞானப்பெற்றோரும் இந்த வாக்குறுதியை அளித்திருக்கின்றனர். அதன்பின் தான் தொடங்குகிறது நமது நம்பிக்கை வாழ்வு கிறிஸ்தவ வாழ்வு. இது இன்று நேற்று தொடங்கியதல்ல, அன்று ஏதேன் தோட்டத்தில்  இறைவன் முதல்பெற்றோர்களை உண்டாக்கி ஆதாம் ஏவாள் எனப் பெயரிட்டு நம்பிக்கை வாழ்வுக்கு அழைத்ததிலிருந்து தொடங்குகிறது. அவர்களும் கடவுளுக்கு வாக்குறுதிக் கொடுத்து ஏதேன் தோட்டத்தில் தங்களது வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். இயேசுவும் திருமுழுக்குப் பெறுகிறார் . ஆனால் தூய ஆவியால் பாலை நிலத்துக்கு அனுப்பிவைக்கப்படுகிறார். நாமும் திருமுழுக்குப் பெற்றோம் . நாம் அனுப்பப்பட்டது ஏதேன் வனமா? பாலை வனமா?  சிந்திக்க இநேரத்தில்  நாம் அழைக்கப்படுகிறோம்.
ஏதேன் தோட்டம் : உணவு , உறையுள் [பாதுகாப்பு], உவகை . இது மூன்றும் தங்கு தடையின்றி கிடைக்கும் ஒரிடம்.
    உணவு அனைத்துவிதமான காய்களும் கனிகளும் நிறைந்த தோட்டம்.
    தூய ஆவியாரின் உடனிருப்பு ஓர் பலமான பாதுகாப்பு.
    வானதூதர்களோடு, இயற்கைப் படைப்புக்களோடு உரையாடி உலாவுகையில்   
    உண்டாகும் இன்பம் மகிழ்ச்சி.
இப்படி இவை மூன்றும் நிறைவாகக் கிடைக்கப்பெற்றும் அவர்களிடம் நிறைவு இல்லை. நிறைவு இல்லாததால் உவகை இல்லை. உவகை இல்லாததால் பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள். இறுதியில்  உணவிருந்தும் உண்ண முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள்.
இந்த உணவு உறையுள் உவகை இந்த மூன்றின் அடைப்படையிலேயே இயேசுவுக்கு பாலைவனத்தில் மூன்று சோதனைகளும் ஏற்பட்டன.
1. நீர் இறைமகன் என்றால்  கற்களை அப்பங்களாக்கி உண்.
2. கீழே குதி. தூதர்கள் உம்மை பாதுகாப்பர்.
3. தெண்டனிட்டு வணங்கு அரசுரிமையை  உமக்கு அளிக்கிறேன்.
இயேசு சாத்தானின் இந்த சோதனைகளை முறியடித்ததால் வெற்றி கொண்டார். அதனால் அவருக்கு சாத்தானின் [ஏவலின்] சோதனை ஆட்டம் கூட ஏதேன் தோட்டமாக தோன்றி மகிழ்ச்சியளிக்கிறது. மனிதன் அப்பத்தினால் மட்டுமன்றி கடவுளின் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர் வாழ்கிறான் என்ற வார்த்தையை வாழ்விலே வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். பாலைநிலமானாலும் தூய ஆவியின் துணையோடு கடவுளைப் புகழ்ந்து ஆன்ம பலத்தோடு உடல்பலமும் பெறுகிறார்.
தூய ஆவியாரின் துணை, வானதூதர்களின் பணிவிடை, உடனிருப்பு இதைவிட மேலான ஒரு பாதுகாப்பு வேறெங்கும் இல்லை என்பதை ஆழமாக உணர்கிறார். கண்ணுக்குப் புலனாகின்ற வெளிப்படையான அனைத்தும் தாராளமாகக் கிடைத்த ஏதேன் தோட்டம், ஆதாம் ஏவாளுக்கு ருசிக்கவில்லை, நிலைக்கவில்லை. ஆனால் பாலை நிலத்தில் கண்ணுக்குப்புலப்படாமல்  இருந்த இவை அனைத்தையும் இயேசு அகத்தால் உணர்கிறார். அதனால் பாலவனம் ஏதேன் வனமாகக் காட்சியளிக்கிறது.
மேலும் நற்செய்தியில் இயேசு காட்டு விலங்குகளோடு இருந்தார் என்று சொல்லப்படுகிறது. ஏதேன் தோட்டத்திலும் இத்தகைய காட்டு விலங்குகள் இருந்திருக்கும் ஆனால் அவை ஆதிப் பெற்றோர்களுக்கு தீங்கு விளைவிக்கவில்லை மாறாக நல்லதொரு உடனிருப்பை அளித்திருக்கும். அவர்களுக்கே இப்படி என்றால் 'இறைமைந்தன் இயேசு' ,அவரை தெண்டனிட்டு அல்லவா வணங்கியிருக்கும்!.
