Saturday, 7 November 2015

த‌மிழ் ம‌ர‌பு ‌

வ‌ந்தாரை வ‌ர‌வேற்கும் த‌மிழ‌ர் ம‌ர‌பை
மாற்ற‌ நினையாத‌ மாந்த‌ர் இல்ல‌த்துக்கு
வ‌ர‌ முனைந்த‌து ஒரு உள்ள‌ம்.
ம‌ன‌ம்கோணாது ச‌மைத்து
உள்ள‌த்தையும் குளிர்விக்க‌ எண்ணிய‌து இல்ல‌ம்.
உயிர்வ‌தை விரும்பாத‌ உள்ள‌த்துக்காக‌
தாவ‌ர‌ உயிர் பெற‌ப்ப‌ட்டு விருந்து த‌யாரான‌து.
முந்தின‌ நாள் ம‌றுநாள் காலை ஆன‌து.
ம‌றுநாள் காலை முற்ப‌க‌ல் ஆன‌து .
முற்ப‌க‌லில் வ‌ருகை ர‌த்து ஆன‌து
உடைந்த‌து உள்ள‌த்தோடு சேர்ந்து இல்ல‌மும். 
கோப‌ம் யார் மேல் கொள்வ‌து.
வ‌ராத‌ வ‌ண்டியையா? வ‌ர‌ விரும்பாத‌ உள்ள‌த்தையா? ச‌மைத்த‌து , பேசிம‌கிழ‌ நினைத்த‌து, எல்லாம் காற்று போன‌ ப‌லூனான‌து

எதிர்பார்க்காத‌ ஒருவ‌ர் இல்ல‌ம் வ‌ந்தார்.
தேநீர் கேட்டு வ‌ந்த‌வ‌ர்க்கு
இல்ல‌ம் விருந்தே வைத்த‌து.
வ‌ந்தார் இந்திய‌ரானால் என்ன?
அய‌ல்நாட்ட‌வ‌ரானால் என்ன‌?
வ‌ர‌வேற்கும் ம‌ர‌பு த‌மிழ‌ருடைய‌த‌ல்ல‌வா? 
வ‌ந்தாரை வ‌ர‌வேற்று உப‌ச‌ரிப்ப‌து ம‌ட்டும‌ல்ல‌ த‌மிழ் ம‌ர‌பு அவ‌ர்க‌ளுட‌னான‌ உற‌வைவாழ‌வும் வைக்க‌வும் ந‌ம் ம‌ர‌பு. 

Thursday, 5 November 2015

இலையுதிர்காலம்

ன்மேல்பட்ட அனைத்து அழுக்குகளையும் மழை நீரில் கழுவி மனமாற்றம் அடைகிறாய். காயப்பட்ட உன் சொந்தங்களுக்காக உன்னை இழக்கிறாய்.
புத்துயிர் பெறுவோம் எனும் நம்பிக்கையில் நிறம் மாறி, உருமாறி நிற்கும் மரங்களே!!!!   நீங்கள் மனிதர்களாகிய எங்களுக்கு நற்பாடம் புகட்டும் நூல்நிலையங்கள்! !!!!!!!

Thursday, 15 October 2015

வாழ்த்துக்கள்

அயல் நாட்டில் அன்பு காட்டி
அரவணைக்கும்   பெற்றோராய்
அனுதினமும் அனுபவப்பாடம் சொல்லி   உடனிருந்து உற்சாகமூட்டூம் அன்பு உள்ளங்களுக்கு
ஐம்பதாம் ஆண்டு
திருமணநாள்
நல்வாழ்த்துக்கள்

