கூட்டு வாழ்வின் மகிமையை காகங்களிடம் கற்றுக் கொள்ளலாம். ஒன்றை அழைத்தால் ஓரினமே ஒன்று திரண்டு விடும். பகிர்ந்துண்டு பல்லுயிர் ஒம்பும் பண்பு கொண்டு வாழ்வே நாம் பரமனால் படைக்கப்பட்டுள்ளோம். குழுமவாழ்வு வாழும் துறவிகள் துறவறத்தை போதிக்கவில்லை அவர்கள் துறவு வாழ்வை வாழ்ந்து காட்டுகிறார்கள். ஒன்றாய் இணைந்து ஓரிடத்தில் இருப்பது மட்டுமல்ல குழும வாழ்வு. ஒருமித்த கருத்துடன் இணைந்து செயல்படுவதே கூட்டு வாழ்வு என்று இவ்வுலகிற்கு எடுத்துரைத்தவர்கள் எம் மரியின் ஊழியர் சபை புனிதர்கள். தொடக்க கால சீடர்களைப் போல ஒரே உள்ளமும் ஒரே உயிரும் கொண்டு ஒரு மனப்பட்டு வாழ்ந்தவர்கள். அவர்களில் ஒருவரான இன்றைய நவநாளில் நாம் நினைவு கூறும் புனிதர் புனித ஹியூக். இவரைப் பற்றியும் இவரின் குழு வாழ்வு எத்தகையதொரு உத்வேகத்தை நமக்கு தருகின்றது என்பது பற்றியும் நமக்கு எடுத்துரைக்க வருகின்றார் அருட்தந்தை சவரி அவர்கள் ரோமையில் உள்ள நம் சபையின் தலைமை இல்லத்திலிருந்து.
https://www.youtube.com/watch?
ஆயிரம் சொந்தம் நம்மைத் தேடி வரும் ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல நண்பர்கள். துறவற குழுவில் இறைவனால் கொடுக்கப்பட்ட சொந்தங்களை நண்பர்களாக்கி நட்பிற்கு இலக்கணமாகவும் குழு வாழ்விற்கு இலக்கியமாகவும் தன் வாழ்வை மாற்றியவர் புனித ஹியூக் . இவர் நமக்கு காட்டிச் சென்ற வழியைப் பின்பற்றி நம் உடன் சகோதர சகோதரிகளை முழு மனதுடன் நிறை குறையோடு ஏற்று அன்பு செய்வோம். காலம் கருணை திறமை என அனைத்தையும் குழுவில் பகிர்ந்து கிறிஸ்துவின் சீடர்கள் நாம் என்பதை இவ்வுலகிற்கு இனிதே எடுத்துரைப்போம்.