Sunday, 6 March 2022
அகில உலக பெண்கள் தினம்.
அகில உலக பெண்கள் தினம்.
இன்னைக்கு என்ன ஸ்பெஷல் ? வணக்கம் அன்பு உள்ளங்களே மார்ச் 8 பெண்கள் நாட்டின் கண்கள் நு சும்மாவா சொன்னாங்க. கண் எப்படி நமக்கு ரொம்ப முக்கியமோ அது மாதிரி நம்ம ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலயும் பெண்கள் ரொம்ப முக்கியம். அம்மா அக்கா தங்கச்சி தோழி மகள் மருமகள் நு எல்லா வடிவத்துலயும் பெண்கள் இருக்காங்க. நாம இன்னைக்கு சந்தோசமா கொண்டாடுற இந்த தினம் அன்னைக்கு ரொம்ப போராடி தாங்க் கிடைச்சிருக்கு. ஏன் இந்த தினம் என்ன காரணம் நு தெரிஞ்சிக்கலாம் வாங்க. 18 ம் நூற்றாண்டில பெண்கள் நாலே அவங்க வீட்டு வேலை செய்றதுக்கு மட்டும் தான்னு ரொம்ப முடக்கப் பட்டாங்க. இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமா மாறி பெண்கள் தொழிற்சாலை அலுவலகம் நு கால் பதிக்க ஆர்ம்பிச்சாங்க. ஆனாலும் ஆண்களுக்கு நிகரான கூலி அவங்களுக்கு கொடுக்கப்படல. அமெரிக்கா ல உள்ள நியுயார்க் நகரத்துல நெசவுத்தொழில்ல ஏராளமான பெண் தொழிலாளர்கள் வேலை செஞ்சிட்டு வந்தாங்க. 16 மணி நேரம் வேலை செஞ்சாலும் ரொம்ப குறைவான சம்பள தான் இவங்களுக்கு கிடைச்சது. அந்த சம்பளம் கூட சரியா கிடைக்க நிர்வாகத்துல இருக்கிறவங்க ஆசைக்கு பணிஞ்சு போகணும் கிற நிலைமை. இதை எதிர்த்து தான் 1857 ல நியுயார்க் ல உழைக்கும் பெண்கள் எல்லாரும் ஒன்னா கூடி. போராட்டம் நடத்துனாங்க. பெண்களுக்கு கிடைக்க வேண்டிய சமுதாய உரிமை, வேலைக்கு ஏற்ற சம்பளம், வாக்குரிமை, பெண் விடுதலைன்னு நிறைய கோரிக்கைகளை முன் வச்சு நிறைய போராட்டங்களும் நடந்தது. அதுக்கு அப்புறமா நிறைய பெண்கள் அமைப்புகள் உருவாக ஆரம்பிச்சது. 1908 ல பெண்கள் வாக்குரிமை கேட்டு போராட ஆரம்பிச்சப்ப அப்ப இருந்த ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் கிறவரு பெண்களோட வலிமைய பார்த்து ஆடிப்போயிட்டாரு.
இதனால 1909 பிப்ரவரி 28 ம்தேதி அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சி ஆதரவோட அந்த நாட்டுல பெண்கள் தினம் கொண்டாட ஆரம்பிச்சாங்க. 1911 மார்ச்ல நியுயார்க் ல கட்டிட வேலை செஞ்சிக்கிட்டு இருந்த 140 பெண் தொழிலாளர்களோட இறப்பு, பெண் தொழிலாளர்கள் சட்டம் கொண்டுவர ரொம்ப முக்கிய காரணமா இருந்தது. இதன் விளைவா 1910 ல டென்மார்க் ஹேஹன் ல முதல் அனைத்துலக பெண்கள் மாநாடு ஜெர்மனிய சேர்ந்த கிளாரா ஜெட்கின் றவங்க தலைமையில ரொம்ப சிறப்பா நடந்துச்சு. இதனால சர்வதேச மகளிர் அமைப்பும் உருவானது. 