அழைக்கப்பட்டோர் பலர் தேர்ந்தெடுக்கப் பட்டோர் சிலர். அவ்வகையில் அன்னை மரி மேல் கொண்ட அன்பினால் ஈர்க்கப்பட்டு அனைத்தையும் துறந்தவர்கள் தான் இன்று நாம் நவனாள் சிறப்பிக்கும் மரியின் ஊழியர் சபையின் ஏழு புனிதர்கள். அன்புப்பணி செய்ய ஆண்டவனிடமிருந்து வரும் அற்புத வாய்ப்பு அழைப்பு. ஒவ்வொருவரின் அழைப்பும் ஒராயிரம் அர்த்தம் சொல்லும் அதிலும் நம் புனிதர்களின் அழைப்பு நம்முடைய வாழ்விற்கு வழி சொல்லும்.
முதல் நாளான இன்று அழைத்தலின் மேன்மை குறித்தும் எழுவரில் முதல்வரான புனித பொன்பீலியூஸ் மொனால்டி என்பவரைப் பற்றியும் நமக்கு எடுத்துரைக்க வருகின்றார். அருட்தந்தை ஆரோக்கிய சாமி சபையின் முதல் இல்லமான இத்தாலி நாட்டில் உள்ள பிளாரன்ஸ் நகரின் மொன்தே செனாரியோ இல்லக் கோவிலில் இருந்து.https://www.youtube.com/watch? v=eVUX8DYtz8g&list= PLpKywdYWzcKuOzWHFoQzwxAmaG35m F7y4&index=2
தானே முன்னேறத் துடிப்பவன் இளைஞன்
தனது சிந்தனையால் பிறரை முன்னேற்றத் துடிப்பவன் கவிஞன்.
இவ்விரண்டையும் உருவாக்க உழைப்பவன் நல்லதொரு தலைவன்.
அவ்வகையில் தலைவனாய் தன்னை மாற்றி தன்னைப் போல் பிறரையும் உயர்த்தி தலைமைப் பண்பில் தலை சிறந்து விளங்கியவர் நம் புனிதர் பொன்பீலியூஸ். கையில் ஒரு ஏடோடும் தோள்பட்டையின் அருகில் ஒரு வெண்புறா இருப்பது போன்ற படங்கள் இவரை நமக்கு இன்னார் என்று எடுத்துரைக்கின்றன.
வெண்புறா தூய்மைக்கும் அமைதிக்கும் தூய ஆவிக்கும் இலக்கணம்.
சபையின் ஒழுங்குகளை தானும் கடைபிடித்து பிறரையும் கடைபிடிக்க செய்தவர். தூய்மை அமைதியை தூய ஆவியின் துணை கொண்டு பயிற்சித்து அழைத்தல் வாழ்வில் ஆழம் கண்டவர்.
சபையின் முதல் தலைவர் முத்தான தலைவர். இவரை மாதிரிகையாகக் கொண்டு நம்முடைய அழைத்தல் வாழ்வின் மேன்மையினை உணர்வோம். சபை ஒழுங்குகளில் உறுதியுடன் இருப்போம். அழைக்கப்பெற்றொம். பிறரையும் நம் வாழ்வால் சொல்லால் செயலால் அழைப்போம். அழைத்தலின் மேன்மையை அகிலமெங்கும் பறைசாற்றிடுவோம்.
தானே முன்னேறத் துடிப்பவன் இளைஞன்
தனது சிந்தனையால் பிறரை முன்னேற்றத் துடிப்பவன் கவிஞன்.
இவ்விரண்டையும் உருவாக்க உழைப்பவன் நல்லதொரு தலைவன்.
அவ்வகையில் தலைவனாய் தன்னை மாற்றி தன்னைப் போல் பிறரையும் உயர்த்தி தலைமைப் பண்பில் தலை சிறந்து விளங்கியவர் நம் புனிதர் பொன்பீலியூஸ். கையில் ஒரு ஏடோடும் தோள்பட்டையின் அருகில் ஒரு வெண்புறா இருப்பது போன்ற படங்கள் இவரை நமக்கு இன்னார் என்று எடுத்துரைக்கின்றன.
வெண்புறா தூய்மைக்கும் அமைதிக்கும் தூய ஆவிக்கும் இலக்கணம்.
சபையின் ஒழுங்குகளை தானும் கடைபிடித்து பிறரையும் கடைபிடிக்க செய்தவர். தூய்மை அமைதியை தூய ஆவியின் துணை கொண்டு பயிற்சித்து அழைத்தல் வாழ்வில் ஆழம் கண்டவர்.
சபையின் முதல் தலைவர் முத்தான தலைவர். இவரை மாதிரிகையாகக் கொண்டு நம்முடைய அழைத்தல் வாழ்வின் மேன்மையினை உணர்வோம். சபை ஒழுங்குகளில் உறுதியுடன் இருப்போம். அழைக்கப்பெற்றொம். பிறரையும் நம் வாழ்வால் சொல்லால் செயலால் அழைப்போம். அழைத்தலின் மேன்மையை அகிலமெங்கும் பறைசாற்றிடுவோம்.