Thursday, 31 March 2022
உலக அறிவிலிகள் தினம்.
இன்னைக்கு என்ன ஸ்பெசல் வணக்கம் அன்பு உள்ளங்களே ஏப்ரல் 1 உலக அறிவிலிகள் தினம். பேரைக் கேட்ட உடனே இது நமக்கான நாள் இல்லை னு நினைக்க தோணும்.
உன் சட்டையில மை. உன் காலுக்கு அடியில பூச்சி. அங்க பாரு உன்ன யாரோ கூப்பிடுறாங்கன்னு நம்ம சின்னவயசுல நிறைய பேர இந்த நாள்ல ஏமாத்தி இருப்போம். நாமளும் ரொம்ப கவனமா இருந்து யார் கிட்டயும் ஏமாறாம இருக்கணும்னு நினைப்போம். இப்படி நம்மள அறியாமலேயே நாம இந்த தினத்தைக் காரணமில்லாமலேயேக் கொண்டாடிட்டு இருக்கோம். ஏன் இந்த தினம் என்ன காரணத்துக்காக இந்த நாள் கொண்டாடப்படுதுனு பார்க்கலாம் வாங்க.
இந்த நாள் கொண்டாடப்படுறதுக்கு பல காரணங்கள் சொல்லப்படுது அதுல ரொம்ப முக்கியமான எல்லாராலயும் ஏத்துக்குற மாதிரி இருக்குற மூணு விசயத்தை மட்டும் பார்ப்போம். 1466 பிலிப் மன்னனோட அரசவையில இருந்த விகடகவி மன்னனை தன்னுடைய சாமர்த்தியத்தால முட்டாளாக்கி பந்தயத்துல செயிச்சதுனால இந்த நாள முட்டாள்கள் தினமா கொண்டாடுறாங்களாம்.2வது 1562 போப் 13 கிரகோரியார் காலத்துல கொண்டு வரப்பட்ட கிரகோரியன் காலண்டர் முறைய நிறைய ஐரோப்பிய நாடுகள் தொடக்க காலத்துல ஏத்துக்கல அதுவரை ஜீலியன் காலண்டர் முறைப்படி ஏப்ரல் 1 ம் தேதியை தான் புத்தாண்டு தினமா கொண்டாடிட்டு வந்தாங்க. கிரகோரியன் காலண்டர் நடைமுறைக்கு வந்ததும் ஜனவரி 1 புத்தாண்டா மாறிச்சு. இத ஏத்துகாத மக்கள அறிவிலிகள் நு சொல்லி அவங்களை ஏமாத்த ஆரம்பிச்சாங்க. அவங்களை கேலி செஞ்சு நகைச்சுவையால சந்தோசப்படுத்த ஆரம்பிச்சாங்க. பூக்கூடையில் காகித பூ வச்சி ஏமாத்துறது சட்டையில் பின் பக்கம் மீன் வடிவ காகிதம் ஒட்டுறது நு நிறைய பண்ணாங்க 1852 ல பிரான்ச், 1660 ஸ்காட்லாந்து, 1700 ல டென்மார்க் ஜெர்மனி 1752 ல இங்கிலாந்துன்னு உலக மக்கள் எல்லாரும் அப்புறம் ஒவ்வொரு நாடும் கொஞ்சம் கொஞ்சமா இந்த முறைய ஏத்துக்க ஆரம்பிச்சாங்க. கிரகோரியன் காலண்டர் முறைய ஏத்துக்க ஆரம்பிச்சாங்க. தொடக்கத்துல மக்கள் இந்த முறைய ஏத்துக்காம இருந்ததுக்கு காரணம் இப்ப இருக்கிற மாதிரி தொடர்பு சாதனங்கள் அப்ப இல்லை. இன்னொன்னு எதையும் உடனே மாத்திக்கிற பக்குவத்துல மக்கள் இல்லை. பழசை மறக்காத பச்சை மண்ணா இருந்திருக்காங்க.
அடுத்த காரணம் ஏப்ரல் மாசம் வசந்த காலம் நீரோடைகள்லயும் ஆறுகள்லயும் தண்ணி ஏராளமா வரும் அப்ப மீன் கள் அதிகமா கிடைச்சதால மீன் பிடி அதிகமா இருக்கும். மீங்கள் ஏமாத்துறதுனால எப்ரல் ஃபிஷ் நு தான் இந்த நாள் முதல்ல அழைக்கப்பட்டுருக்கு. மீங்கள ஏமாத்துன காலம் போய் இப்ப மனுசங்களை ஏமாத்திட்டு இருக்கோம்.
அப்புரம் இன்னொரு காரணம் அந்த காலத்துல சப்பரம் தூக்குறவங்களுக்கு உதவி செய்ய ஆள்கள் இருப்பாங்களாம். இந்த சப்பரம் தூக்குற ஆட்கள் சில இடங்கள்ல சப்பரத்தை இரக்கி வைக்க அல்லது நிறுத்த இந்த உதவியாளர்கள் தங்களோட கைகளால முட்டு கொடுப்பாங்களாம் அதனால இவங்கள முட்டு ஆள் நு கூப்பிட்டு இருக்காங்க. இவங்க இந்த முட்டு கொடுக்குற வேலைய தவிர வேற எந்த வேலையும் செய்ய தெரியாத அறிவிலிகளா இருந்திருக்காங்க . அதனால இப்படி பட்ட எண்ணம் கொண்டவர்களுக்காக அதாவது சொன்ன வேலைய தவிர வேற எந்த வேலையும் செய்ய தெரியாத அறிவிலிகளுக்காகவும் தான் இந்த நாளைக் கொண்டாடி இருக்காங்க. ஆக காரணங்கள் பல இருக்கு இந்த நாளைக் கொண்டாட ஆரம்பிச்சதுக்கு. ஆனா இதுக்கு மாற்று கண்டுபிடிக்கணும்
ர இப்படி தேவை இல்லாம மனுசங்கள் ஒருத்தர ஒருத்தர் ஏமாத்தி வாழ்றாது நல்லது இல்லனு நினைச்ச நம்முடைய பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு 1957 ல இந்த நாள் மாற்றத்தின் நாளா பார்க்கப்படணும்னு அறிவிச்சாரு. அப்ப தான் இந்த காலணா அரையணா நாணய புழக்கத்தை மாத்தி தசம மதிப்பு அதாவது ருபாய் நாணய மதிப்பு கொண்டு வரப்பட்டுச்சாம்.
இந்த நாள் அறிவிலிகள் தின நாள் முதன் முதல்ல பிரான்சு நாட்டுல தான் கொண்டாடப்பட்டு இருக்கு. அதுக்கு அப்புறமா பரவி உலக நாடுகள் எல்லாமே இந்த நாளைக் கொண்டாடுறாங்க. அறிவிலிகள மாதிரி இந்த நாளோட உண்மை நிலை தெரியாம ஒருத்தர ஒருத்தர் ஏமாத்தி மகிழ்ச்சி அடையணும்னு நினைச்சோம்னா இந்த நாள் கட்டாயம் நமக்கானது தான். எதுவும் தெரியாத முட்டாள்களில்லை நாம. எல்லாம் இருந்தும் அதை தெரிந்துகொள்ள முயலாத அறிவிலிகள் போல சில நேரங்கள்ள இருப்போம். அதை மாத்தி நம்முடைய மாற்றத்திற்கான நாளா இந்த நாளை நாம மாத்தி அமைப்போம். முட்டாள்கள் அல்ல நாம் முற்றாள் அதாவது நிறைவானவர்கள் முழுமையானவரகள்னு நம்ம செயலால இந்த உலகத்துக்கு எடுத்துரைப்போம். மத்தவங்கள ஏமாத்தி மகிழ்ச்சி அடையிறத விட நம்மள மாத்தி மகிழ்ச்சி தர முயற்சிப்போம் முட்டாள் அல்ல முழு ஆளாக மாறுவோம். முழு மூச்சுடன் ஆக்கமுள்ள செயல்கள் செய்திடுவோம். மீண்டும் ஒரு நல்ல நால்ல இன்னைக்கு என்ன ஸ்பெசஹ்ல் வழியா உங்களை சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.
Wednesday, 30 March 2022
நன்றி உணர்வு
நன்றி உணர்வு
நன்மை செய்தல் நல்லவர் பண்பு. நல்லவர்களால் மட்டுமே இந்த உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது. நன்மை செய்பவர்கள் மிகக் குறைவானவர்கள். எனவே பெற்ற நன்மைக்கு நன்றி கூறும் பழக்கத்தை வளர்க்கும் போது நாமும் மகிழ்வடைகின்றோம். அதனை செய்தவரும் இன்னும் அதிக நன்மையினை பிறருக்கு செய்ய வேண்டும் என்ற தூண்டுதலினைப் பெறுகின்றார். இதனால் அவரை சுற்றி உள்ள மக்கள் ஊர் மாநிலம் நகரம் என சிறிதளவில் தொடங்கிய நற்செயல் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். அனைவரும் நன்மை செய்ய தூண்டும். உலகம் முழுதும் நன்றியினாலும் நன்மையினாலும் நிரப்பப்படும்.
நன்றி உணர்வு கொண்டவர்களாக நாம் இருப்பது மிகவும் நல்லது. நன்றி உணர்வு நம்மை வாழ்வின் உச்சத்திற்கு இட்டுச்செல்லும். தன் வாழ்வில் நடக்கும் அனைத்திற்கும் நன்றி சொல்பவர் அதிகப்படியான நன்மைகளை அடைகின்றார்கள் என்கிறது பிரபஞ்ச இரகசியம். நன்றியையும் பாராட்டையும் உடனடியாக தெரிவித்து விட வேண்டும். அவரவர்களுக்கு சொல்ல வேண்டிய நன்றியை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லும் போது அதற்கான மதிப்பும் தன்மையும் கூடுகிறது. நாம் சொல்லும் நன்றி தக்க சமயத்தில் நமக்கு இரட்டிப்பான நன்மையை திருப்பி தரக் கூடும். தவக்காலத்தின் இந்நாட்களில் நாம் நன்றியுள்ளவர்களாக வாழ இறைவன் அழைக்கின்றார். பத்து தொழுநோயாளர்களில் ஒருவர் திரும்பி வந்து நன்றி கூற மீதமுள்ளவர்கள் நலம் பெறவில்லையா அவர்கள் எங்கே என்று கேட்டவர் இன்று நாம் பெற்ற நன்மைகளுக்கு நன்றி கூற மறக்கும் போது நம்மையும் பார்த்து கேட்கிறார் என்னிடம் இருந்து நன்மைகள் எதுவும் பெறவில்லையா என்று. பெற்ற நன்மைக்கு நன்றி கூற முயற்சிப்போம். பெற இருக்கும் நன்மைகளையும் பெற்று விட்டதாக எண்ணி நன்றி கூறும் போது அதனை பெற எளிமையான சூழல் ஏற்படுவதாக அனுபவம் வாய்ந்த அறிஞர்கள் கூறுகின்றனர். அதனால் நன்றி சொல்லும் பண்பை நம்மில் வளர்த்துக் கொள்ள முயல்வோம்.
நன்றியை உண்மையாக சொல்வோம். பொய்யான நன்றிகள் நம் மதிப்பைக் குறைத்து விடக் கூடும்.
முணுமுணுக்காமல் வார்த்தைகளை விழுங்காமல் தெளிவாக திருத்தமாக இருக்க வேண்டும் நாம் கூறும் நன்றி.
நாம் நன்றி கூறுவதால் அடையும் மகிழ்ச்சியை நம்முடைய செயலில் வெளிப்படுத்த வேண்டும் அதற்கு மலர்ந்த முகத்தில் நம்முடைய நன்றி சொல்லப்பட வேண்டும்.