வறட்சியான பலை நிலத்தில் இருந்தாலும் இயேசு நிறைவுடன் இருக்கின்றார். மாயை போல் தோற்றமளிக்கும் கானல் நீர் போல் அல்லாது வற்றாத நீர் சுரக்கும் ஊற்று நீராக மாற எண்ணுகிறார். அதற்கேற்ப இந்த 40 நாட்களையும் அவர் மாற்றுகிறார்.
இன்று இயேசு நமக்கு முன் வைக்கும் சவால் இது தான். ஏதேன் வனமோ பாலை வனமோ அது கண்களால் பார்க்கும் வெளிப்புறத்தோற்றத்தில் இல்லை நமது அகத்தோற்றத்தில் / பார்வையில் உள்ளது. நமது நல்லெண்ணங்களினால் குறைவிலும் நிறைவைக் காண முற்படுவோம். இந்த 40 நாட்களும் இயேசுவுக்கு எவ்வாறு இறையனுபவம் பெறக்கூடிய காலமாக இருந்ததோ அதுபோல நமக்கும் இத்தவக்காலம் இறையருளின் காலமாக அமைய அருள் வேண்டுவோம்.பாலைவன அனுபவம் பெற்ற இயேசு அப்படியே இருந்துவிடவில்லை. மாறாக உடனே தனது நற்செய்திப் பணியைத் தொடங்குகிறார். நாமும் பெற்ற இறையனுபவத்தை பிறரோடு பகிர்ந்து கொள்ளத் தொடங்குவோம். " காலம் நிறைவேறிவிட்டது. கடவுளின் அரசு நெருங்கி வந்துவிட்டது. மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள் என்ற இயேசுவின் வார்த்தைக்கிணங்க பழைய காலம் மறைந்துவிட்டது.
இறையாட்சி என்னும் நிகழ்காலம் வந்துவிட்டது.
மனம்மாறி எதிர்வரும் காலத்தில் நல்ல செய்திகளை [நன்மைகளை] நம்புங்கள் .
பாலை வனமோ ஏதேன் வனமோ எல்லாம் நமது நம்பிக்கையின் அடிப்படையிலேயே என்பதை உணர்ந்து வாழ்வோம். குறைவிலும் நிறைவைக் காணும் இறைவன் நம் வாழ்விலுள்ள குறைகளைக் களைந்து நிறைவினால் நம்மையும் நம் குடும்பத்திலுள்ள அனைவரையும்  நிரப்புவாராக ஆமென்.. 
         

          

Sunday, 11 February 2018

நன்மையைத் தேடி நாடி ஓடு

நன்மையைத் தேடி நாடி ஓடு

நல்ல எண்ணங்கள் நன்மையைத் தரும் இது என்னுடைய வாழ்வில் நான் மிகவும் நம்புகின்ற ஒரு வார்த்தை. எனக்கு அறிமுகமான எல்லோரிடத்திலும் ஒரு பத்து முறையாவது சொல்லியிருப்பேன்.
நன்மையானது எது? எவனொருவனுக்கு ஒன்று அவன் தேவையைப் பூர்த்தி செய்கின்றதோ, அவன் பிரச்சனைக்குத் தீர்வாக அமைகிறதோ? இன்பம் தருகிறதோ? அது நன்மை. அப்படிப் பார்த்தால் எல்லோருக்கும் நன்மை எளிதில் கிடைப்பதில்லை. அதைத் தேடி , நாடி ஓடி அடைய வேண்டியதாயிருக்கிறது. ஏனெனில் எளிதில் கிடைக்கும் எந்தப் பொருளும் இன்பம் தருவதில்லை. மாறாக கஷ்டப்பட்டு , உழைத்துப் பெறும் பொருள் தான் மன நிம்மதியும் நிறைவும் தருகின்றது. இன்று நாம் கொண்டாடி மகிழும் தூய லூர்து அன்னையின் திருவிழா கூட பெர்னதெத் என்ற சிறுமியின் கடின முயற்சியின் பலன் தான் . அன்னை மரியாள் இவருக்கு 18 முறை காட்சியளித்திருக்கிறார். நன்மையைத் தேடி நாடி ஓடியதால் அவர் பெற்ற பரிசு இது. அவர் மட்டும் அன்னை மரியாள் காட்சியின் போது ஏதோ ஒர் வெளிச்சம் தானே, சப்தம் தானே என்று அலட்சியப்படுத்தி இருந்தால், இன்று இந்த திருவிழா கொண்டாடி இருக்க முடியுமா?. முடியாது. சிறுமி பெர்னதெத் சொன்னவுடன் யாரும் நம்பவில்லை. அவரை முட்டாள், கனவு காண்பவள், புத்தி பேதலித்தவள் என்று என்னவெல்லாம் சொல்லி இருப்பார்கள். ஆனால் எதற்கும் காது கொடுக்காமல் நன்மையின் சக்தியை நாடறியச் செய்வதிலேயே கவனமாய் இருந்திருக்கிறார். எங்கோ ஏதோ ஒரு நாட்டில், ஓர் குகையில் அன்னை மரியாள் காட்சியளித்த தினத்தை இன்று உலகம் முழுவதும் கொண்டாடக் காரணம் , நன்மையை மட்டுமே பரப்பும் நல்லவர்கள் சிலர்  நாட்டில் இருப்பதால்தான். 
