Tuesday, 7 June 2022

உலகப் பெருங்கடல் தினம்.

இன்னைக்கு என்ன ஸ்பெஷல் வணக்கம் அன்பு உள்ளங்களே ஜூன் 8 உலகப் பெருங்கடல் தினம். நாம வாழ்ற இந்த பூமி பந்து 70 % கடல் நீராலானது. சொல்லப்போனா நிலப்பரப்ப விட நீர்ப்பரப்பு  தாங்க அதிகமா இருக்கு. நாம வாழ்றதுக்கு கடல் ஒரு முக்கியமான பங்கு வகிக்குது நு சொன்னா மிகையாகாது. கண்டங்களை ஒன்னா இணைச்சு வாணிபம் செய்யவும், பல நாடுகளுக்கு இடையே போக்குவரத்தும் செய்யவும்  கடல் தான் துணையா இருக்குது. கடல் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யுறது மட்டுமில்லாம, ஆக்சிஜன் உயிர் வாயுவை உற்பத்தி செய்யவும், பல மருந்துகளோட மூலப்பொருட்களுக்கு காரணமாவும் இருக்கு.  கால நிலை மாற்றத்தை சீரமைக்கவும், குறிப்பா கடல்கரையோரம் வாழும் மீனவர்களோட மிகப்பெரிய வாழ்வாதாரமாவும் கடல் தான் இருக்கு.  

இந்த உலகப்பெருங்கடல் தினம் கொண்டாடப்படணும் கிறது முதன் முதல்ல 1992 ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டுச்சு. ஆனா அதுக்கு முன்னாடி 1980 ல அர்ஜெண்டினாவ சேர்ந்த என்ரிக் ஜோர்மில்லா கிறவர் உலகத்துக்கு ஒரு முக்கியமான உண்மையை எடுத்து சொன்னார். அது என்னன்னா, புவி வெப்பமயமாதல் மூலமா மனித குலத்துக்கு ஆபத்து வர்றது எல்லாருக்கும் தெரிஞ்சது. ஆனா கடல் முலமாவும் ஒரு ஆபத்து வரப் போகுதுன்னு சொன்னார். உலகத்தின் தெற்கு பகுதியில் இருக்கக்கூடிய பனிப்பாறைகள் உருக ஆரம்பித்து விட்டன. இதனால் கடலின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது மனித குலத்திற்கு பேராபத்து நு சொன்னார் அவர் சொன்னதை அப்ப யாரும் கேட்கல. அதுக்கு அப்புறம் ஏற்பட்ட கால நிலை  மாற்றமும், சுழலும் இந்த உலகத்துல அந்த விழிப்புணர்வைக் கொண்டு வர ஆரம்பிச்சது. அப்புறமா 1992 ஆண்டு பிரேசில் ல  உள்ள ரியோ டி செனிரோ ல நடந்த உலக உச்சி மாநாட்டுல கனடா தான் முதன் முதல்ல இந்த தினம் கொண்டாடப்படணும், கடல் வளங்கள் பாதுகக்கப்படணும்னு வலியுறுத்துச்சு. அதுக்கு அப்புறம் அதிகாரபூர்வமற்ற முறையில உலகத்துல பல இடங்கள்ல இந்த தினம் கொண்டாடப்பட்டுச்சு. 2008 ஆம் ஆண்டு தான் ஐக்கிய நாடுகள் அவை இந்த நாளை அதிகாரப் பூர்வமா அறிவிச்சு அங்கீகரிச்சாங்க. அன்னையில இருந்து இன்னைக்கு வர ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 ம்தேதி உலகளாவிய அளவில பெருங்கடல் திட்டம் கிற அமைப்பினால ஒருங்கிணைக்கப்பட்டு இந்த நாள் உலக பெருங்கடல்கள் தினமா கொண்டாடப்பட்டு வருது.  

இந்த தினம் கொண்டாடப்படுறதுக்கான நோக்கம். 

