அன்பை பெருக்கி, ஆருயிரைக் காத்து ,
இன்பம் தரும் இறைவனுக்கு உன்னைஅளித்து,
குருத்துவ ஆண்டின் வெள்ளி விழா காணும்
இருதய ராஜாவே! எம் இதயத்தின் ராஜாவே !
அன்பைப் படகாக்கி,
ஊக்கத்தை துடுப்பாக்கி, குருத்துவம் எனும் படகில் இறை கலங்கரை விளக்கம் தேடிச்சென்றவரே!
நீர் சென்றதோடு மட்டுமல்லாமல்
எங்களையும் தேடிச் செல்ல வைத்தவரே!
அழைத்தல் என்னும் விதையை இளமாணவர்கள் மனதில் விதைத்ததோடு மட்டுமல்லாமல் அது செழித்து வளர
நம்பிக்கை உரம் தந்தவரே! ஆளுமை பண்புகள் கொண்டெம்மை செதுக்கி மண்ணில் ஆழமாய் வேரூன்றி நிலைக்கச் செய்தவரே! இளையோர் சக்தியை ஒன்றிணைத்து
ஒப்பற்ற சாதனை புரிந்தவரே! அன்று விதையாய் நீர் உம்மை உடைத்தீர் விருட்சமாய் நாங்கள் விண்ணைத் தொட! பாசம் பொழிகையில் அன்னையாய்
பயிற்சி கொடுக்கையில் தந்தையாய்
பாடம் நடத்துகையில் ஆசானாய்-- கால்
பந்து விளையாடுகையில் நண்பனாய்
குருமடத்து வாழ்க்கையிலே எங்களுக்கு எல்லாமாய் இருந்தவரே !
"எண்ணித் துணிக கருமம்" என்று பல செயல்கள் செய்து ஏற்றம் கண்டவரே!
"சகாப்தங்கள் சாதாரணமானவர்களிடமிருந்து பிறக்கின்றன" என்பதற்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவரே! உமது குருத்துவம் எனும் கிரீடம் வெள்ளி மட்டுமல்லாது பொன், வைரம் எனும் கற்களால் அழகுபடுத்தப்பட உமக்காய் செபிக்கிறோம்.
நீடிய நலத்துடனும்
வற்றாத வளத்துடணும்
நீர் வாழ வாழ்த்தி செபிக்கிறோம்!!!!
Monday, 8 February 2016
வெள்ளி விழா வாழ்த்துக்கவிதை
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...