Friday, 31 October 2014

நீங்க யானை மாதிரியா ?? இல்ல பூனை மாதிரியா??

யானைக்கும் அடி சறுக்கும் இது அடிக்கடி நாம் கேட்ட ஒரு பழமொழி . உனக்கா இந்த நிலைமைனு  யாராவது கேட்டா நாம இந்த பழமொழிய சொல்றது வழக்கம் . இன்னைக்கு திடிர்னு ஒரு சிந்தனை . யானைக்கும் அடி சறுக்கும் . யானை கம்பீரமானது யாராலும் அதஅவ்வளவு சீக்கிரம் கீழே தள்ளி விட முடியாது . அப்படியே எதிலாவது அதன் அடி சறுக்கினாலும் உடனே அதனால எழுந்திரிக்க முடியாது. பூனை சும்மா தட்டுனாலே கீழ விழுந்துடும். வேகமா எழுந்திரிச்சுடும்.இத எதுக்கு சொல்றேன்னா . நமக்கு வர்ற பிரச்சனைகளை சமாளிக்கிறப்ப சில நேரம்  நாம யானை மாதிரி ,சில நேரம் பூனை மாதிரி. சட்டுனு எதுலயும் சிக்க மாட்டோம் . சிக்கினோம் ,,,,,,, எழுந்து நிக்க ரொம்ப கஷ்டப்படுவோம் .ஆனா... எழுந்துட்டோம் ..... திரும்ப விழாம கவனமா இருப்போம் . அப்ப நாம யானை பலம் கொண்டவங்க .
அடிக்கடி எதுலயாவது சிக்குவோம் உடனே எழுந்து நின்னுருவோம் .. ஆனா  மறுபடியும் கீழ விழுவோம் அப்ப நாம பூனை பலவீனம் கொண்டவங்க . இதுனால என்ன சொல்ல வர்றேன்னா  கஷ்டம்னு வந்தவுடனே '' யானைக்கும் அடி சறுக்கும் இல்லையானு " சும்மா சொல்ல கூடாது நம்ம பலம்,  யானை மாதிரியா?? இல்ல பூனை மாதிரியானு யோசிச்சு சொல்லனும் சரியா?? இப்ப இருக்கிற நிலைமைல ரெண்டுமே வேணும்னு நீங்க சொல்றது கேட்குது சரி சரி  என் ஓட்டு யானைக்கு தாம்பா.  :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-)     

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...