இன்றைய நற்செய்தியிலும் இத்தகைய நன்மையின் பண்பு மிளிர்கிறது.  தொழுநோயாளர் இயேசுவால் குணம் பெறுகிறார். இது புதிதல்ல. ஏனெனில் பலரும் குணம் பெற்றனர் இயேசுவால். ஆனால் தொழுநோயாளர் நன்மையைத் தேடி வந்ததால் நலம் பெறுகின்றார். இந்த நற்செய்தியை தியானிக்கும் போது மூன்று விதமான நல் எண்ண மனிதர்கள் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.
1. நம்பி வந்து நலம் பெற்றவர்.
2. கட்டளைகளை கடைபிடிக்கஸ் சொன்னவர்.
3. நன்மையைத்தேடிக் கண்டடைந்த மக்கள்.
நம்பி வந்து நலம் பெற்ற மக்கள்.
      தொழுநோயாளர்கள் தனிமையில் இருக்க வேண்டும்; யாருடனும் பேசக் கூடாது; பழகக் கூடாது; உண்ணக் கூடாது ; உறங்கக் கூடாது; ஊருக்கு வெளியே தான் இருக்க வேண்டும் என்று பலவிதமான வரைமுறைகள் அவர்கள் வாழ்க்கைக்கு மட்டும். இது தான் உனது வாழ்க்கை முறை இப்படி தான் நீ வாழ வேண்டும் என்று சட்டதிட்டங்கள் இயற்றி அவர்களை அதன்படி இயக்குவித்தது சமூகம். அதையும் சரி என்று சம்மதித்து வாழ பழகி ஒத்துக் கொண்டவர்கள் மத்தியில் இந்த தொழுநோயாளர் சற்று வித்தியாசப்படுகிறார். எனது வாழ்க்கை இதுவல்ல இப்படியல்ல, என்று எண்ணுகிறார். பிரச்சனைக்குத் தீர்வு காண எண்ணுகிறார். சட்டத்தை மீறி ஊருக்குள் வருகிறார். நன்மையின் நாயகனாம் இயேசுவை நாடிச் செல்கிறார். நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் என்று முழந்தாள் படியிட்டு வேண்டுகிறார்.
பொதுவாக முழந்தாள்படியிட்டு இருநிலையினர் வேண்டுவர்.
ஒன்று அரசன் முன் மண்டியிட்டு அவர் கட்டளைக்கு அடிபணியும் சேவகர்.
இரண்டு காதலி முன் மண்டியிட்டு தன் அன்பை வெளிப்படுத்தி ஏற்கச் சொல்லி வேண்டும் காதலன் .
இவ்விரு நிலையிலும் தொழுநோயாளர் இயேசுவை அரசனாகவும் அன்பராகவும் எண்ணி வேண்டுகிறார். நீர்  விரும்பினால் நான் குணமாவேன் என்று வேண்டும் சேவகன்  போலவும் , தன் அன்பை வெளிப்படுத்தி உம்மால் தான் நான் குணமடைய முடியும் என்று வேண்டும் அன்பன் போலவும் செயல்படுகிறார்.அவரது அன்பாலும் பேச்சாலும் கவரப்பட்ட இயேசு குணம் அளிக்கிறார். எப்படி? அன்பு கொண்ட அரசராக, அதிகாரம் கொண்ட அன்பராக. இப்படி குணம் பெற்றும் ஏன் இயேசுவின் வார்த்தைக்கு அடிபணியவில்லை அவர்? மோசே கட்டளைப்படி காணிக்கை செலுத்தும் என்று சொன்னதைச் செய்யவில்லை; யாருக்கும் சொல்ல வேண்டாம் கவனமாக இரும் என்று கூறியதைக் கேட்கவில்லை; ஏன் அவ்வாறு செய்தார்?
தனக்கு நன்மை தராத சட்டங்கள் இருந்தென்ன இலாபம் என எண்ணினாரோ? சட்டங்கள் மனிதர்களுக்காக, மனிதர்கள் சட்டங்களுக்காக அல்ல என்பதை உணர்ந்தாரோ என்னவோ? பெற்ற நன்மையை பலருக்கும் பறைசாற்றிக் கொண்டே வாழ்க்கையை வாழத்தொடங்குகிறார். நம்பினார் நலம் பெற்றார். நமது நம்பிக்கை எப்படி உள்ளது? நம்புகிறோமா? நலம் பெறுகிறோமா? பெற்ற நன்மையைப் பறை சாற்றுகிறோமா? 
கட்டளைகளைக் கடைபிடிக்கச் சொன்னவர்.
