ஆணை அவனென்றும்
பெண்ணை அவளென்றும்
அழைக்கும் உலகம்
அவர்களே வயதானால்
அவனை அவரென்றும்
அவளை (அவங்க) அவர்களென்றும்
அழைக்கின்றதே !!!!!!
Saturday, 20 December 2014
பெண் என்னும் பெருந்தகை
Friday, 12 December 2014
Monday, 17 November 2014
எப்போது வருவாய்
ஈசாய் மரத்தளிர்த் தண்டே ! நீர் வருவது எப்போது ?
எங்களை மீட்க நீர் எடுத்திருக்கும் உருவம் என்ன இப்போது?
மூவரில் உமக்கு கிடைத்தது முறை அப்போது.
வேண்டும் உனது உரு எங்கள் மத்தியில் முப்பொழுது.!!!!!!!!
எப்படி வருவாய்? எப்போது வருவாய்?
கன்னியின் கருவில் உதிக்காதே
காலம் உன் கருவைக் கலைத்துவிடும்.
மலடியின் மடியில் தவழ நினைக்காதே
உலகம் அவளது நடத்தையை சந்தேகிக்கும்.
கணக்கெடுப்பு நேரத்தில் கழுதை மேல் செல்ல எண்ணாதே.
எல்லாம் கணினி மயமாய் கண நேரத்தில் முடிந்துவிடும்.
மாட்டுத்தொழுவத்தில் பிறக்க முயலாதே
இங்கு மாடுகளே இல்லை தொழுவங்கள் எங்கு இருக்கும்
விண்மீன் மூலம் செய்தி சொல்ல பார்க்காதே
புதுக்கோள் என்றெண்ணி விண்கலத்தை அங்கும் அனுப்பக்கூடும்.
இடையர்களுக்கு செய்தி சொல்ல விழையாதே
கிடையற்ற அவர்கள் இரவு நேரக்காவலர்களாய் இருக்கக் கூடும்
எப்படித்தான் வருவது என்றுக் கேட்கிறாயா?
சொல்கிறேன் கேள்.!!!
கணினி மூலம் கருத்தரித்து வா
சோதனைக் குழாய்க் குழந்தையென சொந்தம் கொண்டாடுவோம்
மின்னஞ்சல் மூலம் உன் வரவுச் செய்தியை அனுப்பு
அணுத்துகளாய் அகிலம் முழுதும் அதனைப் பரப்புவோம்.
குழந்தை நட்சத்திரமாய் குறும்புத்தனமாய் விளம்பரங்களில் வா
வெட்கமே இல்லாமல் விளம்பரமோகத்துடன் உன்னை விரும்பிப் பார்ப்போம்
அரை குறை ஆடை, ஆங்கிலத்துடன் திரையில் வா
உன்னைத் திணறடிக்கும் விசிறிகளாய் திரண்டு வருவோம்
செயல் வீரனாய் தலைவனாய் திரைப்படத்தில் வா
தினமும் தொழுது வணங்கும் ரசிகனாய் கோயில் கட்டுவோம்
இலவசங்களை ஏராளமாய் வழங்கும் அரசியல் வாதியாய் வா
இல்லம் தவிர்த்து இன்ன பிற உறவுகள் தவிர்த்து,உனக்காய் உயிர் விடுவோம்
இலஞ்சங்கள் பல தரும் புள்ளிகளாய் வா
கடமைதனை கால் செருப்பாய் கழற்றி வாழ்வோம்
இம்மானுவேலே தாவீதின் திறவுகோலே
இப்படி வந்தால் உன்னை வரவேற்போம் வருவாயா?
