Saturday, 4 June 2022

உலக சுற்று சூழல் தினம்

 இன்னைக்கு என்ன ஸ்பெஷல் ? வணக்கம் அன்பு உள்ளங்களே ஜுன் 5 உலக சுற்று சூழல் தினம். நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டு வர்ற மக்கள் தொகையாலும் தொழிற்சாலை கழிவுகள் வாகனப்புகையினாலயும் நாம வாழ்ற இந்த பூமி அசுத்தமாகிக் கிட்டே வருது. இப்படியே போச்சுனா மனுசங்க வாழ்றதுக்கு தேவையான எந்த ஒரு இயற்கை சக்தியும் இந்த பூமியில இல்லாமலே போயிடும். அதனால இந்த சுற்று சூழல் மாசுபாட்டை குறித்து மக்களுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுது. நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு நு பஞ்ச பூதங்கள் வடிவத்துல இருக்கிற இந்த இயற்கைய மனுசங்களாகிய நாம பல்வேறு விதத்துல பயன்படுத்திக்கிட்டு வர்றோம். அதை சரியா பயன்படுத்தாம மாசுபாட்டையும் உருவாக்கிக்கிட்டு இருக்கோம். இது மட்டுமில்லாம இயற்கையும் தன்னுடைய ஆதங்கத்தை பல இயற்கை சீற்றங்கள் வழியா காமிச்சிட்டு தான் இருக்கு. அதிக வெப்பம், புயல் நிலநடுக்கம், பனிப்பாறைகள் உருகுதல் காட்டு தீ சுனாமின்னு ஏகப்பட்ட சீற்றங்கள். இப்படிப்பட்ட நிலைமையில நாம வாழ்ற இந்த பூமியோட சுற்று சூழல் நலனை சீர்தூக்கி பார்த்து, பிரச்சனைக்கு தீர்வு காண, சிந்தித்து செயல்பட தான் இந்த உலக சுற்று சூழல் தினம் கொண்டாடப்படுது. 

புவிக்கோளையும் அதோட இயற்கையையும் காப்பாற்ற தேவைப்படும் சுற்று சூழல் செயல்பாட்டை பத்திய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் அவையால 1972 ஆம் ஆண்டு இந்த தினம் கொண்டாட தொடங்கப்பட்டுச்சு. இதுக்கு ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் நு அழைக்கப்படுற யுனெப்  செயல்படுது. உலக மக்கள் எல்லோரும் இந்த தினத்தை ஒவ்வொரு விதமா சிறப்பிக்கிறாங்க. உலக அளவில ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாடு தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு கருப்பொருளொட இந்த நாளைக் கொண்டாடுறாங்க அந்த வகையில 2022 ஆம் ஆண்டு உலக சுற்று சுழல் தினத்துக்கான கருப்பொருளை ஸ்வீடன் நாடு ஒன்லி ஒன் ஈர்த் நு அறிவிச்சிருக்காங்க. ஒரே ஒரு பூமி 

பள்ளி கல்லூரிகள் ல இந்த நாளுக்கான முக்கியத்துவம் அதிகமாவே இருக்கும் இந்த தினத்துக்கான போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் அணிவகுப்புகள் இயக்கங்களுன் நிறைய யசெயல்பாடுகள் மாணவர்களால செய்யப்படுது. மரம் நடுவது மிக சிறப்பான ஒரு செயல்முறையா எல்லாருக்கும் அறிவுறுத்தப்படுது. 


 நம்ம முன்னோர்கள் சுற்று சூழலை ரொம்ப சிறப்பான விதத்துல பாதுகாத்தாங்க. குறிஞ்சி முல்லை மருதல் நெய்தல் பாலை நு ஐந்து வகை நிலங்களா மக்கள் பிரிஞ்சி வாழ்ந்தப்ப மலைய கடல நிலத்தை காத்தை நெருப்பை தெய்வமா வழிபட்டு இருக்காங்க. அதனால அதை பத்திரமா பாதுகாத்து வந்தாங்க. அதனால அவங்க வாழ்ந்த காலத்துல இப்ப உள்ள இந்த வெப்பமயமாதல் ஓஸோன் படல் ஓட்டை எல்லாம் இல்லை. அவங்க எல்லாரும் வாழ்ற நாள்ல சந்தோசமா வாழ்ந்தாங்க. ஆனா நாம எல்லாரும் இந்த பூமி நமக்கு மட்டும் தான் சொந்தம்னு  நினைக்குறோமே தவிர நமக்கு பின்னாடி வர்ற தலைமுறைகளுக்கும் இது சொந்தம் நு  நினைக்கிறது இல்லை. ஒரே ஒரு பூமி தான் இது நமக்கும் நமக்கு பின்னாடி வர்ற தலைமுறைகளுக்கும் நு நினைச்சோம்னா போதும் சுற்றுசூழல் விழிப்புணர்வு தானா ஆரம்பிக்கும். 

உலக சுற்று சூழல் தினம் கொண்டாடப்படுற இந்த நாள்ல சுற்று சூழல் விழிப்புணர்வை அதிகமா மக்கள் கிட்ட ஏற்படுத்தனும். அதுக்கு சில வழிமுறைகள்

ஆக்சிசனை அதிகப்படுத்தி கார்பன் அளவைக் குறைக்க குறைஞ்சது 3 மரக்கண்டுகளாவது ஒருத்தர் தன்னோட வாழ்நாள் ல நடணும். 

தனி நபர் வாகனங்களை அதிகமா பயன்படுத்துறத கொஞ்சம் குறைச்சு பொது வாகனகளான பேருந்து தொடர் வண்டியில பயணிக்கனும். 

காகிதங்களை வீணடிக்க கூடாது. அதிகமா பயனபடுத்தினாலும் அதை மறு சுழற்சிக்கு பயன்படுத்தணும்.

தண்ணீரை சிக்கனமா பயன்படுத்தணும். 

மின்சாரம் மின் உற்பத்தி பொருட்களை பயன்பாட்டை குறைக்கணும். 

நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கணும். 

இறுதியா இயற்கை விவசாயத்தை அதிகப்படுத்தணும்.

சுற்று சுழல் மேல அதிகமா அக்கறை செலுத்தி ஆக்க பூர்வமான செயல்பாடுகள் செய்யுறவங்களை பாராட்டுற விதமா சுற்று சூழலுக்கான இந்தியாவின் உயரிய விருது இந்திராகாந்தி பர்யவரன் புரஸ்கார்

தமிழகத்தின் சுற்றுசூழல் ஆர்வலர் விருது.நு பல விருதுகள் இந்த நாள்ல வழங்கப்படுது. 

சுற்று சூழலை பாதுகாக்க விழிப்புணர்வை நம்ம கிட்ட இருந்து முதல்ல ஆரம்பிப்போம். மாற்றத்தை நாம தொடங்கி வைப்போம். அழகான இந்த பூமியை அழகாவே விட்டு வைப்போம்.  அனைவருக்கும் இனிய சுற்று சூழல் தின நல்வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு நல்ல நாள்ல இன்னைக்கு என்ன ஸ்பெஷல் மூலமா உங்களை மீண்டும் வந்து சந்திக்கிறேன் நன்றி வணக்கம்    

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...