அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும் என்று தொடங்கும் வள்ளுவனின் வாக்கிற்கு வாழ்க்கை விளக்கம் கொடுத்தவர்கள் எம் மரியின் ஊழியர் சபை ஏழு புனிதர்கள்.
இல்லறம் தவிர்த்து , இறையோடு மகிழ்ந்து,
தனிமையில் நிலைத்து, தபத்தில் சிறந்து,
துறவை தூய்மையாக போற்றியவர்கள். துற + வு , துற அனைத்தையும் அகிலத்தையும். வு அக,புறச்செயல்களை ஒப்புமையாக்கு என்பதன் அடிப்படையிலேயே துறவு என்ற வார்த்தை உருவானது. அகத்தில் உள்ள மாசுகளையும் புறச்செயல்களான தீயவற்றையும் கைவிட்டு தவிர்த்து வாழ்பவரே உண்மையான துறவி. இத்தகைய துறவு வாழ்வை செம்மையாக வாழ்ந்து செழிப்பான பல பண்பு நலன்களை நமக்கு விட்டு சென்றவர்கள் நம் புனிதர்கள் . இவர்களின் பெருவிழா மகிழ்வில் திளைத்திருக்கும் இவ்வேளையில்
நம் மகிழ்விற்கு மகிழ்வு சேர்க்க பொற்குடத்திற்கு பொட்டிட்டு பொழிவு சேர்க்க திருவிழா வாழ்த்து சொல்ல வருகின்றார். எம் புனித வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை தலைமை அன்னை அருட்சகோதரி முனைவர் டெக்லா மேரி அவர்கள். புத்தம் புதிய சிந்தனைகளுடன் புதியன படைக்கும் ஆற்றலுடன் சபையின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் நம் சகோதரி பற்றி சில கருத்துக்கள்..
வரலாறு படிப்பதை விட வரலாறு படைப்பதே மேல் என்றார் ஜவஹர்லால் நேரு. இவர் வரலாறு படித்ததோடு மட்டுமல்லாமல் அதில் வரலாறு படைத்தவரும் கூட.
முத்துக்குளித்துறையில் போர்த்துக்கீசியர்கள் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்ற முழுமை முத்து.
முப்பது வருடம் பேராசிரியராக தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் பணியாற்றியவர்.
நான்கு வருடங்கள் அதே கல்லூரியின் முதல்வராக இருந்து திறம்பட செயல்பட்டவர்.
மூன்று வருடங்கள் மரிய நட்சத்திர மாநிலத்தின் தலைவராக இருந்து மகத்தான பணிகள் செய்தவர்.
சிங்காரமாய் சிறகடிக்க வேண்டியவர்கள் சிறு நொடி உணர்ச்சி பெருக்கால் சிறை செல்கின்றனர். அத்தகைய சிறைவாசிகளை சந்தித்து/ சிந்தித்து சிறக்க/ செயல்பட/ உத்வேகமளிக்கும் சிறைப்பணியை சிரித்த முகத்துடன் செய்தவர்.
சரிந்து கிடக்கும் புத்தகங்கள் நிமிர்ந்து நின்றவர்களின் வாழ்க்கை வரலாறு என்பதற்கேற்ப, தன்னுடைய வழிகாட்டுதலால் இதுவரை 8 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற வழிவகுத்தவர்.
வரலாற்று ஆர்வலராக ஆய்வாளராக இருந்தாலும் மறைப்பணியை மகத்தான பணியாக எண்ணியவர்.
தமிழ் ஆங்கிலம் போர்த்துக்கீசிய மொழிகளில் புலமை பெற்றவர்.
இன்றைய நவீன சூழலுக்கு ஏற்றவாறு மறைக்கல்வியை மாணவர்களுக்கு மகிழ்வுடன் பயிற்றுவித்தவர். தன்னுடைய தொடர் அலுவலிலும், பணிப் பளுவினிலும் நமக்காக நேரம் ஒதுக்கி வாஞ்சையுடன் வாழ்த்து கூற வருகை தருகின்றார். அருட்சகோதரி டெக்லா மேரி அவர்கள் புனித வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை தலைமை இல்லமான சென்னை நுங்கம்பாக்கத்திலிருந்து.
https://www.youtube.com/watch? v=dnqOKstbL1k
மனதை நேர்ப் படுத்தி உடலை சீர்படுத்தி, ஆன்மாவை தூய்மைபடுத்தி வாழ்ந்த நம் மரியின் ஊழியர் சபை ஏழு புனிதர்களின் திருவிழா இன்று. பந்தயத்தில் பங்கேற்பவர் பல பயிற்சிகளை மேற்கொண்டு போட்டியில் வெற்றி பெற்று பரிசினைப் பெறுவர்.