குழந்தையாய் வராதே !!! குணமெனும் சான்றோராய் வராதே
எங்கள் சாதி மத பேதம் விரட்ட சாட்டையுடன் வா
கடமைதனை மறக்கும் கயமையை விரட்ட தடியுடன் வா
அட்டுழிய அரசியல் பண்ணும் எங்களின்
அராஜகம் அழிக்க அரிவாள் கொண்டு வா மொத்தத்தில்
குழந்தையாய் வராதே எங்கள்
நற்குணமாய் வா
தனியனாய் வராதே எங்கள்
தன்னம்பிக்கையாய் வா
அன்னியனாய் வராதே எங்கள்
அன்புறவாய் வா
ஏனெனில் நீ பிறக்க வேண்டியது இவ்வுலகில் அல்ல எங்கள் உள்ளத்தில்........
Friday, 31 October 2014
நீங்க யானை மாதிரியா ?? இல்ல பூனை மாதிரியா??
யானைக்கும் அடி சறுக்கும் இது அடிக்கடி நாம் கேட்ட ஒரு பழமொழி . உனக்கா இந்த நிலைமைனு யாராவது கேட்டா நாம இந்த பழமொழிய சொல்றது வழக்கம் . இன்னைக்கு திடிர்னு ஒரு சிந்தனை . யானைக்கும் அடி சறுக்கும் . யானை கம்பீரமானது யாராலும் அதஅவ்வளவு சீக்கிரம் கீழே தள்ளி விட முடியாது . அப்படியே எதிலாவது அதன் அடி சறுக்கினாலும் உடனே அதனால எழுந்திரிக்க முடியாது. பூனை சும்மா தட்டுனாலே கீழ விழுந்துடும். வேகமா எழுந்திரிச்சுடும்.இத எதுக்கு சொல்றேன்னா . நமக்கு வர்ற பிரச்சனைகளை சமாளிக்கிறப்ப சில நேரம் நாம யானை மாதிரி ,சில நேரம் பூனை மாதிரி. சட்டுனு எதுலயும் சிக்க மாட்டோம் . சிக்கினோம் ,,,,,,, எழுந்து நிக்க ரொம்ப கஷ்டப்படுவோம் .ஆனா... எழுந்துட்டோம் ..... திரும்ப விழாம கவனமா இருப்போம் . அப்ப நாம யானை பலம் கொண்டவங்க .
அடிக்கடி எதுலயாவது சிக்குவோம் உடனே எழுந்து நின்னுருவோம் .. ஆனா மறுபடியும் கீழ விழுவோம் அப்ப நாம பூனை பலவீனம் கொண்டவங்க . இதுனால என்ன சொல்ல வர்றேன்னா கஷ்டம்னு வந்தவுடனே '' யானைக்கும் அடி சறுக்கும் இல்லையானு " சும்மா சொல்ல கூடாது நம்ம பலம், யானை மாதிரியா?? இல்ல பூனை மாதிரியானு யோசிச்சு சொல்லனும் சரியா?? இப்ப இருக்கிற நிலைமைல ரெண்டுமே வேணும்னு நீங்க சொல்றது கேட்குது சரி சரி என் ஓட்டு யானைக்கு தாம்பா. :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-)
Thursday, 23 October 2014
நீங்களும் குழந்தைகள் தான்:-):-) :-) :-) :-) :-)
Friday, 3 October 2014
காதலிக்கலாமா?.? வேண்டாமா?.?
