கடவுளை நெருங்க உதவுவது ஜெபம்.
பெற்ற நன்மைக்கு நன்றி நவில்வது ஜெபம்.இறைப் புகழ் பாட வைப்பது ஜெபம்.
பாவமன்னிப்புக்கு வழிகாட்டுவது ஜெபம். ஜெபமின்றி இறை வழிபாடின்றி இவ்வுலகில் எதுவுமில்லை. ஓருயிர் முதல் ஆறுயிர் வரை அனைத்தும் படைத்த இறைவனை தத்தம் மொழியால் வாழ்த்தி வழிபடுகின்றன. தனிமையில் செபித்து தன்னிகரில்லா தலைவனாய் திகழ்ந்தவர்களும் உண்டு. குடும்பமாக கூடி செபித்து கோடி நன்மைகள் பெற்றவரும் உண்டு. இவர்களுக்கு மத்தியில் தனிமையையும் அமைதியையும் தங்களின் சொத்தாக கொண்டு இறைப்புகழ் பாடி இறைவனோடு நெருங்கி உரையாடி உறவாடியவர்கள் நம் மரியின் ஊழியர் சபை புனிதர்கள். செபமே வெற்றி தரும் என்பதை தங்களது வாழ்வால் எடுத்துரைத்து மகிழ்ந்த ஏழு புனிதர்களில் ஒருவரான புனித அமதேயுஸ் பற்றியும் அவரது செப வாழ்வு நம்முடைய வாழ்விற்கு எவ்வளவு தேவை என்பதைப் பற்றியும் அறிவுறுத்த வருகிறார். அருட்சகோதரர் பிலிப். உரோமை இத்தாலி.
https://www.youtube.com/watch? v=gs6augzSLgE
சுய நலமில்லா செபம் சுவர்க்க வாசலின் வாசம் அறிய உதவும்.
பகைமை இல்லா செபம் பரஸ்பர அன்பு தன்னை வெளிப்படுத்தி மகிழும்.
வார்த்தை இல்லா மௌன செபம் வாழ்வின் அர்த்தம் உணர்த்தி விடும். செபம் துறவிகளாகிய நமக்கு மூச்சுக் காற்று போன்றது. உண்ண மறந்தாளும் மறப்போம் சுவாசிக்க மறக்க மாட்டோம். வாழ்வின் ஊற்றும் மையமும் இறைவன் தான் என்பதை செபத்தின் மூலம் உணர்ந்தவர் உணார்த்தியவர் நம் புனிதர் அமதேயுஸ் செபத்தின் வல்லமையினால் தலையில் அருட்கதிர் சுடர் விடும் அழகில் தோன்றும் இவர், செபம் என்னும் நங்கூரம் கொண்டு துறவு வாழ்வென்னும் கப்பலை இறைக்கடலில் நிற்க வைக்க சொல்கின்றார். ஆழ்கடலில் போடப்படும் நங்கூரம் ஆயிரக்கணக்கான பணிகளை செய்யும். நமது வாழ்வும் செப நங்கூரமிட்டு நற்பணிகளை செய்யட்டும்.
சுய நலமில்லா செபம் சுவர்க்க வாசலின் வாசம் அறிய உதவும்.
பகைமை இல்லா செபம் பரஸ்பர அன்பு தன்னை வெளிப்படுத்தி மகிழும்.
வார்த்தை இல்லா மௌன செபம் வாழ்வின் அர்த்தம் உணர்த்தி விடும். செபம் துறவிகளாகிய நமக்கு மூச்சுக் காற்று போன்றது. உண்ண மறந்தாளும் மறப்போம் சுவாசிக்க மறக்க மாட்டோம். வாழ்வின் ஊற்றும் மையமும் இறைவன் தான் என்பதை செபத்தின் மூலம் உணர்ந்தவர் உணார்த்தியவர் நம் புனிதர் அமதேயுஸ் செபத்தின் வல்லமையினால் தலையில் அருட்கதிர் சுடர் விடும் அழகில் தோன்றும் இவர், செபம் என்னும் நங்கூரம் கொண்டு துறவு வாழ்வென்னும் கப்பலை இறைக்கடலில் நிற்க வைக்க சொல்கின்றார். ஆழ்கடலில் போடப்படும் நங்கூரம் ஆயிரக்கணக்கான பணிகளை செய்யும். நமது வாழ்வும் செப நங்கூரமிட்டு நற்பணிகளை செய்யட்டும்.