இன்னைக்கு என்ன ஸ்பெஷல் வணக்கம் அன்பு உள்ளங்களே ஜூன் 8 உலகப் பெருங்கடல் தினம். நாம வாழ்ற இந்த பூமி பந்து 70 % கடல் நீராலானது. சொல்லப்போனா நிலப்பரப்ப விட நீர்ப்பரப்பு தாங்க அதிகமா இருக்கு. நாம வாழ்றதுக்கு கடல் ஒரு முக்கியமான பங்கு வகிக்குது நு சொன்னா மிகையாகாது. கண்டங்களை ஒன்னா இணைச்சு வாணிபம் செய்யவும், பல நாடுகளுக்கு இடையே போக்குவரத்தும் செய்யவும் கடல் தான் துணையா இருக்குது. கடல் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யுறது மட்டுமில்லாம, ஆக்சிஜன் உயிர் வாயுவை உற்பத்தி செய்யவும், பல மருந்துகளோட மூலப்பொருட்களுக்கு காரணமாவும் இருக்கு. கால நிலை மாற்றத்தை சீரமைக்கவும், குறிப்பா கடல்கரையோரம் வாழும் மீனவர்களோட மிகப்பெரிய வாழ்வாதாரமாவும் கடல் தான் இருக்கு.
இந்த உலகப்பெருங்கடல் தினம் கொண்டாடப்படணும் கிறது முதன் முதல்ல 1992 ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டுச்சு. ஆனா அதுக்கு முன்னாடி 1980 ல அர்ஜெண்டினாவ சேர்ந்த என்ரிக் ஜோர்மில்லா கிறவர் உலகத்துக்கு ஒரு முக்கியமான உண்மையை எடுத்து சொன்னார். அது என்னன்னா, புவி வெப்பமயமாதல் மூலமா மனித குலத்துக்கு ஆபத்து வர்றது எல்லாருக்கும் தெரிஞ்சது. ஆனா கடல் முலமாவும் ஒரு ஆபத்து வரப் போகுதுன்னு சொன்னார். உலகத்தின் தெற்கு பகுதியில் இருக்கக்கூடிய பனிப்பாறைகள் உருக ஆரம்பித்து விட்டன. இதனால் கடலின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது மனித குலத்திற்கு பேராபத்து நு சொன்னார் அவர் சொன்னதை அப்ப யாரும் கேட்கல. அதுக்கு அப்புறம் ஏற்பட்ட கால நிலை மாற்றமும், சுழலும் இந்த உலகத்துல அந்த விழிப்புணர்வைக் கொண்டு வர ஆரம்பிச்சது. அப்புறமா 1992 ஆண்டு பிரேசில் ல உள்ள ரியோ டி செனிரோ ல நடந்த உலக உச்சி மாநாட்டுல கனடா தான் முதன் முதல்ல இந்த தினம் கொண்டாடப்படணும், கடல் வளங்கள் பாதுகக்கப்படணும்னு வலியுறுத்துச்சு. அதுக்கு அப்புறம் அதிகாரபூர்வமற்ற முறையில உலகத்துல பல இடங்கள்ல இந்த தினம் கொண்டாடப்பட்டுச்சு. 2008 ஆம் ஆண்டு தான் ஐக்கிய நாடுகள் அவை இந்த நாளை அதிகாரப் பூர்வமா அறிவிச்சு அங்கீகரிச்சாங்க. அன்னையில இருந்து இன்னைக்கு வர ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 ம்தேதி உலகளாவிய அளவில பெருங்கடல் திட்டம் கிற அமைப்பினால ஒருங்கிணைக்கப்பட்டு இந்த நாள் உலக பெருங்கடல்கள் தினமா கொண்டாடப்பட்டு வருது.
இந்த தினம் கொண்டாடப்படுறதுக்கான நோக்கம்.
