இன்னைக்கு என்ன ஸ்பெசல்? வணக்கம் அன்பு உள்ளங்களே மே 1 உலக தொழிலாளர்கள் தினம். கடின உழைப்பு கட்டாயம் பலன் தரும். அதற்கான காத்திருப்பு ஒரு நாள் வெற்றிதரும் நு சொல்வாங்க. அது மாதிரி கடினமா உழைக்கிற எல்லா தொழிலாளர்களுக்கான நாள் தான் இந்த உழைப்பாளர் தினம் அல்லது தொழிலாளர் தினம். இந்த நாள் கொண்டாடுறதுக்கான காரணம் வரலாறு என்னன்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க.
18 ம் நூற்றாண்டோட கடைசியிலயும் 19 ம் நூற்றாண்டோட தொடக்கத்திலயும் வேகமா வளர்ச்சி அடைந்த நாடுகள்ல தொழிலாளர்கள் 18 மணி நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டாங்க. இதை எதிர்த்து பல போராட்டங்களும் குரல்களும் கொடுக்க ஆரம்பிச்சி இங்கிலாந்துல சாசன இயக்கம் நு ஒன்னு 6 கோரிக்கைகளோட உருவாச்சி அதுல மிக முக்கியமான ஒன்னு 8 மணி நேர வேலை.
இதைத்தொடர்ந்து உலகம் முழுசும் பல போராட்டங்களும் ஊர்வலங்களும் ஏற்பட ஆரம்பிச்சது.
1830 ல பிரான்சில நெசவுத்தொழில் செஞ்சிட்டு இருந்த தொழிலாளிங்க 15 மணி நேரம் கட்டாயம் உழைக்க வேண்டியது இருந்தது. இது தொடர்பா 1834 ல ஜனநாயகம் மரணம் கிற கோசத்தை வச்சி கிளர்ச்சி நடந்து தோல்வியில முடிஞ்சது.
ஆஸ்திரேலியால 1856ல மெல்பர்ன் கட்டிட தொழிலாளர்கள் 8 மணி நேர வேலையை கோரிக்கையா முன்வச்சி வேலை நிறுத்தத்துல ஈடுபட்டு வெற்றி பெற்றாங்க.
ரஷ்யால சார் மன்னரோட ஆட்சியில ரஷ்ய தொழிலாளிகள் அதிகமான வேலைப்பளுனால கஷ்டப்பட்டபோ 1896 ல லெனின் தலைமையில் இதுக்கான பல போராட்டங்கள் நடந்துச்சு. இது தான் ரஷ்ய புரட்சிக்கு காரணமா அமைஞ்சது.
அமெரிக்கால 1832 ல பொஸ்டன் கப்பல் ல வேலை செஞ்ச தச்சுத்தொழிலாளர்கள் 10 மணி நேர வேலைய கோரிக்கையா முன் வச்சாங்க. இதே மாதிரி பென்சில்வேனியால நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள், இரயில்வே தொழிலாளர்கள் நு எல்லாரும் குறைவான வேலை நேரத்த வலியுறுத்தி 1877 வேலை நிறுத்தத்துல ஈடுபட்டாங்க. இதனால அமெரிக்கா தொழிலாளர் கூட்டமைப்பு நு ஒரு இயக்கம் உருவாக்கப்பட்டுச்சு. 1886 மே 1 நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு வலியுறுத்தி மே தினம் பிறக்க காரணமா இருந்தது. இந்த வேலை நிறுத்தத்துல தொழில் நகரங்களான சிகாகோ நியுயார்க், பிலடெல்பியா, மில்விக்கி சின்சினாட்டி பால்டிமோர் நு அமெரிக்கா முழுசும் மொத்தம் 1200 நிறுவனங்கள்ள இருந்து ஏறக்குறைய 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்றாங்க.
இந்தியால முதல் முறையா சென்னையில தான் தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டுச்சு. 1923 ல் பொதுவுடைமைவாதியும் தலை சிறந்த சீர்திருத்த வாதியுமான ம. சிங்காரவேலர் சென்னை உயர் நீதிமன்றம் பக்கத்துல உள்ள மெரினா கடற்கரையில முதல் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடி செங்கொடி ஏற்றினார்..
