Thursday, 31 March 2022

உலக அறிவிலிகள் தினம்.

இன்னைக்கு என்ன ஸ்பெசல் வணக்கம் அன்பு உள்ளங்களே ஏப்ரல் 1 உலக அறிவிலிகள் தினம். பேரைக் கேட்ட உடனே இது நமக்கான நாள் இல்லை னு நினைக்க தோணும். உன் சட்டையில மை. உன் காலுக்கு அடியில பூச்சி. அங்க பாரு உன்ன யாரோ கூப்பிடுறாங்கன்னு நம்ம சின்னவயசுல நிறைய பேர இந்த நாள்ல ஏமாத்தி இருப்போம். நாமளும் ரொம்ப கவனமா இருந்து யார் கிட்டயும் ஏமாறாம இருக்கணும்னு நினைப்போம். இப்படி நம்மள அறியாமலேயே நாம இந்த தினத்தைக் காரணமில்லாமலேயேக் கொண்டாடிட்டு இருக்கோம். ஏன் இந்த தினம் என்ன காரணத்துக்காக இந்த நாள் கொண்டாடப்படுதுனு பார்க்கலாம் வாங்க. இந்த நாள் கொண்டாடப்படுறதுக்கு பல காரணங்கள் சொல்லப்படுது அதுல ரொம்ப முக்கியமான எல்லாராலயும் ஏத்துக்குற மாதிரி இருக்குற மூணு விசயத்தை மட்டும் பார்ப்போம். 1466 பிலிப் மன்னனோட அரசவையில இருந்த விகடகவி மன்னனை தன்னுடைய சாமர்த்தியத்தால முட்டாளாக்கி பந்தயத்துல செயிச்சதுனால இந்த நாள முட்டாள்கள் தினமா கொண்டாடுறாங்களாம்.2வது 1562 போப் 13 கிரகோரியார் காலத்துல கொண்டு வரப்பட்ட கிரகோரியன் காலண்டர் முறைய நிறைய ஐரோப்பிய நாடுகள் தொடக்க காலத்துல ஏத்துக்கல அதுவரை ஜீலியன் காலண்டர் முறைப்படி ஏப்ரல் 1 ம் தேதியை தான் புத்தாண்டு தினமா கொண்டாடிட்டு வந்தாங்க. கிரகோரியன் காலண்டர் நடைமுறைக்கு வந்ததும் ஜனவரி 1 புத்தாண்டா மாறிச்சு. இத ஏத்துகாத மக்கள அறிவிலிகள் நு சொல்லி அவங்களை ஏமாத்த ஆரம்பிச்சாங்க. அவங்களை கேலி செஞ்சு நகைச்சுவையால சந்தோசப்படுத்த ஆரம்பிச்சாங்க. பூக்கூடையில் காகித பூ வச்சி ஏமாத்துறது சட்டையில் பின் பக்கம் மீன் வடிவ காகிதம் ஒட்டுறது நு நிறைய பண்ணாங்க 1852 ல பிரான்ச், 1660 ஸ்காட்லாந்து, 1700 ல டென்மார்க் ஜெர்மனி 1752 ல இங்கிலாந்துன்னு உலக மக்கள் எல்லாரும் அப்புறம் ஒவ்வொரு நாடும் கொஞ்சம் கொஞ்சமா இந்த முறைய ஏத்துக்க ஆரம்பிச்சாங்க. கிரகோரியன் காலண்டர் முறைய ஏத்துக்க ஆரம்பிச்சாங்க. தொடக்கத்துல மக்கள் இந்த முறைய ஏத்துக்காம இருந்ததுக்கு காரணம் இப்ப இருக்கிற மாதிரி தொடர்பு சாதனங்கள் அப்ப இல்லை. இன்னொன்னு எதையும் உடனே மாத்திக்கிற பக்குவத்துல மக்கள் இல்லை. பழசை மறக்காத பச்சை மண்ணா இருந்திருக்காங்க. அடுத்த காரணம் ஏப்ரல் மாசம் வசந்த காலம் நீரோடைகள்லயும் ஆறுகள்லயும் தண்ணி ஏராளமா வரும் அப்ப மீன் கள் அதிகமா கிடைச்சதால மீன் பிடி அதிகமா