    நமக்கு ஏராளமான நன்மைகளை  செய்யுற கடல்களை பாதுகாக்கவும், கௌரவிக்கவும் இந்த உலக பெருங்கடல் தினம் கொண்டாடப்படுது. நெகிழி நு சொல்லப்படுற பிளாஸ்டிக் நால கடல் தன்னுடைய இயல்பு நிலையை நாளுக்கு நாள் இழந்துகிட்டே வருது. பிளாஸ்டிக் கழிவுகளை கடல்ல கொட்டும் போதும், கழிவு நீர்பாதைகள் கடல சென்றடையும் போது அதுல உள்ள பிளாஸ்டி கழிவுகள் அதிகமாகி நாளடைவில அது சிறிய துணுக்குகளா மாறுது  . இந்த துணுக்குகள் கடல்ல வாழ்ற நுண் உயிரினங்கள் சாப்பிட்டு இறக்க நேரிடுது. அது மட்டுமிலாம கடல் உணவு வகைகளை சாப்பிடுற நமக்கும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துது. கடல் மட்டுமில்லங்க இயற்கை எல்லாமே நாம அத எவ்வளவு தான் அசுத்தம் படுத்தினாலும் தன்னைத்தானே தூய்மைப்படுத்திக்கும் . கடல் ல வாழ்ற கடல்பாசி, கிரில்ஸ் இரால்கள் அபவளப்பாறைகள் மீன்கள் எல்லாமே கடல்ல சேர்ற கழிவுகளை சாப்பிட்டு கடலை சுத்தப்படுத்துற வேலையை செய்யும். ஆனா நாம கொட்டுற பிளாஸ்டிக் இந்த உயிரினங்களையே கொன்னுடும். அதிகமான வாழ்நாள் கொண்ட ஆமை போன்ற உயிரினங்கள் இனம் அழியக் காரணமும் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் தான். 

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருள்ல இந்த தினம் கொண்டாடப்படுது. அந்த வகையில  "நிலையான பெருங்கடல் புதுமைப்புனையுன் உறுதியளிப்பு" தான் இந்த ஆண்டு கருப்பொருள்  . அதாவது புதுமைகள் புதிய முயற்சிகள் செய்வோம் கடல் வளத்தை பாதுகாப்போம் மேம்படுத்துவோம் நு மனிதர்களாகிய நாம  நிலையான பெருங்கடலை உருவாக்குவோம் நு எடுக்கிற ஒரு உறுதியளிப்பு. 2020 ல இருந்து 2030 வரை இந்த கருப்பொருளோட தான் இந்த நாள் கொண்டாடப்படணும்னு ஐக்கிய நாடுகள் அவை வலியுறுத்துறாங்க. கடல் வளங்களை அபிவிருத்து செய்யவும், பெருங்கடல் விஞ்ஞானத்திற்கு முன்னனி வகிக்கவும் முயற்சி எடுக்கிற இந்த கால கட்டத்துல இந்த கருப்பொருள் மிகவும் பொருத்தமானதுன்னும் எல்லாராலயும் ஏற்றுக் கொள்ளப்பட்டுச்சு.   இன்னைக்கு வர ஏராளமான ஆக்கப்பூர்வமான முயற்சிகள் செஞ்ச்சு நம்ம கடல் வளத்தை பாதுகாத்துட்டு வர்றோம். 

கடல் தான் இந்த உலகத்தோட குளிர்சாதனப் பெட்டி . வானம் அழகா நீலக்கலர்ல தெரியக் காரணமே இந்த கடல் தான். தன்னோட நீர்ல மூணுல ஒரு பங்கு நீரை மழையா மாத்தி பூமியை குளிர்விக்கிறதும் கடல் தான். இப்படி நம்மை எப்பவும் குளிர்ச்சியா ஆரோக்கியமா வச்சிருக்கிற கடலை நாமும் ஆரோக்கியமா பாத்துக்க வேண்டியது நம்ம கடமை. இந்த நல்ல நாள்ல கடலை நம்பி வாழ்ற மீனவர்களையும், கடலோட வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உதவுற எல்லா அன்பர்களையும் வாழ்த்துவோம். சூரிய உதயத்தையும் மறைவையும் அழகா காட்டி நமக்கு சந்தோசத்தை கொடுக்குற கடல நாம சந்தோசப்படுத்துவோம். கடலைப் பாதுகாப்போம் கடல் வாழ் உயிரினங்களை வலுப்படுத்துவோம். அனைவருக்கும் இனிய உலக பெருங்கடல் தின நல்வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு நல்ல நாள்ல இன்னைக்கு என்ன ஸ்பெஷல் வழியா உங்களை மீண்டும் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.   

Monday, 6 June 2022

உலக உணவு பாதுகாப்பு தினம்.

 இன்னைக்கு என்ன ஸ்பெஷல் வணக்கம் அன்பு உள்ளங்களே . ஜுன் 6 உலக உணவு பாதுகாப்பு தினம்.  நமக்கு உடம்புல திடிர்னு தலைவலி வயிறு வலி கால்வலினு எது வந்தாலும் மருத்துவரோ அல்லது வீட்டில இருக்கிற அனுபவசாலிங்களோ முதல்ல கேட்குறது நேத்து நைட் என்ன சாப்பிட்ட ந்னு தான். ஏன்னா பாதுகாப்பு இல்லாத சுத்தமில்லாத ஆரோக்கியம் இல்லாத உணவு நால தாங்க எல்லா நோயும் வருது. இந்த விழிப்புணர்வை  மக்களுக்கு கொடுக்கணும்னு தான் இந்த உலக உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுது.     

