Friday, 3 October 2014

காதலிக்கலாமா?.? வேண்டாமா?.?

காதல் ஒரு உண்மை உணர்வு. மிகவும் புனிதமான உணர்வு. ஆனால் கவனமாக கையாள வேண்டிய ஒரு உணர்வு. கடை நிலை மனிதனை கரம் பிடித்து முன்னுக்கும் கொண்டும் வரும். முதல் நிலை மனிதனை கை கழுவி  கடை நிலைக்கும் கொண்டு வரும். கட்டான மனிதனை நிலை குலையச்செய்வதும் அதுதான். ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதும் அதுதான் . கலையான  ஆண் மகன் ஒருவன்  துடிப்பான பேச்சு , மிடுக்கான நடை, எடுப்பான உடை, துணிவான முடிவு, உறுதியான மனம், நேருக்கு நேர் பதில் , அழகான உறவுகள் அன்பான நண்பர்கள், அவர்களுடனான ஆனந்த அரட்டை,என வாழ்வைக் கொண்டாடினான். காதல் என்னும் மாய வலை அவனையும் வீழ்த்தியது. வீழ்த்தப்பட்டான். காணாத ஒன்றைக் கண்ட மகிழ்வில் தலை கீழாய் ஆடினான். உற்றம் ,சுற்றம், நண்பர்களை மறந்தான். எல்லாவற்றையும் இழந்தான். அது சரி ஒன்றை இழந்தால் தானே மற்றொன்றைப்பெற முடியும். எனவே பெற்றதை எண்ணி மகிழ்ந்தான். ஆனால் இவன் நினைத்தது போல் அவள் நினைக்கவில்லையே. காரியம் முடிந்தவுடன் கசக்கி எரியும் காகிதமாய் அல்லவா எண்ணிணாள். பிளிறு போல் நடந்தவனை பித்தாய் அலைய விட்டாள். கணீரென்று பேசுபவன் குரலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாள்.  சாறு எடுத்துவிட்டுப் பிழிந்து போடும் கரும்புச் சக்கையாய் ஆக்கினாள். காதல் தந்த பரிசு இது. தாய் என்னும் பெண்ணால் பிறந்து ஆளானவன் காதலி என்னும் மற்றொரு பெண்ணால் வீழ்த்தப்பட்டான்.
காதலன் பித்து பிடித்தவனானான்.
காதலி சொத்துள்ள மற்றொருவனைத் தேடிப் பிடிப்பவளானாள்.
இது  ஆண்களுக்கு மட்டுமல்ல, இனம் மாற்றிப் படித்தால் இது பெண்களுக்கும் பொருந்தும்.  
காதல் வேண்டாமென்று நான் சொல்லவில்லை,அது தேவை           ஏனெனில்  அது ஒரு உணர்வு.
      காதலோ நட்போ
                                      உங்கள் உறவை வளர்க்கிறதா?       நற்பாதையில் உங்களை அழைத்துச்செல்கிறதா?
அது உங்களுக்குத் தேவை.
ஆரோக்கியமான காதலும் நட்பும் என்றும் நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் ஆரோக்கியமானவர்களாக்கும். பலவீனமான காதலும் நட்பும் மேலும் நம்மை பலவீனமாக்கும்.
காதல் என்ற உணர்வை உணரும்போதே ,அனுபவிக்கும் போதே, விழிப்பாயிருங்கள்  
  உங்கள் செயல்களில் மாற்றம் தெரிகிறதா?
அது உங்களை நல்வழிக்கு இட்டுச் செல்கிறதா?
உங்கள் நேரத்தை பயனுள்ளதாக்குகிறதா?
எப்போது நினைத்துப் பார்த்தாலும் அவர்களுடனான உறவு உண்மை மகிழ்வைத் தருகிறதா? கவலை வேண்டாம் அது ஆரோக்கியமான உணர்வு. ஆனால் , உங்கள் மானம் இழந்து , மரியாதை கெட்டு, எப்படி இருந்தவன் இப்படி மோசமான நிலைக்கு வந்துவிட்டானே என்று மற்றவர் சொல்லும் நிலைக்கு நீங்கள் ஆளானால் அதனை தூக்கி எரியவும் தயங்காதீர்கள்.
    நமது அன்பு தூய்மையானது.  அதனை தூய்மையான பாத்திரத்தால் இட்டு நிரப்புவோம். அசிங்கமான பாத்திரத்தால் நமது அன்பும் அசிங்கமானதாக மாறிவிட வேண்டாம்.
''பாத்திரத்தின் திறன் அறிந்து பிச்சையிடு'' என்பதன் அர்த்தம் இதுவே.
உண்மையான நட்புக்கும் ஆழமான அன்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தெரியாதவர்களை தூக்கி எரியவும் தயங்க வேண்டாம்    
இப்ப சொல்லுங்க காதலிக்கலாமா?.? வேண்டாமா?..?

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...