Wednesday, 17 June 2015

அமைதியில் வாழும் ஆண்டவன்

 ஓடிக் களைத்து ஓய்வெடுக்கும் நேரம்
படைத்தவனை பார்த்து விட்டு செல்லலாம்
என்றெண்ணி ஆலயம் சென்றேன்
அமைதியில் வாழும் ஆண்டவனின்
அருகில் அமர்ந்து மகிழ்ந்தேன்
தாயுடன் குழந்தை ஒன்று வந்தது
கற்பித்ததை கடவுள்முன் 
சொல்லச்செய்தாள் தாய்
அனைத்தையும் சொல்லி விடை
பெறுமுன் சுரூபங்களை முத்தமிட்டு 
வெளியேற பணித்தாள்.
மாதா யேசு சூசை என அனைத்தையும் 
முத்தமிட்டு வெளியேறியது குழந்தை
திடீரென திரும்பிசம்மனசு என்று சொல்லி
ஒன்றினை முத்தமிட்டது .வியப்பில் ஆழ்ந்தது 
என் விழிகள் ஏனெனில் முழுமரமானது 
கிளைகள் தறிக்கப்பட்டு சுரூபமாக வடிக்கப்பட்டது 
அதை நானே பலமுறை
விகாரமானது, பயமுறுத்தக் கூடியது
என்று பழித்திருக்கிறேன். உண்மையில் 
அது சம்மனசு அல்ல சிலுவையில் 
அறையப்பட்ட யேசுவின் திருவுடல்  
ஆண்டவனைக் கூட அழகாய்த் தான்
பார்க்க நினைக்கிறது அழுக்கு உள்ளம்
 ஓடிக் களைத்து ஓய்வெடுக்கும் நேரம்
படைத்தவனை பார்த்து விட்டு செல்லலாம்
என்றெண்ணி ஆலயம் சென்றேன்
அமைதியில் வாழும் ஆண்டவனின்
அருகில் அமர்ந்து மகிழ்ந்தேன்
தாயுடன் குழந்தை ஒன்று வந்தது
கற்பித்ததை கடவுள்முன் 
சொல்லச்செய்தாள் தாய்
அனைத்தையும் சொல்லி விடை
பெறுமுன் சுரூபங்களை முத்தமிட்டு 
வெளியேற பணித்தாள்.
மாதா யேசு சூசை என அனைத்தையும் 
முத்தமிட்டு வெளியேறியது குழந்தை
திடீரென திரும்பிசம்மனசு என்று சொல்லி
ஒன்றினை முத்தமிட்டது .வியப்பில் ஆழ்ந்தது 
என் விழிகள் ஏனெனில் முழுமரமானது 
கிளைகள் தறிக்கப்பட்டு சுரூபமாக வடிக்கப்பட்டது 
அதை நானே பலமுறை
விகாரமானது, பயமுறுத்தக் கூடியது
என்று பழித்திருக்கிறேன். உண்மையில் 
அது சம்மனசு அல்ல சிலுவையில் 
அறையப்பட்ட யேசுவின் திருவுடல்  
ஆண்டவனைக் கூட அழகாய்த் தான்
பார்க்க நினைக்கிறது அழுக்கு உள்ளம்
அழுக்கைக் கூட ஆண்டவனாய்ப்
பார்க்கிறது குழந்தை உள்ளம் 

Monday, 15 June 2015

ந‌ன்றி!!!!!!!!!!