நன்றி சொல்பவரை நேருக்கு நேர் பார்த்து கண்களைப் பார்த்து சொல்ல வேண்டும். நாம் சொல்லும் நன்றி அவர் கண்கள் வழியே இதயத்திற்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும். தனிப்பட்ட நபருக்கு நன்றி சொல்லும் போது அவரது பெயரை உச்சரித்து சொல்லுதல் மிகுந்த பலனளிக்கும். சரியான நேரத்தை தெரிவு செய்து நன்றி சொல்தல் வேண்டும். சரியான இடத்தில் முறையாக சொல்லும் நன்றி நமக்கு வாழ்நாள் முழுவதற்குமான ஒரு சொத்தாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நாம் பிறந்தது முதல் இந்நாள் வரை நம்மை நன்மைகளால் நிரப்பிய இறைவனுக்கு உளமார நன்றி கூறுவோம். இன்னும் ஏராளமான நன்மைகளால் நாம் நிரப்பப்படுவோம். நன்றி என்னும் அருளினை நாமும் பெறுவோம் பிறரும் பெற வழிவகை செய்வோம்.
Sunday, 20 March 2022
குறை கூறும் பழக்கம்
குறை கூறும் பழக்கம்
எதிலும் குறை காண்பவர்களுக்கு ரசிக்க தெரியாது எதையும் ரசிப்பவர்களுக்கு குறைகளே தெரியாது. பிறரைப் பற்றி உன்னிடம் குறை கூறுபவர்கள் நாளை உன்னை பற்றியும் பிறரிடம் குறை கூறுவார்கள். குறை கூறும் பழக்கம் இயந்திரம் போல சிலருடைய மனங்களில் ஓடிக்கொண்டே இருக்கும். இப்படி குறை கூறுபவர்கள் நிறைவாக இல்லை நிறைந்த மனதுடையவர்களாக இல்லை என்றே எண்ண வேண்டும். குறை கூறுதல் ஒரு தொற்று நோய் போல ஒருவர் மற்றவரிடம் இருந்து எளிதில் பரவுகிறது. சிறு வயது முதலே இதற்கு நாம் பழக்கப்பட்டு விட்டோம். கல்லில் கால் மோதிக் கொண்டால் கல் என்னை இடித்து விட்டது என்று சொல்ல தொடங்குவதிலிருந்து ஆரம்பிக்கிறது நமது குறை கூறும் பழக்கம். நான் கல்லில் மோதிக்கொண்டேன் என்று சொல்ல தொடங்கும் போதே நம் எண்ணங்களும் ஒரு செயலை நாம் எந்த கோணத்தில் பார்க்கிறோம் என்பதும் மாறுபடும். அடுத்தவர்களை மட்டம் தட்டும் போது நம் தரம் உயர்ந்து விடுவதாக எண்ணியே பல நேரங்களில் அதனை செய்கின்றோம். உண்மையில் அடுத்தவர் மேல் உள்ள குறையைப் பெரிதாக எண்ணுகிறோம் என்றால் நமது குறையை நாம் மறைக்க எண்ணுகிறோம் என்றே அர்த்தம். நமக்கு பிடித்தவர்களை பற்றி நாம் ஒருபோதும் குறை சொல்வது கிடையாது. பிடிக்காத நபர்களையே அதிகமாக குறை சொல்கிறோம். நமக்கு அந்த நபரை பிடிக்கவில்லை என்பதை வெளிப்படையாக தெரிவிக்கிறோம். தன்னுடைய வளர்ச்சிக்காக, தன் உயர்ந்த நிலைமையை தக்க வைத்துக் கொள்ள, பிறரது மதிப்பைக் கெடுக்க குறை கூறுதல் செய்யப்படுகிறது. நம்முடைய அலுவலகப்பணிகளை மட்டுமல்ல குடும்ப உறவையும் சீர்குழைக்கும் சக்தி கொண்டது. நம்மைப்பற்றிய தவறான ஒரு புரிதலையும் பிறரிடம் ஏற்படுத்தும். நாம் குறை கூறும் பழக்கம் உடையவர்கள் என்று பிறர் உணர்ந்தால் அவர்கள் அடுத்த முறை எளிதில் நம்மை அணுக முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். பயத்தின் வேர்களிலிருந்து இந்த குறை சொல்தல் என்னும் பழக்கம் உருவாகிறது. எவனொருவன் தன்னை முழுமையாக நம்பாமல் செயல்படுகிறானோ அவன் பிறரைப் பற்றி குறை கூறுவான். ஈகோ தான் என்னும் முனைப்பு என்னும் ஆலமரத்தின் கிளைகள் என்று கூட சொல்லலாம். இதனை முளையிலேயே கிள்ளி களைந்து விடுதல் நம் வாழ்விற்கு நல்லது. இந்த குறை கூறும் பழக்கத்திலிருந்து விடுபட எளிமையான வாழ்வை நாம் மேற்கொள்ள வேண்டும். பொருள்களில் காட்டும் எளிமையை விட வாழ்வில் எளிமையை செயல்படுத்துதல் நன்று. நம்முடைய நடை உடை பாவனைகளில் எந்த விதமான மிடுக்கோ ஆடம்பரமோ இன்றி எளிமையாக பிறரிடம் பழகும் போது மிகவும் எளிமையான மனிதர் இவர் என்று எளிதில் பிறரால் அடையாளம் காட்டப்படுவோம். ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் பேசும் போது கூடுமானவரை நல்லதையே பேசுவோம். நம் வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகள் எதிரில் இருப்பவருக்கு மகிழ்வை, நல்லதை, ஆறுதலை மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட ஆரம்பிப்போம் நாளடைவில் இந்த குறை கூறும் பழக்கம் நம்மிடம் இருந்து அடியோடு மறைந்து விடும். தவக்காலத்தில் இருக்கும் நாம் நம்முடைய சொல்லால் செயலால் வாழ்வால் நாம் உண்மைக் கிறிஸ்தவர்கள் என்பதை எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றோம். பிறர் குறையைக்காண்பவன் அரை மனிதன் தன் குறையை காண்பவன் முழு மனிதன். உன் ஆள்காட்டி விரலால் பிறரின் குறையை சுட்டிக்காட்டும் பொழுது மீதமுள்ள நாங்கு விரல்களும் உன்னை குறிவைக்கின்றன என்பதை மறக்கதிருப்போம்.
எனவே திருத்தந்தை சொல்வது போல குறை கூறும் பழக்கத்தை விட்டொழித்து எளிமையான வாழ்வு வாழ முற்படுவோம்.
நாவடக்கம்
நாவு நம் உடலின் சிறிய உறுப்பு தான் என்றாலும் வீம்புகளை பேசும் நாவு நெருப்பைப் போன்றது. யாக்கோபு 3; 5
சின்ன செயல்கள் சின்ன வார்த்தைகள் சின்ன பாவங்கள் மனித வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆதாம் ஏவாளின் சின்ன கீழ்ப்படிதலின்மை உலக மக்கள் அனைவருக்கும் பாவத்தைக் கொண்டு வந்தது,
தாவீது அரசரின் சிறிய பாவம் அவருக்கு மன வேதனையையும் வருத்தத்தையும் ஆசீர்வாத இழப்பையும் தந்தது.
சிரியா தேசத்து பெண்ணின் சிறிய வார்த்தை நாமானுக்கு பெரிய விடுதலையை தந்தது. சிறுவனின் சிறிதளவு அப்பமும் மீனும் ஐயாயிரம் பேருக்கு உணவளிக்க வழிவகுத்தது. இப்படி விவிலியத்தில் சின்ன சின்ன செயல்கள் பெரிய பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. நன்மை செய்தவர் நன்மையையும் தீமை செய்தவர் தீமையையும் அனுபவிக்கின்றனர். பெரிய குதிரைக்கு சின்ன கடிவாளம், பெரிய கப்பலுக்கு சின்ன சுக்கான் போல நமது உடலுக்கு நம் நாவு. நம் உணர்வுகளையும், நினைவுகளையும் வார்த்தை மூலம் வெளிப்படுத்த உணவை ருசிக்க இறைவன் படைத்த அற்புதமான உறுப்பு. வாழ்வும் சாவும் நம் நாவிலே என்கின்றனர் அனுபவப்பட்ட அறிஞர்கள். நமது இதயத்தின் நிறைவையே வாய் பேசும். நமது இதயம் அன்பாலும் நல் எண்ணங்களாலும் நிரப்பப்பட்டிருந்தால் நல்லவை மட்டுமே நம் நாவிலிருந்து வெளிவரும்.
நாவின் பாவங்கள் என்று விவிலியத்தில் 18 விதமான செயல்கள் கூறப்படுகின்றன. அவைகள்
பொல்லாங்கு, சண்டை சச்சரவு, வஞ்சகம்,அவதூறு பேசுபவர்கள், கடவுளை இழித்துரைத்தல், செருக்கு, வீம்பு பாராட்டுதல், பெற்றோருக்கு கீழ்ப்படியாமை எதிர்த்து பேசுதல். சொல் தவறுதல், மதி கெட்டு உரையாடுதல் பாசமற்ற சொல், இரக்கம் இல்லாத சொல், பழி தூற்றுதல், கொள்ளையடிப்பவர்.
வெட்கக்கெட்ட பேச்சு, மடத்தனமான பேச்சு, பகடி பண்ணுதல்
பழிப்புரை வெட்கங்கெட்ட பேச்சு, வீண்விவாதம், புறங்கூறுதல்,
இவை அனைத்தும் நாவின் பாவங்களாக கருதப்படுகின்றன. வீண் வார்த்தைகளால் நம் வாழ்வை அழிக்காமல் நல்ல வார்த்தைகளை உபயோகப்படுத்துவோம். நம்முடைய நாவிலிருந்து வரும் வார்த்தைகள் நமக்கும் பிறருக்கும் பயனுள்ள வார்த்தைகளாக வாழ்வளிக்கும் வார்த்தைகளாக இருக்க முயற்சிப்போம்.
இயேசுவின் வார்த்தையினால் வாழ்வடைந்தவர்கள் பலர். அவரது வார்த்தை வல்லமை உடையதாய், அதிகாரமுடையதாய், மனிதனுடைய தேவையை சந்தித்து நிவர்த்தி செய்வதாய் கடவுளை மகிமைப்படுத்துவதாய் இருந்தது. நயீன் ஊர் கைம்பெண் மகன் அவரது ஒரு வார்த்தையினால் உயிர் பெற்றான். நூற்றுவர் தலைவன் மகள் உயிர் பெற்றது, பணியாளர் சுகம் பெற்றது, லாசர் உயிர் பிழைத்தது, இவை எல்லாம் அவருடைய வார்த்தையின் வலிமையினால் நிகழ்ந்தது. பரிசேயர் சதுசேயர் வாயை தம் வார்த்தை திறமையால் அடைத்தார். அவரது வார்த்தை நம்பிக்கையை புதுவாழ்வை, கொடுத்தது. நமது நாவும் அவரது நாவைப் போல செயல்பட முயல்வோம். நாவின் பாவங்களை விடுத்து நாவினால் பிறருக்கு பயனுள்ள பல செயல்கள் செய்திடுவோம். நாவடக்கம் கொண்டு நல் வாழ்வு வாழ்ந்திடுவோம்.