காதல் ஒரு உண்மை உணர்வு. மிகவும் புனிதமான உணர்வு. ஆனால் கவனமாக கையாள வேண்டிய ஒரு உணர்வு. கடை நிலை மனிதனை கரம் பிடித்து முன்னுக்கும் கொண்டும் வரும். முதல் நிலை மனிதனை கை கழுவி கடை நிலைக்கும் கொண்டு வரும். கட்டான மனிதனை நிலை குலையச்செய்வதும் அதுதான். ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதும் அதுதான் . கலையான ஆண் மகன் ஒருவன் துடிப்பான பேச்சு , மிடுக்கான நடை, எடுப்பான உடை, துணிவான முடிவு, உறுதியான மனம், நேருக்கு நேர் பதில் , அழகான உறவுகள் அன்பான நண்பர்கள், அவர்களுடனான ஆனந்த அரட்டை,என வாழ்வைக் கொண்டாடினான். காதல் என்னும் மாய வலை அவனையும் வீழ்த்தியது. வீழ்த்தப்பட்டான். காணாத ஒன்றைக் கண்ட மகிழ்வில் தலை கீழாய் ஆடினான். உற்றம் ,சுற்றம், நண்பர்களை மறந்தான். எல்லாவற்றையும் இழந்தான். அது சரி ஒன்றை இழந்தால் தானே மற்றொன்றைப்பெற முடியும். எனவே பெற்றதை எண்ணி மகிழ்ந்தான். ஆனால் இவன் நினைத்தது போல் அவள் நினைக்கவில்லையே. காரியம் முடிந்தவுடன் கசக்கி எரியும் காகிதமாய் அல்லவா எண்ணிணாள். பிளிறு போல் நடந்தவனை பித்தாய் அலைய விட்டாள். கணீரென்று பேசுபவன் குரலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாள். சாறு எடுத்துவிட்டுப் பிழிந்து போடும் கரும்புச் சக்கையாய் ஆக்கினாள். காதல் தந்த பரிசு இது. தாய் என்னும் பெண்ணால் பிறந்து ஆளானவன் காதலி என்னும் மற்றொரு பெண்ணால் வீழ்த்தப்பட்டான்.
காதலன் பித்து பிடித்தவனானான்.
காதலி சொத்துள்ள மற்றொருவனைத் தேடிப் பிடிப்பவளானாள்.
இது ஆண்களுக்கு மட்டுமல்ல, இனம் மாற்றிப் படித்தால் இது பெண்களுக்கும் பொருந்தும்.
காதல் வேண்டாமென்று நான் சொல்லவில்லை,அது தேவை ஏனெனில் அது ஒரு உணர்வு.
காதலோ நட்போ
உங்கள் உறவை வளர்க்கிறதா? நற்பாதையில் உங்களை அழைத்துச்செல்கிறதா?
அது உங்களுக்குத் தேவை.
ஆரோக்கியமான காதலும் நட்பும் என்றும் நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் ஆரோக்கியமானவர்களாக்கும். பலவீனமான காதலும் நட்பும் மேலும் நம்மை பலவீனமாக்கும்.
காதல் என்ற உணர்வை உணரும்போதே ,அனுபவிக்கும் போதே, விழிப்பாயிருங்கள்
உங்கள் செயல்களில் மாற்றம் தெரிகிறதா?
அது உங்களை நல்வழிக்கு இட்டுச் செல்கிறதா?
உங்கள் நேரத்தை பயனுள்ளதாக்குகிறதா?
எப்போது நினைத்துப் பார்த்தாலும் அவர்களுடனான உறவு உண்மை மகிழ்வைத் தருகிறதா? கவலை வேண்டாம் அது ஆரோக்கியமான உணர்வு. ஆனால் , உங்கள் மானம் இழந்து , மரியாதை கெட்டு, எப்படி இருந்தவன் இப்படி மோசமான நிலைக்கு வந்துவிட்டானே என்று மற்றவர் சொல்லும் நிலைக்கு நீங்கள் ஆளானால் அதனை தூக்கி எரியவும் தயங்காதீர்கள்.
நமது அன்பு தூய்மையானது. அதனை தூய்மையான பாத்திரத்தால் இட்டு நிரப்புவோம். அசிங்கமான பாத்திரத்தால் நமது அன்பும் அசிங்கமானதாக மாறிவிட வேண்டாம்.
''பாத்திரத்தின் திறன் அறிந்து பிச்சையிடு'' என்பதன் அர்த்தம் இதுவே.
உண்மையான நட்புக்கும் ஆழமான அன்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தெரியாதவர்களை தூக்கி எரியவும் தயங்க வேண்டாம்
இப்ப சொல்லுங்க காதலிக்கலாமா?.? வேண்டாமா?..?
Wednesday, 17 September 2014
பிரிவொன்று சந்தித்தேன் .....