இந்த மே தினத்தை சிறப்பிக்கிற விதமா பல சிலைகள் நினைவுச்சின்னங்கள் உலகம் முழுசும் இருக்கு. நம்ம சென்னையில மெரினா கடற்கரையில அண்ணா சதுக்கம் எதிர்ல, 1959 ல தொழிலாளர் வெற்றி சின்னம் எழுப்பப்பட்ட்ச்சு. 1990 ல நேப்பியர் பூங்கா மே தினப் பூங்கானு பெயர் மாற்றப்ப்ட்டுச்சு. இதுபோல அமெரிக்க ஐக்கிய நாடுகள்ள, பியர்லஸ் கர்ல் ஸ்டசு, ஸ்பிரிட் ஆப் சொலிடரிடி ஸ்டசு, ஹைமார்கெட் டிரஜெடி ஸ்டசு உருவாச்சு.
இந்த தினம் கொண்டாடப்படுறதுகான காரணம் ஓய்வில்லாமல் உழைச்சிட்டு இருக்கிற தொழிலாளர்களுக்கு அவங்க உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கணும் கிறது, தான். தொழிலாளர்கள் எல்லாரும் தங்களோட உழைப்பை சுரண்டுற முதலாளிகளுக்கு எதிரா ஒண்ணு கூடணும்னு நினைச்சு இந்த தினத்துக்கு அடிக்கல் நாட்டியவர் கார்ல் மார்க்ஸ். உழைப்பு இல்லாம எந்த உயிரும் இல்லை சின்ன எறும்பு கூட அது தேவைக்கு உழைக்குது. ஆனா ஆறறிவு உள்ள மனுசன் தான் ஐந்தறீவு ஜீவனை விட மோசமா நடத்தப்படுறான் இதை தடுக்கணும் அவங்களுக்கான உரிமையையும் ஊதியத்தையும் அவங்க பெறணும்னு உருவாக்கப்பட்டது இந்த நாள்.
தற்போது இந்த தினம் கிட்டதட்ட 80 நாடுகள்ல கொண்டாடப்படுது. உழைப்பு கிறது எல்லாருக்கும் பொதுவானது. கந்தல் ஆடை கதர் சட்டை எது உடுத்தி வேலை செஞ்சாலும் வேலை வேலை தான் . அதிக சம்பளம் வாங்குறவன் குறைந்த சம்பளம் வாங்குறவன் கிற வித்தியாசத்தி வச்சி ஒருத்தரை நாம எடை போடக்கூடாது. அப்படிப்பட்ட மனநிலைய கட்டாயம் நாம் மாத்தணும். திருட்டு பொய் சட்டத்திற்கு புறம்பான செயல் இது இல்லாம செய்யப்படுற எல்லா வேலையும் சிறப்பான வேலை தான்.
அதனால் உலக தொழிலாளர்கள் தினம் கொண்டாடுற இந்த நாள்ல கஷ்டப்பட்டு வேலை செய்யுற ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் உடல் உள்ள நலன் கிடைக்கவும் அவங்க உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவும் வாழ்த்துவோம்.
இயக்கம் இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை . இதயம் இயங்கும் கடிகாரம் முதல் இந்த பூமி வரை எல்லாமே இயக்கத்தினால தான் இயல்பா இருக்கு.
தொழிலாளர்கள் கிற சக்கரத்தால தான் இந்த உலகம் இன்னும் இயங்கிக்கிட்டு இருக்கு. அவங்களோட வியர்வை துளிகள் புனிதமானது சொன்னால் கூட மிகையாகாது. உழைப்பை போற்றுவோம் உழைப்பாளர்களை பாதுகாப்போம். வாழ்த்துவோம் வாழவைப்போம்.
கடினமா உழைச்சு நாட்டையும் வீட்டையும் உயர்த்த துடிக்கிற ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் இனிய உழைப்பளர்கள் தின நல்வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு நல்ல நாள்ல இன்னைக்கு என்ன ஸ்பெஷல் வழியா உங்களை சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.