Saturday, 19 March 2022
வருத்தம்
மனித இனம் வீழ்வது வருத்தம் என்னும் கொடிய நோயினாலே. வருத்தம் இல்லா மனிதன் இல்லை. எப்போதாவது வருந்துபவர்கள் ஒரு சிலர் எப்போதுமே வருத்தத்தில் இருப்பவர்கள் ஒரு சிலர். மனதுக்கு பிடிக்காத நிகழ்வுகள், உறவைனர்களின் இழப்புக்கள், ஒருவர் மற்றவர் மேல் ஏற்படும் மனத்தாங்கல், ஆதங்கத்தால் நாம் எளிதில் வருத்தம் அடைகின்றோம். வருத்தம் அதிகமாக ஆகும் போது, கோப உணர்வு மேலோங்கி காணப்படும். திருத்தந்தை கூறும் தவக்கால வாழ்வியல் செயல்முறைகளில் மற்றொன்று வருத்தத்திற்கு பதிலாக நன்றி உணர்வுடன் இருப்பது. கோப உணர்விற்கு பதிலாக பொறுமையினைக் கையாள்வது. பொதுவாக நாம் அதிகமாக வருத்தம் அடைவது எதிர்காலம் குறித்ததாகவும், செய்த தவறை நினைத்து குற்ற உணர்விலும், பிறர் நமக்கு செய்த தீய செயல்கள், நம்முடன் இருந்தவர்களின் பிரிவு போன்றவற்றாலும் ஏற்படுகிறது. இந்த வருத்தங்கள் நியாயமானதாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக வருந்தும் போது நமது உடல் நிலையும் இதனால் பாதிக்கப்படுகிறது. கவலை படுவதினால் எவன் ஒருவனும் தலை முடியின் நீளத்தை கூட ஒரு முழம் கூட்டவோ குறைக்கவோ முடியாது என்பதை நன்கு உணர்வோம். கவலை கொள்வதாலோ வருத்தம் அடைவதாலோ நம்மை சூழ்ந்துள்ள நிலைமை மாறப்போவதில்லை. அதற்கு பதிலாக அந்த நேரத்தில் அந்த உணர்வை நம்மிடம் இருந்து அகற்ற நன்றி உணர்வையும் கடவுள் மீது அதிகமான பக்தியையும் வளர்த்துக் கொள்வோம். எப்போதும் நன்றி உணர்வுடன் இருக்கும் போது, நம்மில் வருத்தம் என்பது மறைந்து விடுகிறது. கடவுள் மீது அதிக நம்பிக்கை வைக்கும்போது, கவலை என்ற உணர்வு கரைந்துவிடுகிறது. கவலை நம் மகிழ்வை கரைக்கும் கரையான் போன்றது. கரையான் புற்று நம் வீட்டை அழித்து விடும். கவலை நம் மகிழ்வை அழித்து விடும். எனவே திருத்தந்தை சொல்வது போல வருத்தம் கவலை என்னும் நோயால் வருந்துவதை விடுத்து நன்றி உணர்வாலும் கடவுள் மேல் கொண்ட நம்பிக்கையாலும் நம் வாழ்வை வளப்படுத்துவோம். நன்றியுணர்வு உடையவர்களாக நாம் மாற நம்மை சுற்றிலும் நமக்கு பயன்படும் ஒவ்வொரு பொருளிலும் உணவிலும் நம் கவனத்தை செலுத்த வேண்டும். இந்த பொருள் அல்லது உணவு எனக்கு கிடைக்க யார் யாருடைய உழைப்பு தேவைப்பட்டது என்று நினைத்து நன்றி சொல்ல ஆரம்பித்தாலே போதும் . நாளடைவில் நன்றியுணர்வின் ஒட்டு மொத்த வடிவமாகவே நாம் மாறிவிடுவோம். நன்றி என்ற வார்த்தையின் மகத்துவம் அதனை நாம் உபயோகப்படுத்தும் போதும் நமக்கு பிறர் நன்றி சொல்லி நாம் பயன் பெறும் போதும் அறிந்து கொள்ளலாம். நம்மை வாட்டி வதைக்கும் வருத்தத்தை விட்டொழித்து நல்ல உணர்வையும் உத்வேகத்தையும் தரும் நன்றி உணர்வில் வளர்வோம். நாம் நன்றி சொல்ல பழக ஆரம்பித்தாலே போதும் வருத்தம் கவலை என்னும் மாய உணர்வு நம்மை விட்டு நீங்கி விடும். எனவே அன்பு உள்ளங்களே இந்த தவக்காலத்தில் இறைவன் நமக்கு செய்த எல்லா நன்மைகளையும் நினைத்து பார்த்து நன்றி உணர்வு கொண்டவர்களாக வாழ முற்படுவோம்.
Wednesday, 16 March 2022
மனமாற்றம்
மனமாற்றம் நம் வாழ்வை மாற்றிப் போடுகிற ஒரு அனுபவம். தவறுகள் கொடுத்த பாடங்களை வைத்து நம் வாழ்வை திருத்தி அமைக்க இறைவனால் கொடுக்கப்படும் ஒரு வாய்ப்பு. தவக்காலத்தின் இந்நாட்களில் நம் வாழ்வு நல்ல முறையில் மாற்றம் அடைய மன மாற்றம் பெற வேண்டும் என்பதையே நாம் எதிர்பார்க்கிறோம். மனதின் மாற்றங்களை சொற்களால் அல்ல செயல்களால் நிருபிக்க நம்மை அழைக்கின்றது இத்தவக்காலம். சாதாரண ஒரு மரக்கன்றை நடுபவர் அதன் வளர்ச்சியை ஒரு குறிப்பிட்ட நாட்களில் எதிர்பார்க்கிறார். அது வளர தன்னால் ஆன எல்லா விதமான நற்காரியங்களையும் செய்கின்றார். தண்ணீர் உரம் வெயில் என அதற்கு தேவையான அனைத்தும் அவரால் கொடுக்கப்படுவது தக்க சமயத்தில் அது பலன் கொடுப்பதற்கே. அது பலன் தர காலம் தாமதித்தால் அதனை வெட்டி களைய முற்படுவார். பலன் கொடுக்கும் வேறு ஒரு மரக்கன்றை அதன் இடத்தில் வைத்து அழகு பார்ப்பார். சாதாரண மனிதனுக்கே இவ்வளவு எதிர்பார்ப்புக்கள் இருக்கும் போது நம்மைப் படைத்த இறைவன் நம் ஒவ்வொருவரையும் படைத்தது பலனுள்ள வாழ்க்கை வாழவே. நற்செய்தி வாசகத்தில் இயேசு பலன் தராத அத்தி மரம் வெட்டி எறியப்பட்டு நெருப்பிலிடப்படும் என்கின்றார். ஆக மனமாற்றம் மனிதர்களாகிய நமக்கு கட்டாயம் தேவை. இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் பிறப்பின் நோக்கம் கட்டாயம் இருக்கும். நம்மால் செய்யப்பட வேண்டிய பணி ஒன்று எல்லோருக்கும் இருக்கிறது. நம் இடத்தை நம்மை தவிர வேறு ஒருவராலும் நிரப்ப முடியாது. நாம் செய்யாவிட்டால் அது விடுபட்ட இடமாக பணியாகத்தான் இருக்குமே தவிர, வேறு ஒருவரால் அதனை செய்ய முடியாது. வாழும் வாழ்க்கையை நல்ல விதமாக மாற்றி மகிழ்வாக வாழ முற்படுவோம்.
மனம் ஒன்று நினைக்க மதி ஒன்று நினைக்க மனிதன் மருகுவது மனமாற்றத்தை மட்டும் தான். மனமதில் மாற்றம் ஏற்பட்டால் மகிழ்வான ஏற்றம் வாழ்வில் நிலைக்கும். மனமாற்றம் ஏற்பட அமைதியாக அமர்ந்து மனதில் எழும் எண்ணங்களை கவனிக்க வேண்டும். அதன் ஆழத்தை உணர்ந்து அங்கேயே அதனை திருத்தும் போது வாழ்க்கைக்கான மாற்றம் நிகழும். பல நேரங்களில் நாம் செய்யும் செயல்கள் சரியா என்று சிந்தித்து பார்க்காததாலே பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற நிலைமை மாறி ஏமாற்றத்தினால், மனமாற்றம் அடையும் நிலை வராமல் பார்த்துக்கொள்வோம். மாற்றமுள்ள மனிதனே முழு மனிதன். நாம் படைக்கப்பட்டது மனமாற்றமடைந்து பலன் தரும் வாழ்வு வாழவே. மனம் மாறாத வாழ்வு வாழ்ந்தோமெனில் கனி தராத அத்தி மரம் போல நமது வாழ்வும் வெட்டி தீக்கிரையாக்கப்படும். வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் நம் தலைமுறை என்பதற்கேற்ப மனமாற்றமடைவோம். காட்சிப்பொருளாக இல்லாமல் கனி தரும் வாழ்வாக நம் வாழ்வு அமைய மனமாற்றம் அடைவோம். மகத்தான வாழ்க்கை வாழ்வோம்.
Friday, 11 March 2022
15. தவக்கால உண்டியல்;
உண்டி என்பதற்கு உணவு என்று பெயர். உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் உண்டி சுருக்குதல் பெண்டீர்க்கழகு என்பன தமிழில் இடம்பெறும் கூற்றுக்கள். உணவு மனிதனுக்கு மிக அத்தியாவசியமான அடிப்படையான ஒன்று. இந்த உணவானது எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் கிடைக்க வேண்டும் என்பது சராசரி மனிதனின் எதிர்பார்ப்பு. தன்னுடைய தேவைக்கு அதிகமாக இருப்பவற்றை அருகில் வசிக்கும் இல்லாதவருக்கு கொடுக்கும் வழக்கம் வந்தது. அதன் பின் உணவாக கொடுக்காமல் உணவிற்காக நாம் செலவழிக்கும் தொகையில் சிறு பகுதியை சேமித்து அதனை அவர்களுக்கு கொடுப்பது புழக்கத்தில் வந்தது. மேலும் பொதுவான காரியங்களுக்காகவும் பணம் சேமிக்கப்பட்டது.அவரவர் வீடுகளில் சேமிப்பதைக் காட்டிலும் மக்கள் அனைவருக்கும் பொதுவான இடமான ஆலயங்களில் காணிக்கையாக அளிக்கும் பழக்கமும் உருவானது.
இந்த உண்டியல் முறை கிரேக்க ரோமானிய நாகரிகத்தில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை அங்கு நடந்த அகழ்வாராயிச்சிகளில் கண்டெடுத்த காசு சேர்க்க பயன்படுத்தப்பட்ட உண்டியல்கள் தெளிவுபடுத்துகின்றன. களிமண் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட உண்டியல்கள் தான் தொடக்கத்திலிருந்தன. மத்திய காலத்தில் உண்டியல் செய்ய ஆரஞ்சு வண்ணக்களிமண் பயன்படுத்தப்பட்டது. அதன் பெயர் பிக் அது காலப்போக்கில் மருவி பிக்கி பங்க் என்றானது. அதன் அடிப்படையிலேயே உண்டியல்கள் பெரும்பாலும் பன்றி வடிவத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் வீண் செலவுகளை தவிர்க்கும் பழக்கத்தை உருவாக்கவும் கொண்டுவரப்பட்டது இந்த உண்டியல் முறை.
தவக்காலத்தில் நம்மில் காணப்படும் ஒறுத்தல் முயற்சிகளில் உண்டியல் முறை சிறப்பானது. நம்முடைய தேவையற்ற வீண் செலவுகளை குறைப்பதற்கும், இல்லாதவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்வதற்கும் இம்முறை வழிவகுக்கிறது. பங்கு மக்களால் ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நம்முடைய தவக்கால உண்டியல் பணம் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. கொடுங்கள் கொடுக்கப்படுவீர்கள். அமுக்கி குளுக்கி சரிந்து விழும்படி தாராளமாக நாம் பிறருக்கு செய்யும் பொழுது இறைவனும் நமக்கு தாராளமாக செய்வார். நிறைவுள்ள வானக தந்தையின் பிள்ளைகள் நாம் என்பதை நம்முடைய நிறைவான செயல்களால் வெளிப்படுத்துவோம். நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம். உயர்ந்த மனிதர்களாய் மாறுவோம்.
14. வெறுமையான பீடம்
தனிமை ஒன்றும் வெறுமை அல்ல நாம் விரும்பியவர்களுக்காக காத்திருக்கையில்.