1911 மார்ச் 19 ம் தேதி ஜெர்மனி டென்மார்க், மற்றும் சில ஐரோப்பிய நாடுகள்ல இருந்து முக்கிய மான பெண்கள் பிரதிநிதிகள் நு கிட்டதட்ட 17 நாடுகளை சேர்ந்த 100 பெண்கள் ஒண்ணா கூடி முதல் சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடுனாங்க. இந்த கூட்டத்தில தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க லூயிஸ் பிளாங்க் அரசன் அனுமதி அளித்த நாளான மார்ச் 8ம் தேதிய அகில உலக பெண்கள் தினமா கொண்டாட முடிவு செஞ்சி தீர்மானமும் நிறைவேற்றுனாங்க. அதுக்கு அப்புறமா ரஷ்யா ல 1913-1914 நடந்த முதல் உலகப் போர்ல ரஷ்யப் பெண்கள் அமைப்பு அமைதியும் உணவும் தான் தேவை போர் தேவை இல்லைன்னு அவங்க எதிர்ப்பை தெரிவிக்க ஒரு பெண்கள் பேரணிய நடத்துனாங்க. ஒவ்வொரு வருஷமும் பிப்ரவரி மாசம் கடைசி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் தினமா ஒவ்வொரு நாட்டுலயும் கொண்டாடிட்டு இருந்த நிலைமை மாறி 1913 ல இருந்து மார்ச் 8 ம் தேதி ய அகில உலக பெண்கள் தினமா தொடர்ந்து கொண்டாடிட்டு வராங்க. 1917 ல ரஷ்யா ல நடந்த பெண் தொழிலாளர்கள் செய்த புரட்சி உலகத்தையே திரும்பி பார்க்க வச்சது மட்டுமில்லாம அப்ப இருந்த ரஷ்ய மன்னர் ஜாரின் ஆட்சி யே கவிழ்த்ததா சொல்றாங்க. 2011 அம் ஆண்டுல 100 வது பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.அதுப்படி பார்த்தா இந்த வருசம் 111 வது ஆண்டு பெண்கள் தினம். ஒவ்வொரு வருஷமும் ஐநா மகளிர் அமைப்பு ஒரு கருப்பொருளை முன் வைக்கிறாங்க. முதல் பெண்கள் தினத்துக்கான கருப்பொருள் சமத்துவத்தை யோசி, அறிவுப் பூர்வமாக கட்டி எழுப்பு, மாற்றத்துக்காக புதுமையாக சிந்திங்கிறது தான். கடந்த ஆண்டு சிறப்பான வாழ்க்கைக்கு சமநிலை ங்கிற கருப்பொருள்ல கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் இன்றைய பாலின சமத்துவம் நிலையான எதிர்காலத்திற்கானது. பாலின சமத்துவத்தை அடைவதற்கான மிக முக்கியமான தருணமா இந்த நாளைக் கொண்டாடுறோம். பெண்கள் , மாணவிகள் பல்வேறு துறைகளல அவங்க செஞ்ச சாதனைகள் அவங்க இதுவரை கொடுத்த பங்களிப்பு இதைக் கொண்டாடுறதும் தான் இந்த நாளோட நோக்கமே. பிரேக் த பையஸ் அதாவது உண்மைக்கு எதிரான ஒருசார்பு தன்மையை உடைத்தல்.கிறத மையமா வச்சும் இன்ன்னைக்கு நாள சிறப்பிக்கிறோம். அன்னைக்கு மட்டும் இல்ல இப்ப வர பெண்களால எடுக்கப்படுற எல்லா போராட்டங்கள்லயும் வெற்றி தான். அமெரிக்கா ல வரலாறு காணாத அளவுல அதிகமான பெண் பிரதி நிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டாங்க. பெண்கள் பல துறைகள்ல அழுத்தமா கால் பதிக்க ஆரம்பிச்சாங்க. பெண்கள் இப்படி தான் உடை அணியணும் இப்படி தான் பேசனும் கட்டுப்பாடு விதிச்ச சூடான் அரசு அதை வாபஸ் வாங்கிடுச்சு. இது எல்லாப் பெண்களுக்கும் அவங்க போராட்டத்துக்கும் உரிமைக்கும் கிடைச்ச வெற்றி.