இருக்கும். மீங்கள் ஏமாத்துறதுனால எப்ரல் ஃபிஷ் நு தான் இந்த நாள் முதல்ல அழைக்கப்பட்டுருக்கு. மீங்கள ஏமாத்துன காலம் போய் இப்ப மனுசங்களை ஏமாத்திட்டு இருக்கோம். அப்புரம் இன்னொரு காரணம் அந்த காலத்துல சப்பரம் தூக்குறவங்களுக்கு உதவி செய்ய ஆள்கள் இருப்பாங்களாம். இந்த சப்பரம் தூக்குற ஆட்கள் சில இடங்கள்ல சப்பரத்தை இரக்கி வைக்க அல்லது நிறுத்த இந்த உதவியாளர்கள் தங்களோட கைகளால முட்டு கொடுப்பாங்களாம் அதனால இவங்கள முட்டு ஆள் நு கூப்பிட்டு இருக்காங்க. இவங்க இந்த முட்டு கொடுக்குற வேலைய தவிர வேற எந்த வேலையும் செய்ய தெரியாத அறிவிலிகளா இருந்திருக்காங்க . அதனால இப்படி பட்ட எண்ணம் கொண்டவர்களுக்காக அதாவது சொன்ன வேலைய தவிர வேற எந்த வேலையும் செய்ய தெரியாத அறிவிலிகளுக்காகவும் தான் இந்த நாளைக் கொண்டாடி இருக்காங்க. ஆக காரணங்கள் பல இருக்கு இந்த நாளைக் கொண்டாட ஆரம்பிச்சதுக்கு. ஆனா இதுக்கு மாற்று கண்டுபிடிக்கணும் ர இப்படி தேவை இல்லாம மனுசங்கள் ஒருத்தர ஒருத்தர் ஏமாத்தி வாழ்றாது நல்லது இல்லனு நினைச்ச நம்முடைய பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு 1957 ல இந்த நாள் மாற்றத்தின் நாளா பார்க்கப்படணும்னு அறிவிச்சாரு. அப்ப தான் இந்த காலணா அரையணா நாணய புழக்கத்தை மாத்தி தசம மதிப்பு அதாவது ருபாய் நாணய மதிப்பு கொண்டு வரப்பட்டுச்சாம். இந்த நாள் அறிவிலிகள் தின நாள் முதன் முதல்ல பிரான்சு நாட்டுல தான் கொண்டாடப்பட்டு இருக்கு. அதுக்கு அப்புறமா பரவி உலக நாடுகள் எல்லாமே இந்த நாளைக் கொண்டாடுறாங்க. அறிவிலிகள மாதிரி இந்த நாளோட உண்மை நிலை தெரியாம ஒருத்தர ஒருத்தர் ஏமாத்தி மகிழ்ச்சி அடையணும்னு நினைச்சோம்னா இந்த நாள் கட்டாயம் நமக்கானது தான். எதுவும் தெரியாத முட்டாள்களில்லை நாம. எல்லாம் இருந்தும் அதை தெரிந்துகொள்ள முயலாத அறிவிலிகள் போல சில நேரங்கள்ள இருப்போம். அதை மாத்தி நம்முடைய மாற்றத்திற்கான நாளா இந்த நாளை நாம மாத்தி அமைப்போம். முட்டாள்கள் அல்ல நாம் முற்றாள் அதாவது நிறைவானவர்கள் முழுமையானவரகள்னு நம்ம செயலால இந்த உலகத்துக்கு எடுத்துரைப்போம். மத்தவங்கள ஏமாத்தி மகிழ்ச்சி அடையிறத விட நம்மள மாத்தி மகிழ்ச்சி தர முயற்சிப்போம் முட்டாள் அல்ல முழு ஆளாக மாறுவோம். முழு மூச்சுடன் ஆக்கமுள்ள செயல்கள் செய்திடுவோம். மீண்டும் ஒரு நல்ல நால்ல இன்னைக்கு என்ன ஸ்பெசஹ்ல் வழியா உங்களை சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...