Saturday, 5 April 2014

                    உறவுகள் உன்னதமானவை.


 உறவு- உறவாடுவது,உடனிருப்பது.  உள்ளம் ஒன்றி உறவாடுவதே உறவு. உறவு மிகவும் வலிமையானது.  இதை உணர்த்தத்தானோ என்னவோ உறவில் ற என்ற வல்லின ற கரம்  இடம்பெற்றிருக்கிறது. நம்முடைய உறவுகளான அம்மா, அப்பா, சகோதரர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருமே இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட மிகச் சிறந்ந பரிசுகள். பிறந்தது முதல் இன்று வரை உறவென்னும் பரிசுகளைப் பெற்றுக் கொண்டு தான் இருக்கிறோம். சிலவற்றை விரும்பிப் பெறுகிறோம். சிலவற்றைப் பெற்ற பின் விரும்புகிறோம். சிலர் உறவுகளை
            '' ஆணின் நட்பு ஆயுள் உள்ளவரை
                      பெண்ணின் நட்பு பந்தக்கால்  நாட்டும் வரை''
 என்று விமர்சிப்பதுண்டு.இதில் எனக்கு சிரிதும் உடன்பாடு இல்லை. உறவுகள் உண்மையானவை , உன்னதமானவை அவை உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும். அவை ஆண் பெண் என்று பார்த்து வருவதில்லை. அது உள்ளம் சார்ந்தது. சிலரைப் பார்த்தவுடன் பிடிக்கிறது. பேசத் தோன்றுகிறது . இவை எதனால்? உறவால்....
          உறவுகளைத் தேடித் தேடி நாம் பெற வேண்டியதில்லை. அவை நம்மைத் தேடி வரும். நாம் செய்ய வேண்டியது எல்லாம் அதனைத் தக்க வைத்துக் கொள்வது மட்டுமே. பயணத்தில் பக்கத்து இருக்கையில் பயணம் செய்பவர்.
வழி கேட்டு வருந்தி நிற்கையில் வழி காட்டுபவர்.
 பார்த்தவுடன் புன்னகைத்து மகிழ்வூட்டுபவர்.
என்று அனுதினமும்  நாம் உறவுகளால் உரமூட்டப்படுகிறோம். 7 மாதங்களூக்குப் பிறகு  90 வயது மதிக்கத்தக்க ஓர் மனிதரை மீண்டும் பார்க்க நேர்ந்தது. கண்டவுடன் கண்கலங்கினார். வயோதிகர், உடல் நலமில்லாதவர், தனியாய் பேருந்தில் பயணம் செய்து என்னைப் பார்க்க வந்திருக்கிறார்.நினைக்கும்போதே மனம் என்னவோ பண்ணியது.
                        அவர் சொன்னது ''நீயும் நானும் தந்தையும் மகளுமாய் முன்பு                                                 இரு ந்திருப்போம். அது மீண்டும் தொடர்கிறது''   ஆம்      நாம்   ச ந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒர் விதத்தில் நமக்கு உறவினர்களே. எனவே எல்லா மனிதர்களையும் நம் உறவுகளாய் நினைத்துக் கொண்டாடுவோம். ஏனெனில் உறவுகள் உன்னதமானவை, உண்மையானவை. பெற்ற உறவுகளைப் பேணிக்காப்போம்  

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...