நமக்கு ஏராளமான நன்மைகளை செய்யுற கடல்களை பாதுகாக்கவும், கௌரவிக்கவும் இந்த உலக பெருங்கடல் தினம் கொண்டாடப்படுது. நெகிழி நு சொல்லப்படுற பிளாஸ்டிக் நால கடல் தன்னுடைய இயல்பு நிலையை நாளுக்கு நாள் இழந்துகிட்டே வருது. பிளாஸ்டிக் கழிவுகளை கடல்ல கொட்டும் போதும், கழிவு நீர்பாதைகள் கடல சென்றடையும் போது அதுல உள்ள பிளாஸ்டி கழிவுகள் அதிகமாகி நாளடைவில அது சிறிய துணுக்குகளா மாறுது . இந்த துணுக்குகள் கடல்ல வாழ்ற நுண் உயிரினங்கள் சாப்பிட்டு இறக்க நேரிடுது. அது மட்டுமிலாம கடல் உணவு வகைகளை சாப்பிடுற நமக்கும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துது. கடல் மட்டுமில்லங்க இயற்கை எல்லாமே நாம அத எவ்வளவு தான் அசுத்தம் படுத்தினாலும் தன்னைத்தானே தூய்மைப்படுத்திக்கும் . கடல் ல வாழ்ற கடல்பாசி, கிரில்ஸ் இரால்கள் அபவளப்பாறைகள் மீன்கள் எல்லாமே கடல்ல சேர்ற கழிவுகளை சாப்பிட்டு கடலை சுத்தப்படுத்துற வேலையை செய்யும். ஆனா நாம கொட்டுற பிளாஸ்டிக் இந்த உயிரினங்களையே கொன்னுடும். அதிகமான வாழ்நாள் கொண்ட ஆமை போன்ற உயிரினங்கள் இனம் அழியக் காரணமும் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் தான்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருள்ல இந்த தினம் கொண்டாடப்படுது. அந்த வகையில "நிலையான பெருங்கடல் புதுமைப்புனையுன் உறுதியளிப்பு" தான் இந்த ஆண்டு கருப்பொருள் . அதாவது புதுமைகள் புதிய முயற்சிகள் செய்வோம் கடல் வளத்தை பாதுகாப்போம் மேம்படுத்துவோம் நு மனிதர்களாகிய நாம நிலையான பெருங்கடலை உருவாக்குவோம் நு எடுக்கிற ஒரு உறுதியளிப்பு. 2020 ல இருந்து 2030 வரை இந்த கருப்பொருளோட தான் இந்த நாள் கொண்டாடப்படணும்னு ஐக்கிய நாடுகள் அவை வலியுறுத்துறாங்க. கடல் வளங்களை அபிவிருத்து செய்யவும், பெருங்கடல் விஞ்ஞானத்திற்கு முன்னனி வகிக்கவும் முயற்சி எடுக்கிற இந்த கால கட்டத்துல இந்த கருப்பொருள் மிகவும் பொருத்தமானதுன்னும் எல்லாராலயும் ஏற்றுக் கொள்ளப்பட்டுச்சு. இன்னைக்கு வர ஏராளமான ஆக்கப்பூர்வமான முயற்சிகள் செஞ்ச்சு நம்ம கடல் வளத்தை பாதுகாத்துட்டு வர்றோம்.
கடல் தான் இந்த உலகத்தோட குளிர்சாதனப் பெட்டி . வானம் அழகா நீலக்கலர்ல தெரியக் காரணமே இந்த கடல் தான். தன்னோட நீர்ல மூணுல ஒரு பங்கு நீரை மழையா மாத்தி பூமியை குளிர்விக்கிறதும் கடல் தான். இப்படி நம்மை எப்பவும் குளிர்ச்சியா ஆரோக்கியமா வச்சிருக்கிற கடலை நாமும் ஆரோக்கியமா பாத்துக்க வேண்டியது நம்ம கடமை. இந்த நல்ல நாள்ல கடலை நம்பி வாழ்ற மீனவர்களையும், கடலோட வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உதவுற எல்லா அன்பர்களையும் வாழ்த்துவோம். சூரிய உதயத்தையும் மறைவையும் அழகா காட்டி நமக்கு சந்தோசத்தை கொடுக்குற கடல நாம சந்தோசப்படுத்துவோம். கடலைப் பாதுகாப்போம் கடல் வாழ் உயிரினங்களை வலுப்படுத்துவோம். அனைவருக்கும் இனிய உலக பெருங்கடல் தின நல்வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு நல்ல நாள்ல இன்னைக்கு என்ன ஸ்பெஷல் வழியா உங்களை மீண்டும் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.