இன்றைய விவிலிய பகிர்வில் என் மனதைத் தொ ட்ட ஒரு சிறு கருத்தை உங்களோடு இதன் வழி பகிர்கிறேன்
அன்னை மரியாள் தனது மகனை சந்திக்க உற்றார் உறவினரோடு செல்கின்றார். 30 வயது வரை தன்னுடன் வைத்துக் காத்த தனது கண்ணின் கருமணியானவரை சந்திக்கச் செல்கின்றார். சென்ற இடமெல்லாம் நன்மையை மட்டுமே செய்து வந்தவர், புதுமைகளாலும் புத்துணர்ச்சியூட்டும் வார்த்தைகளாலும் ஏராளமான மக்களை தம்பால் ஈர்த்தவர், நல்லவர், போதகர், மீட்பர் என்று பல நற்பெயர்களையும் புகழ்ச்சிகளையும் பெற்றவர். அவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்ற நிலையில் எல்லோராலும் அறியப்பட்டவர். இப்படிப்பட்ட இயேசுவை சந்திக்க செல்கின்றார் மரியாள். அவரைக் கண்டவுடன் அருகில் சென்று அரவணைத்து தன் மகன் என்று பறைசாற்றி பெருமைப் பட வில்லை மாறாக ஓரமாக ஒதுங்கி நின்று ஆள் அனுப்பி அவரை வரச் சொல்கிறார். இயேசு தன்னைத் தேடி வரவேண்டும் என்ற தன் முனைப்பில் அல்ல .அவர் பெற்ற பேரும் புகழும் அவரது நற்பண்புகளால் மனித தெய்வ நிலையால் அவருக்குக் கிடைக்கப்பெற்றன அது தாய் என்ற முறையில் தன்னால் கிடைத்தது என பிறர் எண்ணிவிடக்கூடாது என்பதற்காகவே.புகழ் பெற்ற ஒருவரை உறவினர் என்று சொல்லி பெருமைப்படும் மனிதர்கள் மத்தியில் மரியாள் புகழ் தேடா புண்ணியவதியாகிறார்.
நீ யார் என்று நம்மைப் பார்த்து ஒருவர் கேள்வி எழுப்பினால், என் பெயர் என்று தொடங்கி, இன்னாரின் ஊர், இன்னாரின் உறவினர், இன்னாரின் கீழ் அவர் நிறுவனங்களில் பணி செய்பவர் என்று முடிப்போம். புகழ் பெற்றவர்களின் பின்னால் நம் பெயர் சொருகி நம்மை அடையாளப் படுத்துவோம். புகழையும் பேரையும் தேடி நீ ஓடாதே உனக்கு இடப்பட்ட பணியைச் செய் அவை அனைத்தும் உன்னைத் தேடி வரும் என்பதை வாழ்ந்து காட்டி வலியுறுத்துகிறார் மரியாள். நாம் யார் என்பதை நமது தனித்தன்மை மிக்க செயல்களால் காட்டுவோம் . பிறர் புகழில் நம் நிழல் தேடாது ஒளியாம் இறைவனின் நிறை அருள் பெற்று வளமுடன் வாழ்வோம்.!!!!,,!!!!!,!!!!!!!!!!
Wednesday, 27 April 2016
புகழ் தேடா புண்ணியவதி
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...