உலக சுகாதார அமைப்பு மற்றும்  ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு இணைந்து உலக உணவு பாதுகாப்பு தினத்தை கொண்டாட ஆரம்பிச்சாங்க. எல்லா வயசுல உள்ளவங்களையும் குறிப்பா குழந்தைகளை தாக்குற முக்கியமான வியாதிகள் எல்லாமே பாதுகாப்பற்ற உணவினால தான் நடக்குதுனு தெரிஞ்சி அதை தடுக்க நினைச்சாங்க. குறைந்த வருமானம் கொண்ட நாட்டு மக்களையும் அதிகமா பாதிச்சு உலகளாவிய சுமையைக் கொடுக்கிறதும் இந்த உணவு பாதுகாப்பின்மை தான்னு உணர ஆரம்பிச்சு இந்த நாள் 2018ஆம் ஆண்டுல இருந்து கொண்டாடப்பட்டு வருது. 2020 ஆம் ஆண்டுல தான் உலக சுகாதார சபை உணவுப் பாதுகாப்பிற்கான உலகளாவிய முயற்சிகளை எடுத்து அதை வளுப்படுத்துறதுக்கான பல தீவிரமான முயற்சிகளையும் எடுத்தாங்க. 

பாதுகாப்பற்ற உணவால 200 க்கும் அதிகமான நோய் வகைகள் உருவாகுதாம். 10 ல ஒருத்தர் இந்த வியாதியினால பாதிக்கப்படுறாங்க. அந்த வகையில் பார்த்தா ஒரு வருசத்துக்கு 4.2 லட்சம் பேர் இறக்குறதா புள்ளி விவரம் சொல்லுது. 

 பாதுகாப்பான உணவும் அதன் உற்பத்தியும் நுகர்வும் நாட்டோட பொருளாதாரத்திற்கு அதிகமா உதவுறத கண்டறிஞ்சி இந்த நாளை மிகசிறப்பா கொண்டாட ஆரம்பிச்சாங்க. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருள்ல இந்த தினம் கொண்டாடப்படுது. நாளைய ஆரோக்கியத்திற்காக இன்றைய பாதுகாப்பான உணவுங்கிறது தான் இந்த ஆண்டிற்கான கருப்பொருள். 

உணவுப் பாதுகாப்புங்கிறது அரசாங்கம், உற்பத்தியாளர்கள், நுகர்வோர் நு எல்லோருடைய கூட்டுப் பொறுப்பு. நாம சாப்பிடுற சாப்பாட்டோட சுத்தத்தையும் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்துற கடமை வேளாண் பண்ணை அதாவது அதை அறுவடை செய்யுற நபர் ல இருந்து சாப்பாட்டு மேசைக்கு கொண்டு வர்ற நபர் வரை எல்லோருக்கும் பங்கு உண்டு. கொரோனா காலத்துல தனிமனித சுத்தத்துக்கும் பொது சுத்தத்துக்கும் அதிமகாவே முக்கியத்துவம் கொடுத்து வாழ பழகிட்டோம். இருந்தாலும் உலக உணவு பாதுகாப்பு தினமான இன்னைக்கு நாம ஆரோக்கியமா வாழ் சில வழிமுறைகள்.

 சும்மா சமையலறைக்குள்ள நுழைஞ்சாலும் சரி சமைக்க ஆரம்பிச்சாலும் சரி  சுத்தமா கைய கழுவிட்டு செய்ய ஆரம்பிக்கணும். 

சுத்தமான நீர் ஆரோக்கியமான மூலப்பொருட்களால உணவை சமைக்கணும்.

சமைச்ச உணவு சமைக்காத உணவை பிரிச்சு வைக்கணும். குறிப்பா குளிர்சாதனைப் பெட்டிக்குள்ள வைக்கிறப்ப.

இறைச்சி உணவுகள் சமைக்கிறப்ப, அதனோட வாடை போகிற மாதிரி நல்லா வேக வைக்கணும்.    

சத்தான உணவை சாப்பிடுறது. சரியான வெப்பனிலையில உணவுப் பொருட்களை வைக்கிறது. ரொம்ப முக்கியம். 

