எதிர்பார்ப்பு
''எதிர்பார்ப்புகள் எட்டிப்பார்க்கும் போது ஏமாற்றங்கள் இரட்டிப்பாகின்றன''.
''எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டால் எதிர்வருவது தானாக நிறையும்''
என்றெல்லாம் நிறைய வாசகங்களைக் கேட்டிருக்கிறேன். பிறருக்கும் சொல்லி இருக்கிறேன். ஆனால் இன்று எதிர்பார் உன் எதிர்கால வாழ்வு என்னவென்று எதிர்பார் என்று தோன்றியது. இன்று நான் என்னவாக இருக்கிறேனோ அது என்றோ ஓர் நாள் என்னுடைய கனவு. இன்று என்ன எதிர்பார்க்கிறேனோ அது நாளைய என் வாழ்வு.
ஆம் நாம் கேட்டவை அனைத்தையும் பெற்றுக்கொள்கிறோம். கேளுங்கள்; நம்புங்கள்; பெறுங்கள்; இயேசுவால் குணம் பெற்ற பலரும் முதலில் குண்ம் பெற விரும்பினர். இயேசுவிடம் கேட்டனர். இயேசு குணம் தருவார் , நாம் குணம் பெறுவோம் என்று நம்பினர். கேட்டதைப் பெற்றுக்கொண்டனர். நானும் தான் 6வருடங்களாக, மாதங்களாக, நாட்களாகக் கேட்கிறேன். எதுவும் கிடைக்கவில்லையே என்று கேள்வி கேட்பது எனக்குக் கேட்கிறது.
இரத்தப் போக்குடையப்பெண், முடக்குவாதமுற்றவர், பார்வையற்றவர், பேச்சிழ்ந்தவர், பாவிகள்,.......... என்று விவிலியத்தில் இயேசுவால் குணம் பெற்ற அனைவரும் நோயுற்றவுடன் குணமடையவில்லை. அவரவர் நம்பிக்கை எத்ர்பார்ப்பின் அளவைப் பொறுத்தே குணம் பெற்றனர். நம்பிக்கையுடன் கேட்டு , அதனைப் பெற்றுக் கொள்கிறேன் என்ற நல்ல மனம் உடையவர்கள் மட்டுமே பெற்றுக்கொள்கின்றனர். நம் வானகத் தந்தை நிறைவுள்ளவர். கேட்போம்; நம்புவோம்; பெறுவோம்;
நம் எதிர்பார்ப்புகள் எதிர்காலத்தை நிர்ண்யிப்பவை எனவே நல்லவற்றை எதிர்பார்ப்போம் நலமுடன் வாழ்வோம்.