பெண்கள் தினம் எல்லா நாடுகள்லயும் இப்ப கொண்டாடப்படுது. ரஷ்யா ல்ல இன்னைக்கு தேசிய விடுமுறை. அங்க மார்ச் 5 6 தேதிகள்ல இருந்தே பூக்கள் விற்பனை அங்க இரண்டு மடங்கா இருக்குமாம். பல இடங்கள்ல பெண் தொழிலாளர்களுக்கு மட்டும் அரை நாள் விடுமுறை கொடுக்குறாங்க. இத்தாலியில் மிமோசா ங்கிற மஞ்சள் நிற பூக்கள் கொடுக்குற வழக்கம் இருக்கு. அமெரிக்கா ல மார்ச் மாதம் முழுசும் பெண்கள் வரலாற்று மாசமா கொண்டாடப்படுது. இன்னைக்கு நாம கொண்டாடுறோம் ஆணா இது பல பெண்களோட போராட்டத்திற்கு கிடைச்ச வெகுமதி. இந்த நாள்ல அனுதினமும் தங்களோட உரிமைகளுக்காக போராடுற எல்லா பெண்களையும் நினைச்சு பார்ப்போம். போராடினால் தான் வெற்றிங்கிற சமுகத்துல வாழ்ந்துகிட்டு இருக்கிற நமக்கு எல்லா தடைகளையும் மீறி அரசியல் சமூக செயல்பாடு பொழுது போக்கு விளையாட்டு, தொழில்துறை நு எல்லா துறைகள்லயும் சாதனை பண்ணிக்கிட்டு இருக்கிற பெண்கள் வாழும் சாதனையாளர்கள். அவங்க வரிசையில, ரிது கரிதால் ,கல்பனா சாவிலா மலாலா யூசுசாய், கமலா ஹாரிஸ், நு நிறைய பெண்கள் தடைகளையும் வெற்றி படிக்கட்டுக்களா மாறிட்டு வர்றாங்க.
அதை விட பெண்களோட தலைமைத்துவத்தையும், ஆளுமையையும் மக்களே அங்கிகரிக்கிற நாள் வந்துடுச்சு. நம்ம தமிழ்நாட்டுல இப்ப நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்ல 11 பெண் மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீருக்காங்க. அதிலயும் சென்னையில 130 வருசத்துக்கு அப்புறமா முதன் முதலா பெண் மேயர் தேர்ந்தெடுக்க்ப்பட்டு இருக்காங்க. சாதாரண கிராமப்புற மக்கள் அவங்களை வழிநடத்த மெத்த படிச்ச மேதாவி தேவை இல்லை எங்களை புரிஞ்ச காத்தாயி போதும்னு பெண் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து இருக்காங்க. அவங்க கல்வி தகுதி உருவம் இனம், குலம் நு என்ன தான் சிலர் அவங்களை கேலி கிண்டல் செய்தாலும் , இவ எங்களுக்காக நின்னு பேசுவா செய்வான்னு அவங்களோட தன்னம்பிக்கை மேல நம்பிக்கை வச்சு மக்கள் வெற்றி பெற வச்சு இருக்காங்க. பெண்கள் பொது வாழ்க்கைக்கு வர்றதே பெரிய விசயமா இருந்த ஊர்ல துணிஞ்சு தேர்தல்ல நின்னு செஜிச்சிருக்காங்க. கல்வி தகுதியும் சரளமான மொழிப்புலமை இருக்குற எத்தனையோ பேருக்கு மத்தியில இந்த மாதிரியான சாதாரண பெண்கள் சர்வ சாதாரணமா தேர்ந்தெடுக்கப்பட்டது பெண்ணினத்திற்கு கிடைச்ச பெருமை. உழைக்கிற மனசு இருந்தா மட்டும் போதும் வாழ்க்கையில எதையும் சாதிக்கலாம் நு காட்டுது இவங்களோட தேர்தல் வெற்றி. இது பெண்ணின் ஆளுமையை மறைக்க துடிப்பவர்களுக்கு கிடைத்த சவுக்கடி.
பெண்கள் பெண்களுக்கு எதிரிகள் இல்லை. ஆண்கள் பெண்களுக்கு துணையாக இருப்பதே எல்லை னு உணர்ந்து வாழ முயற்சிப்போம். இவங்களைப் போல நாமும் தடைகளை தகர்த்து தனி யுகம் படைப்போம். பெண்ணை வாழ்த்துவோம் பெண்மையை போற்றுவோம். சாதனை படைத்த படைக்க துடிக்கும் அத்தனை பெண்குலத்திற்கும், பெண்ணாக பிறந்து நாட்டுக்கும் வீட்டுக்கும் பொழிவு சேர்க்கும் அனைத்து பெண்களுக்கும் இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு நல்ல நாள்ல இன்னைக்கு என்ன ஸ்பெஷல் வழியா உங்களை சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...