காலையிலேயே புத்துண‌ர்வு
வெறும் ப‌த்து பேர் ம‌ட்டும் வரும் கோவிலில்
இன்று நூற்றுக்கும் மேற்ப‌ட்டோர். வாச‌லில் தோர‌ண‌ம்,
வ‌ழியெல்லாம் வாழ்த்து அட்டைக‌ள்,அல‌ங்கார‌ சோட‌னை, அழ‌கு ம‌ல‌ர்க‌ள், ஆர‌த்தி விள‌க்குக‌ள் என்று இது ந‌ம்ம‌ கோவிலா என்று விய‌க்கும் ப‌டி இருந்து. விழா நாய‌க‌ன் நாய‌கி யாராக‌ இருக்கும் என்று எண்ணி விய‌ந்தேன். ப‌ல்ல‌க்கில் ப‌வ‌னியாக‌ வ‌ருவாரா? இல்லை ப‌ட்டுடுத்தி  ப‌வ்யமாக‌ வ‌ருவாரா?  ம‌க்க‌ள் கூட்ட‌ம் அலைமோத‌, பாட‌ல்க‌ள் ப‌ர‌வ‌ச‌மூட்ட‌, வ‌ந்தார் விழா நாய‌க‌ர். அதிர்ச்சி எண் 1 அவ‌ர் ஒரு குருவான‌வ‌ர். எண் 2 எண்ப‌த்து ஆறு வ‌ய‌து முதிர் இள‌ம் குருவின் குருத்துவ‌ பொன்விழா!!!!! 
விழா முழுதும் க‌ண்க‌ளில் க‌ண்ணீருட‌ன் அவ‌ர்,அவ‌ரைச் சுற்றிலும் அவ‌ர் ப‌ணி செய்த‌ பங்கும‌க்க‌ள், என‌
பார்ப்ப‌வ‌ர் க‌ண்க‌ளை பனித்த‌து. விழாவின் இறுதியில் ந‌ன்றி கூற‌ல். வார்த்தை த‌டுமாற‌ வாக்கிய‌ங்க‌ள். வ‌ரிசை மாற, ப‌ல் போனால் சொல் போச்சு என்ப‌தை மாற்றி த‌ன் முதுமை மொழியில் பேசினார் . '' என் பெய‌ரின் பொருட்டு எதை நீ  துற‌க்கிறாயோ அதை      இம்மையிலேயே நிர‌ம்ப‌ப் பெறுவாய்'' இதை இன்று நான் அனுப‌விக்கிறேன். இம்ம‌ட்டும் காத்து நல‌ம் தந்த‌ இறைவ‌னுக்கு ந‌ன்றி!!!!!!!!!!
சோட‌னை , இசை, வாழ்த்து என்று என்னை வியக்க‌ வைத்த‌ அத்த‌னையும் ஒரு நொடியில் ம‌றைந்த‌ன‌. ஐம்ப‌து வ‌ருட‌ குருத்துவ‌ வாழ்வு ,அதிலும் மேலைநாட்டில். எத்த‌னை வ‌ருத்த‌ங்க‌ள், வ‌லிக‌ள், வெறுமையான‌ உண‌ர்வுக‌ள்.!!!!!!!!! அத்த‌னையும் ம‌ற‌ந்து, வ‌யோதிக‌த்து வாழ்க்கையின் உட‌ல்ந‌ல‌க்குறைவை ம‌றைத்து அவ‌ர் சொன்ன‌து ந‌ன்றி!!!!!!!!
இறைவ‌ன் சொன்ன‌ சொல் காப்ப‌வ‌ர். அவ‌ர் விரும்புவ‌து எல்லாம் அவ‌ரை நாம் இறுக‌ப்ப‌ற்றிப் பிடித்துவாழ‌ வேண்டும் என்ப‌து ம‌ட்டுமே. எண்ப‌த்து ஆறு வ‌ய‌திலும் இறைவ‌னைப் ப‌ற்றிப் பிடித்து வாழும் அவ‌ர‌து வாழ்வு என‌க்கு ஒரு ச‌வால். ஒரு முறை அல்ல‌ ப‌ல‌முறை முய‌ற்சிப்போம் வெற்றி பெறுவோம் ஏனெனில் வெற்றியின் இறைவ‌ன் நம்மோடு.   :-)
:-)