ஆம் இத்தவக்காலம் முழுதும் நம்முடைய ஆலய பீடங்கள் பூக்களின்றி ஆடம்பர வேலைப்பாடுகள் இன்றி வெறுமையாக காட்சியளிக்கும். வெறுமை என்பது எளிமை. முழுமையான ஒன்றுமில்லாமை. இயற்பியல் விதிப்படி வெறுமையான இடத்திலும் காற்று இருக்கிறது. நம் ஆலயங்கள் பூக்கள் இன்றி ஆடம்பரங்கள் இன்றி இருக்கின்றன. ஆனால் வெளிப்படையான உண்மை இறைவன் அங்கு இருக்கிறார் உனக்காக இருக்கிறார் என்பதாகும். பூக்கள் ஆடம்பர வேலைப்பாடுகள் மகிழ்வின் அடையாளம். ஆனந்தத்தின் அடையாளம். இந்த மகிழ்வை ஆனந்தத்தை நான் இறைவனுக்காக தியாகம் செய்கின்றேன். ஆலய வெறுமையில் ஆண்டவனை நான் அதிகமாக உணர்கின்றேன் என்பதன் அடிப்படையிலேயே இந்த வெறுமையானது கடைபிடிக்கப்படுகிறது.
வசந்த காலம்தொடங்கும் முன் மரங்கள் தனது இலைகளை உதிர்த்து, வெறுமையாக தங்களை வெளிப்படுத்துகின்றன. பார்ப்போர் இதன் ஆயுட்காலம் முடிந்து விட்டது என்று எண்ணுவதில்லை. புதிய இலைகள் தோன்ற தன்னை தயார் படுத்துகிறதே என்றே எண்ணுவர். அது போல் தான் நம்முடைய இந்த தவக்கால வாழ்வும். நாம் நம்முடைய பழைய இயல்புகளை களைந்து, கிறிஸ்துவின் புதிய இயல்புகளால் நிரப்பப்பட இருக்கின்றோம் என்பதை உணர்த்தவே இந்த வெறுமை. இந்நாட்களில் சிலர் ஆடம்பரமாக உடை உடுத்துவதையும், பெண்கள் தங்களை அழகுபடுத்தும் பூ பொட்டினை தியாகம் செய்வதையும் காண்கிறோம். இறைவனுக்காக தங்களது உள்ளத்தளவில் மட்டுமன்று உடல் அளவிலும் வெறுமையை கடைபிடித்து வாழும் தவ மனிதர்கள் இவர்கள். பொருளற்ற வெறுமையும் உப்பு சப்பற்ற விரக்தியும் நம்மை பாதிக்கவிடாது, தாங்கியிருந்த பூக்களை உதிர விட்டு புதிய பூக்களின் வருகைக்காக காத்திருக்கும் மரங்கள் போல வெறுமையின் வெற்றியை கொண்டாட காத்திருப்போம். வெறுமை ஒன்றும் துன்பமில்லை நாம் விரும்பியவர்களுக்காக காத்திருக்கையில்.
13. கூடாரம்.
பொல்லாப்பு உனக்கு நேரிடாது வாதை உன் கூடாரத்தை அணுகாது என்னும் திருப்பாடல் வரிகள் முலம் நம்மை திடப்படுத்தும் இறைவனை தியானிக்க கூடாரத்தின் மகிமைனை அறிவோம். கூடாரம் பணி பொழுது போக்கு வேண்டுதல் நிமித்தம் தற்காலிகமாக போடப்படும் ஒரு சிறு வீடு. ஆக்கப் பணிகள் செய்ய ஆர்வமாக உருவாக்கப்படும் ஒரு இடம். இந்த தவக்காலத்தில் கூடாரம் அமைத்து இறைவனை தொழ, அவரோடு நெருங்கி உறவாட நாம் அழைக்கப்படுகிறோம். ஆலயம் சென்று நற்கருணைப் பேழையில் வாழும் இயேசுவை அடிக்கடி சந்தித்தலே இன்று நமக்கு அறிவுறுத்தப்படும் கூடாரம்.
கூடாரம் நிரந்தரமானது அல்ல. நாம் நமது ஆற்றலைப் புதுப்பிக்க பயன்படும் ஒரு ஆற்றல்ம் மையம். அந்த ஆற்றல் மையத்தில் இருந்து நாம் பெறும் சக்தி நம் வாழ்வை இன்னும் முன்னுக்கு கொண்டு வர உதவும்.
கூடாரம் அமைத்து செபிக்கும் பழக்கம் மோசே காலத்திலேயே தொடங்கிவிட்டது. அதற்கு முன் இஸ்ரயேல் மக்கள் வாழ்க்கை முறையே நாடோடிகளாக ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறிக் கொண்டே இருக்கும் நிலை. இறைவனை இயற்கையிலும் இறைவாக்கினர்களின் வடிவிலும் கண்டனர். கானான் தேசத்தை அடையும்வரை அவர்களின் நிலை அப்படித்தான் இருந்தது. அதன்பின் யாவே கடவுள் இஸ்ரயேல் மக்கள் தன்னை மிக நெருங்கி வர வேண்டும் என்பதை உணர்த்த சந்திப்பு கூடாரம் என்னும் அமைப்பை மோசே மூலம் உருவாக்கினார். இதனால் மக்கள் கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்பதை அதிகமாக உணரத்தொடங்கினர். கடவுள் வாழும் கூடாரம் புனிதமாக மதிக்கப்பட வேண்டும். அதனுள் நுழையும் முன் அக புற சுத்தம் மிக அவசியம், இறைவனை நெருங்க தனி செபம் மிக முக்கியம் என்பனவற்றை தாமாக அறிந்து கொள்ளத்தொடங்கினர். கூடாரத்தின் இறைவனை அமைதியில் சந்தித்து, தங்களுடைய தவறுகளுக்கு மன்னிப்பையும் எதிர்கால வாழ்க்கைக்கான ஆசீரையும் பெற்றனர். அவர்களின் வழியாக கடைபிடிக்கப்பட்ட சந்திப்பு கூடார முறை இன்று நாம் ஆலயம் அமைத்து ஆண்டவனின் ஆசீர் பெற வழிவகுத்தது.
எப்படி மலை ஏற்றம் செய்பவர் தனக்கு தேவையான சக்தியை கூடாரம் அமைத்து ஓய்வெடுத்து தன்னைத் தானே புதுப்பிது மீண்டும் தன் பயணத்தைத் தொடங்குவாரோ அது போல நாமும் நமது கூடாரத்தை உருவாக்க வேண்டும். நம்முடைய இந்த தவக்கால பயணம் பாஸ்கா என்னும் கொண்டாட்டத்தை இலக்காக அடைவதே. தனித்திருந்து, இறைவனை நற்கருணைப் பேழை என்னும் சந்திப்பு கூடாரத்தின் அடிக்கடி சந்தித்து செபித்து நம்மை நாமே புதுப்பித்துக் கொள்வோம். கூடாரம் என்னும் ஆற்றல் மையத்தில் இருந்து ஆற்றல் பெறுவோம். ஆண்டவனின் ஆசீரை அபரிமிதமாக பெற்று மகிழ்வோம்.
Thursday, 10 March 2022
12. செபம்.
நாம் இறைவனுடனும் இறைவன் நம்முடனும் பேசும் ஒரு வழிமுறை. ஒரு வழிச்சாலை அல்ல அது இருவழிச்சாலை. நாம் பேச அவர் பேச இருவரும் உரையாடி மகிழும் ஒரு இனிமையான நேரம். செபம் நமது வாழ்வின் அங்கம் ஆனால் , ஆசீர்வாதம் வாழ்வில் நிரந்தரமாகிவிடும். ஏதேனுக்கு வெளியே நெற்றி வியர்வை சிந்த ஆதாம் உழைத்தபோது கிடைத்த அனுபவமல்ல ஏதேனுக்கு உள்ளே குளிர்ச்சியான வேளையில் கடவுளோடு மகிழ்ந்த அனுபவம். தொடக்க நூல் முதல் திருவெளிப்பாடு வரை அனைத்தும் செபத்தின் வலிமையாலே நிகழ்ந்துள்ளன.
உழைக்கும் அனுபவமல்ல அது உறவாடும் அனுபவம்.
வேண்டுதல் கேட்டு கதறுவதல்ல , கவலைகளை களைந்து உதறுவது.
இறைவனை உலுக்குவதல்ல அவரை உயத்துவது.
வருந்தி அழுவல்ல நன்றியால் நிறைப்பது.
செபத்தை பற்றியும் செபிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை பற்றியும் விவிலியத்தில் பல குறிப்புக்கள் உள்ளன. இடைவிடாமல் செபியுங்கள் என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள். கவலைகளை கடவுளிடம் கொட்டி தீருங்கள் நிம்மதி அடையுங்கள். கடவுள் மேல் பாரத்தை வைத்து விடுவோம். அவர் பார்த்துக் கொள்வார் என்பன போன்ற பல இறைவார்த்தைகள் நமக்கு செபத்தின் மேன்மையை எடுத்துரைக்கின்றன.
செபம் செய்வதால் ஏற்படும் பலன்கள் ஏராளம்.
மன நிம்மதி, பிரச்சனைகளிலிருந்து விடுதலை, அதனை சமாளிக்க திடன், சரியான முடிவெடுக்கும் தன்மை, ஆறுதல், புத்திமதி, நல்லவை மட்டுமே செய்ய வேண்டும் என்ற உணர்வு, மன்னிப்பு, உதவும் குணம், மகிழ்ச்சி இறைவனோடு கொள்ளும் தனிப்பட்ட உறவு இவை அனைத்தும் செபிக்கின்ற உள்ளங்களுக்கு இறைவன் தரும் பரிசு.
எப்படி செபிக்க வேண்டும்?
திருப்பாடல் 65 . 2 நம் செபத்தைக் கேட்கின்ற கடவுள் எங்கின்றது. எனவே அவரை நம்பி அவர் நம் வானகத்தந்தை என்று வாஞ்சையோடும் உரிமையோடும் அழைத்து செபிக்க வேண்டும். வெறும் வேண்டுதல்களால் நிறைத்து விடாமல் நன்றியோடும் நிறைந்ததாய் இருக்க வேண்டும். இதயத்தின் உள் ஆழத்திலிருந்து செபிக்க வேண்டும். நாம் என்ன கேட்க போகிறோம் என்பதை அறிந்தவரிடத்தில் நாம் பேசுகிறோம். எனவே கேட்பது அனைத்தும் கிடைக்கப்பெற்று விட்டோம் என்ற நம்பிக்கையில் செபிக்க வேண்டும். நமக்காக மட்டும் இல்லாமல் பிறருக்காகவும் செபிக்க வேண்டும். இயேசுவின் பெயரால் நாம் கேட்கும் அனைத்தையும் எளிதில் பெற்றுக் கொள்கிறோம் என்பதை உணர்ந்து செபிக்க வேண்டும்.
செபம் செய்ய நமக்கு கற்றுக் கொடுத்தவர் இயேசு. தன்னை இவ்வுலகிற்கு அனுப்பிய இறைத்தந்தையோடு எல்லா நேரமும் செபத்தில் உறவாடினார். காலையில் மாலையில் கருக்கலில் இரவில் என்று செபத்தில் நிலைத்திருந்தார். எப்போதும் மக்கள் மத்தியில் அருஞ்செயல்கள் பல புரிந்தாலும் இறைவனோடு தனித்திருக்க அவர் மறந்ததில்லை. எப்படி செபிக்க வேண்டும் செபிக்க கற்றுதாரும் என்று கேட்டவர்களுக்கு அப்பா தந்தாய் என்று உரிமையோடு அழைத்து செபிக்க கற்றுக் கொடுத்தவர். எனவே தவக்காலத்தின் நாட்கள் இறைவனோடு நெருங்கி உறவாட நமக்கு கொடுக்கப்பட்ட நாட்கள் என்பதை உணர்ந்து செபத்தில் நிலைத்திருப்போம். செபத்தால் வாழ்வின் சோதனைகளை முறியடித்து சாதனை படைப்போம்.