பூவிதழ்களின் பிரிவு மலர்
கண் இமைகளின் பிரிவு விழி
வாய் இதழ்களின் பிரிவு ஓசை
கைவிரல்களின் பிரிவு விசை
இப்படியாக பிரிவு என்பது நம் வாழ்க்கையில் தேவையான ஒன்றாகிவிட்டது. சேர்ந்து இருக்கும் போது உணராத உண்மை உணர்வுகள் பிரிவின் போது தான் புலப்படும். தம்பியுடன் மிட்டாய்க்காக சண்டை, அக்காவுடன் பூவுக்காக விவாதம், அண்ணனுடன் வெளியூர் செல்ல பிடிவாதம் , தங்கையுடன் தொலைக்காட்சி நிகழ்வுக்காய் போராட்டம் என்று நம்மை விட்டுப் பிரிந்த இளமை நிகழ்வுகளை அசை போட்டு மகிழும் காலம் இன்று. நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும். உடன் இருப்பவர்களின் அருமை அவர்களின் இல்லாமையில் தான் புரியும். தினமும் இட்லி தோசையா என்று அலுத்தவர்கள் அயல் நாட்டில் ரொட்டியை உண்ணும் போது உணர்வார்கள் அதன் அருமையை.அடிக்கடி வந்து போன உறவினர்கள், குடும்பவிழாக்கள், ஊர்த்திருவிழாக்கள், தெருவோரப்பேச்சுக்கள்,கிணற்றுக்குளியல், என எல்லாமே இன்று நம்மை விட்டுப் பிரிந்த நிகழ்வுகளாயின. என்ன தான் சொல்ல வருகிறாய் ?? என்ற உங்கள் ஆதங்கம் எனக்கு கேட்கிறது. பிரிவு எதற்காக ??? எதிலிருந்து நம்மைப்பிரித்ததோ அதனுடன் நம்மை இன்னும் ஆழமாய்ச் சேர்ப்பதற்கே. அருகிலிருக்கும்போது காட்டும் அன்பை விட அகன்றிருக்கும் போது காட்டும் அன்பே வலிமை சேர்க்கிறது. வளம் தருகிறது. பிரிவு அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.
உண்மையான அன்பு பிரிவால் இரட்டிப்பாகும்.
போலியான அன்பு பிரிவால் பிட்டுக்கொள்ளும்.
என்ன புரிகிறதா??
பிரிந்து செல்கிறார்களா கவலை வேண்டாம்
மீண்டும் சேர்வோம்
உண்மையான அன்பாயிருந்தால்...........
Thursday, 17 July 2014
அறுசுவையே!!
வாழ்வு-ஐ- சுவைப்போம்
வாழ்வு-ஆல்- சுவைதருவோம்
வாழ்வு-கு- சுவையூட்டுவோம்
வாழ்வு- இன்- சுவையறிவோம்
வாழ்வு-அது-சுவையாகட்டும்
வாழ்வு-கண்- அறுசுவையே!!
அறுசுவை வாழ்வு
Monday, 16 June 2014
Sunday, 15 June 2014
Transfer
Thursday, 5 June 2014
Vaazkkai
Wednesday, 4 June 2014
Friday, 30 May 2014
பெண்மை
Tuesday, 20 May 2014
unakkul unnaith thedu
உனக்குள் உன்னைத் தேடு
கொலம்பஸ் ஒரு நெசவாளியின் மகன். சிறு வயது முதல் புதியனவற்றைக் கண்டறிய வேண்டும் என்ற ஆவல் கொண்டவர். தரை வழி பயணத்தை விட்டு கடல் வழி பயணம் மூலம் ஒரு புதிய கண்டத்தைக் கண்டறிய முயன்றார். தனது திட்டத்தை பல நாட்டு மன்னர்களிடமும் எடுத்துச் சென்று செயல்படுத்த உதவி கேட்டார். அவரது முயற்சிக்கு ஒத்துழைக்க ஒருவரும் முன் வரவில்லை. 10 வருட விடா முயற்சிக்குப் பின் ஸ்பெயின் நாட்டு இளவரசி 3 கப்பல்களும் பயணத்துக்குத் தேவையான உணவும் கொடுக்க முன் வந்தார். கப்பல்கள் மட்டும் போதுமா? கப்பல்களைச் செலுத்த கைதேர்ந்த மாலுமிகள் வேண்டுமே!!! உயிரைப் பணயம் வைத்து பயணம் செல்ல ஒருவருக்கும் மனமில்லை. இறுதியில் 39 மரண தண்டனைக் கைதிகளைத் தன்னுடன் அழைத்துச் செல்ல எண்ணினார்.