Sunday, 10 May 2015

அம்மா அன்பின் முழுமை

அன்னையர் தினத்தன்று மறுபடியும் உங்களை என்னுடைய எழுத்துக்கள் மூலம் சந்திப்பதில் ரொம்பவே சந்தோசம் . நீண்ட இடைவெளிக்குப் பின் ..... எழுதுவதற்கு இரண்டு காரணம் ஒன்று என் அம்மா மற்றொன்று எனது கனவு. அம்மா எல்லாருடைய வாழ்விலும் மறக்க முடியாத ஒரு உறவு. என் தாய் உடன் பிறந்த அறுபரில் நான்காவது . நெல் குற்றி அரிசி எடுத்து விற்கும் தாய் தந்தையரின் மகள். உடன் பிறந்தவள் படித்து முன்னேற தன் படிப்பை பாதியில் விட்டவள் . தந்தையின் நண்பரின் மனைவி மரித்துப் போக , தன் மகளை தருவதாக  சொன்ன அப்பாவின் வாக்குக்கு மூத்த மூன்று பெண்களும் மறுப்பு சொல்ல, தன் வாழ்வை வாக்காக்கியவள்.அன்று முதல் இன்று வரை யாருக்கும் மறுப்பு சொல்லியதே கிடையாது. எல்லோருடைய வாழ்விலும் ஒரு கனவு உண்டு. அடுத்தவர்க்கு உதவி செய்வதில் என் தாய்க்கு நிகர் என் தாயே. ஊரார் விழாக்களுக்கு எல்லாம் முன் நின்று பணி செய்யும் அவள் நிலை கண்டு கடிந்துகொண்ட நாட்களுமுண்டு. பாவம் தனியா கஷ்டப் படுராங்க நாமதானமா உதவியா இருக்கணும் என்று என்னை அவள் சமாதானப் படுத்திய நேரங்களுமுண்டு. தான் பட்ட கஷ்டம் நான் பட என்னை விட்டதில்லை படிப்பை தவிர எதையும் தொட அனுமதித்ததில்லை.  என் தாயை போலவே உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் தாய் சிறப்பு . ஆண்டுக்கு ஒருமுறை அல்ல நாளுக்கு ஒருமுறை கொண்டாடலாம் நம் அன்னையர்க்கு தினம் . தியாகம் என்ற சொல்லின் அர்த்தம் தான் தாய் . நமது கனவை நனவாக்க தனது கனவை உரமாக்கியவர் . நமது நம்பிக்கைச்செடி வளர தனது வேர்வைத்துளிகளையும் பாச நிலத்தையும் தந்தவர்  அன்பு இரக்கம் தியாகம் கொண்ட அத்தனை தாயுள்ளத்திற்கும்  இந்த மகளின் மனமார்ந்த வாழ்த்துக்கள் அனுபவங்கள் வாழ்க்கைப்பாடங்கள். அந்த அனுபவங்கள் அனைத்தையும் அள்ளி சுமந்த்தவள் நம் தாய் அவள் சொல்லாத பாடங்களே இல்லை கற்பிக்காத கல்வியே இல்லை . கற்போம் கற்பிப்போம் தாயுள்ளத்தோடு. என்றும் புன்னகை செய் மனமே:-):-) :-) :-) :-) :-) :-)  

Sunday, 22 February 2015

கஷ்டம் நல்லது



இன்று இயேசுவின்சோதனைகளை திருப்பலியில் வாசிக்கக் கேட்டேன் . சோதனை என்றதும் எனக்கு ஞாபகம் வந்தது, என்னுடைய சிறுவயது விடுமுறை விவிலியப் பள்ளி ஞாபகம் தான். இயேசுவின் சோதனைகளைப் பற்றிய பாடம் இருந்தது. பங்குத்தந்தையின் வருகை, கேள்வி கேட்பார் தயாராகுங்கள் என்றார் ஆசிரியர்.  எனவே  மூன்று சோதனைகளையும் உரு போட்டு மனப்பாடம் பண்ணினேன். ஆனாலும் பயம் என்னிடம் கேள்வி கேட்கக் கூடாது என்று வேண்டத்தொடங்கினேன். அது தான் நான் செய்த தப்பு என்று அப்புறம் தான் உணர்ந்தேன்.ஏன்னா நான் நினைச்சது ஒன்னு நடந்தது இன்னொன்னு. ஆண்டவரே எங்கிட்டக் கேள்வி கேட்கக் கூடாது என்று நான் வேண்ட, அதைப் பார்த்த அப்பொழுது ஆசிரியரான என் அக்கா ,எப்பொழுதோ அவளை நான் அடித்த பழியைத் தீர்த்துக் கொண்டாள் பாதரிடம் மாட்டிவிட்டு.  என்னை அவர் எழுப்பிவிட, பயத்தில் படித்தது மறக்க, கல் ,மலை ஆனது . அப்பம் ,ஆப்பம் ஆனது.  கிடைத்தது பரிசு மண்டையில் குட்டாக . வகுப்பு முடிந்ததும் தலையைத் தடவிக்கொண்டு வெளியே சென்ற என்னை பங்குத்தந்தை அழைத்தார். மறுபடியும் மண்டையைப் பதம் பார்க்கத் தான் கூப்பிடுகிறார் போல என்று பயந்து கொண்டே சென்றேன்.  பதில் தான் தெரியலைல அப்புறம் என்ன தெரிஞ்ச மாதிரி சொல்லிப் பார்த்த, என்றார். நான் சொல்லிப் பார்க்கல எங்கிட்டக் கேள்விக் கேட்கக் கூடாதுனு வேண்டுனேன் என்றேன்.  கேட்கக் கூடாதுனு வேண்டுனதுக்கு பதிலா நல்லா பதில் சொல்லணும்னு வேண்டிருக்கலாம்லனு சொன்னார்.  பல நேரங்கள்ல இந்த கஷ்டம் வேண்டாம்னு தான் நாம வேண்டுறோமே தவிர ,இந்த நல்லது வேணும்னு வேண்டுறதில்ல. அதனால இனி கொஞ்சம் மாத்தி யோசிப்போம் .கறை நல்லது மாதிரி கஷ்டமும் நல்லதுனு நினைப்போம். இது எனக்கு வேண்டாம்னு நினைக்கிறதுக்கு பதிலா, இது எனக்கு வேணும்னு நினைப்போம். ஏன்னா  சோதனைகளும் துன்பங்களும்  நம்மைப் பலப்படுத்தவே ,பண்படுத்தவே . என்றும் புன்னகை செய் மனமே.......                        