Wednesday, 9 March 2022
தானம்
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் வானம் வழங்கா தெனின்.என்பார் திருவள்ளுவர். தானமு தவமும் இவ்வுலகில் நிலைத்து நிற்க மழை வேண்டும் என்பதை உணர்த்துகிறது இக்குறள். தானமும் தவமும் இல்லாவிடில் இத்தவக்காலம் சிறப்பு பெறாது என்கிறது நம் கத்தோலிக்க திருச்சபை. தானம் என்பது முன் பின் தெரியாத ஒருவருக்கு செய்யப்படும் ஒரு உதவி. இதைத்தான் தெரிந்து செய்தால் அது தர்மம் தெரியாமல் செய்தால் தானம் என்பார்கள்.
ஒவ்வொருவரும் அவரவர் பொருளாதார நிலை அடைப்படையில் பிறருக்கு தானம் செய்ய வேண்டும். சாரிட்டி என்று அழைக்கப்படும் ஆங்கில வார்த்தியயின் மூலப்பொருள் கரித்தா என்பதாகும். இதயம் அல்லது இதயத்திலிருந்து புறப்படும் ஒரு நற்செயல். முழுமையான அன்பும் அக்கறையும் கொண்டு செய்யப்படும் ஒரு செயல்.
தொடக்க திருச்சபை கிறிஸ்தவர்களின் வாழ்வே தானத்திலும் தர்மத்திலும் தான் நிலைத்திருந்தது. தங்களிடம் இருந்த அனைத்தையும் பொதுவில் போட்டு அவரவர்க்கு தேவையானதை பகிர்ந்து மகிழ்வுடன் வாழ்ந்தனர். எதிலும் குறைவு படாமல் நிறைவாக வாழ்ந்தனர். இயேசுவின் வாழ்வே தானம் தான் . தன்னுடைய வாழ்வையே நமக்கு தானமாக கொடுத்தவர் அவர். ஐந்து அப்பம் இரண்டு மீனை ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்தளித்ததும் இந்த தானத்தின் அடிப்படையிலேயே. தங்களிடம் இருந்ததை அனைவரும் அனைவரோடும் பகிரும்படி பணித்தார். அவர் தொடங்கிய அன்ன தானம் ஒருவர் பின் ஒருவராக அங்கு கூடியிருந்த அனைவரையும் செய்ய வைத்தது.
மனிதன் வாழ்வதற்கு ஆதாரமாக இருப்பது உணவு. எனவே தான் தானத்தில் சிறந்தது அன்ன தானம் என்கின்றனர். பொன் பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி அடைவதில்லை. ஆனால் ஒருவன் வேண்டும் என்று கேட்ட வாயால் போதும் என்று சொல்லி மனம் வயிறு நிறைந்து எழுவது உணவில் மட்டும்தான். அன்னதானம் இறையருளின் நிறைவு தரும். மஞ்சள் தானம் மங்களம் தரும். ஆடை தானம் பூரண மகிழ்வு தரும். நீர் தானம் நிம்மதி தரும். இப்படி நாம் செய்யும் தானங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலன் தரும். வாழ்க்கையில் நாம் நடக்க வேண்டும் என்று விரும்பும் அனைத்து செயல்களையும் நடத்திக் காட்டும் சக்தி தானத்திற்கு உண்டு. பசுமையான காய்கறிகள் பழங்கள் வாங்கி ஒருவேளை உணவு கூட உண்ண முடியாமல் தவிக்கும் மக்களுக்கு தானம் செய்யும் போது வாழ்க்கையின் உயர்விற்கு நாம் முன்னேறிச்செல்கின்றோம்.
இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்டதை இல்லாதவரோடு பகிர்கின்றோம். பகிரும் போது அது பாதியானாலும் பகிரப்பட்ட பின் அதன் பலன் இரண்டு மடங்காகிறது.
தானத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் செய்த தானத்தை எண்ணிக்கை வைக்ககூடாது. செய்ததை பிறரிடம் சொல்லவும் கூடாது. பணம் உணவோ உடையோ எது அதிகம் இருந்தாலும் அதை இல்லாதவரோடு பகிரும் குணத்தில் வளர்வோம். இத்தவக்காலத்தில் இருப்பதை இல்லாதவரோடு பகிர்வோம். தானங்கள் பல செய்து தரணி சிறக்க வாழ்வோம்.
அன்னதானம் புண்ணியம் சேர்க்கும். ரத்த தானம் உயிர் காக்கும். கல்வி தானம் தலைமுறை காக்கும் நிதானம் உன்னை காக்கும்.
தியானம் செய்தால் கூட கிடைக்காத மன நிம்மதி தானம் செய்யும் போது கிடைத்து விடுகிறது.
தொழிலாளர்களின் பாதுகாவலர். புனித வளனார்.
வீட்டை உயர்த்திட நாட்டை வளர்த்திட, நாளைய உலகம் நலமே உருவாகிட நன்றே உழைப்பவர் தொழிலாளி. வியர்வைத் துளிகளால் உலகை செதுக்கும் சிற்பிகள். உடலினை இயந்திரமாக்கி, உழைப்பினை உரமாக்கி, உலகத்தை இயங்க வைக்கும் தொழிலாளர்களுக்கு எல்லாம் முன் மாதிரிகையாய் பாதுகாவலராய் இருப்பவர் புனித வளனார். தச்சு வேலை செய்து தனித்தன்மையோடு திகழ்ந்தவர். இவரின் திருவிழாவினை நவநாட்களாக சிறப்பித்து மகிழ்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், தொழிலாளர்களின் பாதுகாவலர் புனித சூசையப்பர் என்னும் கருப்பொருளில் இன்றைய நாளில் நம்மை சிந்திக்க வைக்க வருகின்றார் வேலூர் மறைமாவட்ட பள்ளிகொண்டா பங்குத்தந்தை. அருட்தந்தை அற்புத்.
கடின உழைப்பு கட்டாயம் பலன் தரும். அதற்கான காத்திருப்பு ஒரு நாள் வெற்றி தரும். கடினமாக உழைத்தும் காத்திருந்தும் தன் மகிழ்வான வாழ்வால் மகத்தான காரியங்களை செய்தவர் புனித சூசை தந்தை. இன்று கல்லுடைப்பவர் முதல் கணிணி இயக்குபவர் வரை தொழிலாளர்களாக தங்கள் வாழ்வையும் உலகையும் செதுக்கும் அத்தனை உள்ளங்களையும் நினைத்து பார்த்து வாழ்த்துவோம். விடாமுயற்சியுடன் விஷ்வருப வெற்றி பெற காத்திருக்கும் அவர்களின் வாழ்வு தொழிலாளர்களின் பாதுகாவலாம் புனித சூசை தந்தையின் அருளாலும் ஆசீராலும் நிரம்பட்டும். தொடர்ந்து உழைப்போம். தொழிலாளர் உணர்வினை புரிவோம்.
தூய வளனார்.
பசிக்கும் முன்னே உணவளிப்பவள் தாய் என்றால் விழும் முன்னே கைகொடுப்பவர் தந்தை. தாயின் அன்பை பிறந்த பின் அறிந்து விடலாம் . தந்தையின் அன்பை அறிந்த பின் புது மனிதனாகவே பிறந்து விடலாம். தந்தைகளுள் சிறந்த தந்தையாய் இந்த தரணி சிறக்க வாழ்ந்து வாழ்வின் இலக்கணம் படைத்தவர் நம் சூசை தந்தை. தூய வளனார். எங்கும் வளமை எதிலும் வளமை எப்போதும் வளமை. வளமையையும் மகிழ்வையும் வற்றாமல் கொடுப்பவர். இவரது திருவிழாவினை நவ நாள் வழி சிறப்பித்து மகிழ இருக்கின்றோம்.
கன்னி மரியின் கற்பிற்கு பாதுகாவலாய் இருந்து காத்ததால், துறவறத்தாரின் கற்பின் பாதுகாவலர்.
நிறைமாத கர்ப்பிணியாம் மரியாளுக்கு காவலனாய் இருந்ததால் கர்ப்பிணிப்பெண்களுக்கு பாதுகாவலர்.
திருக்குடும்பத்தை எல்லா இக்கட்டிலிருந்தும் காத்ததால், குடும்பங்களின் பாதுகாவலர்
நாடு விட்டு நாடு ஊர் விட்டு ஊர் அலைந்து தன் குடும்பம் சிறக்க பொறுமை காத்ததால் அகதிகளின் பாதுகாவலர்.
குழந்தை இயேசுவை ஞானத்திலும் அறிவிலும் வளர்த்ததால் கல்வியின் பாதுகாவலர்.
சாதரண தச்சுத்தொழிலை திறம்பட செய்து மகிழ்ந்ததால் தொழிலாளர்களின் பாதுகாவலர்.
இயேசுவுக்கு ஆன்மீகத்தொடு கூடிய அனுபவ அறிவையும் ஊட்டி தந்ததால் தந்தையர்களின் பாதுகாவலர்.
சாகும்வேளையிலும் மகிழ்வுடன் இருந்து அதை மேற்கொண்டதால் நல் மரணத்தின் பாதுலாவலர்.
திருச்சபை வளர்ந்தது இயேசுவால் அந்த இயேசுவையே இவ்வுலகிற்கு அடையாளப்படுத்த் காரணமாய் இருந்ததால் இவர் அகில உலக திருச்சபையின் தலைவர்.
இப்படி எண்ணிக் கொண்டே போகலாம் நம் சூசை தந்தையின் பண்புகளையும் பாதுகாவல்களையும்.
உறவுகளை வீட்டில் விட்டு விட்டு அவர்களின் உயர்வுக்காக. உழைத்து,. தன் துயரத்தை மறந்து பிறர் துயர் நீக்க போராடி, தன் வாழ்வில் தான் பெறாதவற்றை தன் பீள்ளைகள் பெற்று மகிழ வழி செய்து , தயக்கத்தைப் போக்கி தைரியத்தை கற்றுத்தந்து தூய தந்தையாக துணிவுடன் திகழும் நம் தூய வளனார் போல வாழ நவநாள் வழி அருள் பெறுவோம்.
Monday, 7 March 2022
10. மாலை அணிதல்
தவக்காலத்தில் காவி உடை அணியும் பழக்கம் எவ்வளவு சிறப்போ அது போல மாலை அணிவதும் மிக சிறப்பாக நமது ஊர்களில் பழக்கத்தில் இருக்கின்றன. செபமாலை உத்தரியம் நேர்ச்சைக்கயிறு போன்றவற்றை தவக்காலத்தில் ஒரு ஒறுத்தல் முயற்சியாக மேற்கொண்டு அணியத் தொடங்குகின்றனர். வேளாங்கண்ணிக்கு மாலை, திரு இருதய ஆண்டவர்க்கு மாலை, அந்தோணியார்க்கு மாலை என்று பலரும் பல வேளைகளில் இந்த பக்தி முயற்சியை செய்கின்றனர். தொடக்க காலத்தில் கழுத்தில் அணியும் பழக்கத்தோடு கூட கையில் பிடித்து செபிப்பதும் பழக்கமாக இருந்தது. இயேசு நாம செபம், மங்கள வார்த்தை செப/ம், திருப்பாடல்களை செபித்தல் போன்றவற்றை எண்ணி செபிக்க இந்த மாலைகள் மணிகள் பயன்பட்டன. கையில் செபமாலை மணி வைத்து விரல்களால் உருட்டிசெபிக்கும் பொழுது விரல்களின் அழுத்தம் உடலில் உள்ள ஏராளமான நோய்களுக்கு அக்கு பஞ்சர் முறையில் மருந்தாகவும் இருக்கிறது.
ஏன் இந்த செபமாலைகளை அணிய வேண்டும்?
செபமாலை விண்ணகத்தின் திறவுகோல். மந்திரக்கோல் என்று கூட சொல்லலாம். இயேசு இராயப்பருக்கு விண்ணகத்தின் திறவுகோலை அன்று கொடுத்தார். இன்று அன்னைமரி மூலமாக செபமாலை வழி அனுதினமும் நமக்கு கொடுக்கின்றார்.
