இன்று காலை ஞாயிறு திருப்பலி முடிந்ததும் அருட்தந்தை எங்களது சபையின் ஏழு புனிதர்கள் திருவிழா கொண்டாடுவது பற்றிக் கூறினார் . மதிய உணவு நேரத்தில் அன்னா மரியா என்னும் அம்மா என்னிடம் உங்கள் சபையின் பெயர் என்ன என்றார் நானும் மரியின் ஊழியர் சபை என்றேன். அதற்கு அவர் நாங்கள் அனைவரும் மரியாக்கள் எனவே தான் வயோதிகர்களாகிய எங்களுக்கு நீங்கள் உதவுகின்றீர்கள் என்றார். நான் உதவி செய்கிறேன் என்ற பெருமை எப்போதும் எனக்கு உண்டு. ஆனால் நான் ஊழியர் என்ற விழிப்புணர்வு இன்று அன்னா மரியா வழியாகக் கிடைத்தது. நல்லது செய்வதை நல்ல மனதோடும் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தேன். காண்போரில் இயேசுவைக் காண வேண்டும் இயேசு வாக மாற வேண்டும் என்பது உண்மை தான். முதலில் நம்மைச் சுற்றி வாழும் மரியாக்களையும் மனிதர்களையும் கண்டறிவோம். அதன்பின் மறுகிறிஸ்துவாக மாறுவோம்