Friday, 20 February 2015

ஒளியை நோக்கி வா



 நல்ல வெயில் நாளில்  சூரிய வெப்பம் எடுத்துக் கொண்டிருந்தனர்  சிலர். அதைப் பார்த்த எனக்கு சிறு பிள்ளையில் எனது நிழலை நானே பார்த்து அழுத ஞாபகம் வந்தது. அவ்வளவு கொடூரமாகவா இருந்தாய் என்று கேட்கக் கூடாது. என்னடா இது ஒரு கருப்பு உருவம் நம்மை விடாமல் விரட்டுகிறதே என்று ஒரு அச்சம் அவ்வளவு தான் . அப்போது எங்க பாட்டி  வெளிச்சத்திற்கு நேராகத் திரும்பச் சொல்வார்கள் .உடனே நிழல் என் பின்னாடி போகும் .இப்படி நான் மகிழ்ந்த நாட்கள் அவை.   இருட்டை நோக்கி செல்லாதே ஒளியை நோக்கி வா என்பது அன்று நான் கேட்ட பாடம் . பாட்டியின் மூன்றாவது ஆண்டு நினைவு நாளாகிய இன்று ஒரு சிந்தனை அதையொட்டி. நாம்  பல நேரங்களில் நமக்கு விருப்பமான  ஒரு பொருளை பெற எண்ணி அதன் பின்னால் போகிறோம்  நமது நிழலை நாமே பின் தொடர்வது போல . அப்படி சென்றால் அதை நாம் பெறவும் முடியாது ,அடையவும் முடியாது. அதற்கு மாறாக அந்த பொருளை நம்மை நோக்கி பின்தொடரச் செய்ய முடியும். எப்படி???  பாட்டியின் பழைய தத்துவம் தான். இருளை விடுத்து ஒளியை நோக்கிச் செல்ல வேண்டும். அவ்வளவுதான் . ஒளி என்பது எங்கோ இருக்கும் இறைவன் மட்டும்  அல்ல நமது தூய நல்ல எண்ணங்களும் தான்  . நல்லவற்றையே எண்ணுவோம் நாம் விரும்புகின்ற நன்மைகள் நம்மைத் தேடி வரும்        

Thursday, 19 February 2015

பரிசு எங்கே ?.

