Friday, 1 April 2022
அமைதி.
நம் வாழ்க்கை தேடலில் நாம் தேடி கண்டடைய வேண்டிய மிகப் பெரிய பொக்கிசம் புதையல் அமைதி. அக அமைதி எனப்படும் உள் மன அமைதி, புற அமைதி எனப்படும் ஸ்யல் அமைதி . இந்த மன அமைதி இல்லாததால் வாழ்வில் எண்ணற்ற சிக்கல்களை சந்திப்பவர்கள் ஏராளம். செய்யும் வேலைகளில் கவனம் சிதறும். தாறுமாறாக தாராளமாக தவறுகள பிறக்கும் பிரச்சனைகள் ஏற்படும். ,மன அமைதி ஏற்பட நம் மனம் தெளிவாக இருக்க வேண்டும்.
சிகப்பு நிறத் தண்ணீர் நிறைந்த வாளிகள் இருவரிடம் கொடுக்கப் பட்டன. ஒருவர் கைகளால் தண்ணீரை வெளியேற்றி நல்ல தண்ணீரால் வாளியை நிரப்பினார். கை முழுவதும் சிகப்பு நிறம். மற்றொருவர் தண்ணீர்க் குழாய் அருகில் வாளியை வைத்து நீரால் நிரப்பினார். சில மணி நேரத்தில் சிகப்பு நிறம் தானாக மறைந்து வாளி முழுவதும் நல்ல நீரால் நிரம்பியது.
மனத்தின் கவலையை வெளியேற்ற வழி தேட வேண்டாம். நன்மைகளால் , மனதிற்கு மகிழ்வூட்டக் கூடிய நற்காரியங்களால் மனதை நிரப்புவோம். அப்புறம் பாருங்கள் என்றும் இனிமை, எதிலும் புதுமை,யாக நம் வாழ்வு இருக்கும்
அமைதி என்னும் கடலில் நம் உள்ளம் எனும் வாளியை போட்டு விட்டால் அதை விட சிறந்தது வேறு ஒன்றுமில்லை. வாழ்வது ஒருமுறை அதை சந்தோசமாக வாழ்ந்துவிட்டுப் போவோம்!!!!!!!!
மௌனத்தின் ஆற்றல் அளவிடற்கரியது.
மௌனம் சில நேரம் வெல்லும், சில நேரம் கொல்லும்.
மௌனம் காக்க வேண்டிய நேரத்தில் மௌனம் காப்பதும், பேச வேண்டிய நேரத்தில் பேசுவதும் நலம். இதனைச் செய்யாமல் இருப்பதால் தான் சில பிரச்சனைகளே ஏற்படுகின்றன.!!!! இவ்வுலகிலுள்ள அனைத்துமே மௌனத்தின் மூலமாகத்தான் உருவாகின்றன. பூக்கள் மலர்வது முதல் , மனிதன் உருவாவது வரை அனைத்துமே மௌனத்தில் தான். மௌனத்தின் மூலமாக பல ஆற்றல்களை நாம் பெறுகின்றோம். சொல்லப் போனால் ஆற்றல்களின் பெட்டகமே நாம் தாம் சிலரது அமைதியாக கோபத்துடன் இருப்பது போல் தோன்றும். அவ்வளவு எளிதாக நம்மால் நம் மனதை கட்டுக்குள் கொண்டு வர முடியாது அதற்கு சில பல பயிற்க்சிகள் தேவை. அமைதியிலும் ஆண்டவனின் அருளிலும் நாம் நிரப்பப்பட கொடுக்கப்பட்ட இந்த தவ நாட்களில் அமைதியில் அவரின் பிரசன்னம் உணரப்பழகுவோம். அமைதியாக இருப்பது கடினம் தான். ஆனால் அதிலும் ஒருசுவை உள்ளது. இந்த அமைதி கிடைக்கப்பெற்ற ஒவ்வொருவருமே வெற்றியாளர் தான். பேசிக் கொண்டே இருப்பதாலும் , பேசாமலே இருப்பதாலும் தானே பிரச்சனை. இயேசு அமைதியை நம் வாழ்வில் எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பதை அப்பட்டமாக எடுத்துஸ் சொன்னவர். எந்த இடத்தில் பேச வேண்டுமோ அங்கு பேசி , எங்கு அமைதி காக்க வேண்டுமோ அங்கு அமைதி காத்து வாழ்வின் மதிப்பீடுகளை நமக்கு விட்டுஸ் சென்றிருக்கிறார். விபச்சார பெண் கல்லால் எறியப்பட்ட போது அமைதியாய். அவரை சிறைபிடித்து சென்று விசாரித்து அடிக்கும் போது நான் சொன்னது தவறானால் என்ன தவறு என்று சொல் சரியானால் ஏன் என்னை அடித்தாய் என்று கேட்டு தன்னுடைய ஆளுமைத் தன்மையை அகிலத்திற்கு எடுத்துரைத்தவர். அதிகமாகக் கேள்; குறைவாகப் பேசு; என்பார்கள். நம்மில் சிலர் இதனை மாற்றிச் செய்வதனால் தான் வாழ்வில் ஏராளமான குளருபடிகள். இயேசு போல வாழ முயற்சிப்போம். கவலைகள் நம்மை சூழ்ந்தாலும் பிறருக்கு உதவுவோம். பிறரின் கவலைகளில் பங்கெடுப்போம். நமது கவலைகள் தானாக மாறும் மன அமைதி பிறக்கும். அமைதி பிறக்கும் மனதில் சந்தோசம் நிலைக்கும்.
மௌன மொழியை அமைதி மொழியை அன்பு மொழியைக் கற்று மகிழ்ச்சியாய் வாழ்வோம்; அப்போது, நம் உதடுகள் மட்டுமன்றி உள்ளமும் புன்னகை செய்யும்;
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...