எதிர்பார்த்த மரணமா? இல்லை
எதிர்பாராத பயணமா? என்ற இரண்டில்
பயணத்தைத் தேர்ந்தெடுத்தனர். இந்த முயற்சி தான் இன்று உலகையே ஆட்டிப் படைக்கும் அமெரிக்கா என்ற கண்டத்தைக் கண்டுபிடிக்க வழிவகுத்தது.
நெசவாளி மகனின் கனவுத் தறி
நினைவுப் பட்டாக பாரினை அலங்கரித்தது.
கொலம்பஸ் போல் நீங்களும் புதிய அமெரிக்காவைக் கண்டுபிடியுங்கள் என்று சொல்லவில்லை. மாறாக நம் ஒவ்வொருவருக்குள்ளும் புதியன படைக்க வேண்டும் என்ற ஒரு கொலம்பஸ் இருக்கிறார் அவரைக் கண்டுபிடியுங்கள் என்று தான் சொல்கிறேன். தனது எதிர்கால வாழ்வு மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்று எண்ணாதவர் எவருமிலர். நமது திறமை எதில் உள்ளது என்பதைக் கண்டறிந்து அதில் உயர நமது முயற்சிகளைச் செலுத்துவோம்.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய உயர்வு
Wednesday, 7 May 2014
Sunday, 27 April 2014
Sunday, 13 April 2014
உள்ளம் எனும் வாளி
சுப்பிரமணிய பாரதி ஒரு முறை வீட்டின் மேல் மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். கீழே தெருவில் குள்ளச் சித்தர் கையில் கோணிப்பையுடன் வந்து கொண்டிருந்தார். திடிரென கீழேக் கிடந்த குப்பைக்கூளங்களால் தனதுப் பையை நிரப்ப ஆரம்பித்தார். இதனைக் கண்ட பாரதி மனம் பதறியவராய், விரைந்து கீழே இறங்கினார். சித்தரை நோக்கிச் சென்றவர், ''என்ன காரியம் செய்கிறீர்கள்? குப்பைகளால் கோணியை ஏன் நிரப்புகிறீர்கள்? உங்களுக்கு என்ன ஆயிற்று?'' என்றார். பாரதியை மேலும் கீழும் பார்த்துவிட்டு சித்தர், ''நான் நினைத்தால் இப்போதே இந்தக் குப்பைகளைக் கீழேக் கொட்டி என் கோணியைத் தூய்மைப் படுத்த முடியும். உன்னால் உன் மனதிலுள்ள குப்பைகளைத் தூர எறிந்து உன் மனதைத் தூய்மைப் படுத்த முடியுமா?'' என்றாராம்.
உள்ளங்கை அளவு இருப்பதாலா? இல்லை உள்ளுக்குள் இருப்பதாலா? எதனால் இதனை உள்ளம் என்கிறோம்?
சிட்டுக்குருவித் தலையில் பனங்காயைப் போல பல நேரம்
சிறு இதயத்தில் சில ஆயிரம் கவலைகளைச் சுமக்கிறோம்.
நாம் வாழுகின்ற நிகழ் காலம் ஒன்றே நமது கையில் உள்ளது. அதனை ஏன் நாம் வருத்தங்களாலும் , சுமைகளாலும் நிரப்ப வேண்டும்.? நல்லவைகளால் நம் உள்ளத்தை நிரப்பலாமே.!!