     தொழுநோயாளியின் மேல் பரிவு கொண்டு தொட்டு குணம் தருகிறார் இயேசு. ஒரு நோயாளியை சந்திக்க நேர்ந்தால் நோயின் தீவிரம் என்ன? பரவுமா? பரவாதா? தொட்டால் பரவுமா? பேசினால் பரவுமா? என்று கண்ணும் கருத்துமாக பார்த்து பழகும் மனிதர்கள் மத்தியில் இயேசு வித்தியாசப்படுகிறார். நோயின் பாதிப்பினால் அல்ல, அவர் அன்பின் பாதிப்பினால் ஆட்கொள்ளப்படுகிறார். எந்த விதமான பயமும் இன்றி அவரைத் தொட்டு குணம் தருகின்றார். தன்னால் குணம் அடைந்தவர் என்றாலும் தன்னை முன்னிலைப் படுத்தாது கடவுளை முன்னிலைப்படுத்துகிறார்.
சிறு செயல்செய்து சில பல பதாகைகள் வைத்து விளம்பரப்படுத்தும் மனிதர்கள் மத்தியில் தனிமனித புகழ்ச்சி வேண்டாம், இறைபுஅழ்ச்சி ஒன்றே போதும் என்கிறார். தனக்கு புகழாரம் சூட்டத் துடிக்கும் மக்கள் முன்னிருந்து விலகி தனிமையை நாடிச் செல்கிறார்.
நன்மையைத் தேடி கண்டடைந்த மக்கள்;
      இயேசு மறைவான இடம் தேடி தனிமையாக இருந்தாலும் மக்கள் அவரைத் தேடி நாடிச் செல்கின்றனர். இயேசு தொழுநோயாளருக்கு சுகம் தந்தார், ஆனால் அவர் இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியாது என எண்ணி சும்மா இருந்துவிடவில்லை அவர்கள். நன்மையின் சக்தி எங்கே என தேடுகின்றனர். காடு மேடு மலை ஊர் நாடு நகர் என அலைந்து தேடுகின்றனர். இறுதியில் அவரைக் கண்டு பிறரும் காண வழி செய்கின்றனர். இயேசுவே நன்மையின் நாயகன் என நம்பினர். அவரை நாடித் தேடுவதேக் கடமை எனக் கொண்டனர். கண்டபின் பிறருக்கும் அதை வெளிப்படுத்தினர். அவரைக் கண்டடைவோம் என எண்ணினர்; நம்பினர் நன்மையைக் கண்டனர்.
ஆம் இறையேசுவில் பிரியமானவர்களே எளிதில் கிடைக்கும் எதுவும் இன்பம் தருவதில்லை, கஷ்டப்பட்டு உழைத்து கையில் கிடைப்பவையே நமக்கு நிறைவையும் நிம்மதியையும் தரும் என்று நம்புவோம். நம்பியபடி வாழ்வோம். நமது தேவைகளை அரசன் முன் மண்டியிடும் சேவகன் போல எடுத்துரைப்போம். அவர் அன்பைப் பெறத்துடிக்கும் அன்பனாக அருள் வேண்டுவோம். புகழ்ச்சியின் மகுடத்திற்கு தலை வணங்காது இறைபுகழ்ச்சியில் இன்பம் அடைவோம். நன்மையின் ஒளி ,சிறு பொறி தான் என்றாலும் அது எங்கிருந்தாலும் அதைத் தேடிக் கண்டடைவோம்.நல்லதை எண்ணுவோம் நலமுடன் வாழ்வோம். நலன்களின் நாயகன் நம்மையும் நம் குடும்பங்களையும் நன்மையால் நிரப்புவாராக. ஆமென்     
 நன்மையைத் தேடி நாடி ஓடு
நல்ல எண்ணங்கள் நன்மையைத் தரும் இது என்னுடைய வாழ்வில் நான் மிகவும் நம்புகின்ற ஒரு வார்த்தை. எனக்கு அறிமுகமான எல்லோரிடத்திலும் ஒரு பத்து முறையாவது சொல்லியிருப்பேன்.
நன்மையானது எது? எவனொருவனுக்கு ஒன்று அவன் தேவையைப் பூர்த்தி செய்கின்றதோ, அவன் பிரச்சனைக்குத் தீர்வாக அமைகிறதோ? இன்பம் தருகிறதோ? அது நன்மை. அப்படிப் பார்த்தால் எல்லோருக்கும் நன்மை எளிதில் கிடைப்பதில்லை. அதைத் தேடி , நாடி ஓடி அடைய வேண்டியதாயிருக்கிறது. ஏனெனில் எளிதில் கிடைக்கும் எந்தப் பொருளும் இன்பம் தருவதில்லை. மாறாக கஷ்டப்பட்டு , உழைத்துப் பெறும் பொருள் தான் மன நிம்மதியும் நிறைவும் தருகின்றது. இன்று நாம் கொண்டாடி மகிழும் தூய லூர்து அன்னையின் திருவிழா கூட பெர்னதெத் என்ற சிறுமியின் கடின முயற்சியின் பலன் தான் . அன்னை மரியாள் இவருக்கு 18 முறை காட்சியளித்திருக்கிறார். நன்மையைத் தேடி நாடி ஓடியதால் அவர் பெற்ற பரிசு இது. அவர் மட்டும் அன்னை மரியாள் காட்சியின் போது ஏதோ ஒர் வெளிச்சம் தானே, சப்தம் தானே என்று அலட்சியப்படுத்தி இருந்தால், இன்று இந்த திருவிழா கொண்டாடி இருக்க முடியுமா?. முடியாது. சிறுமி பெர்னதெத் சொன்னவுடன் யாரும் நம்பவில்லை. அவரை முட்டாள், கனவு காண்பவள், புத்தி பேதலித்தவள் என்று என்னவெல்லாம் சொல்லி இருப்பார்கள். ஆனால் எதற்கும் காது கொடுக்காமல் நன்மையின் சக்தியை நாடறியச் செய்வதிலேயே கவனமாய் இருந்திருக்கிறார். எங்கோ ஏதோ ஒரு நாட்டில், ஓர் குகையில் அன்னை மரியாள் காட்சியளித்த தினத்தை இன்று உலகம் முழுவதும் கொண்டாடக் காரணம் , நன்மையை மட்டுமே பரப்பும் நல்லவர்கள் சிலர்  நாட்டில் இருப்பதால்தான். 