உண்மையான நண்பர் இயேசு என்ற தலைப்பில் இத்தாலிய மொழியில் ஒரு கவிதை வாசிக்க நேர்ந்தது. சிறந்த நண்பராக உண்மையான நண்பராக அவரைப்போல் யாராலும் இருக்க முடியாது .அவரைப் போல வாழவே, வாழ முயற்சிக்கவே நாம் அழைக்கப்படுகிறோம் என்று இருந்தது. அதில் , நம் தேவைகளில் உதவி செய்ய, தடம் மாறுகையில் வழிகாட்ட, தவறுகையில் மன்னிக்க,என்பதாக அவர் தம் நட்பு குணங்கள் விவரிக்கப்பட்டுஇருந்தன.  மன்னிப்பு என்ற வார்த்தைக்கு இத்தாலிய மொழியில்PERDONO என்பர். DONOஎன்றால் பரிசு என்று அர்த்தம் .மன்னிப்பது பலருக்கும் சிரமம் தான் ஆனால் அதனை பிறருக்கு பரிசாக கொடுக்க வேண்டும் என்கிறார். பரிசை எல்லாருக்கும் கொடுக்க மாட்டோம் நமக்கு மிகவும் பிடித்த, நம்மால்அதிகம் அன்பு செய்யப்படுபவர்களுக்குத் தான் கொடுப்போம். அதிலும் நாம் கொடுக்கும் பரிசு மற்றவர் தரும் பரிசை விட சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று நினைப்போம். அப்படி இருக்க வேண்டுமாம் நமது மன்னிப்பு. நானும் உன்னை மன்னித்தேன் என் கண்முன் நிற்காதே என்பதல்ல மன்னிப்பு. மாறாக மன நிறைவோடு முழு மகிழ்வோடு, நாம் விரும்பி தருவதாக இருக்க வேண்டும். எனவே இத்தவக்காலத்தில் 
மன்னிப்பு என்னும் பரிசினை மனதார தருவோம்

மன்னிப்போம் மறப்போம் 

மகிழ்வுடன் வாழ்வோம்       

அருள்தரும் காலம்

  மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் 
மண்ணுக்கே திரும்புவாய்  என்ற 
இறை மொழி கேட்டு மனம் திரும்பும் காலம் 
நம் பாவங்களுக்காக மனம் வருந்தி 
மன்னிப்புகோரி மன்றாடும் காலம் 
தவங்கள் பல செய்யத்தூண்டும்
தவக்காலம். இக்காலத்தில் 
உடல் வருந்தாமல் உள்ளம் வருந்துவோம்.
ஒருவர் மற்றவருக்காய் சிறப்பாய் செபிப்போம்.
மன்னிப்பைக் கொடுப்போம் பெறுவோம் 
ஒரு நாளில் ஓர் உதவி ஒருவர்க்கு
என்றே நாளும்  உயர்ந்திடுவோம் .
வாழும் கிறிஸ்துக்களாக மாறிடுவோம்.
அருள் மழை பொழியும் காலமாக 
இத்தவக்காலம் அனைவருக்கும் அமையட்டும் 

 
  
    