சிகப்பு நிறத் தண்ணீர் நிறைந்த வாளிகள் இருவரிடம் கொடுக்கப் பட்டன. ஒருவர் கைகளால் தண்ணீரை வெளியேற்றி நல்ல தண்ணீரால் வாளியை நிரப்பினார். கை முழுவதும் சிகப்பு நிறம். மற்றொருவர் தண்ணீர்க் குழாய் அருகில் வாளியை வைத்து நீரால் நிரப்பினார். சில மணி நேரத்தில் சிகப்பு நிறம் தானாக மறைந்து வாளி முழுவதும் நல்ல நீரால் நிரம்பியது. ( சிகப்புத் தண்ணீர் தரையில் கொட்டி, தரை கறையாகுமே என்று கவலைப் பட வேண்டாம். குழாய் வழியே உருண்டோடி அதள பாதாளச் சாக்கடையைச் சென்றடைந்து விட்டது. கவலை வேண்டாம்.)
நான் சொல்ல விரும்புவது இது தான் கவலையை வெளியேற்ற வழி தேடாதீர்கள். நன்மைகளால் , மனதிற்கு மகிழ்வூட்டக் கூடிய நற்காரியங்களால் மனதை நிரப்புங்கள். அப்புறம் பாருங்கள்
என்றும் இனிமை, எதிலும் புதுமை,
மகிழ்வென்னும் கடலில் நம் உள்ளம் எனும் வாளியை போட்டு விட்டால் அதை விட சிறந்தது வேறு ஒன்றுமில்லை. வாழ்வது ஒருமுறை அதை சந்தோசமாக வாழ்ந்துவிட்டுப் போவோமே!!!!!!!!
ஆமா உங்க வாளி (உள்ளம்) முதல்ல உங்கக்கிட்ட இருக்கா?
Saturday, 12 April 2014
Friday, 11 April 2014
Thursday, 10 April 2014
Wednesday, 9 April 2014
Sunday, 6 April 2014
புன்னகை அக அழகை கூர்மைப்படுத்தி, புற அழகுக்கு மெருகூட்டுவது. மழலையின் சிரிப்பில் மயங்காதவரும்,மட்டற்ற மகிழ்ச்சியில் புன்னகைக்காதவரும் இல்லை. புன்னகை ஓர் மருந்து. இலவச மருந்து,இயற்கை மருந்து. வாழ்விற்கு ஊட்டம் அளிக்கக்கூடிய சத்து மருந்து. இம்மருந்தின் பற்றாக்குறையினால் தான் பலருக்கு வாழ்வில் நலமே இல்லை. நாமும் ஓர் மருத்துவரானால் என்ன என்று இன்று தோன்றியது. புன்னகை என்னும் மருந்தை அனைவருக்கும் கொடுப்போம், நலமளிப்போம் என்று உறுதி கொண்டேன். இன்று பார்க்கும் அனைவரையும் புன்னகைக்கும் முகத்துடன் வாழ்த்த எண்ணினேன்.( இதற்கு முன்னால் அழுதுகொண்டா இருந்தாய் என்று நினைக்க வேண்டாம்)
குழந்தைகள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள், என அனைவரையும் புன்னகையுடன் வாழ்த்தினேன். என்ன ஆச்சரியம்!!!!!!!! கொடுத்ததையே திரும்பப்பெற்றேன் மகிழ்வாக.! இயற்கை மருந்தினை நானும் திரும்பப் பெற்றுக்கொண்டேன். இதற்கு முன்னால் முகம் வாடியவாறு பார்த்த மனிதர்களும் முகம் மலர்ந்தனர்.
நோயினால் நொந்தவர், முதுமையினால் வருந்தியவர், வேலைப்பளுவினால் அயர்ந்தவர், பிரச்சனையினால் குழம்பியவர் என அனைவர் முகத்திலும் புன்னகை என்னும் அணிகலன் அணியப்பட்டதும் அழகு பெற்றவராகத் திகழ்ந்தனர். இன்று ஒரு நாள் பயிற்சித்த இதனை தொடர் ந்து ஏன் செயல்படுத்தக் கூடாது என்று எண்ணினேன்.தொடர் ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
நமது மனம் வாடினாலும் பிறர் மனதை மகிழச் செய்ய வேண்டும்.
