இன்னைக்கு என்ன ஸ்பெஷல் வணக்கம் அன்பு உள்ளங்களே மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை . உலக அன்னையர் தினம். ஏன் இந்த நாள் என்ன காரணம்னு இதோட வரலாறு என்னன்னு வாங்க பார்க்கலாம்.
பண்டைய கிரேக்க நாகரீகத்திலிருந்து இன்றைய நாகரீகம் வரை அம்மாவை கொண்டாடாதவங்க யாருமே இல்லை. ஏன்னா அம்மா எல்லோர் வாழ்க்கையிலயும் ரொம்ப முக்கியமானவங்க. அம்மா இல்லன்னா நாம இல்லை. பண்டைய காலத்துல இருந்தே அன்னை வழிபாட்டு முறை எல்லா நாடுகள்ளயும் இருந்துச்சு. சில இடங்கள்ள மதம் சமயம் சார்பாவும் சில இடங்கள்ள அன்னையர்களுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பின் அடிப்படையிலயும் இந்த நாள் கொண்டாடப்பட்டுச்சு. ஒவ்வொரு நாட்டிலயும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமா இந்த தினத்தைக் கொண்டாடுறாங்க. செவி வழிச் செய்தியா இந்த நாள் கொண்டாடப்பட்டதுக்கு ஒரு வரலாற்று கதை இருக்கு. பண்டைய காலத்துல வணங்கப்பட்ட பெண் கடவுளான சைபீல் எல்லா கடவுளுக்கும் முழு முதல் தாய் கடவுளா, பிரிஜியா மக்களால வணங்கப்பட்டது. இந்த விழா தான் அன்னையர்களை மரியாதை செய்ய கொண்டாடப்பட்ட முதல் விழா நு சொல்றாங்க. ஆனா முதன் முதல்ல எல்லோருக்கும் தெரியிற வரலாறா மாறுனது 20 நூற்றாண்டோட தொடக்கத்தில தான். ஜார்விஸ் கிற சமூக சேவகி அமெரிக்கா ல உள்ள மேற்கு வெர்ஜீனியா ல உள்ள கிராப்டன் கிற சின்ன கிராமத்துல வாழ்ந்துட்டு வந்தாங்க. யுத்த காலத்தில போர்ல பலியான அமெரிக்க வீரர்களோட குடும்பம் சிதைஞ்ச்சு சிதறிப் போறத தடுத்து நிறுத்த பல நல்ல செயல்களை செஞ்ச்சு போராடுனாங்க. இப்படி பிரிஞ்ச்சு போற அந்த குடும்பத்தோட நல் வாழ்க்கைக்காகவும், சமாதானத்திற்காகவும் போராடி கடைசியில 1905 ல ஜார்விஸ் இறந்து போயிடுறாங்க. இவங்க மேற்கு வெர்ஜீனியால உள்ள புனித அந்திரேயா கோயில்ல வேலை செஞ்ச்சுட்டு வந்ததால. அவங்க பொண்ணு அன்னா ஜார்விஸ் தன்னோட அம்மா இறந்த தினத்தை முன்னிட்டு அவங்க வேலை செஞ்ச அந்த ஊர்ல உள்ள தாய்மார்களை எல்லாம் அழைச்சு அன்னையர் தினமா 1908 மே மாசம் கொண்டாட ஆரம்பிச்சாங்க. அப்புறம் இது வருசா வருசம் அன்னையர் தினமா அமெரிக்கா முழுசும் கொண்டாடப்படணும் நு அமெரிக்க அரசுக்கு வலியுறுத்துனாங்க. இதன் விளைவா, அமெரிக்காவின் 28 வது அரசரான தாமஸ் வுட்ரோ வில்சன் 1940 ஆண்டு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 9 ம் தேதி அன்னையர் தினமா கொண்டாடப்படணும்னு பிரகடனம் செஞ்சு அதுக்கான கையெழுத்தையும் போட்டார். ஞாயிற்றுக் கிழமைகள்ள இந்த தினத்தைக் கொண்டாடுறது சிறப்பா இருக்கும்னு ஒவ்வொரு ஆண்டும் மே மாசம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமா கொண்டாடுறாங்க. அமெரிக்கா ல அதிகாரப் பூர்வமா உருவான இந்த தினம் இன்னைக்கு உலக மக்கள் பெரும்பாலானவர்களால கிட்டதட்ட 46 நாடுகள்ள கொண்டாடப்படுது.