இன்றைய நற்செய்தியிலும் இத்தகைய நன்மையின் பண்பு மிளிர்கிறது.  தொழுநோயாளர் இயேசுவால் குணம் பெறுகிறார். இது புதிதல்ல. ஏனெனில் பலரும் குணம் பெற்றனர் இயேசுவால். ஆனால் தொழுநோயாளர் நன்மையைத் தேடி வந்ததால் நலம் பெறுகின்றார். இந்த நற்செய்தியை தியானிக்கும் போது மூன்று விதமான நல் எண்ண மனிதர்கள் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.
1. நம்பி வந்து நலம் பெற்றவர்.
2. கட்டளைகளை கடைபிடிக்கஸ் சொன்னவர்.
3. நன்மையைத்தேடிக் கண்டடைந்த மக்கள்.
நம்பி வந்து நலம் பெற்ற மக்கள்.
      தொழுநோயாளர்கள் தனிமையில் இருக்க வேண்டும்; யாருடனும் பேசக் கூடாது; பழகக் கூடாது; உண்ணக் கூடாது ; உறங்கக் கூடாது; ஊருக்கு வெளியே தான் இருக்க வேண்டும் என்று பலவிதமான வரைமுறைகள் அவர்கள் வாழ்க்கைக்கு மட்டும். இது தான் உனது வாழ்க்கை முறை இப்படி தான் நீ வாழ வேண்டும் என்று சட்டதிட்டங்கள் இயற்றி அவர்களை அதன்படி இயக்குவித்தது சமூகம். அதையும் சரி என்று சம்மதித்து வாழ பழகி ஒத்துக் கொண்டவர்கள் மத்தியில் இந்த தொழுநோயாளர் சற்று வித்தியாசப்படுகிறார். எனது வாழ்க்கை இதுவல்ல இப்படியல்ல, என்று எண்ணுகிறார். பிரச்சனைக்குத் தீர்வு காண எண்ணுகிறார். சட்டத்தை மீறி ஊருக்குள் வருகிறார். நன்மையின் நாயகனாம் இயேசுவை நாடிச் செல்கிறார். நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் என்று முழந்தாள் படியிட்டு வேண்டுகிறார்.
பொதுவாக முழந்தாள்படியிட்டு இருநிலையினர் வேண்டுவர்.
ஒன்று அரசன் முன் மண்டியிட்டு அவர் கட்டளைக்கு அடிபணியும் சேவகர்.
இரண்டு காதலி முன் மண்டியிட்டு தன் அன்பை வெளிப்படுத்தி ஏற்கச் சொல்லி வேண்டும் காதலன் .
இவ்விரு நிலையிலும் தொழுநோயாளர் இயேசுவை அரசனாகவும் அன்பராகவும் எண்ணி வேண்டுகிறார். நீர்  விரும்பினால் நான் குணமாவேன் என்று வேண்டும் சேவகன்  போலவும் , தன் அன்பை வெளிப்படுத்தி உம்மால் தான் நான் குணமடைய முடியும் என்று வேண்டும் அன்பன் போலவும் செயல்படுகிறார்.அவரது அன்பாலும் பேச்சாலும் கவரப்பட்ட இயேசு குணம் அளிக்கிறார். எப்படி? அன்பு கொண்ட அரசராக, அதிகாரம் கொண்ட அன்பராக. இப்படி குணம் பெற்றும் ஏன் இயேசுவின் வார்த்தைக்கு அடிபணியவில்லை அவர்? மோசே கட்டளைப்படி காணிக்கை செலுத்தும் என்று சொன்னதைச் செய்யவில்லை; யாருக்கும் சொல்ல வேண்டாம் கவனமாக இரும் என்று கூறியதைக் கேட்கவில்லை; ஏன் அவ்வாறு செய்தார்?
தனக்கு நன்மை தராத சட்டங்கள் இருந்தென்ன இலாபம் என எண்ணினாரோ? சட்டங்கள் மனிதர்களுக்காக, மனிதர்கள் சட்டங்களுக்காக அல்ல என்பதை உணர்ந்தாரோ என்னவோ? பெற்ற நன்மையை பலருக்கும் பறைசாற்றிக் கொண்டே வாழ்க்கையை வாழத்தொடங்குகிறார். நம்பினார் நலம் பெற்றார். நமது நம்பிக்கை எப்படி உள்ளது? நம்புகிறோமா? நலம் பெறுகிறோமா? பெற்ற நன்மையைப் பறை சாற்றுகிறோமா? 