பகிர்ந்து வாழ்; மகிழ்ந்து பணி செய் ;
என்ற விருது வாக்கை வாழ்க்கையாக்குகிறேன். காசா பணமா சிரிப்பு தானங்க சும்மா சிரிங்க . அதிகமா இல்லை, அளவா! சரியா?
புன்னகை செய் மனமே...............
Saturday, 5 April 2014
உறவுகள் உன்னதமானவை.
உறவு- உறவாடுவது,உடனிருப்பது. உள்ளம் ஒன்றி உறவாடுவதே உறவு. உறவு மிகவும் வலிமையானது. இதை உணர்த்தத்தானோ என்னவோ உறவில் ற என்ற வல்லின ற கரம் இடம்பெற்றிருக்கிறது. நம்முடைய உறவுகளான அம்மா, அப்பா, சகோதரர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருமே இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட மிகச் சிறந்ந பரிசுகள். பிறந்தது முதல் இன்று வரை உறவென்னும் பரிசுகளைப் பெற்றுக் கொண்டு தான் இருக்கிறோம். சிலவற்றை விரும்பிப் பெறுகிறோம். சிலவற்றைப் பெற்ற பின் விரும்புகிறோம். சிலர் உறவுகளை
'' ஆணின் நட்பு ஆயுள் உள்ளவரை
பெண்ணின் நட்பு பந்தக்கால் நாட்டும் வரை''
என்று விமர்சிப்பதுண்டு.இதில் எனக்கு சிரிதும் உடன்பாடு இல்லை. உறவுகள் உண்மையானவை , உன்னதமானவை அவை உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும். அவை ஆண் பெண் என்று பார்த்து வருவதில்லை. அது உள்ளம் சார்ந்தது. சிலரைப் பார்த்தவுடன் பிடிக்கிறது. பேசத் தோன்றுகிறது . இவை எதனால்? உறவால்....
உறவுகளைத் தேடித் தேடி நாம் பெற வேண்டியதில்லை. அவை நம்மைத் தேடி வரும். நாம் செய்ய வேண்டியது எல்லாம் அதனைத் தக்க வைத்துக் கொள்வது மட்டுமே. பயணத்தில் பக்கத்து இருக்கையில் பயணம் செய்பவர்.
வழி கேட்டு வருந்தி நிற்கையில் வழி காட்டுபவர்.
பார்த்தவுடன் புன்னகைத்து மகிழ்வூட்டுபவர்.
என்று அனுதினமும் நாம் உறவுகளால் உரமூட்டப்படுகிறோம். 7 மாதங்களூக்குப் பிறகு 90 வயது மதிக்கத்தக்க ஓர் மனிதரை மீண்டும் பார்க்க நேர்ந்தது. கண்டவுடன் கண்கலங்கினார். வயோதிகர், உடல் நலமில்லாதவர், தனியாய் பேருந்தில் பயணம் செய்து என்னைப் பார்க்க வந்திருக்கிறார்.நினைக்கும்போதே மனம் என்னவோ பண்ணியது.
அவர் சொன்னது ''நீயும் நானும் தந்தையும் மகளுமாய் முன்பு இரு ந்திருப்போம். அது மீண்டும் தொடர்கிறது'' ஆம் நாம் ச ந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒர் விதத்தில் நமக்கு உறவினர்களே. எனவே எல்லா மனிதர்களையும் நம் உறவுகளாய் நினைத்துக் கொண்டாடுவோம். ஏனெனில் உறவுகள் உன்னதமானவை, உண்மையானவை. பெற்ற உறவுகளைப் பேணிக்காப்போம்
Thursday, 3 April 2014


இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...