துறவியர் ஆண்டு நிறைவு விழா திருப்பலிக்குச் சென்றிருந்தோம் .ரயில் நிலையத்தை தாண்டி நடக்கையிலே ஏராளமான துறவிகளின் கூட்டம் கூடத் தொடங்கியது. கருப்பு வெள்ளை நீலம் என நிறங்களில் தன்னை மறைத்த நிஜக் கிறிஸ்துக்கள்.கிறிஸ்துவுக்காக தன்னை அர்ப்பணித்தவர்கள் இத்தனை பேரா என்று எண்ணுமளவுக்கு இருந்தார்கள் . மிலான் மறைமாவட்டத்தின் ஒரு பகுதி துறவியரே இவர்கள் என்று பின்னரே புரிந்தது. ஆடம்பரத் திருப்பலி , அணிவகுத்த துறவிகள், அர்த்தமுள்ள மறையுரை , அர்ப்பண உணர்வைத் தூண்டும் பாடல்கள் என அனைத்தும் சிறப்பாய் இருந்தன. இவை அனைத்தையும் விட எங்களை அதிகமாய் கவர்ந்தது ஒன்று. 89 வயதுடைய சகோதரி ஒருவர் தள்ளாடி தடுமாறி திருப்பலிக்கு வந்தார். இந்த நிலையில் இப்படி வர வேண்டுமா ? துணைக்கு யாரையாவது அழைத்து வரக்கூடாதா? என்றதற்கு, யாரையும் எதிர்பார்க்கவில்லை,எனவே கிறிஸ்துவை துணைக்கு அழைத்து வந்தேன் . இன்னும் எவ்வளவு காலம் என்னால் இப்படி நடக்க முடியும் என்று தெரியவில்லை. அதனால் இன்றைய நொடிப் பொழுதை பயன்படுத்திக் கொள்கிறேன் என்றார் .இதுதான் இந்த நாளின் சிறப்புச் செய்தியாய் இருந்தது எங்களுக்கு.
" இன்றே வாழ் ; இறைவனின் துணையுடன் வாழ்;