கட்டளைகளைக் கடைபிடிக்கச் சொன்னவர்.
     தொழுநோயாளியின் மேல் பரிவு கொண்டு தொட்டு குணம் தருகிறார் இயேசு. ஒரு நோயாளியை சந்திக்க நேர்ந்தால் நோயின் தீவிரம் என்ன? பரவுமா? பரவாதா? தொட்டால் பரவுமா? பேசினால் பரவுமா? என்று கண்ணும் கருத்துமாக பார்த்து பழகும் மனிதர்கள் மத்தியில் இயேசு வித்தியாசப்படுகிறார். நோயின் பாதிப்பினால் அல்ல, அவர் அன்பின் பாதிப்பினால் ஆட்கொள்ளப்படுகிறார். எந்த விதமான பயமும் இன்றி அவரைத் தொட்டு குணம் தருகின்றார். தன்னால் குணம் அடைந்தவர் என்றாலும் தன்னை முன்னிலைப் படுத்தாது கடவுளை முன்னிலைப்படுத்துகிறார்.
சிறு செயல்செய்து சில பல பதாகைகள் வைத்து விளம்பரப்படுத்தும் மனிதர்கள் மத்தியில் தனிமனித புகழ்ச்சி வேண்டாம், இறைபுஅழ்ச்சி ஒன்றே போதும் என்கிறார். தனக்கு புகழாரம் சூட்டத் துடிக்கும் மக்கள் முன்னிருந்து விலகி தனிமையை நாடிச் செல்கிறார்.
நன்மையைத் தேடி கண்டடைந்த மக்கள்;
      இயேசு மறைவான இடம் தேடி தனிமையாக இருந்தாலும் மக்கள் அவரைத் தேடி நாடிச் செல்கின்றனர். இயேசு தொழுநோயாளருக்கு சுகம் தந்தார், ஆனால் அவர் இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியாது என எண்ணி சும்மா இருந்துவிடவில்லை அவர்கள். நன்மையின் சக்தி எங்கே என தேடுகின்றனர். காடு மேடு மலை ஊர் நாடு நகர் என அலைந்து தேடுகின்றனர். இறுதியில் அவரைக் கண்டு பிறரும் காண வழி செய்கின்றனர். இயேசுவே நன்மையின் நாயகன் என நம்பினர். அவரை நாடித் தேடுவதேக் கடமை எனக் கொண்டனர். கண்டபின் பிறருக்கும் அதை வெளிப்படுத்தினர். அவரைக் கண்டடைவோம் என எண்ணினர்; நம்பினர் நன்மையைக் கண்டனர்.
ஆம் இறையேசுவில் பிரியமானவர்களே எளிதில் கிடைக்கும் எதுவும் இன்பம் தருவதில்லை, கஷ்டப்பட்டு உழைத்து கையில் கிடைப்பவையே நமக்கு நிறைவையும் நிம்மதியையும் தரும் என்று நம்புவோம். நம்பியபடி வாழ்வோம். நமது தேவைகளை அரசன் முன் மண்டியிடும் சேவகன் போல எடுத்துரைப்போம். அவர் அன்பைப் பெறத்துடிக்கும் அன்பனாக அருள் வேண்டுவோம். புகழ்ச்சியின் மகுடத்திற்கு தலை வணங்காது இறைபுகழ்ச்சியில் இன்பம் அடைவோம். நன்மையின் ஒளி ,சிறு பொறி தான் என்றாலும் அது எங்கிருந்தாலும் அதைத் தேடிக் கண்டடைவோம்.நல்லதை எண்ணுவோம் நலமுடன் வாழ்வோம். நலன்களின் நாயகன் நம்மையும் நம் குடும்பங்களையும் நன்மையால் நிரப்புவாராக. ஆமென்     
 

Saturday, 3 February 2018

''மானிட மகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவே''.....








நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்  வாய்நாடி வாய்ப்பச் செயல்படும் ருத்துவராக இன்றைய ற்செய்தியில் ம் ருகிறார் இயேசு. முன்பொரு காலத்திலெல்லாம் வியாதி என்றாலே காய்ச்சல் என்று தான் பேருக்குத் தெரியும். ஆனால் இக்காலத்திலோ காய்ச்சலிலேயே கை. விதவிதமான பெயர்களில் காய்ச்சல் வியாதிகள் ம்மைச் சுற்றி ட்டமிட்டுக் கொண்டும் முறுத்திக் கொண்டும் இருக்கின்ற. இதில் எந்த பெயர் கொண்ட காய்ச்சலினால் சீமோன் பேதுருவின் மாமியார் பாதிக்கப்பட்டிருந்தார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் எனக்கு ஒரு கை காய்ச்சல் தெரியும் . காய்ச்சல் என்றாலே எனக்கு நினைவுக்கு ருவது எங்கள் ஊர் ரொட்டிக்கடை இட்லி காய்ச்சல் தான். எனது சிறுவதில்   ஐம்பது பைசாவுக்கு ஒரு இட்லியும் ஒரு ம்ளர் சாம்பாரும் கிடைக்கும் இடம் அது தான். காய்ச்சல் என்று யார் சொன்னாலும் ருந்தாய் ருவது அந்த இட்லியும் சாம்பாரும் தான் . அதற்காகவே காய்ச்சலில் டுக்க ஆசைப்பட்ட நேரங்கள் இன்றைய ற்செய்தியில் பேதுருவின் மாமியார் காய்ச்சலினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார். இயேசு அவருக்கு குணம் அளிக்கின்றார். குணம் பெற்றதும் அவர் அவர்களுக்குப் ணிவிடை புரிகின்றார். இதில் மூன்று கையான நிலை கொண்ட னிதர்கள் என் தில் நிலைத்து நிற்கின்றர்.
1. றைமுக னிதர்கள்.
2.
றை ணி செய்யும் மாமியார்.
3.
மாற்றிடம் தேடிச்செல்லும் னுமன்.
1. றைமுக னிதர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே ந்த இயேசுவோடு க்கள் ரும் இருந்தர் . அவர்கள் யாக்கோபோடும், யோவானோடும் சீமோன் பேதுருவின் மாமியார் வீட்டுக்குச் செல்கின்றர். அங்கு சென்றவுடன் பேதுருவின் மாமியார் காய்ச்சலால் அவதிப்படுகின்றார் என்று அவருக்குச் சொல்கின்றர். க்கமாக து குடும்பங்களில் இளம் துடையோர் நோய்வாய்ப் டும் போது அவர்களை குணப்படுத்தவேண்டும் என்று குடும்பம் அனைத்தும் முழு மூச்சுடன் செயல்படும் . ஏனென்றால் இளம்வதினர் இன்னும் வாழ வேண்டும் அதனால் சுகம் பெற வேண்டும் என்று நினைப்போம். ஆனால் அதுவே ஒரு தானர் சுகமிழந்தால், அது அவர் து மூப்பு தான் அதற்கு காரணம் , என்று கூறி அவது உடல் நிலை முன்னேற்றம் அடைய அதிக முயற்சிகள் அவ்வவாக யாரும் எடுப்பதில்லை ன்பது அப்பட்டமான உண்மை. ஆனால் இங்கு ற்செய்தியில் அதற்கு மாற்றாக க்கிறது. அந்த றைமுக னிதர்கள் வீட்டிலுள்ள ற்றர்களின் ண்களுக்கு அப்பால் றைக்கப்பட்டிருந்த அந்த தான மூதாட்டியை இயேசுவின் பார்வை முன் கொண்டுவ முயற்சிக்கிறார்கள். இயேசுவின் சீடர்களிலேயே அதிக தானர் பேதுரு, அவரின் மாமியார் நிச்சம் அவரை விட மூத்தராகத் தான் இருந்திருப்பார். அப்படிப்பட்ட அந்த தான பெண்மணியும் வாழ்வு பெற வேண்டும் என நினைக்கின்றனர் இந்த றைமுக னிதர்கள். எந்தவித எதிர்பார்ப்புமின்றி ஒருவரின் வாழ்க்கை ன்றாக அமைய ங்களால் இயன்ற ற்செயல்களை செய்யும் னிதர்கள் இவர்கள். ருத்துவர் நோயற்றவருக்கன்றி நோயுற்றருக்கே தேவை என்ற இயேசுவின் வார்த்தைக்கு வாழ்க்கை ழி டிவம் கொடுத்தர்கள் இவர்கள். ருத்துவரான இயேசுவை நோயுற்றரிடம் சேர்த்த விரைவு உந்திகள், அவ ஊர்திகள் (ஆம்புலன்சு) விரைவாக செயல்ப ,அவத்தில் செயல்ப உருவாக்கப்பட்ட இயந்திர வாகங்கள்  இயல்பாக இயங்க றுக்கும் இந்நிலையில்இயந்திரமென செயல்பட்ட மனிதர்கள். நம்மிலும் பலர், ஏன் நாம் ஒவ்வொருவரும் கூட இயல்பாக செயல்பட பல நேரங்களில் முயல்கிறோம் . ஆனால் இயலாமல், இயந்திரம் போல் யாராவது நம்மை இயக்கினால் தானே இயங்குகிறோம். இயல்பாக செயல்பட்டு இனிமையை சேர்க்க முயல்வோம்.
2. மறை பணி செய்யும் மாமியார்.
