புனித ஆனி மரியா ரிவியர் 1768 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ம்தேதி கிழக்கு பிரெஞ்சு நகரமான மோன்டெபெசட் சொஸ் பௌசன் என்னும் ஊரில் பிறந்தார். குடும்பத்தில் நான்காவது பெண்ணான இவருக்கு பிறந்த சில தினங்களிலேயே அதாவது இவரது முதல் கிறிஸ்து பிறப்பு நாளன்று இவருடைய பாட்டியின் உதவியினால் ஞானஸ்நானம் கொடுக்கப்படுகிறது. மரினெத்தே என்று தன்னுடைய குடும்பத்தாரால் அன்போடு அழைக்கப்பட்ட இவர் 16 மாத குழந்தையாக இருந்த போது படுக்கையில் இருந்து கீழே விழுந்து இடுப்பு எலும்பு முதல் கணுக்கால் எலும்பு வரை உடைந்து நடக்க முடியாமல் 10 வருடம் துன்பத்திற்கு ஆளானார். அந்த துன்பம் அவரை கடவுளோடு மிக அதிகமாக நெருங்க வைத்தது. தன்னுடைய ஐந்து வயதிலிருந்தே கடவுள் மேல் ஆழமான அன்பு கொண்டார் . நடக்க முடியாத இவரை இவரது தாயார் தூக்கி கொண்டு போய் ஒப்புரவு அருட்சாதன சிற்றாலயம் என்று அழைக்கப்படும் சேப்பல் ஆஃப் தி பெனிட்டன்ஸ் என்னும் உள்ளூர் ஆலயத்திற்கு அழைத்து செல்வார். காலை முதல் மாலை வரை செபத்திலும் கண்ணிரோடு கூடிய மன்றாட்டிலும் பியட்டா என்றழைக்கப்படும் வியாகுல மாதாவின் முன் பல மணி நேரங்களை செலவிடுவார். அதன் பின் தன் தாயார் இறந்து போக மிகவும் மன வேதனைக்கு ஆளானார். 1774 ஆம் ஆண்டு ரிக்கெட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டாலும் ஊன்றுகோலின் உதவியால் தன்னால் நடக்க முடியும் என்பதை கண்டு கொண்டாள். வெறும் நான் கு அடி நான் கு அங்குலம் மட்டுமே இருந்த அவரால் இப்படி நடக்க முடிந்ததே பெரும் அதிசயமாக காணப்பட்டது.
1785 ஆம் ஆண்டு பிராடெல்லசில் உள்ள நோட்றே டேம் அருட்சகோதரிகளின் சபையில் சேர விண்ணப்பித்தார். இவரது மோசமான உடல் நிலை கருதி இவர் நிராகரிக்கப்பட்டார். மனம் தளராமல் தன்னுடைய சொந்த ஊரில் ஒரு பள்ளியை நிறுவினார். அதன் பின் ஏற்பட்ட பிரென்சு புரட்சியின் விளைவால் பல மத பள்ளிகள் நிறுவனங்கள் மூடப்பட்டும் சந்தேகககண்களுடனும் பார்க்கப்பட்டன. கிறிஸ்துவின் மீது கொண்ட ஆழமான அன்பாலும் நம்பிக்கையாலும் இவர் தொடர்ந்து உறுதியாக இருந்தார். அருட்தந்தையர்கள் இல்லாத போது தானே வழிபாடுகளை முன்னெடுத்து நடத்து மக்களுக்கு இறைநம்பிக்கையை வளர்த்தார். விவிலியம் தொடர்பான கருத்துக்களையும் விளக்கங்களையும் பொது மக்களுக்கு அறிவித்து வந்தார். புனித பிரான்சிஸ் சேவியர் மற்றும் புனித பிரான்சிஸ் ரெஜிஸ் மட்டில் அளவுகடந்த பக்தி கொண்டிருந்தார். 1794 ஆண்டு ஆனி மேரி ரிவியர் மற்றும் அவரது உடன் நண்பர்களால் நடத்தப்பட்ட பள்ளி பறிமுதல் செய்யப்படவே இவர்கள் துய்ட்ஸ் நகருக்கு குடிபெயர்ந்தனர். அங்கு அருட்தந்தை லுய்கி பொண்டானியர் இவர்களை ஆதரித்தார். 