Saturday, 23 April 2022

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்.

 இன்னைக்கு என்ன ஸ்பெஷல் ? வணக்கம் அன்பு உள்ளங்களே ஏப்ரல் 24 . தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம். 

பஞ்சாயத்து இதுல உள்ள முதல் பஞ்ச் கிறது ஐந்து என்ற எண்ணையும், யாத் கிறது மன்றம், பேரவை அல்லது கூட்டம் கிறதை குறிக்கிற ஒரு வழக்கு சொல்லையும் குறிக்குது. கிராமங்கள்ள மக்களுக்குள்ள ஏற்படுற பிரச்சனைகளே அவங்களே  கூடி தீர்த்துக்கிறதுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு தான் இந்த பஞ்சாயத்து ராஜ். இந்த வார்த்தை மகாத்மா காந்தி அவர்களால, பிரித்தானியா ஆட்சி காலத்துல உபயோகப்படுத்தப்பட்டது. கிராமங்களை அவர் அதிகமா விரும்புனதுனால பஞ்சாயத்து ராஜ் கிற இந்த  வார்த்தையே இந்த அமைப்புக்கான பெயரானது. தமிழ்ல இதை ஊராட்சினு சொல்றோம். மத்திய இந்தியாவில பஞ்சமண்டலங்கள், பீகார்ல கிராம ஜன பாதங்கள், இராஜஸ்தான்ல பஞ்ச குலங்கள்னு அழைக்கப்படுது.   கிராம மக்களுக்கு அதிகமான உதவிகளை செய்யணும் கிறது தான் மிக முக்கியமான காரணமா இருந்தது.   

உள்ளாட்சி அமைப்புகள் தங்களோட தேவைகளை வளர்ச்சியை திட்டமிட்டு நிறைவேற்றிக் கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. இந்த திட்டம் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களோட கனவு. அதனால திரு நரசிம்மராவ் அவர்களால 1992 ஏப்ரல் 24 ம் தேதி கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது. 

இந்த பஞ்சாயத்து ராஜ் திட்டத்தின் அடிப்படையில ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மூன்று அடுக்குகள்ல இயங்குது. மாவட்ட அளவில, வட்டார அளவில, கிராம ஊராட்சி அளவில. 

பஞ்சாயத்து முறை இருந்ததை நமக்கு சோழர் கால உத்திரமேருர் கல்வெட்டுகள்  குடவோலை முறை முலமா கிராம சபை மற்றும் வாரியத் தலைவர்கள் தேர்ந்த்தெடுக்கப்பட்டதை எடுத்து சொல்லுது. 1882 ரிப்பன் பிரபு காலத்தில தல சுய ஆட்சி திட்டம் மூலமா பஞ்சாயத்து சட்டம் பத்தியும் அறிய முடியுது. 

பஞ்சாய்த்து ராஜ் திட்டம் மூலமா மக்களுக்கு தேவையான 29 நலத்திட்டங்களை செய்ய முடியும். மாவட்டம் ஒன்றியம் கிராமம் நு மூனு பிரிவா அதிகாரங்களை பிரிச்சு செய்யுற ஒரு மிகச்சிறந்த அமைப்பு. மூணுல ஒரு பங்கு பெண் உறுப்பினர்கள் இருக்கிறாங்க. வருசத்துக்கு 4 முறை கூடி தங்களோட திட்டங்களை செய்யுறாங்க. சாலை வசதி, குடி தண்ணீர், தெரு விளக்கு, சுகாதாரம் , கல்வி, நூலகம், துப்புரவு, பூங்கா, பாதாள சாக்கடை, சிறிய பாலம் கட்டுதல், வீட்டு மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல், கிராம நூல்கங்களை பராமரித்தல், தொகுப்பு வீடுகள் கட்டுதல், விளையாட்டு மைதானங்களை நிறுவுதல் பராமரித்தம்  போன்ற பணிகளை இந்த அமைப்பு மூலமா செய்யுறாங்க. வரவு செலவு, திட்டம் பற்றிய விவாதம், மத்திய மாநில அரசுகள் கிட்ட இருந்து நிதி பெற்று பணி செய்ய திட்டம் நு முறையான திட்டங்கள் தீட்டி மக்கள் சேவை செய்யுற மகத்தான திட்டம். இது. நம்ம கட்டுற வீட்டு வரி, கேளிக்கை வரி, குடி நீர் வரி, விளம்பர வரி, மூலமா மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செஞ்சி கொடுக்கிறாங்க. இந்த குழு சரியா இயங்குதான்னு கவனிக்க ஆய்வு செய்ய கண்காணிக்க, தவறு செய்யுற இதன் தலைவர்களை மாத்துற நீக்குற அதிகாரம் மாவட்ட ஆட்சியர் கு இருக்கு. 

