Thursday, 12 May 2022

புனித டைட்டஸ் பிராண்ட்ஸ்மா


புனித டைட்டஸ் பிராண்ட்ஸ்மா ஒரு டச்சு இறையியலாளர், பத்திரிக்கையாளர் எழுத்தாளர். இவர் 1881 ஆம் ஆண்டு ப்ரைஸ்லேண்ட் மாகாணத்தில் ஹார்ட்வெர்டுக்கு அருகிலுள்ள பிரீஸ்லேண்ட் மாநிலத்தை சேர்ந்த  ஒகேக்லோஸ்டரில் பிறந்தார். இவரது இயற்பெயர். அன்னா ஸ்ஜொர்டு பிராண்ட்ஸ்மா. தந்தை டைட்டஸ் பிராண்ட்ஸ்மா, தாயார் ட்ஜிட்ஜே போஸ்ட்மா.    இவர்களது குடும்பம் ஒரு சிறிய பால் பண்ணை நடத்தி வந்தது. மூன்று பெண்கள் மற்றும் இரண்டு மகன்களைக் கொண்ட ஒரு அழகான கிறிஸ்தவ குடும்பம் இவருடையது. ஒரு பெண்ணை தவிர குடும்பத்தில் உள்ள அனைத்துப் பிள்ளைகளும் துறவற கட்டுப்பாட்டுக்குள் தங்களை உட்புகுத்தி கொண்டனர்.




பிராண்ட்ஸ்மா தன்னுடைய உயர் நிலைப் பள்ளியை மெகனில் உள்ள பிரான்சிஸ்கன் பிரையரி வளாகத்தில் முடித்தார். அதன் பின் தன்னுடைய குருத்துவ பயிற்சியை மேகனில் உள்ள பிரான்சிகன் சின்ன குருமடத்தில் பெற்றார். 1898 ஆம் ஆண்டு பாக்ஸ்மீரில் உள்ள கார்மலெட் பிரையரில் நவ துறவியாக நுழைந்தார். அங்கு தான் தன்னுடைய தந்தையின் பெயரை தனது பெயராக மாற்றிக் கொண்டு டைட்டஸ் பிராண்ட்ஸ்மா  என்று அழைக்கப்படலானார். 1899ல் முதல் வார்த்தைப்பாடும், 1905 ல் குருப்பட்டமும் 1909 ரோமையில் தத்துவத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். 1909முதல் 1923 வரை நிறைய புத்தகங்கள் இதழ்கள் போன்றவற்றை எழுதி சிறந்த எழுத்தாளராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். புனித அவிலா தெரசம்மாளின் படைப்புக்களை டச்சு மொழியில் மொழிபெயர்ப்பதற்கான திட்டத்தி 1916ல் தொடங்கினார். இன்றைய டைட்டஸ் பிராண்ட்ஸ்மா லிசெய்யும் என்றழைக்கப்படும் மேல் நிலைப்பள்ளியை உருவாக்கி இரண்டு ஆண்டுகள் அதனை நன்முறையில் நடத்திய பெருமை இவரைச்சேரும். 




1921 ல் பெல்ஜிய கலைஞரான ஆல்பெர்ட் சர்வேஸின் சிலுவைப்பாதை நிலையங்கள் அமைப்பது தொடர்பான சர்ச்சைகளில் அவருக்கு உதவியாக இருந்து அதனை தீர்த்துவைத்ததுடன் 14 சிலுவைப்பாதை நிலையங்களிலும் அவரது தியானக் கருத்துகள் இடம்பெறுமாறு வழிவகுத்தார்,.