1796 ல் நவம்பர் 21 ஆம் ஆண்டு ஐந்து இளம் பெண்கள் புதிய பள்ளியின் மாடியில் துறவற வார்த்தைப்பாடு கொடுத்தனர். அனாதைப்பிள்ளைகளுக்கு ஆதரவும் கல்வியும் அளிப்பதே இவர்களது நோக்கம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர். வீடுகளுக்கு சென்று மக்களை சந்திப்பது, மறைக்கல்வி எடுப்பது என தங்களது துறவற பணியினை சிறப்பாக செய்தனர். 1797 ஆம் ஆண்டு இவ்வைவர் குழு பன்னிரண்டாக மாறியது. 1801 ஆம் ஆண்டு பிரான்சில் மீண்டும் சுமுகமான சூழல் தோன்றியது அந்நிலையில் இவர்களது சபை வளரத்தொடங்கியது எனவே 1815 ஆம் அண்டு சபையின் தாய் இல்லம் போர்க் செயிண்ட் ஆண்டியோலில் உள்ள பெரிய வளாகத்திற்கு மாற்றப்பட்டது. 1805 ஆண்டு திருத்தந்தையாக இருந்த ஏழாம் பயஸ் அவர்கள் பிரான்சிலிருந்து ரோமைக்கு செல்லும் வழியில் இவர்களது சபையை சந்தித்தார். அப்போது சபைக்கான முறையான ஒப்புதலும் ஆசிரும் பெறப்பட்டது. 1807முதல் முறையாக துறவற சபையாக அங்கிகரிக்கப்பட்டு துறவற ஆடைகளை அணியத் தொடங்கினர்.
டிராப்சிஎன்னும் நோயால் அவதிப்பட்ட இவர்.1838 ல் இறந்தார். இவரது கடுமையான பணியால் 2005 ஆண்டு 1352 சகோதரிகளுடன் கிட்டதட்ட 189 நாடுகளில் இவர்களது சபை பரவி இருந்தது.
இவருக்கான அருளாளர் பட்ட வேலைகள் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் அவர்களின் வழிகாட்டுதல் படி நடக்க ஆரம்பித்தது. பெண் அப்போஸ்தலர் என்றும் ஒருமுறை இவர் அழைக்கப்பட்டார். 1853 ஆம் ஆண்டு மே 12 ம் தேதி கடவுளின் ஊழியர் என்ற பெயரால் அனைவராலும் அழைக்கப்பட்டார். இவரது வீரத்தையும் இறை நம்பிக்கையையும் கண்ட திருத்தந்தை 13ம் சிங்கராயர் இவர் வணக்கத்திற்குரியவர் என்று பெயரிட வழிவகுத்தார். மேலும் இவர் வழியாக நடந்த அற்புதங்கள் உறுதி செய்யப்பட்டதால் 1982 ஆம் ஆண்டு மே 12 ம் தேதி இவருக்கு அருளாளர் பட்டம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் வழங்கப்பட்டது. அதன் பின் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 15 ம் தேதி புனிதர் பட்டம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 3 ம் தேதி இவரது திருநாள் சிறப்பிக்கப்படுகிறது. பிரெஞ்சுகாணிக்கை மாதா சபையினரின் பாதுகாவலியாக இவர் திகழ்கின்றார். புனித ஆனி மேரி ரிவியர் போல நாமும் இடைவிடாத செபத்தாலும் முயற்சியாலும் கடின உழைப்பாலும் தொடர் துன்பத்திலும் இறை நம்பிக்கையில் உறுதியோடு இருந்து இறைவனுக்கு சான்று பகர்வோம். இறை ஊழியர்களாக நம்மை மாற்றி இறைப்பணி செய்திடுவோம்.