இந்த நாள்ள தங்களுக்காக அனைத்தையும் தியாகம் செய்யுற அன்னையர்களை சிறப்பான விதத்தில மகிழ்ச்சி படுத்துறத ஒரு முக்கியமான கடமையா பலரும் செய்யுறாங்க.
ஒவ்வொரு நாட்டுலயும் எப்படி கொண்டாடுறாங்கனு தெரிஞ்சிக்கலாம் வாங்க.
வங்க தேசத்துல அன்னையர்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறாங்க. ரத்னகர்வா மா விருது இதுல குறிப்படத்தக்காது.
கனடா ல பொது விடுமுறை தினமா அறிவிக்கப்பட்டு சிறப்பா கொண்டாடப்படுது.
சீனா ல கார்னேசன் மலர்களை கொடுத்து அன்னையர்களை மகிழ்விக்கிறாங்க. சமீபத்துல சீனால மேங்க் ஸீயு தன் தாயோட நினைவா இந்த நாள் சிறப்பா கொண்டாடப்படணும்னு அன்னையர் திருவிழா ஊக்குவிப்புனு ஒரு அரசு சாரா அமைப்பை உருவாக்கி இந்த நாளை சிறப்பா கொண்டாட வைக்கிறார்.
கிரீஸ் ல அன்னை மரியாள் எருசலேம் தேவாலயத்துக்கு இயேசுவை கொண்டு வந்த நாளா நினைவு கூறி கொண்டாடுறாங்க.
இந்தியால தேசிய அளவில ஆகஸ்ட் மாதம் 19 ம் தேதி கொண்டாடப்பட்டாலும் இந்த நாளையும் உலக அளவில அன்னையர் தினமா ஏற்றுக் கொண்டாடுறாங்க.
இது மாதிரி ஈரான் ஜப்பான், மெக்சிகோ நேபாளம் தாய்லாந்து ரோமானியா, பிரிட்டன் அயர்லாந்து, வியட்னாம் நு எல்லா இடங்கள்ளயும் கொண்டாடி மகிழ்ச்சியடையுறாங்க.
நம்ம எல்லோராட வாழ்க்கையிலயும் பெண் ரொம்ப முக்கியமான அம்சம். மகள் அக்கா தங்கை சித்தி அத்தை பெரியம்மா பாட்டி மனைவி மருமகள் மாமியார் நு எத்தனை உறவு முறையில வந்தாலும் அம்மா எப்பவுமே எல்லோருக்குமே ஸ்பெஷல் தாங்க. அந்த உறவை எந்த உறவாலயும் மிஞ்ச முடியாது. ஏன்னா அம்மா தான் உறவுக்கு எல்லாம் முதல் உறவு. அம்மா சொல்லி தான் அப்பாக்ங்கிற உறவே பிள்ளைங்களுக்கு தெரியுது. அதுக்கு அப்புறம் தான் மத்த உறவு எல்லாம்.
அன்னையர் தினம் கொண்டாடுற இந்த நாள்ல உலகத்துல இருக்குற எல்லா அன்னையர்களுக்கும் நம்மோட வாழ்த்துக்களை சொல்வோம். தியாகத்தை தன்னோட உடல் மூழுசும் ஓரவ விட்டு நமக்காக தன்னோட வாழ்க்கைய வாழ்ற எல்லா அம்மாக்களும் சந்தோசமா நிறைவா அமைதியா அன்பா வாழணும்னு அதுக்கு அவங்கள நாம வாழ வைக்கணும். அன்பையும் தியாகத்தையும் அளவில்லாம கொடுக்கிற அத்தனை அன்னையர்களுக்கும் அகில உலக அன்னையர் தின வாழ்த்துக்கள், மீண்டும் ஒரு நல்ல நாள்ல இன்னைக்கு என்ன ஸ்பெசஹ்ல் மூலமா உங்களை சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.