இயேசு அந்த பெண்மணியின் அருகில் சென்று அவரதுக் கையைத் தொட்டு அவரைத் தூக்கினார். வயதானவர்கள் அவர்களது இறுதிகாலத்தில் விரும்புவது அருகிருப்பு, அரவணைப்பு, அன்பான செயல்/சொல். இது மூன்று மட்டும் தான். . ஆனால் நாம் தான் இதைக் கொடுக்க மறந்துவிடுகின்றோம். நாம் கொடுக்கின்ற விலையுயர்ந்த மருந்துகளோ, மாட மாளிகை வசந்தங்களோ, வண்ண உடைகளோ, விருந்து உபசரிப்புகளோ, அவர்களுக்கு மகிழ்வளிப்பதில்லை. மாறாக நான் இருக்கிறேன், நாங்கள் இருக்கிறோம் உங்களுக்காக என்று அவர்கள் கரம் பற்றி நீங்கள் தரும் ஒரு அழுத்தம் தான்  அவர்களை மகிழ்விக்கும்
உண்மையான உணர்வுடன் இருக்கும் உங்கள் அரவணைப்பு, தொடுதல் அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். அன்பான ஒரு சொல்/செயல் அவர்கள் வாழ்க்கையை இன்னும் இனிமையாக்கும். ஆம் இவை மூன்றையும் ஒரே நேரத்தில் பெற்ற பேதுருவின் மாமியார் மறுவாழ்வு பெற்றவராக புத்துணர்ச்சியுடன் மீண்டும் எழுந்து நிற்கின்றார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கியது. அதோடு அவரைப் பிடித்திருந்த தனிமை , இயலாமை , பாதுகாப்பின்மையும், அவரை விட்டு நீங்கியது . உடனே அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்குகிறார். வயதில் மூத்தவராக இருந்தாலும் இளம் வயதுடைய இயேசுவுக்கும் அவர்தம் சீடர்களுக்கும் தானாக முன்வந்து பணிசெய்கின்றார். இயேசுவின் சிறு தொடுதலினால் அன்பையும் அரவணைப்பையும் ஆற்றலையும் பெற்றவராக வாழத் தொடங்குகின்றார்.பிறருக்கும் அதைப் பகிர்கின்றார்.   

3. மாற்றிடம் தேடிச் செல்லும் மனுமகன்;
ஓடுகின்ற நீர் செல்வ வளம் கொழிக்கும் ஆறாகும்; தேங்குகிற நீரோ புழு பூச்சிகளோடு நாற்றமெடுக்கும்;
இயேசு வற்றாத வளம் கொழிக்கும் அருவி நீர், மலையில் தோன்றி மடுவில் மோதி மண்ணின் வழியே மனிதர்களின் மனங்களை மகிழ்விக்கும் அற்புத நீர். காய்ச்சலில் கிடந்த மாமியாரை அதாவது யாரும் தீண்டாமல் ஒரு ஓரமாய் இருக்கும் உயிரற்ற , விலை மதிப்பற்ற பொருட்களைத் தான் இங்கே கிடக்கிறது அங்கே கிடக்கிறது என்பர். அப்படி ஒரு பொருள் போல் உயிரற்று மதிப்பற்று இருந்தவரை தொட்டு குணமாக்குகின்றார். குணம் பெற்றதும் பணிவிடைகள் செய்ய துவங்கிய அந்த பெண்மணியைப் பார்க்கின்றார் இயேசு. தன்னைப் பின்பற்றி வந்தவர்களுக்கும் பணிவிடை புரிந்த அந்த பெண்மணியின் செயல் அவருக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிகாலை இனிமையில், இறைவனோடு கலந்து இறை ஆற்றலைப் பெருக்கிக் கொள்கின்றார். தனது நோக்கத்தைக் கூர்மைப் படுத்திக் கொள்கின்றார்
''மானிட மகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவே''..... என்ற வரிகளைக் கூர்ந்து தியானித்தாரோ என்னவோ/? தன்னைத் தேடி வந்த சீடர்கள் '' உம்மை எல்லோரும் தேடிக் கொண்டிருக்கின்றார்கள் என்று சொன்னதும் வாருங்கள் நாம் அடுத்த ஊருக்குப் போவோம். அங்கும் நான் நற்செய்தியைப் பறை சாற்ற வேண்டும் அதற்காகவே நான் வந்திருக்கிறேன் என்று சொல்கிறார். தனது இலக்கை நோக்கியப் பயணத்தில் ஒவ்வொரு நாளும் தனது பாதையை நெறிப்படுத்திக் கொண்டேசெல்கிறார். இம்மியளவும் தனது பாதையில் தடம் மாறாது எங்கும் தேங்கிவிடாது தொடர்ந்து பயணிக்கிறார்
நமது பயணம் இலக்கை நோக்கிய பயணமா உள்ளதா?? 
அன்பு உள்ளங்களே நற்செய்தியில் உள்ள இயேசுவைப் போல அனுதினமும் தனிமையில் இறைவனோடு உரையாடி, நாம் சென்று அடைய வேண்டிய இலக்கைக் கூர்மைப் படுத்துபவர்களாக, மனநிறைவோடு மறைபணி செய்பவர்களாக, எதிர்பார்ப்பின்றி நன்மைகள் செய்யும் மறைமுக மனிதர்களாக வாழ இறைவனின் அருள் வேண்டுவோம். எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரோடும் இருந்து நம்மை வழிநடத்துவதாக ஆமென்.     

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...