அன்னை மரி அழகிய மலர் . அந்த அழகிய மலரால் தொடுக்கப்பட்ட மாலை செப மாலை. இதனை செபிக்கும் பொழுதும் அணியும் பொழுதும் அந்த அன்னைக்கு புகழ் சேர்க்கின்றோம். சாத்தானை ஓட ஓட விரட்டும் ஆயுதம் இது. உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகைமை உண்டாக்குவோம் என்ற இறைவசனங்களுக்கு ஏற்றாற்போல சாத்தானின் சூழ்ச்சிகளான தீய செயல்கள் அனைத்தையும் நம்மிடம் நெருங்க விடாது நம்மை பாதுகாக்கும். அன்னை மரியின் உதவியோடு அனைத்து புனிதர்களின் உதவியையும் நமக்கு கொண்டு வந்து சேர்க்கும். இயேசுவின் பிரசன்னத்தில் நம்மை நிலை நிறுத்தும். நலம் தரும் அமைதியை நல்கும். குடும்பசெபம் கட்டாயமாக செபிக்க வழி வகுக்கும். கூடி செபிக்கும் குடும்பம் கோடி நன்மை பெறும்.
எப்படி பள்ளி கல்லூரி அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு அடையாள அட்டை அவர்களை அறிமுகப்படுத்துகிறதோ அது போல செபமாலை அணிந்திருப்பவர்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட குழந்தைகள் என்பதை அடையாளப்படுத்துகிறது. ஜெர்மானியர்கள் செபமாலையை இரக்கத்தின் ஆடை என்கின்றார்கள். செபமாலைக்கு அடுத்ததாக பலராலும் எல்லா காலத்திலும் அணியப்படுவது உத்தரியம்
உத்தரிய பக்தி என்பது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாப்பரசர் 12ம் பத்திநாதர் உத்தரியத்தின் மகிமை பலன் பற்றி பல இடங்களில் பேசி இருக்கின்றார். புனித அல்போன்ஸ் லிகோரியார், புனித இரண்டாம் அருள் சின்னப்பர், புனித 10 கிரகோரியார், புனித தொன் போஸ் கோ போன்றோர் உத்தரியத்தின் மீது கொண்ட பக்திக்கும் பற்றுதலுக்கும் சான்றுகள் பல உள்ளன. அவர்கள் இறந்த பின் அவர்களோடு புதைக்கப்பட்ட உத்தரியம் இன்றும் அழியாமல் பாதுகாக்கப்படுவது அவர்களின் உத்தரிய பக்திக்கு மிக சிறந்த உதாரணம்.
தவக்காலங்கள்ல மட்டும் ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக இந்த செபமாலை உத்தரியம் அணிஞ்சாலும் அதோட பலன் அதிகம் தான். செபமாலையை அணிந்தால் மட்டும் போதாது வாழவும் வேண்டும். ஒறுத்தல் மாலைகள் அணிந்து ஒப்பில்லா மகிழ்வைப் பெறுவொம். செப மாலை அணிந்து ஜெயம் பெறுவோம்.
Sunday, 6 March 2022
அகில உலக பெண்கள் தினம்.
அகில உலக பெண்கள் தினம்.
இன்னைக்கு என்ன ஸ்பெஷல் ? வணக்கம் அன்பு உள்ளங்களே மார்ச் 8 பெண்கள் நாட்டின் கண்கள் நு சும்மாவா சொன்னாங்க. கண் எப்படி நமக்கு ரொம்ப முக்கியமோ அது மாதிரி நம்ம ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலயும் பெண்கள் ரொம்ப முக்கியம். அம்மா அக்கா தங்கச்சி தோழி மகள் மருமகள் நு எல்லா வடிவத்துலயும் பெண்கள் இருக்காங்க. நாம இன்னைக்கு சந்தோசமா கொண்டாடுற இந்த தினம் அன்னைக்கு ரொம்ப போராடி தாங்க் கிடைச்சிருக்கு. ஏன் இந்த தினம் என்ன காரணம் நு தெரிஞ்சிக்கலாம் வாங்க. 18 ம் நூற்றாண்டில பெண்கள் நாலே அவங்க வீட்டு வேலை செய்றதுக்கு மட்டும் தான்னு ரொம்ப முடக்கப் பட்டாங்க. இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமா மாறி பெண்கள் தொழிற்சாலை அலுவலகம் நு கால் பதிக்க ஆர்ம்பிச்சாங்க. ஆனாலும் ஆண்களுக்கு நிகரான கூலி அவங்களுக்கு கொடுக்கப்படல. அமெரிக்கா ல உள்ள நியுயார்க் நகரத்துல நெசவுத்தொழில்ல ஏராளமான பெண் தொழிலாளர்கள் வேலை செஞ்சிட்டு வந்தாங்க. 16 மணி நேரம் வேலை செஞ்சாலும் ரொம்ப குறைவான சம்பள தான் இவங்களுக்கு கிடைச்சது. அந்த சம்பளம் கூட சரியா கிடைக்க நிர்வாகத்துல இருக்கிறவங்க ஆசைக்கு பணிஞ்சு போகணும் கிற நிலைமை. இதை எதிர்த்து தான் 1857 ல நியுயார்க் ல உழைக்கும் பெண்கள் எல்லாரும் ஒன்னா கூடி. போராட்டம் நடத்துனாங்க. பெண்களுக்கு கிடைக்க வேண்டிய சமுதாய உரிமை, வேலைக்கு ஏற்ற சம்பளம், வாக்குரிமை, பெண் விடுதலைன்னு நிறைய கோரிக்கைகளை முன் வச்சு நிறைய போராட்டங்களும் நடந்தது. அதுக்கு அப்புறமா நிறைய பெண்கள் அமைப்புகள் உருவாக ஆரம்பிச்சது. 1908 ல பெண்கள் வாக்குரிமை கேட்டு போராட ஆரம்பிச்சப்ப அப்ப இருந்த ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் கிறவரு பெண்களோட வலிமைய பார்த்து ஆடிப்போயிட்டாரு.
இதனால 1909 பிப்ரவரி 28 ம்தேதி அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சி ஆதரவோட அந்த நாட்டுல பெண்கள் தினம் கொண்டாட ஆரம்பிச்சாங்க. 1911 மார்ச்ல நியுயார்க் ல கட்டிட வேலை செஞ்சிக்கிட்டு இருந்த 140 பெண் தொழிலாளர்களோட இறப்பு, பெண் தொழிலாளர்கள் சட்டம் கொண்டுவர ரொம்ப முக்கிய காரணமா இருந்தது. இதன் விளைவா 1910 ல டென்மார்க் ஹேஹன் ல முதல் அனைத்துலக பெண்கள் மாநாடு ஜெர்மனிய சேர்ந்த கிளாரா ஜெட்கின் றவங்க தலைமையில ரொம்ப சிறப்பா நடந்துச்சு. இதனால சர்வதேச மகளிர் அமைப்பும் உருவானது. 1911 மார்ச் 19 ம் தேதி ஜெர்மனி டென்மார்க், மற்றும் சில ஐரோப்பிய நாடுகள்ல இருந்து முக்கிய மான பெண்கள் பிரதிநிதிகள் நு கிட்டதட்ட 17 நாடுகளை சேர்ந்த 100 பெண்கள் ஒண்ணா கூடி முதல் சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடுனாங்க. இந்த கூட்டத்தில தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க லூயிஸ் பிளாங்க் அரசன் அனுமதி அளித்த நாளான மார்ச் 8ம் தேதிய அகில உலக பெண்கள் தினமா கொண்டாட முடிவு செஞ்சி தீர்மானமும் நிறைவேற்றுனாங்க. அதுக்கு அப்புறமா ரஷ்யா ல 1913-1914 நடந்த முதல் உலகப் போர்ல ரஷ்யப் பெண்கள் அமைப்பு அமைதியும் உணவும் தான் தேவை போர் தேவை இல்லைன்னு அவங்க எதிர்ப்பை தெரிவிக்க ஒரு பெண்கள் பேரணிய நடத்துனாங்க. ஒவ்வொரு வருஷமும் பிப்ரவரி மாசம் கடைசி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் தினமா ஒவ்வொரு நாட்டுலயும் கொண்டாடிட்டு இருந்த நிலைமை மாறி 1913 ல இருந்து மார்ச் 8 ம் தேதி ய அகில உலக பெண்கள் தினமா தொடர்ந்து கொண்டாடிட்டு வராங்க. 1917 ல ரஷ்யா ல நடந்த பெண் தொழிலாளர்கள் செய்த புரட்சி உலகத்தையே திரும்பி பார்க்க வச்சது மட்டுமில்லாம அப்ப இருந்த ரஷ்ய மன்னர் ஜாரின் ஆட்சி யே கவிழ்த்ததா சொல்றாங்க. 2011 அம் ஆண்டுல 100 வது பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.அதுப்படி பார்த்தா இந்த வருசம் 111 வது ஆண்டு பெண்கள் தினம். ஒவ்வொரு வருஷமும் ஐநா மகளிர் அமைப்பு ஒரு கருப்பொருளை முன் வைக்கிறாங்க. முதல் பெண்கள் தினத்துக்கான கருப்பொருள் சமத்துவத்தை யோசி, அறிவுப் பூர்வமாக கட்டி எழுப்பு, மாற்றத்துக்காக புதுமையாக சிந்திங்கிறது தான். கடந்த ஆண்டு சிறப்பான வாழ்க்கைக்கு சமநிலை ங்கிற கருப்பொருள்ல கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் இன்றைய பாலின சமத்துவம் நிலையான எதிர்காலத்திற்கானது. பாலின சமத்துவத்தை அடைவதற்கான மிக முக்கியமான தருணமா இந்த நாளைக் கொண்டாடுறோம். பெண்கள் , மாணவிகள் பல்வேறு துறைகளல அவங்க செஞ்ச சாதனைகள் அவங்க இதுவரை கொடுத்த பங்களிப்பு இதைக் கொண்டாடுறதும் தான் இந்த நாளோட நோக்கமே. பிரேக் த பையஸ் அதாவது உண்மைக்கு எதிரான ஒருசார்பு தன்மையை உடைத்தல்.கிறத மையமா வச்சும் இன்ன்னைக்கு நாள சிறப்பிக்கிறோம். அன்னைக்கு மட்டும் இல்ல இப்ப வர பெண்களால எடுக்கப்படுற எல்லா போராட்டங்கள்லயும் வெற்றி தான். அமெரிக்கா ல வரலாறு காணாத அளவுல அதிகமான பெண் பிரதி நிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டாங்க. பெண்கள் பல துறைகள்ல அழுத்தமா கால் பதிக்க ஆரம்பிச்சாங்க. பெண்கள் இப்படி தான் உடை அணியணும் இப்படி தான் பேசனும் கட்டுப்பாடு விதிச்ச சூடான் அரசு அதை வாபஸ் வாங்கிடுச்சு. இது எல்லாப் பெண்களுக்கும் அவங்க போராட்டத்துக்கும் உரிமைக்கும் கிடைச்ச வெற்றி.
பெண்கள் தினம் எல்லா நாடுகள்லயும் இப்ப கொண்டாடப்படுது. ரஷ்யா ல்ல இன்னைக்கு தேசிய விடுமுறை. அங்க மார்ச் 5 6 தேதிகள்ல இருந்தே பூக்கள் விற்பனை அங்க இரண்டு மடங்கா இருக்குமாம். பல இடங்கள்ல பெண் தொழிலாளர்களுக்கு மட்டும் அரை நாள் விடுமுறை கொடுக்குறாங்க. இத்தாலியில் மிமோசா ங்கிற மஞ்சள் நிற பூக்கள் கொடுக்குற வழக்கம் இருக்கு. அமெரிக்கா ல மார்ச் மாதம் முழுசும் பெண்கள் வரலாற்று மாசமா கொண்டாடப்படுது. இன்னைக்கு நாம கொண்டாடுறோம் ஆணா இது பல பெண்களோட போராட்டத்திற்கு கிடைச்ச வெகுமதி. இந்த நாள்ல அனுதினமும் தங்களோட உரிமைகளுக்காக போராடுற எல்லா பெண்களையும் நினைச்சு பார்ப்போம். போராடினால் தான் வெற்றிங்கிற சமுகத்துல வாழ்ந்துகிட்டு இருக்கிற நமக்கு எல்லா தடைகளையும் மீறி அரசியல் சமூக செயல்பாடு பொழுது போக்கு விளையாட்டு, தொழில்துறை நு எல்லா துறைகள்லயும் சாதனை பண்ணிக்கிட்டு இருக்கிற பெண்கள் வாழும் சாதனையாளர்கள். அவங்க வரிசையில, ரிது கரிதால் ,கல்பனா சாவிலா மலாலா யூசுசாய், கமலா ஹாரிஸ், நு நிறைய பெண்கள் தடைகளையும் வெற்றி படிக்கட்டுக்களா மாறிட்டு வர்றாங்க.
