நட்பு
தூரமோ, காலமோ, சூழலோ,
நல்ல நட்பை ஒருபோதும்
பிரிப்பதில்லை
மழை நின்ற பிறகும்
மரக்கிளைகளை ஆட்டி
மழைத்துளிகளில் நனைந்து
மகிழும் சிறுவர்கள் போல
அவர் தம் நினைவுகள்
மகிழம் பூவாய் மணந்து மகிழ்வூட்டும்
மாறாக மனதை விட்டு அகலா .........