Monday, 19 January 2015

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்


தம்பி எவ்வளவு அருமையான ஒரு உறவு. வீட்டில் ஐந்து பேர் கடைசியாக அவன் தான் என்றாலும் ஒரு நாளும் அப்படிக் காட்டியது கிடையாது. அண்ணன் கைய பிடித்துக்கொள் என்று யாராவது என்னிடம் தெரியாமல் சொன்னால் அவனுக்கு அப்படி பிடிக்கும். நானும் நான் தான் மூப்பு என்பதை நிருபிக்க முயன்று பலமுறை தோற்றேன் ஏன்னா என் உருவம் அப்படி. இரட்டை பிறவிகள் போல தான் ஊர் சுற்றுவோம். பகல் முழுதும் விளையாடுவோம் , பசித்தால் பக்கத்து வீட்டு பப்பாளி மரத்தில் கை வைப்போம். எங்கள் வீட்டில் டிவி இல்லாத சமயம் இரவில் பக்கத்து வீட்டில் பொதிகையில் படம் பார்க்கச் செல்வோம். படம் முடிந்ததும் தட்டி எழுப்புவார்கள் தூக்கம் கலையாமல், வீடு மாறாமல் வந்து தூக்கத்தை தொடர்வோம். 9 மணி பள்ளிக்கு அரை மணிக்கு முன்னதாக தான் படுக்கையிலிருந்தே எழுவோம். பக்கத்திலேயே பள்ளி என்பதால் பத்து நிமிட இடைவேளை தான் எங்கள் காலை உணவு நேரம். மதிய வேளையில் விளையாட்டு வெள்ளைச் சட்டை வெளிரும் வரை. மாலை பள்ளி முடிந்தது பை வீசும் போட்டி யாருடைய பை தூரமாக விழுகிறது என்று.ஒரு நாள் வெற்றி பெற்றேன் நான் பரிசு அம்மா தந்தார்கள் விளக்குமாரால்!!!  பை பானை மேல் இருந்த இட்லி மாவை பதம் பார்த்தது தான் காரணம்.அடி வாங்கினாலும் போட்டி , அழாமல் இருப்பது யார் என்று.   வீட்டில் எப்போதும் சண்டை தான் ஆனால் வெளியில் விட்டு கொடுக்க மாட்டான் பட்டம் விடுவது பச்சரிசி சோறு பொங்குவது என எல்லாம் கற்றுத் தந்தது அவன் தான் சைக்கிள் என்றாலே பயம் எனக்கு . கை விட்டு ஓட்டுவான் அவன் . பொறாமையாக இருக்கும் . அவனே ஓட்ட சொல்லித்தந்தான் . ஒன்னாம் நம்பர் சைக்கிள் முட்டி வரை தான் இருக்கும் உட்கார்ந்து காலாலே நடந்து செல்லலாம் ஓட்டினேன் கொண்டு போய் பள்ளத்தில் தள்ளினான். முட்டி தோள் பேர்ந்துருச்சு  . அம்மாவிடம் மாட்டி விட்டு அடி வாங்க வைத்தேன். பேய் என்றால் எப்போதும் பயம் தான் அதை வைத்தே அழ வைப்பான் பல நேரம் . அப்படி பல நிகழ்வுகள் அவனோடு . நான் அழுதபோது எல்லாம் சிரித்தவன் என்னோடு சேர்ந்து அழுதது நான் விடுதிக்கு போன போது தான் . தம்பியோடு விளையாடலாம் என்றுதிரும்பி வந்தேன் மாறாமல் நான் .மாறி நின்றான் அவன்  உழைக்கும் மகனாய் .அன்று பிரிந்தது இன்று வரை சேரவில்லை.

Saturday, 3 January 2015

பொங்கட்டும் உள்ளம் உவகையால்

ஏர் பிடித்து ஏற்றம் தந்து,
உடல் நீரை உரமாய் தந்து,
கண்ணெனப் பயிரைக் காத்து,
மண்ணில் உயிர்க் காக்கும்
உழவர்களின் உயர்வைப் போற்றும் நாள்
புத்தாடை உடுத்தி, புத்தரிசி ,புதுப்பானைப்
பொங்கலிட்டு, படைத்தவனுக்கு படையலிட்டு,
பூரித்து மகிழும் பொங்கல் திருநாள்.
இ ந் நாளில் நம்
மனமென்னும் நிலத்தை
நல்லேர் கொண்டு உழுது,
அன்பென்னும் நீர் பாய்ச்சி,
நல்லெண்ணமெனும் விதை தூவுவோம்.
வளரும் நாற்றாய் இடம் மாறுகையில்
பற்றினை விடுத்து,பாரினில் தடம் பதிப்போம்.
அன்பில் ஆழ வேரூன்றி தட்பவெப்பம் பெறுவோம்.
வழி மாறுகையில் வழிகாட்டல் உரம் பெறுவோம்.
கால்களில் உரம் பெற்று கிளைகளில் பலன் தருவோம்
ஒற்றை விதையில் ஓர் நூறு மணிகள் பெறும்
வல்லமை நம்மிடம் உண்டு
என்ற நம்பிக்கை யுடன் வளர்ந்திடுவோம்.
செங்கரும்பு மஞ்சள் பச்சரிசி பொங்கலோடு
உள்ளம் நிரம்ப இனிமை வழிந்தோட‌
உவகை மனம் கொண்டே வாழ்ந்திடுவோம்:-) :-) :-) :-) :-) :-) :-)

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...