கத்தோலிக்க திருச்சபை பற்றிய செய்திகள் உலக மக்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று கருதிய மனிதர்களில் இவர் மிகவும் முக்கியமானவர். 1923 ல் தத்துவவியல் பேராசிரியராக, மறைபொருள் பற்றிய வரலாற்று பேராசிரியராக நிக்மேகனின் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். அதன்பின் மக்னிஃபிகஸ் ல் ரெக்டராக இரண்டு வருடங்கள் பணியாற்றினார். பேராசிரியராக அறிவார்ந்த பணி செய்வதோடு தன்னுடைய வாழ்வு முடிந்துவிடக் கூடாது அனைவரும் அறியும்படி தனக்கு தெரிந்த அத்தனை கருத்துக்களையும் வெளிப்படுத்தும் பணியினை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். எனவே பத்திரிக்கையாளராக தன்னை பிறருக்கு வெளிப்படுத்த ஆரம்பித்தார். 1935 ல் கத்தொலிக்க பத்திரிக்கையாளர்களுக்கு திருச்சபை ஆலோசகராக இருந்தார். அமெரிக்க கனடா போன்ற நாடுகளுக்கு சென்று தன்னுடைய சபை பற்றி எடுத்துரைக்கும் ஒரு விரிவுரை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்படி ஒரு முறை சென்ற போது நயாகரா வீழ்ச்சி பற்றி கூறும் போது, இந்த உலக புகழ்பெற்ற நீர் வீழ்ச்சியில் நான் தண்ணீரின் தன்மை , அதன் அளவிட முடியாத ஆற்றலை மட்டும் பார்க்கவில்லை கடவுளின் அளப்பரிய ஆற்றலையும் அவரது கைகளின் வல்லமையான செயல்பாடுகளையும் அவரது அன்பின் வெளிப்படுகளையும் பார்க்கிறேன், என்றார். 1940 ஆண்டு மூன்றாம் ரைச் நெதர்லாந்தின் மீது படையெடுத்த போது, நாஜி சித்தாந்தத்துக்கு எதிராகவும், கல்வி மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்துக்கு எதிராகவும் போராடினார். ஜெர்மனியின் நாஜிக்கள் இயற்றிய யூத எதிர்ப்பு சட்டங்களை வலுக்கட்டாயமாக எதிர்த்து பேசியதால் 1942 ஜனவரியில் ஜெர்மனி நெதர்லாந்தை ஆக்கிரமித்த போது இவர் கைது செய்யப்பட்டார். கத்தோலிக்க செய்திதாள்கள் நாஜி பிரச்சாரத்தை வெளியிட்டால் இவர் தன்னுடைய மடாலயத்தில் அமைதியாக வாழ அனுமதிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இவர் இதனை மறுத்துவிட்டார். அதனால் இவரை டச்சாவ் வதை முகாமில் வைத்து துன்புறுத்தினர். பல்வேறு துன்பங்கள் கஷ்டங்கள் சோதனைகள் பட்டினிகளுக்கு ஆளானார். அதே ஆண்டு ஜீலை மாதம் உடலில் கார்போலிக் அமிலம் செலுத்தப்பட்டு உயிரிழந்தார். இவர் இறக்கும் போது இவருக்கு வயது 61. 




பிராண்ட்ஸ்மா கத்தோலிக்க திருச்சபையில் தியாகி போல் கருதப்படுகினறார். 1985 ஆண்டு நவம்பர் மாதம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் அருளாளர் பட்டம் பெற்றார். ஜீலை மாதம் 27 ம நாள் இவரது திருநாள் கார்மலேட் சபையினரால் பக்தியான முறையில் கொண்டாடப்படுகிறது. அதன்பின் 2021 ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் இவர் வழியாக நிகழ்ந்த அற்புதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு இறைவிசுவாசத்தின் நிமித்த கொல்லப்பட்ட புனிதர் என்னும் அடிப்படையில் இவருக்கு 2022  மே மாதம் 15 ம் தேதி புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இவரது பெயர் கொண்ட திருத்தலங்கள் நெதர்லாந்திலும் நிக்மேகனிலும் உள்ளன. இவர் கத்தோலிக்க இயதழியலில் பாதுகாவலராக திகழ்கின்றார். புகைப்பழக்கத்திற்கு அடிமையாக  இருப்பவர்கள் மற்றும் நெதர்லாந்து நாட்டு மக்களின் பாதுகாவலாரகவும் திகழ்கின்றார். புனிதர் டைட்டஸ் பிராண்ட்ஸ்மாவை போல துணிவுடனும் கத்தோலிக்க திருச்சபையின் மேல் அளவற்ற அன்பும் கொண்டவர்களாக வாழ முற்படுவோம்.

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...