 அதிகமான  விரைவு உணவுகள், அதிகமா நிறம் ஊட்டப்பட்ட உணவுகள் , பயன்படுத்துன எண்ணையை திரும்ப பயன்படுத்தி செய்யப்படுற உணவுகள் இவை எல்லாம் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை. ரொம்ப முக்கியமானது போதுமான அளவு உணவை சாப்பிடுறது அளவுக்கு அதிகமா சாப்பிட்டாலும் அதுவும் நோய் தான். உணவை வீணாக்கக்கூடாது. இன்னைக்கு நாம வீணாக்குற கொஞ்ச உணவு யாரோ ஒருத்தருடைய ஒரு நாள் உணவா கூட இருக்கலாம். 

உணவு தாராளமா கிடைக்கிறவனுக்கு கடவுள் கோயிலுக்குள்ள இருக்கிறார். ஒரு வேளை உணவுக்கு கஷ்டப்படுறவங்களுக்கு ஒரு வேளை சோறு போடுறவங்க தான் கடவுள் நு சொல்வாங்க. நம்ம வாழ்க்கையில நாமும் கடவுளா மாற நிறைய வாய்ப்பு கிடைச்சிருக்கும் இனியும் கிடைக்கும். கையளவு உணவு தானேன்னு கைவிட்டுடாம கவனமா இருப்போம். இன்னைக்கு நாம சாப்பிடுற ஆரோக்கியமான உணவு நாளைய நமது ஆரோக்கியம் இதை நாம உணர்ந்தா மட்டும் போதாது மத்தவங்களையும் உணர வைக்கணும்.

 உணவை வீணாக்காதிருப்போம். உணவை பகிர்ந்து உயிர் கொடுப்போம். அனைவருக்கும் இனிய உலக உணவு பாதுகாப்பு தின நல்வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு நல்ல நாள்ல இன்னைக்கு என்ன ஸ்பெஷல் மூலமா உங்களை வந்து சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.                   

Saturday, 4 June 2022

உலக சுற்று சூழல் தினம்

 இன்னைக்கு என்ன ஸ்பெஷல் ? வணக்கம் அன்பு உள்ளங்களே ஜுன் 5 உலக சுற்று சூழல் தினம். நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டு வர்ற மக்கள் தொகையாலும் தொழிற்சாலை கழிவுகள் வாகனப்புகையினாலயும் நாம வாழ்ற இந்த பூமி அசுத்தமாகிக் கிட்டே வருது. இப்படியே போச்சுனா மனுசங்க வாழ்றதுக்கு தேவையான எந்த ஒரு இயற்கை சக்தியும் இந்த பூமியில இல்லாமலே போயிடும். அதனால இந்த சுற்று சூழல் மாசுபாட்டை குறித்து மக்களுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுது. நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு நு பஞ்ச பூதங்கள் வடிவத்துல இருக்கிற இந்த இயற்கைய மனுசங்களாகிய நாம பல்வேறு விதத்துல பயன்படுத்திக்கிட்டு வர்றோம். அதை சரியா பயன்படுத்தாம மாசுபாட்டையும் உருவாக்கிக்கிட்டு இருக்கோம். இது மட்டுமில்லாம இயற்கையும் தன்னுடைய ஆதங்கத்தை பல இயற்கை சீற்றங்கள் வழியா காமிச்சிட்டு தான் இருக்கு. அதிக வெப்பம், புயல் நிலநடுக்கம், பனிப்பாறைகள் உருகுதல் காட்டு தீ சுனாமின்னு ஏகப்பட்ட சீற்றங்கள். இப்படிப்பட்ட நிலைமையில நாம வாழ்ற இந்த பூமியோட சுற்று சூழல் நலனை சீர்தூக்கி பார்த்து, பிரச்சனைக்கு தீர்வு காண, சிந்தித்து செயல்பட தான் இந்த உலக சுற்று சூழல் தினம் கொண்டாடப்படுது. 

புவிக்கோளையும் அதோட இயற்கையையும் காப்பாற்ற தேவைப்படும் சுற்று சூழல் செயல்பாட்டை பத்திய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் அவையால 1972 ஆம் ஆண்டு இந்த தினம் கொண்டாட தொடங்கப்பட்டுச்சு. இதுக்கு ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் நு அழைக்கப்படுற யுனெப்  செயல்படுது. உலக மக்கள் எல்லோரும் இந்த தினத்தை ஒவ்வொரு விதமா சிறப்பிக்கிறாங்க. உலக அளவில ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாடு தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு கருப்பொருளொட இந்த நாளைக் கொண்டாடுறாங்க அந்த வகையில 2022 ஆம் ஆண்டு உலக சுற்று சுழல் தினத்துக்கான கருப்பொருளை ஸ்வீடன் நாடு ஒன்லி ஒன் ஈர்த் நு அறிவிச்சிருக்காங்க. ஒரே ஒரு பூமி 

