மௌனம்
மௌனத்தின் ஆற்றல் அளவிடற்கரியது.
மௌனம் சில நேரம் வெல்லும், சில நேரம் கொல்லும்.
மௌனம் காக்க வேண்டிய நேரத்தில் மௌனம் காப்பதும், பேச வேண்டிய நேரத்தில் பேசுவதும் நலம். இதனைச் செய்யாமல் இருப்பதால் தான் சில பிரச்சனைகளே ஏற்படுகின்றன.!!!! இவ்வுலகிலுள்ள அனைத்துமே மௌனத்தின் மூலமாகத்தான் உருவாகின்றன. பூக்கள் மலர்வது முதல் , மனிதன் உருவாவது வரை அனைத்துமே மௌனத்தில் தான். மௌனத்தின் மூலமாக பல ஆற்றல்களை நாம் பெறுகின்றோம். சொல்லப் போனால் ஆற்றல்களின் பெட்டகமே நாம் தாம் என்றெல்லாம் படித்தேன். சரி நாமும் மௌனத்தினைக் கடைபிடித்தாலென்ன என்று தோன்றியது. இன்று காலை முதல் மாலை வரை அமைதியாய் இருப்போம். எந்தவிதமான தொலைத்தொடர்புச் சாதனங்களையும் இன்று பயன்படுத்தக் கூடாது. முடிவெடுத்தேன். காலை முதல் மாலை வரை பேசவே இல்லை. வெற்றி!!!!! வெற்றி!!!!! என்னாலும் அமைதியாக இருக்க முடிகிறதே என்ற ஆச்சரியம் என்றெல்லாம் சொல்ல ஆசை தான் ஆனால் முடியவில்லை. நான் அமைதியாக இருந்தால் ஏன் சோகமாக இருக்கிறாய்? ஏன் கோபமாக இருக்கிறாய் என்று கேட்கிறார்கள். எதற்கு இந்த வீண் வம்பு. அமைதியாக இருப்பது எவ்வளவு கடினம் என்று தெரிந்துகொண்டேன். ஆனால் அதிலும் ஒருசுவை உள்ளது என்று உணர்ந்து கொண்டேன். இந்த அமைதி கிடைக்கப்பெற்ற ஒவ்வொருவருமே வெற்றியாளர் தான். பேசிக் கொண்டே இருப்பதாலும் , பேசாமலே இருப்பதாலும் தானே பிரச்சனை. அதிகமாகக் கேள்; குறைவாகப் பேசு; என்பார்கள். நம்மில் சிலர் இதனை மாற்றிச் செய்வதனால் தான் வாழ்வில் ஏராளமான குளருபடிகள். அதுசரி மௌனம்!! மௌனம்!! அமைதி!! அமைதி!! என்றே 300 வார்த்தைகள் நானே பேசிவிட்டேன்.
மௌன மொழியைக் கற்று மகிழ்ச்சியாய் வாழ்வோம்; அப்போது, நம் உதடுகள் மட்டுமன்றி
உள்ளமும் புன்னகை செய்யும்;
ஆமா அடுத்து எப்ப பேசுவீங்க???????
!!!!!!!!!!!!!!!!!!!!