அது போல அழைத்தலில் மேன்மை கொண்டு, அன்னை மரி பக்தியில் மிளிர்ந்து, குழு வாழ்வில் இனிமை கண்டு, செப வாழ்வில் ஊக்கம் பேற்று, பணி வாழ்வை பாசமுடன்செய்தவர்கள். செபம், தபம் என அனைத்து பயிற்சிகளையும் முறையாக கற்று விண்ணக வாழ்வை இறுதிபரிசாக பெற்று வெற்றி பெற்றவர்கள் நம் புனிதர்கள்.
கசப்பு இல்லாவிடில் இனிப்புக்கு மகிமை இல்லை.
துன்பம் வராவிடில் இன்பத்திற்கு மகத்துவம் இல்லை.
தோல்வி இல்லாவிடில் வெற்றிக்கு வரலாறு இல்லை.
நம் ஏழு புனிதர்களின் வாழ்வு எளிமையான வாழ்வு. ஆனால் ஏற்றம் தரும் வாழ்வு.
புகழ் தேடா வாழ்வு ஆனால் புண்ணிய வாழ்வு.
மறைந்த வாழ்வு ஆனால் மகத்தான வாழ்வு.
இவர்களின் வாழ்வை போல் நமது வாழ்வும் குன்றின் மேல் இட்ட விளக்காக குன்றாமல் சுடர் விட முயற்சிப்போம்.
பயந்தால் பஞ்சு கூட பாரம் தான் இணைந்தால் இரும்பு கூட இறகு தான். நம் சபையின் வரலாறு அறிவோம் வரலாறாய் வாழ்வோம்.
வசைகளையும் இசைகளாய் ஏற்று வலம் வரும்
வாழும் புனிதர்களாய்/ வாழ்ந்திட முயல்வோம். அனைவருக்கும் இனிய மரியின் ஊழியர் சபையின் ஏழு புனிதர்கள் திரு நாள் வாழ்த்துக்கள்.
மனதை நேர்ப் படுத்தி உடலை சீர்படுத்தி, ஆன்மாவை தூய்மைபடுத்தி வாழ்ந்த நம் மரியின் ஊழியர் சபை ஏழு புனிதர்களின் திருவிழா இன்று. பந்தயத்தில் பங்கேற்பவர் பல பயிற்சிகளை மேற்கொண்டு போட்டியில் வெற்றி பெற்று பரிசினைப் பெறுவர்.
அது போல அழைத்தலில் மேன்மை கொண்டு, அன்னை மரி பக்தியில் மிளிர்ந்து, குழு வாழ்வில் இனிமை கண்டு, செப வாழ்வில் ஊக்கம் பேற்று, பணி வாழ்வை பாசமுடன்செய்தவர்கள். செபம், தபம் என அனைத்து பயிற்சிகளையும் முறையாக கற்று விண்ணக வாழ்வை இறுதிபரிசாக பெற்று வெற்றி பெற்றவர்கள் நம் புனிதர்கள்.
கசப்பு இல்லாவிடில் இனிப்புக்கு மகிமை இல்லை.
துன்பம் வராவிடில் இன்பத்திற்கு மகத்துவம் இல்லை.
தோல்வி இல்லாவிடில் வெற்றிக்கு வரலாறு இல்லை.
நம் ஏழு புனிதர்களின் வாழ்வு எளிமையான வாழ்வு. ஆனால் ஏற்றம் தரும் வாழ்வு.
புகழ் தேடா வாழ்வு ஆனால் புண்ணிய வாழ்வு.
மறைந்த வாழ்வு ஆனால் மகத்தான வாழ்வு.
இவர்களின் வாழ்வை போல் நமது வாழ்வும் குன்றின் மேல் இட்ட விளக்காக குன்றாமல் சுடர் விட முயற்சிப்போம்.
பயந்தால் பஞ்சு கூட பாரம் தான் இணைந்தால் இரும்பு கூட இறகு தான். நம் சபையின் வரலாறு அறிவோம் வரலாறாய் வாழ்வோம்.
வசைகளையும் இசைகளாய் ஏற்று வலம் வரும்
வாழும் புனிதர்களாய்/ வாழ்ந்திட முயல்வோம். அனைவருக்கும் இனிய மரியின் ஊழியர் சபையின் ஏழு புனிதர்கள் திரு நாள் வாழ்த்துக்கள்.