பள்ளி கல்லூரிகள் ல இந்த நாளுக்கான முக்கியத்துவம் அதிகமாவே இருக்கும் இந்த தினத்துக்கான போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் அணிவகுப்புகள் இயக்கங்களுன் நிறைய யசெயல்பாடுகள் மாணவர்களால செய்யப்படுது. மரம் நடுவது மிக சிறப்பான ஒரு செயல்முறையா எல்லாருக்கும் அறிவுறுத்தப்படுது. 


 நம்ம முன்னோர்கள் சுற்று சூழலை ரொம்ப சிறப்பான விதத்துல பாதுகாத்தாங்க. குறிஞ்சி முல்லை மருதல் நெய்தல் பாலை நு ஐந்து வகை நிலங்களா மக்கள் பிரிஞ்சி வாழ்ந்தப்ப மலைய கடல நிலத்தை காத்தை நெருப்பை தெய்வமா வழிபட்டு இருக்காங்க. அதனால அதை பத்திரமா பாதுகாத்து வந்தாங்க. அதனால அவங்க வாழ்ந்த காலத்துல இப்ப உள்ள இந்த வெப்பமயமாதல் ஓஸோன் படல் ஓட்டை எல்லாம் இல்லை. அவங்க எல்லாரும் வாழ்ற நாள்ல சந்தோசமா வாழ்ந்தாங்க. ஆனா நாம எல்லாரும் இந்த பூமி நமக்கு மட்டும் தான் சொந்தம்னு  நினைக்குறோமே தவிர நமக்கு பின்னாடி வர்ற தலைமுறைகளுக்கும் இது சொந்தம் நு  நினைக்கிறது இல்லை. ஒரே ஒரு பூமி தான் இது நமக்கும் நமக்கு பின்னாடி வர்ற தலைமுறைகளுக்கும் நு நினைச்சோம்னா போதும் சுற்றுசூழல் விழிப்புணர்வு தானா ஆரம்பிக்கும். 

உலக சுற்று சூழல் தினம் கொண்டாடப்படுற இந்த நாள்ல சுற்று சூழல் விழிப்புணர்வை அதிகமா மக்கள் கிட்ட ஏற்படுத்தனும். அதுக்கு சில வழிமுறைகள்

ஆக்சிசனை அதிகப்படுத்தி கார்பன் அளவைக் குறைக்க குறைஞ்சது 3 மரக்கண்டுகளாவது ஒருத்தர் தன்னோட வாழ்நாள் ல நடணும். 

தனி நபர் வாகனங்களை அதிகமா பயன்படுத்துறத கொஞ்சம் குறைச்சு பொது வாகனகளான பேருந்து தொடர் வண்டியில பயணிக்கனும். 

காகிதங்களை வீணடிக்க கூடாது. அதிகமா பயனபடுத்தினாலும் அதை மறு சுழற்சிக்கு பயன்படுத்தணும்.

தண்ணீரை சிக்கனமா பயன்படுத்தணும். 

மின்சாரம் மின் உற்பத்தி பொருட்களை பயன்பாட்டை குறைக்கணும். 

நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கணும். 

இறுதியா இயற்கை விவசாயத்தை அதிகப்படுத்தணும்.

சுற்று சுழல் மேல அதிகமா அக்கறை செலுத்தி ஆக்க பூர்வமான செயல்பாடுகள் செய்யுறவங்களை பாராட்டுற விதமா சுற்று சூழலுக்கான இந்தியாவின் உயரிய விருது இந்திராகாந்தி பர்யவரன் புரஸ்கார்

தமிழகத்தின் சுற்றுசூழல் ஆர்வலர் விருது.நு பல விருதுகள் இந்த நாள்ல வழங்கப்படுது. 

சுற்று சூழலை பாதுகாக்க விழிப்புணர்வை நம்ம கிட்ட இருந்து முதல்ல ஆரம்பிப்போம். மாற்றத்தை நாம தொடங்கி வைப்போம். அழகான இந்த பூமியை அழகாவே விட்டு வைப்போம்.  அனைவருக்கும் இனிய சுற்று சூழல் தின நல்வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு நல்ல நாள்ல இன்னைக்கு என்ன ஸ்பெஷல் மூலமா உங்களை மீண்டும் வந்து சந்திக்கிறேன் நன்றி வணக்கம்    

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...