அதை விட பெண்களோட தலைமைத்துவத்தையும், ஆளுமையையும் மக்களே அங்கிகரிக்கிற நாள் வந்துடுச்சு. நம்ம தமிழ்நாட்டுல இப்ப நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்ல 11 பெண் மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீருக்காங்க. அதிலயும் சென்னையில 130 வருசத்துக்கு அப்புறமா முதன் முதலா பெண் மேயர் தேர்ந்தெடுக்க்ப்பட்டு இருக்காங்க. சாதாரண கிராமப்புற மக்கள் அவங்களை வழிநடத்த மெத்த படிச்ச மேதாவி தேவை இல்லை எங்களை புரிஞ்ச காத்தாயி போதும்னு பெண் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து இருக்காங்க. அவங்க கல்வி தகுதி உருவம் இனம், குலம் நு என்ன தான் சிலர் அவங்களை கேலி கிண்டல் செய்தாலும் , இவ எங்களுக்காக நின்னு பேசுவா செய்வான்னு அவங்களோட தன்னம்பிக்கை மேல நம்பிக்கை வச்சு மக்கள் வெற்றி பெற வச்சு இருக்காங்க. பெண்கள் பொது வாழ்க்கைக்கு வர்றதே பெரிய விசயமா இருந்த ஊர்ல துணிஞ்சு தேர்தல்ல நின்னு செஜிச்சிருக்காங்க. கல்வி தகுதியும் சரளமான மொழிப்புலமை இருக்குற எத்தனையோ பேருக்கு மத்தியில இந்த மாதிரியான சாதாரண பெண்கள் சர்வ சாதாரணமா தேர்ந்தெடுக்கப்பட்டது பெண்ணினத்திற்கு கிடைச்ச பெருமை. உழைக்கிற மனசு இருந்தா மட்டும் போதும் வாழ்க்கையில எதையும் சாதிக்கலாம் நு காட்டுது இவங்களோட தேர்தல் வெற்றி. இது பெண்ணின் ஆளுமையை மறைக்க துடிப்பவர்களுக்கு கிடைத்த சவுக்கடி.
பெண்கள் பெண்களுக்கு எதிரிகள் இல்லை. ஆண்கள் பெண்களுக்கு துணையாக இருப்பதே எல்லை னு உணர்ந்து வாழ முயற்சிப்போம். இவங்களைப் போல நாமும் தடைகளை தகர்த்து தனி யுகம் படைப்போம். பெண்ணை வாழ்த்துவோம் பெண்மையை போற்றுவோம். சாதனை படைத்த படைக்க துடிக்கும் அத்தனை பெண்குலத்திற்கும், பெண்ணாக பிறந்து நாட்டுக்கும் வீட்டுக்கும் பொழிவு சேர்க்கும் அனைத்து பெண்களுக்கும் இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு நல்ல நாள்ல இன்னைக்கு என்ன ஸ்பெஷல் வழியா உங்களை சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.
Thursday, 3 March 2022
9. காவி உடுத்துதல் , மாலை போடுதல்.
காவி நிறம் துறவிகளின் நிறம் என்று சொன்னால் மிகையாகாது.
முன்னி முடிக்கு முனி என்பது துறவிகளுக்கு கொடுக்கப்படும் ஒரு அடை மொழி அதாவது நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் திறம் படைத்தவன் துறவி. மனம் வாக்கு செயல் மூன்றும் ஒன்றிணைந்து செயல்படுபவன்.
காவி உடை ....
மனிதர்கள் ஆடை அணியும் பழக்கம் யார் கொண்டு வந்தது என்பது பற்றி தெளிவான வரலாறு எதுவும் இல்லை. ஆனால் எப்படிபட்ட ஆடைகளை அணிந்தார்கள் என்பதற்கு பல வகையான் ஆதாரங்கள் உள்ளன. உடுக்கை துணி ஆடை உடுப்பு குப்பாயம் மெய்ப்பை பட்டுடை கலிங்கம் புடவை கச்சு தானை படாம் சங்க கால ஆடை வகைகள்.
தட்ப வெப்ப நிலைக்காக, பிற விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தி காட்ட, அடையாளப்படுத்த, அழகு சேர்க்க, கலை உணர்வை வெளிப்படுத்த ஆடைகளை நாம் அணிகின்றோம். தவத்தையும் ஒறுத்தலையும் முதன்மையாக கருதும் இத்தவக்காலத்தில் சிலர் காவி உடை அணிந்து தவ வாழ்வை வாழ பயிற்சிக்கின்றனர். உண்ணுதல் உன் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைய வேண்டும், உடுத்துதல் பிறர் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைய வேண்டும். என்ற வரிகளை கடந்து உண்ணுதலும் உடுத்துதலும் தன்னை இறை நம்பிக்கையில் ஊன்றி நெறிப்படுத்தவே இத்தவக்காலம் என்று வாழ்கின்றனர். காவி நிறம் இம்மண்ணுக்கான நிறம் எந்த மதத்திற்கான நிறமும் இல்லை. துறவிகளின் ஆடை கோவில்களில் சுவர்கள் என்று நம் நாட்டில் அனைத்தும் காவி நிறத்தில் இருப்பதற்கு காரணம் இம்மண்ணோடு கொண்டிருக்கும் தொடர்பை வெளிப்படுத்தவே. தொடக்கத்தில் கோவில்களின் சுவர்களுக்கு வர்ணம் பூச செம்மண்ணை குழைத்து பயன்படுத்தினர். துறவிகள் எந்த நிறமும் எங்களுக்கு சொந்தமானதல்ல நாங்கள் மண் போன்றவர்கள் எங்களைப் போல எங்கள் உடையும் மண்ணை சார்ந்த்து என்பதை உணர்த்தவே காவி நிறம் உடுத்தியதாக கூறுவர்.
இந்த உடலே மண் தான் உடல் நிலையில் மன நிலையில் ஆரோக்கியமாக இருக்க மண்ணோடு தொடர்பில் இருக்க வேண்டும். இந்த தொடர்பை உறுதி செய்ய தான் நாம் தரையில் அமர்ந்து உண்பது உறங்குவது போன்ற காரியங்களை சாதராணமாக செய்கின்றோம். இதை ஆழப்படுத்திக் கொள்ள தான் துறவிகள் தங்கள் உடைகளை மண்ணில் தோய்த்து அணிந்ததாக கூறுவர். மண்ணோடு கொண்ட உறவு நமக்கு பூமித் தாயின் கருப்பையை நினைவு படுத்தும். அப்போது நாம் புத்துணர்ச்சியுடன் இருப்போம். ஒரு செல் உயிரியாய் இருந்த நாம் வளர்ச்சி அடைந்து இவ்வளவு பெரிய உயிராய் வளர்வதற்கு காரணமே தாயின் கருவறை தானே. காவி நிறம் நாம் பூமித்தாயின் கருவறையில் இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு நாளும் உணர்த்தும். இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் தவக்காலத்தை நாம் தொடங்கியதே மண் போன்ற சாம்பல் பூசி தான். மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய் என்று நம் நெற்றியில் பூசப்பட்ட சாம்பல் கூட இதை நினைவு படுத்தவே. இந்த காவி உடை தவக்காலத்தில் அணியப்படும் போது அணிபவர்க்கும் அவர் குடும்பத்தார்க்கும் எல்லையற்ற இன்பம் ஏற்படுகிறது. குடி புகை போன்ற தீய பழக்க வழக்கங்களின் வாடைஏதுமின்றி, தங்களுக்கு மிகவும் பிடித்த கறி மீன் வகைகளை ஒறுத்து, சண்டை சச்சரவுகள் ஏதுமின்றி, தான் உண்டு தன் வேலை உண்டு என்று மாறும் மனிதர்களை யாருக்கு தான் பிடிக்காது . இதற்காகவே வருடம் முழுதும் தவக்காலத்தை எதிர்பார்க்கும் தாய்மார்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அது மட்டுமன்று காவி உடை அணிபவர்கள் இத்தவக்காலத்தில் இறைவனுக்கு மிக நெருக்கமாக இருப்பது போன்று உணர்கின்றார்கள். அவர்களை சுற்றி இருப்பவர்களும் இறைப்பிரசன்னத்தை அவர்களில் உணர்கின்றார்கள். இதுவரை இருந்த சராசரி வாழ்வு மாறி தூய வாழ்வு வாழ முயற்சிக்கின்றார்கள். காவி உடை நாம் கிறிஸ்துவில் வளர்கிறோம், மண் போன்றவர்கள், தவ வாழ்வு வாழ முயற்சிப்பவர்கள் என்பதை எடுத்துரைக்கிறது. எனவே இத்தவக்காலத்தில் காவி உடை உடுத்தி களங்கமில்லா நம் தூய வாழ்வை இறைவனுக்கு காணிக்கையாக்குவோம். இறைப்பிரசன்னத்தின் அடையாளமாக தெய்வ பக்தியை பரப்பும் மனிதர்களாக காவி உடையில் கருணையின் வடிவங்களாவோம்.
8. திரு யாத்திரை.
யாத்திரை என்பது பயணம் . ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஒரு காரணத்தின் நிமித்தம் செய்யப்படும் ஒரு பயணம். ஒவ்வொருவரின் பயணமும் ஒவ்வொரு விதமான செய்திகளை நமக்கு விட்டுச்செல்கிறது. பொழுதுபோக்காக, உறவுகளைப் புதுப்பிக்க, உரிமைக்காக , என்று பல வகைகளில் நமது பயணம் இருக்கிறது.
விவிலியத்தில் விடுதலை பயண நூல் முழுமையும் இஸ்ரயேல் மக்களின் பயணமும் அவர்களை வழி நடத்திய மோசே ஆரோன் போன்றோர்களின் வாழ்க்கையும் தான் அடங்கி இருக்கிறது. நமது கடவுள் பயணிக்கும் கடவுள், பயணத்தையும் பயணம் செய்பவர்களையும் அதிகம் விரும்பும் கடவுள். இஸ்ரயேல் மக்கள் ஒரே இடத்தில் இருக்கும் போது புரிந்த அருட்செயல்களை விட அவர்கள் பயணிக்கும் போதே இறைவன் அம்மக்களை கருத்தாய் பாதுகாத்தார் எனலாம்.
வீட்டில் இருக்கும் போது தாய் குழந்தை மேல் காட்டும் பாசத்தை விட வெளியில் போகும் போது அக்குழந்தை மேலான பாசமும் கவனமும் இரட்டிப்பானதாக இருக்கும். அதிலும் அக்குழந்தை தாய்க்காக வெளியே செல்கிறது என்றால் கவனத்தோடு கூடிய இரட்டிப்பான மகிழ்ச்சியும் இருக்கும்.
நாம் தவக்காலத்தில் மேற்கொள்ளும் திருயாத்திரைகள் கூட இப்படி தான். இது வரை பொழுதுபோக்குக்காக உறவுகளை புதுப்பிக்க என்று நாம் செய்த பயணங்களை விட இப்போது நாம் இறைவனுக்காக என்று மேற்கொள்ளும் பயணம் மிகவும் சிறப்பானது. ஒரு நாளில் பல திருத்தலங்கள், சிலுவை பாதை நிலைகள், நடந்து ஒரு குறிப்பிட்ட ஆலயங்களுக்கு பாத யாத்திரை செல்வது என்று பல முறைகளில் தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர். ஒரு சிலர் இதனை வேற்று மதத்தாரிடம் இருந்து நாம் பின்பற்றுவதாக நினைக்கின்றனர். விவிலியத்தில் நமது முன்னோர்கள் பெற்ற அத்தனை ஆசீர்வாதங்களும் அவர்கள் இறைவனுக்காக பயணம் செய்யும் போது கிடைத்ததே.