மத்திய மாநில அரசுகள் தங்களோட அதிகாரத்தை குறைச்சு கிட்டு மக்கள் கிட்ட தங்களோட அதிகாரத்தை பிரிச்சு பரவல் ஆக்குறது மூலமா மக்களுக்கு தேவையான உதவிகளும் நலத்திட்டங்களும் சீக்கிரமா கிடைக்கப்படணும் கிறது தான் இந்த திட்டத்தோட நோக்கம். மக்கள் தங்களோட ஊர்கள்ல அவங்களுக்கு நல்லா அறிமுகமான, சமூக தொண்டு செய்யுற ஆசையுள்ள மக்களை தலைவர்களா தேர்ந்தெடுக்கிறாங்க. பஞ்சாயத்து வலுவா திடமா இருந்தா தான் இந்த நாட்டோட அரசு வலிமையா இருக்கும்.

இந்த பஞ்சாயத்து ராஜ் திட்டம் முதன் முறையா 1992 ல 73 வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தின் படி கொண்டு வரப்பட்டது . இதோட மூன்றடுக்கு அமைப்பு முறைய ஏத்துக்கிட்டது ராஜஸ்தான். தமிழ்நாடு இரண்டு அடுக்கு முறைய ஏத்துக்கிட்டது. பஞ்சாயத்து ராஜ் திட்டத்துக்காக முதன் முதல்ல தேர்தல் நடந்தது மத்திய பிரதேச மாநிலத்துல. 1952 ல பல்வந்த்ராய் மேத்தாகுழு, 1977 அசோக் மேத்தா கமிட்டி, 1985 ல ஜிகேவி ராவ் கமிட்டி 1986 ல எல் எம் சிங்க்வி கமிட்டி நு பல கமிட்டி ல இந்த திட்டம் பற்றி பேசப்பட்டாலும் 1992 ல இருந்து தான் முறையா தேர்தல் வச்சு நடக்க ஆரம்பிச்சது. 

இந்தியா கிராமங்களில் வாழ்கிறது. கிராமம் உயர்ந்தால் நாடு முன்னேறும். நாட்டின் முதுகெலும்பு கிராமம். கிறதை உணர ஆரம்பிப்போம். கிராமங்களை ஒரே நாள்ல அழிச்சி நகரமாக மாற்றி விடலாம். ஆனால் நகரங்களை அழிச்சி பத்து வருசம் ஆனாலும் கிராமமாக மாற்ற முடியாது. அதனால கிராம மக்களுக்காக உருவாக்கப்பட்டு இயங்கிக்கிட்டு இருக்கிற இந்த அமைப்புக்காகவும் இந்த அமைப்பு மூலமா ஆர்வத்தோட பணி செஞ்சிகிட்டு இருக்குற எல்லா மக்களுக்கும் நம்மோட வாழ்த்துக்களையும் ஆதரவியும் கொடுப்போம். மக்கள் பணி செய்யுறவங்க மகத்தான இறைவன் பணி செய்யுறவங்கன்னு நினைச்சு அவங்களுக்கு நம்மோட உதவிகளையும் பரிந்துரைகளையும் கொடுப்போம். கண்ணுக்கு தெரியாத கிராமங்கள்ல இருந்துகிட்டு கடுமையா பணி செய்யுற எல்லா ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பணியாளர்கள் தொண்டர்கள் எல்லாத்துக்கும் இனிய ஊராட்சி ஒன்றிய தினம் பஞ்சாயத்து ராஜ் தின நல்வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு நல்ல நாள்ல இன்னைக்கு என்ன ஸ்பெஷல் வழியா உங்களை மீண்டும் சந்திக்கிறேன் நன்றி வணக்கம். 

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...