மோயீசனின் விடுதலை பயணம், எசாயா எசேக்கியல் போன்ற இறைவாக்கினர்களின் பயணம்... இப்படி பழைய ஏற்பாட்டில் நடை பயணம் செய்தவர்கள் ஏராளம். புதிய ஏற்பாட்டில் இயேசு எருசலேம் கோவிலுக்கு போனதும் திரு யாத்திரை தான். அப்போது அவர்கள் திருவிழாவைக் கொண்டாட குடும்பம் குடும்பமாக பயணித்தனர். இப்போது நாம் குடும்பத்தில் ஒருவராக பயணம் மேற்கொள்கின்றோம்.
அப்போஸ்தலர்கள் தங்கள் பணியை காலார நடந்தே செய்து முடித்தனர். அவர்களது பயணம் கிறிஸ்தவத்தை அகில உலக மெங்கும் பரப்பியது. அப்படி பார்த்தால் தோமையார் வழியாக இம்மண்ணில் கிறிஸ்தவம் பரவியதே பாத யாத்திரை மூலமாகத்தான். நமது பக்தி முயற்சிகள் இன்றோ நேற்றோ பிறரைப் பார்த்து பரவியது அல்ல. அது காலா காலமாய் தொடங்கி நடந்து கொண்டிருப்பது. இப்போது அதன் மகிமை உணர்ந்து பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது.
நடப்பது உடலுக்கு நல்லது. அதிலும் வெறும் காலில் நடப்பதும் மிகவும் சிறந்தது. ஒரு நோக்கத்திற்காக அதனை செய்யும் போது, அதற்கான பலன் எளிதில் கிடைத்துவிடும். அதன் அடிப்படையிலேயே நமது கிறிஸ்தவ மக்கள் புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். தங்களது விருப்பு வெறுப்புக்களைக் களைந்து கடவுளுக்காக என்று நாம் மேற்கொள்ளும் பயணம் வெற்றி பயணமாகத்தான் அமையும். எனவே இக்காலத்தில் திருயாத்திரைகள் பல செய்து நம் இறைவனை மகிமைப்படுத்துவோம். பயணங்கள் நம் வாழ்வில் நல்ல பாதையைக் காட்டட்டும்.
7. சுத்த போசனம்
விலங்கினங்களின் இறைச்சியை தவிர்ப்பது சுத்த போசனம் எனப்படும். இது விபூதி புதன் மற்றும் தவக்காலத்தின் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் கட்டாயம் கடைபிடிக்கப்படுகிறது. 14 வயதுக்கு மேற்பட்ட எல்லா கிறிஸ்தவர்களும் இதனை கடைபிடிக்க திருச்சபை வலியுறுத்துகிறது. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், உடல் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள், அதீத உடல் உழைப்பு செய்பவர்கள், இதற்கு விதி விலக்கு. விலங்கினங்களின் இறைச்சிக்கு பதில் மீன்வகைகள் உணவாக உட்கொள்ளலாம்.
சுத்த போசனம் என்பது நமக்கு எளிதில் கிடைக்கக் கூடிய, நமக்கு மிகவும் விருப்பமான ஒன்றை இறைவனுக்காக தியாகம் செய்வது. அவ்வகையில் முதன் முதலில் சுத்த போசனம் இருந்தவர்கள். இருக்க பணிக்கப்பட்டவர்கள் ஆதாம் ஏவாள். ஏதேன் தோட்டத்தில் ஏராளமான பழங்கள் இருப்பினும் ஒரு மரத்தின் கனியை மட்டும் உண்ணக் கூடாது என்று இறைவனால் வலியுறுத்தப்பட்டார்கள். அத்தகைய சுத்த போசனத்தை கடை பிடிக்க முடியாமல் இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள். உடல் அளவில் மட்டுமல்லாமல் உள்ளத்தளவிலும் தங்களை தூய்மைப்படுத்துவதற்காகவே இந்த வகை ஒறுத்தல் தவக்காலத்தில் செய்யப்படுகிறது. நமது ஆசையின் அளவை வரையறுக்க, நம்மால் எதை துறக்க முடியும்? நமது பலம் பலவீனம் இவற்றை அறிந்து கொள்ளவும் இது உதவுகிறது. அது மட்டுமல்லாமல், நமது உணவு பழக்க வழக்கப்படி கறி வகைகள் சமைக்கும் பொழுது அதன் இரத்த வாடை தெரியாமல் இருக்க பயன்படுத்தும் அதிக காரமான மசாலா பொருட்கள் உடலில் சூட்டை ஏற்படுத்தும். உடல் சூடு ஏற்படும் போது தேவையற்ற சிந்தனைகளும் உணர்வுகளும் தோன்றும். கோபம் அழுகை வெறுப்பு போன்ற உணர்வுகள் நமது இயல்பு நிலையிலிருந்து நம்மை மாற்றி விடும். அதனால் தான் துறவு மேற்கொள்பவர்கள் உணவில் இத்தகைய பொருட்களை அதிக அளவில் சேர்க்காமல் கூடுமானவரை காய்கறிகளையே உண்பர். சாந்தமான மனநிலையில் இருக்கும் போது நம்முடைய சொல்லும் செயலும் சாந்தமானதாகவே அமையும்.
சுத்த போசனம் ஆன்மீக ரீதியில், விவிலிய ரீதியில், உடல் ரீதியில் என மூன்று அடைப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. ஸ்பிரிடுஅல், பிபிலிகல், அண்டு ஹெல்தி
1. நமக்கு மிகவும் பிடித்தமானதை கடவுளுக்காக தியாகம் செய்வோம்.
2. நம்மை உடல் அளவிலும் மனதளவிலும் தூய்மையாக வைத்திருப்போம்.
சுத்த போசனத்தை முறையாக கடைபிடித்து தவக்காலத்தை சிறப்பித்து மகிழ்வோம். விலங்கினங்களின் உடலை உணவாக உண்பதை தவிர்த்து இறை இயேசுவின் திரு உடலை அனுதினமும் உண்ண தினத்திருப்பலியில் பங்கேற்போம். திரு உடலால் திவ்விய பரிபூரண பலன் பெறுவோம்.
Wednesday, 2 March 2022
6. ஒரு சந்தி
ஒரு சந்தி சந்தி சந்திப்பு காலையும் மாலையும் இணையும் நேரத்தை சந்தியா பொழுது என்பார்கள். சந்தி இலக்கணம் இல்லாமல் தமிழ் மொழிக்கு அழகில்லை. இன்று நாம் அறிய இருப்பது ஒரு சந்தி. தொடக்க காலத்தில் ஒரு வேளை உணவு மட்டும் உண்பது தான் ஒரு சந்தி எனப்பட்டது. இப்போது ஒரு வேளை உணவையாவது தியாகம் செய்வது என்று மாறிவிட்டது. தவ நாட்களில் நம்முடைய ஆசைகளை ஒறுத்து இருக்கும் உணவில் ஒரு பகுதியை இல்லாதவர்க்கு கொடுக்க எண்ணி ஆரம்பிக்கப்பட்டது. முக்கியமான திருச்சபை திருநாட்களுக்கு முன்பும் தவக்காலங்களிலும் இது அதிகமாக கடை பிடிக்கப்படுகிறது. ஒரு சந்தி நோன்பு உண்ணாவிரதம் என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் இதன் நோக்கம் ஒன்று தான். உலக செயல்பாடுகளில் இருந்து நம்மை விடுவித்து இறைவனோடு ஒன்றிணைவது.
விவிலியத்தில் 70 முறை நோன்பு என்ற சொல்லாடலும் செயலும் பயன்படுத்தப்படுகிறது. மோசே சீனாய் மலை ஏறி பத்து கட்டளைகளை பெறும் முன் 40 நாள் பகலும் இரவும் நோன்பிருந்தார் .
தோரா நூல்கள் முழுதும் நோன்பு கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
நீதி தலைவர்களும் அரசர்களும் தங்களுடைய தூய வாழ்விற்கு நோன்பு மூலம் வலிமை சேர்த்தார்கள்.
எஸ்தர் தன் நாட்டை காப்பாற்ற மூன்று நாள் தன் தோழியர்களுடன் நோன்பிருக்கிறார்.
எசாயா 58 ல் நோன்பு என்பது வலிமைமிக்க ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.
தானியேல் மூன்று வாரங்கள் நோன்பிருந்து கனவுக்கு விளக்கம் பெற்றார்.
இயேசு நோன்பிருந்து செபித்து தன்னுடைய பணி வாழ்விற்கான திடன் பெற்றார். அப்போஸ்தலர்களும் அவரைப் பின்பற்றி கிறிஸ்தவத்தை தழுவியவர்களும் நோன்பிருந்து தங்களையே புதுப்பித்துக் கொண்டனர்.
இப்படியாக திரு விவிலியம் முழுக்க நோன்பிருந்து இறை வேண்டல் செய்து தங்களை மேன்மைப்படுத்திக் கொண்டவர்கள் பலர்.
5ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹிப்போகிரெட்டீஸ் என்பவர் தன்னுடைய உடல் நலனுக்காக முதன் முதலில் நோன்பிருக்க ஆரம்பித்ததாக வரலாறு கூறுகிறது. அவரைத் தொடர்ந்து முக்கிய வழிபாடுகளுக்கு முன்னும் பின்னும் நோன்பிருந்து தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வது திருச்சபையில் வழக்கமானது. தொடக்கத்தில் நோன்பு, வெற்றி பெற, அற்புதங்கள் நிகழ, வேண்டுதல் மன்றாட்டுக்கள் கேட்கப்பட என மூன்று முக்கிய காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டன. இன்றைய காலகட்டத்தில் கடவுள் மீது அதிக கவனம் செலுத்த, நமது விருப்பத்தை விட இறை விருப்பம் அறிய, நமக்கு மிகவும் பிடித்தமானதை தியாகம் செய்ய உதவுகிறது. அதிலும் சிலர் உடல் நலன் பேனுவதற்காக இந்த நோன்பு நாட்களை அனுசரிக்க முயல்கின்றனர். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். இத்தகைய ஒரு சந்தி நோன்புகளை நாம் மேற்கொள்ளும் போது தன்னடக்கம் நாவடக்கம் கோபத்தைக் கட்டுப்படுத்துதல், உணவு கட்டுப்பாடு சமூக நலன் பேனுதல் போன்ற பண்புகள் நம்மில் வளர்கின்றன.
இயேசு நாற்பது நாள் பாலைவனத்திலே நோன்பிருந்தது, உடலை வருத்திக்கொள்ளமட்டுமல்ல. கடவுளோடு நெருங்கிய உறவு கொண்டாட, ஆன்மீக விடுதலை பெற, வழிகாட்ட. இயேசு போல நாமும் இந்த தவ நாட்களில் நோன்பிருந்து ஒரு சந்தி மேற்கொண்டு இறையோடு இணைவோம். முகவாட்டமின்றி புத்துணர்ச்சியோடு நம்முடைய நோன்பு நாட்களை அனுசரிப்போம். ஒரு சந்தி இருக்க முயல்வோம் உணவில் மட்டுமல்ல, சமூக வலை தளத்தில், தேவையற்ற பேச்சில், விவிலிய வாசிப்பில், மாற்று வேலைகளில். மறைமுகமாக செய்வோம். மறைவாய் உள்ளதைக் காணும் நம் வானக தந்தை அருள் வரங்களால் நம்மை மகிமைப்படுத்துவார்.
Subscribe to:
Posts (Atom)
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...